Category: tamil katturai APJ arul

கட்டுரைகள் APJ அருள்

  • வள்ளலாரின் சத்திய வார்த்தை ” தனி நெறி “

    வள்ளலாரின் சத்திய வார்த்தை ” தனி நெறி ”

    தனி நெறி???
    ஏன்?
    எங்ஙனம்?
    எதற்காக?

    – – ஏபிஜெ. அருள்.

    ” தனி நெறி” என அறிவிக்க வேண்டும். எங்ஙனம்? எதற்கு?
    எதற்கு நம் வள்ளலார் மார்க்கம் புதிய மார்க்கம் எனவும் தனி நெறி எனவும் விளம்புகை செய்ய வேண்டும்?
    நம் வள்ளலார்க்கு முன்பு இருந்த சன்மார்க்கங்கள் இரண்டு
    1.சமய சன்மார்க்கம்
    2.மத சன்மார்க்கம்.
    3வது புதிய மார்க்கத்தை நம் வள்ளலார் 19ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கிறார். மேற்படியாக சன்மார்க்கங்கள் மூன்று என்கிறார் வள்ளலார்.
    இப்படி ஒரு புதிய மார்க்கம் தோன்றியுள்ளதை உலகிற்கு விரைந்து வெளிப்பட செய்ய வேண்டும் என ஆன்ம நேயம் கொள்ளுதலும் நம் தகுதியில் ஒன்றே. இதை விரைந்து வெளிப்படுத்தும் திறனை கொண்டது அரசுகளே. அரசு நம் மார்க்கத்தை ஒரு புதிய மார்க்கம் எனவும் தனி நெறி எனவும் விளம்புகை செய்தால் நமக்கு பல சட்டப் பலன்களும் உதாரணமாக சான்றிதழில் நாம் “சுத்த சன்மார்க்கம்” சார்ந்தவர் என்று போட அனுமதியும், இதன் மூலம் உலகில் அனைத்து நாட்டவர்க்கும் நமக்கு தெரிந்த உண்மை பொது நெறி விரைந்து வெளிப்பட்டும், நம் வடலூர் நிலையங்கள் அரசின் கீழ் ஒரு சிறப்பு பார்வையிலும், நியமிக்கப்படும் அறங்காவலர்கள் நம்மவர்களாகவும் நியமிக்கப்படுவர். நம் நிலைய வருமானத்தை நம் தனி கொள்கை, நிலைய வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். நிலையத்தில் முரணான வகையில் சமயமத சடங்குகள் நடக்காது. நிற்க, நிலையம் வள்ளலாரின் சுத்தசன்மார்க்க நெறிப்படி நடக்க வேண்டும் என 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் கடந்த 12 வருடங்களில் போடப்பட்டுள்ளது. இன்னும் சத்திய ஞானசபை வழக்கு நிலுவையில் தான் உள்ளது. அந்த வழக்கில் வள்ளலார் சமயத்தை கைவிடவில்லை எனவும், அவர் பூசாரிகளிடம் லிங்க விக்கிரகத்தை கொடுத்து ஞானசபையில் வைத்து வழிபடச் சொன்னார் என்பதே எதிர்தரப்பு வாதம். இப்படிப்பட்ட முரண்பட்ட விசயங்கள் மீண்டும் வராமல் தடுக்க வேண்டுமாயின், வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் ஒரு புதிய மார்க்கம் எனவும் அவர்தம் நெறி தனி நெறி எனவும் சட்டப்படி அரசு முடிவு செய்ய வேண்டும். மாநில அரசவைக்கு அதிகாரம் உள்ளது என்று நாம் ஒரு உதாரணத்திற்காக கர்நாடகா அரசு லிங்காயத்தை தனி மதம் என அறிவித்ததை எடுத்துச் சொல்லப்பட்டது. அரசு செய்யாத பட்சத்தில், மேதகு நீதிமன்றம் நாடுவோம். ஆக, சுத்தசன்மார்க்கம் சார்ந்தவர்களுக்கும் பல பயன்களும், மகிழ்ச்சியும், இம்மார்க்கத்தை விரைந்து அறிந்திடஉலகத்தார்க்கும் பயன் கிடைக்கும்.
    நேரத்தை வீணடிக்காமல் விசாரம் செய்வோம்.
    நெறி என்றால் கொள்கை, கோட்பாடு எனப்படும். வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் எந்த சமய மதக் கோட்பாட்டை சொல்கிறது என்றால், இம்மார்க்கம் தனி நெறி, கொள்கையை சொல்கிறது. எல்லாவற்றையும் உள்ளடக்கி கடந்து தனி நெறியாக உள்ளது.
    வள்ளலார் மிக அதிகளவில் பயன்படுத்திய வார்த்தையில் ஒன்றுதான் “தனி” என்ற சொல்.
    இம்மார்க்கத்தில் செல்லப்பட்டுள்ள சத்திய வார்த்தைகள் அனைத்தும் தனித் தன்மை, தனிப்பொருள் கொண்டது. உ. ம்:
    தனி அறிவு, தனி இயற்கை, தனி அனுபவம், தனி அருட்பெருஞ்ஜோதி, தனிக்கருத்து, தனி வெளி, தனிச்சுடர்,
    தனி நடராஜர், தனிப்பெருங்கருணை,
    தனி அருள், தனி ஞானசபை, தனிவடிவம், தனிச்சோதி, தனிநடம், இதை போல் நூற்றுக் கணக்கான “தனி” யுடன் கூடிய வார்த்தைகளை காணலாம். ஆக, வள்ளலார் சொல்லிய கொள்கை, நெறி தனித்தன்மை கொண்டதும் அதே நேரத்தில் என் நெறி எல்லா சமயமத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக உள்ளது என்கிறார் வள்ளலார் . இங்ஙனம் ஒரு தனிப்பெயரை தன் மார்க்கத்திற்கு கொடுப்பது மூலம் வள்ளலாரின் மார்க்கம் ஒரு புதிய மார்க்கம் ஆகும்.
    தன் நெறி “தனி நெறி” எனத் தெளிவாக கீழ்வருமாறு பாடல்கள் மூலம் அறிவிக்கிறார் வள்ளலார்.
    #6ஆறாம் திருமுறை / திருவருள் விழைதல்
    தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத் தனிநெறி உலகெலாம் தழைப்பக்கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
    கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
    பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்புண்ணியம் பொற்புற வயங்க அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
    ##ஆறாம் திருமுறை / பொதுநடம் புரிகின்ற பொருள்

    சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியேசிவபத அனுபவச் சிவமே
    மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே
    மதிநிறை அமுதநல் வாய்ப்பே
    சதத்திரு நெறியே தனிநெறித் துணையே சாமியே தந்தையே தாயே
    புதப்பெரு வரமே புகற்கருந் தரமே
    பொதுநடம் புரிகின்ற பொருளே.

    தன் மார்க்கம் “தனி” என்பதற்கு பாடல்:

    ஆறாம் திருமுறை / ஜோதியுள் ஜோதி
    தருநெறி எல்லாம்உள் வாங்கும் – சுத்தசன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
    திருநெறிக் கேசென்று பாரீர் – திருச்சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

    இந்த தனி நெறியில், தனிப் பதி,
    புதிய மற்றும் பொது வழி, தனிப்பெரும்பயன் உள்ளது.
    #நாம் இத்தனி நெறியில் கருணை நன்முயற்சியில் இடைவிடாது பயில்வோம்.
    # மற்றவர்களுக்கு இவ்வுண்மையை எடுத்துரைப்போம்.
    # புதிய மார்க்கம் மற்றும் தனி நெறி என மத்திய அரசு விளம்புகை செய்ய மாநில அரசை பரிந்துரைக்க வேண்டுவோம் .
    # இதன் மூலம் இனி நாம் சுத்தசன்மார்க்கம் சார்ந்தவரென்று அரசிடம் பதிவு செய்வோம்.
    #வள்ளலார் கட்டளைப்படி சாகாகல்வி கற்க தீவிர விருப்பம் கொள்வோம்.
    நன்றியுடன் : ஏபிஜெ அருள்.

  • வடலூர் தை பூசம் – தமிழக அரசு விடுமுறை 2021

    தைப்பூசம் “
    அரசு விடுமுறை
    இந்நாள் ஏன் சிறந்தது?
    — ஏபிஜெ அருள்.
    “தை” மாதம், நன்றி சொல்லும் விழா காணும் மாதம்.
    நாம் வாழும் இந்த மண்ணைப் பொருத்து பார்ப்போமானால், இம்மாதத்தில் மக்களிடையே மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்திருக்கும். எல்லோருக்கும் பொதுவான முறையில் இயற்கைக்கு நன்றி சொல்லும் வகையில் பொங்கலிட்டு
    நன்றி சொல்லும் விழா காணும் மாதம் தை.
    உலகிற்கு பொது மறை தந்த திருவள்ளுவர் தினம் வரும் மாதம்.
    அரசியல் வழி பார்க்கையில் குடியரசு தினம் வரும் மாதம்.
    இம்மாதத்தில் வரும் பூச நாள் அதாவது ” தைப்பூசம்” மிக சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஆன்மீக நம்பிக்கையில்
    மிக சிறப்பாக இந்த மண்ணில் கொண்டாடப்படுகிறது. தமிழ் கடவுள் ” முருகன்” கோயில்களில் சிறப்பு விழாக்கள் கொண்டாடப்பட்டு லட்ச கணக்கான‌ பக்தர்கள் அவர்களின் முருகப் பெருமானை தரிசித்து மகிழும் நாள்.பூச நட்சத்திரமும் பெளர்ணமி திதியும் சேரும் சிறப்பு நாள் என்பர். முருகப்பெருமான் விழாக்களை மனதில் கொண்டு நமது மேதகு தமிழக‌” தைப்பூச” நாளை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.
    ஆனால் மேற்படி ” தைப்பூச” நாள்.
    வள்ளலார் வழியிலும் சிறப்பான நாள்.
    சமய,மத மார்க்கங்களை கடந்து வள்ளலாரால் வெளிப்படுத்திய
    ” சுத்த சன்மார்க்கத்தின் ” தனி நெறி வெளிப்படுத்தும் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காட்டும் புனித நாளாக கருதப்படுகிறது.
    எல்லோரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையில் அக காட்சியை வெளிப்புறத்தில் காட்டும் வகையில் திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டும் நாளும் தைப்பூசமே.
    தமிழ் நாட்டில் நடைபெறும் விழாக்களில் வடலூர் தைப்பூச வள்ளலாரின் சத்திய ஞான சபை ஜோதி தரிசனம் சாதி சமய மத வேறுபாடின்றி லட்சோப லட்ச அன்பர்களால் கண்டு களிக்கப் படுகிறது.
    ஆம், இயற்கையின் இயற்கையே இறைவன்.
    ஒன்றெனும் ஒன்றாகிய ஆண்டவரே முச்சுடர்கள் உட்பட அனைத்திற்கும் ஒளி வழங்கும் உண்மையை சுத்த சன்மார்க்கம் விளங்கும் காலத்தில் எல்லோரும் தெரிந்துக் கொள்வர்என்கிறார் திருவருட் பிரகாச வள்ளலார்.
    வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் நிலை அறிவது எதில் எனில்;
    அறிவுக்கு அறிவாம் சத்திய அறிவில் அறியப்படும் கடவுள் ஒருவரே என்பார்.
    மேலும், உண்மை அறியும் ஆன்ம அறிவாலே மட்டுமே கடவுளின் உண்மை நிலை காண முடியும் என்கிறது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்.
    ஒழுக்கம் நிரப்பி, கருணையுடன் இரங்கி, சுத்த சன்மார்க்கம் சார்ந்து இடைவிடாது நன்முயற்ச்சி செய்பவர்களுக்கு, எங்கும் பரிபூரணராக விளங்கும் அருட்பெருஞ்ஜோதி இறைவனே இரங்கி நம் உள்ளஅறிவினிலே தன் சொரூபக் காட்சியை காட்டி உண்மை அறிய செய்கிறார், என்கிறார் வள்ளலார்.
    இந்த தைப்பூச‌நாளில் புறத்தில் சந்திரன் சூரியன் இவைக்கு ஒளி வழங்கும் அருட்பெருஞ்ஜோதி ( சத்திய ஞான சபையில் காட்டப்படும் ஜோதி) நேர் கோட்டில் நிற்கும் காட்சி நடக்கும் என்பர்.
    நம்பிக்கையில் உண்மை எது என அறிய‌ முயற்சித்தால் ( விசாரம் செய்தால்) சத்திய அறிவு தோன்றும். சத்திய அறிவே உண்மை கடவுளின் நிலை காட்டும். என் மார்க்கம் உண்மை அறியும் அறிவு மார்க்கம் என்கிறார் வள்ளலார்.
    ஜோதியுள் ஜோதியுள் ஜோதி – சுத்த
    ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
    ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
    மொத்தத்தில்,
    சத்திய ஞான சபை,
    தமிழர் பொங்கல்,
    வள்ளுவராண்டு,
    ஆன்மீக நம்பிக்கை,
    இயற்கை திறம்,
    மக்களிடம் செழிப்பு,
    இவை பெற்ற தை மாதமும்,
    அம்மாத பூசநாளும் சிறப்பே.
    தைப்பூசம்
    அறிவு ஒளி நாள்.
    மகிழ்ச்சி நாள்.
    இந்த இனிய நாளில் விடுமுறை அளித்து சிறப்பித்த
    மேதகு தமிழக அரசுக்கு வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தார் சார்பில் வணக்கமும் நன்றிகளும்.
    — கருணை சபை சாலை
  • **அக்டோபர் 5 வள்ளலார் பிறந்த நாள் ** வள்ளலாரைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்

    Oct5-Vallalar-Birthday

    **அக்டோபர் 5 வள்ளலார் பிறந்த நாள் ** வள்ளலாரைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
    — ஏபிஜெ அருள்.
    # வள்ளலார் கண்ட மார்க்கம்::” சுத்த சன்மார்க்கம் “
    # அவரிடமிருந்த அதி தீவிர ஆசைகள்:
    1. நம் நிலை என்ன? நம்மை அனுஷ்டிக்கும் அந்த தெய்வத்தின் நிலை என்ன?
    2. அவத்தைகளை நீக்கிக் கொண்டு மரணமில்லா பெருவாழ்வில் வாழ்தல்.
    3. அண்ட திறங்கள் உட்பட அனைத்தும் பற்றி தெரிந்துக் கொள்ள ஆசை.
    # கடவுள் கொள்கை::
    சத்திய அறிவால் அறியப்படும் கடவுள் ஒருவரே!
    # வழிபாடு:
    ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல்.
    # சாதனம்:
    கருணை மட்டுமே.
    கருணை என்பது;
    எல்லா உயிர்களிடத்து தயவும் ஆண்டவரிடத்து அன்புமே.
    # கருணை விருத்திக்கு தடையாக உள்ள சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களை விட்டொழித்து மெய்ஞ்ஞான யோகம் செய்தல் ( உண்மை அறிவைக் கொண்டு பயிற்சியில் ஒருமையை வருவித்தல்)
    # வேண்டுதல்:
    ஆண்டவர் வந்து உண்மை தெரிவிக்க வேண்டும் என விண்ணப்பித்து இடைவிடாது வேண்டுதல்.
    🙏 ஏபிஜெ அருள்.
    அன்பர்களே!,
    வள்ளலார் இந்த நல்ல விசாரத்தில் கண்ணீர் விட்டு தொழுதார்,
    இறைவன் தயவு கொண்டு, தன் உண்மைச் சொரூபத்தை அவரின் உள்ளத்தில் உள்ளபடி காட்டி அருளினார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
    தான் கண்ட கடவுள், இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாக சொல்லப்பட்டுள்ள கடவுளர்,கர்த்தர், தெய்வம், ஞானி யோகி இவர்களில் ஒருவரல்ல. அவர்கள் அனைவரும் தங்கள்தங்கள் அனுபவங்களில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனி தலைமை பெருதம்பதி.
    உண்மை கடவுள் தனக்கு எல்லா உண்மைகளை உரைத்து, சாகா வரம் அருளினார். தனது தேகம் ஒரு தனி வடிவில் ஒளிஉடம்புகாக மாறியது என்கிறார் வள்ளலார். மேலும்,
    இது தனக்கு பேரின்பமாக இருந்தது. சாகாமல் இருப்பதே இறையருள்.
    நீங்கள் யாவரும் என்னைப் போல் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை.
    இது சத்தியம் இது சத்தியம் என்கிறார் வள்ளலார்.
    தனி நெறி
    புதிய வழி
    பெரிய பலன்
    இவை கொண்டதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம். இது 19 ம் நூற்றாண்டில் வள்ளலாரால் கண்ட வழி:
    எல்லா சமயமத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்கும் சுத்த சன்மார்க்கம்” குறித்து தெரிந்துக் கொள்ள “ஆசைக்” கொள்வோம்.
    அன்புடன் ஏபிஜெ அருள். 🙏கருணை சபை சாலை.
    இந்த இனிய நாளில் வள்ளலாரின் கடவுள் பற்றிய புதிய பொது கொள்கையை எல்லோரும் தெரிந்துக் கொள்ள ஷேர் செய்யுங்கள். – apjarul
  • ஸ்ரீ சங்கராச்சாரியாரும் — திருவருட்பிரகாச வள்ளலாரும்

    Tamil Thanthai Mozhi

    # ஸ்ரீ சங்கராச்சாரியாரும் –திருவருட் பிரகாச வள்ளலாரும் #
    # சமஸ்கிருதமும் — தமிழும் #
    —அன்றே சுபம்—
    — ஒரு வரலாற்று பதிவு —
    —- ஏபிஜெ அருள்.
    சமஸ்கிருதம் மொழியில் ஸ்ரீ சங்கராச்சாரியார்க்கு ஏற்பட்ட சந்தேகம் ஒன்றை தீர்க்கக் கூடிய வல்லமை வள்ளலாரிடம் உண்டு என அறிவித்ததை தொடர்ந்து,
    வள்ளலாரும்,
    சங்கராச்சாரியாரும்,
    சந்திக்க மடத்தார்கள் ஏற்பாடு செய்தனர். அய்யா வேலாயுதம் அவர்கள் வள்ளலாரிடம் இதை தெரிவித்து சந்திக்க சம்மதம் பெற்றார்.
    ஸ்ரீ சங்கராச்சாரியார் வள்ளலாரை வரவேற்று அமரச்செய்தார் , பின்பு சமஸ்கிருத மொழிகளில் சில வினாக்கள் எழுப்பி விளக்கங்கள் கேட்டார். வள்ளலார் அதற்குத் தகுந்த விளக்கங்களை தந்தார்.
    தொடர்ந்து வள்ளலாரும் சங்கராச்சாரியாரும், நீண்ட நேரம் பல,பல உலக விஷயங்களைப் பற்றி விவாதம் செய்து
    வந்தார்கள். அப்போது சங்கராச்சாரியார் சமஸ்கிருத மொழியின் உயர்வைப் போற்றி கூறியதோடு, அனைத்து மொழிகளுக்கும் தாயாக விளங்குவது சமஸ்கிருத மொழிதான் என்றார். உடனே சற்றும் தாமதிக்காமல், #சமஸ்கிருதம் தாய் மொழி என்றால்,
    தமிழ் ” தந்தை மொழி “ என்றார். அத்துடன் தமிழின் சிறப்பையும், “தமிழ்” என்ற சொல்லின் மெய்ப்பொருளையும் விளக்கமாக எடுத்து உரைத்தார் வள்ளலார்.
    “தமிழ்” என்னும்
    சொல்லுக்கிட்ட உரை ::
    “தமிழ்” என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடைத்து.
    த், ம், ழ் :-
    ஜடசித் கலை.
    அ, இ :- சித்கலை
    அ –
    அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள் பதிநிலை அக்கரமாம்.
    இ –
    பதியை விட்டு நீங்காத சித்தை விளக்கும் வியவகாரத்தால் அனந்தாகார வியஷ்டி பேதங் காட்டும் ஜீவசித்கலை அக்கரமாம்.
    பதி சிதாத்ம கலைகளுக் காதாரமாகி உயிரினுக்குடலை யொத்துக் குறிக்கப்படும்
    த், ம், ழ்
    எழுத்துக்களுக்குரை:
    த் – ஏழாவது மெய்;
    ம் – பத்தாவதாகும்;
    ழ் – 15-வது இயற்கை உண்மைச் சிறப்பியல் அக்கரமாம்.
    ஐந்தலகுநிலையும் உபய கலைநிலையும் மூன்று மெய்நிலையும் அமைந்துள்ளதும், சம்புபக்ஷத்தாரால் அனாதியாய் –
    சுத்த சித்தாந்த ஆரிஷ ரீதிப்படி கடவுள் அருளாணையால் –
    கற்பிக்கப்பட்டதும்,
    எப்பாஷைகளுக்கும் “பிதுர்பாஷை” யென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும்,
    “இனிமை” என்று நிருத்தம் சித்திக்கப்பெற்றுள்ளதுமான தமிழ் என்னும் “இயற்கை உண்மைச் சிறப்பியல்” மொழிக்குச் சுத்த சித்தாந்த பதஉரை:-
    த் – அ:- தத்வரூபாதி சிவபோகாந்தமான தசகாரிய இயற்கை உண்மைக் கட்டளை நிலையில், முன் அலகு நிலைப்பொருள் கூறியவிடத்துக் குறித்த ஏழாவது நிலையாகிய
    “த்” என்பது சிவரூப இயற்கையுண்மைக் கட்டளையாம்.
    அ – அகண்டாகார சித்கலா ரூப ஓங்காரத் துட்பொருட் பிரதம விலக்கிய வியக்தி அக்கரம். பன்னீருயிர் நிலையிற்றலையாய முதலக்கர மாதலில், அதுவே பிரமாதி பரசிவாந்த நவநிலைக்கும் அனாதியாதி காரணமாயுள்ள இயற்கையுண்மைப் பரிபூரணப் பொருளிலக்காம்.
    என்னவே, சிவரூபமாகும் தகராகாசத்தில் சுத்த சிவமாகும் அருட்ஜோதியிணைந்துள்ள பூரணானந்த ஸ்வரூப பரபதி வியக்தமாயிற்று.
    ம் – இ:- சங்கார ப்ரணவமாகிய மகாரம் முக்தான்மாக்களுக்கு ஒளிவண்ணச் சதானந்தமாயும் பெத்தான்மாக்களுக்கு இருள் வண்ணமலரூபமாயும் இருந்து கற்பாந்தப் பிரளய முடிவின் சிருஷ்டி திதியாதிகளில் சிதான்ம சக்தியாகிய ஜீவனுக்கு அதிகரணமாகவும், முற்குறித்த பத்தாவது நிலயமாகிய ஆன்மாதாரமாகியும் உள்ளதெனப் பொருளாம்.
    இ – பன்னீருயிர்நிலைகளில் மூன்றாம் நிலை உயிராகிய இகாரம் திரிகலா ஆன்மவருக்கத்தில் அபரமாகிய சகலாகலரையும் பரமாகிய பிரளயாகலரையும் கீழ்ப்படுத்தி அவ்விரு கூட்டத்தாருக்கும் மேற்பட்டு நின்ற சுத்த விஞ்ஞானகலராகிய சிதாத்மாக்களைச் சுட்டுகின்றதாம். என்னவே, ஆதார ஆதேயக் கூட்டுறவால் என்றுந் தோன்றி விளங்கும் சிதான்ம வருக்கங்கள் பரபதி லக்ஷியமாகிய பூரணானந்தத்திற்கு அனுபவிகளாக உரியவர்களெனக் குறிக்கொள்ளல் வேண்டும்.
    ழ்:- இந்தச் சிறப்பியல் அக்கரம் பதினெண் மெய்களில் பக்ஷமுடிபின் எண் குறிப்பில் நின்று, சிவயோக பூமியாகிய பரதகண்டத்தில் பௌராணிக தத்துவத்தாற் குறிக்கப்பட்ட ஐம்பத்தாறு தேசங்களுள் சுதேசந்தவிர மற்ற ஐம்பத்தைந்து தேச பாஷைகளிலும் இல்லாததாயும், பதினெண்ணிலமாகக் குறிக்கப்பட்ட செந்தமிழ் கொடுந்தமிழ் என்னும் இருமைக்கும் ஒற்றுமை யுரிமையாயும், முத்துறைத் தமிழுக்குள் முதன்மைத் துறையானதும் இருக்கு யஜுர் சாமம் என்னும் சமஸ்கிருத வேதாத்திரயப் பொருள் அனுபவத்தை எளிதில் கற்றுணர்ந்து தெளிந்து அனுபவித்ததற்குப் பரமேசுரனது திருவருளைப் பஞ்சாக்ஷர முத்தொழிற் காரியமான பஞ்சதசாக்கரியால் பிரத்தியக்ஷானுபவம் சித்திக்கச் செய்யும் நிலயமானதும், ஸ்ரீமாணிக்கவாசகர், சம்பந்தர், நாவரையர், சுந்தரர், திருமூலர் முதலிய மகாபுருஷர்களால் சாத்திர தோத்திரங்களாக அருளிச்செய்யப்பட் டிருக்கும் திருவாசகம், தேவாரம், திருமந்திரம் என்னும் பரமார்த்த ரகசியங்களை உடையதும், பலநாள் நைஷ்டிக அதிகரணம் பூண்டு போதகாசிரியர் சந்நிதியில் தாழ்ந்து சகபாடிகளோடு சூழ்ந்து சுர ஒலிபேதங்களைத் தேர்ந்து உழைப்பெடுத்து ஓதினாலும் பாடமாவதற்கு அருமையாயும், பாடமானாலும் பாஷ’யம், வியாக்கியானம், டீக்கா, டூக்கா, டிப்பணி முதலிய உரைகோள் கருவிகளைப் பொருள் கொள்ளத் தேட வேண்டியதாயும், அவ்வவைகளையும் தேடிக் கைவரினும் அக்கருவிகளால் போதகம் பெறவேண்டியதற்குப் பாஷ’யகாரர்கள் வியாக்கியானகர்த்தர்கள் டீக்காவல்லபர்கள் டூக்காசூசகர்கள் முதலிய போதக உபபோதக ஆசாரியர்கள் கிட்டுவது அருமையில் அருமையாயும் இருக்கிற ஆரியம் மகாராட்டிரம் ஆந்திரம் என்ற பற்பல பாஷைகளைப் போலாகாமல், பெரும்பாலும் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமாயும், ஒலி இலேசாயும், கூட்டென்னுஞ் சந்தி அதிசுலபமாயும், எழுதவும் கவிசெய்யவும் மிக நேர்மையாயும், அக்ஷர ஆரவாரம் சொல்லாடம்பரம் முதலிய பெண்மை அலங்கார மின்றி எப்பாஷையின் சந்தசுகளையும் தன் பாஷையுள் அடக்கி ஆளுகையால் ஆண்டன்மையைப் பொருந்தியதுமான தற்பாஷைக்கே அமைவுற்ற
    ழ், ற், ன் என்னும் முடி நடு அடி சிறப்பியல் அக்கரங்களில் முடிநிலை இன்பானுபவ சுத்த மோனா தீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கை உண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பியல் ஒலியாம்.
    உரை கூறிப்போந்த சுத்தசித்தாந்த ஆரிடரீதி முப்பதவுரைப் பொழிப்பு:-
    மருளியற்கை மலஇருளைப் பரிபாகசத்தியால் அருளொளியாக்கி, அதற்குள்ளீடான சிதாத்ம சிற்கலாசத்தி என்னும் சுத்த ஆன்மாவானது, தகர, ககன, நடன அருட்பெருஞ்ஜோதி என்னுஞ் சுத்த சிவானந்த பூரணத்தை சுத்த மோனாதீத வியலால் அனுபவிக்கும் இயற்கை உண்மையே “தமிழ்” என்னும் சொற்பொருள் சுட்டினவாறு காண்க.
    இதன் கருத்து யாதெனில்:- தமிழ்ப்பாஷையே அதிசுலபமாகச் சுத்தசிவானுபூதியைக் கொடுக்கு மென்பதாம்.
    வள்ளலாரின் விளக்கம் முற்றும்.
    #தமிழ் மொழியின் சிறப்பை, இயற்கை, இலக்கணம் மற்றும் தத்துவ அடிப்படையில் விளக்கம் கேட்ட அனைவரும் அன்பு, அறிவால் அன்றே தெரிந்து, இன்புற்று,அடங்கினர்.
    அன்பர்களே!
    மேற்படி படம் சித்தரிப்பு. ஆனால் நிகழ்ச்சி நிஜம். இது ஓர் உண்மை வரலாற்று பதிவு.
    “அன்றே சுபம்” ஆனது
    🙏 #ஏபிஜெ அருள் 🙏🏼
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
  • வள்ளலார் என்ன ஆனார்?

    வள்ளலார் என்ன ஆனார்? – ஏபிஜெ அருள்

    எதிரிகள் வள்ளலாரை இல்லாமல் செய்து விட்டார்கள் என்பது மிகவும் கீழ்தரமான, ஆதாரமற்ற பேச்சு ஆகும். வள்ளலாரின் கொள்கையே ” சாகாமல் இருப்பதே”. நான் மரணமில்லா பெருவாழ்வை பெற்றேன் என்ற வள்ளலாரின் சத்திய வார்த்தையை உலகத்தார் விசாரிக்கும் நாள்வரும் தருணம் இதுவே. — ஏபிஜெ அருள். 🙏

    # ஆதாரம் # வள்ளலார் ” சாகா கல்வி ” குறித்து பாடியப் பாடல்களின் தொகுப்பு — ஏபிஜெ அருள்

    #6-009 ஆறாம் திருமுறை / முறையீடு

    சாகாத தலைஅறியேன் வேகாத காலின்

    தரம்அறியேன் போகாத தண்­ரை அறியேன்

    ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்

    அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்

    மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்

    மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ

    ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்

    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

    #6-034 ஆறாம் திருமுறை / இறை எளிமையை வியத்தல்

    சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்

    தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்

    மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா

    வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்

    போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்

    புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்

    நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர்

    நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.

    #6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை

    கையாத தீங்கனியே கயக்காத அமுதே

    கரையாத கற்கண்டே புரையாத கரும்பே

    பொய்யாத பெருவாழ்வே புகையாத கனலே

    போகாத புனலேஉள் வேகாத காலே

    கொய்யாத நறுமலரே கோவாத மணியே

    குளியாத பெருமுத்தே ஒளியாத வெளியே

    செய்யாத பேருதவி செய்தபெருந் தகையே

    தெய்வநடத் தரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

    #6-041 ஆறாம் திருமுறை / காட்சிக் களிப்பு

    பாலானைத் தேனானைப் பழத்தி னானைப்

    பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக்

    காலானைக் கலைசாகாத் தலையி னானைக்

    கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா

    மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை

    மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி

    ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட

    எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

    #6-087 ஆறாம் திருமுறை / அருட்கொடைப் புகழ்ச்சி

    தோலைக் கருதித் தினந்தோறும் சுழன்று சுழன்று மயங்கும்அந்த

    வேலைக் கிசைந்த மனத்தைமுற்றும் அடக்கி ஞான மெய்ந்நெறியில்

    கோலைத் தொலைத்துக் கண்விளக்கம் கொடுத்து மேலும் வேகா

    காலைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

    #6-097 ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை

    சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்

    தான்என அறிந்தஅறிவே

    தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே

    தனித்தபூ ரணவல்லபம்

    வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்

    விளையவிளை வித்ததொழிலே

    மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே

    வியந்தடைந் துலகம்எல்லாம்

    மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை

    வானவர மேஇன்பமாம்

    மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்

    மரபென் றுரைத்தகுருவே

    தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்

    தேற்றிஅருள் செய்தசிவமே

    சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே

    தெய்வநட ராஜபதியே.

    #6-098 ஆறாம் திருமுறை / சற்குருமணி மாலை

    சாகாத தலைஇது வேகாத காலாம்

    தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே

    போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே

    பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே

    ஆகாத பேர்களுக் காகாத நினைவே

    ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே

    தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே

    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.

    #6-106 ஆறாம் திருமுறை / சுத்த சிவநிலை

    சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்

    வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் – சாகாத்

    தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை

    நிலைஅடைதல் வேண்டும் நிலத்து.

    #6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை

    ஏகாத கல்விதான் சாகாத கல்வியென்

    றேகாத லாற்சொன்னீர் வாரீர்

    வேகாத காலினீர் வாரீர். வாரீர்

    #6-131 ஆறாம் திருமுறை / சின்னம் பிடி

    வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி

    வேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி

    சாகாததலைஅறிந்து சின்னம் பிடி

    சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி.

    மரணம்  

    #5-005 ஐந்தாம் திருமுறை / பிரார்த்தனை மாலை

    தலனே அடியர் தனிமன மாம்புகழ் சார்தணிகா

    சலனே அயன்அரி ஆதியர் வாழ்ந்திடத் தாங்கயில்வேல்

    வலனேநின் பொன்அருள் வாரியின் மூழ்க மனோலயம்வாய்ந்

    திலனேல் சனன மரணம்என் னும்கடற் கென்செய்வனே.

    #6-014 ஆறாம் திருமுறை / சிற்சபை விளக்கம்

    கரண வாதனை யால்மிக மயங்கிக்

    கலங்கி னேன்ஒரு களைகணும் அறியேன்

    மரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன்

    வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்

    இரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர்

    இச்சை ஒன்றிலேன் எந்தைநின் உபய

    சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே

    சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

    #6-087 ஆறாம் திருமுறை / அருட்கொடைப் புகழ்ச்சி

    மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்

    விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்

    பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்

    கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

    #6-087 ஆறாம் திருமுறை / அருட்கொடைப் புகழ்ச்சி

    அருணா டறியா மனக்குரங்கை அடக்கத் தெரியா ததனொடுசேர்ந்

    திருணா டனைத்தும் சுழன்றுசுழன் றிளைத்துக் களைத்தேன் எனக்கந்தோ

    தெருணா டுலகில் மரணம்உறாத் திறந்தந் தழியாத் திருஅளித்த

    கருணா நிதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

    #6-099 ஆறாம் திருமுறை / தத்துவ வெற்றி

    மரணம்எனும் பெருந்திருட்டு மாபாவிப் பயலே

    வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே

    பரணமுறு பேரிருட்டுப் பெருநிலமும் தாண்டிப்

    பசைஅறநீ ஒழிந்திடுக இங்கிருந்தாய் எனிலோ

    இரணமுற உனைமுழுதும் மடித்திடுவேன் இதுதான்

    என்னுடையான் அருள்ஆணை என்குருமேல் ஆணை

    அரணுறும்என் தனைவிடுத்தே ஓடுகநீ நான்தான்

    அருட்பெருஞ்ஜோ திப்பதியை அடைந்தபிள்ளை காணே.

    #6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு

    சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்

    சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே

    இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீ

    தென்புரிவீர் மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ

    அகமறிந்தீர்359 அனகமறிந் தழியாத ஞான

    அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே

    முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ

    முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே.

    #6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு

    சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்

    திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்

    ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்

    உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே

    வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ

    மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா

    சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்

    தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.

    #6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு

    இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்

    இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்

    மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு

    மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்

    சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்

    சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே

    பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு

    பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.

    #6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு

    நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே

    நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு

    நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான

    நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

    வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்

    மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

    புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்

    பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.

    #6-107 ஆறாம் திருமுறை / மரணமிலாப் பெருவாழ்வு

    பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்

    புகலுவதென் நாடொறும் புந்தியிற்கண் டதுவே

    மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே

    மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே

    பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்

    பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே

    அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை

    அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே.

    #6-116 ஆறாம் திருமுறை / பந்தாடல்

    வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும்

    மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன்

    சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால்

    தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி

    ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும்

    உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை

    ஆழி கரத்தணிந் தாடேடி பந்து

    அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

    #1-003 முதல் திருமுறை / நெஞ்சறிவுறுத்தல்

    சாகான் கிழவன் தளர்கின்றான் என்றிவண்நீ

    ஓகாளம் செய்வதனை ஓர்ந்திலையோ – ஆகாத

    #4-001 நான்காம் திருமுறை / அன்பு மாலை

    திருநெறிசேர் மெய்அடியர் திறன்ஒன்றும் அறியேன்

    செறிவறியேன் அறிவறியேன் செய்வகையை அறியேன்

    கருநெறிசேர்ந் துழல்கின்ற கடையரினுங் கடையேன்

    கற்கின்றேன் சாகாத கல்விநிலை காணேன்

    பெருநெறிசேர் மெய்ஞ்ஞான சித்திநிலை பெறுவான்

    பிதற்றுகின்றேன் அதற்குரிய பெற்றியிலேன் அந்தோ

    வருநெறியில் என்னைவலிந் தாட்கொண்ட மணியே

    மன்றுடைய பெருவாழ்வே வழங்குகநின் அருளே.

    #4-001 நான்காம் திருமுறை / அன்பு மாலை

    அந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்

    அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே

    இந்தோங்கு சடைமணிநின் அடிமுடியுங் காட்டி

    இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச்

    சந்தோட சித்தர்கள்தந் தனிச்சூதுங் காட்டி

    சாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி

    வந்தோடு184 நிகர்மனம்போய்க் கரைந்த இடங் காட்டி

    மகிழ்வித்தாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.

    #5-019 ஐந்தாம் திருமுறை / நெஞ்சொடு புலத்தல்

    வாழும் படிநல் அருள்புரியும் மருவுந் தணிகை மலைத்தேனைச்

    சூழும் கலப மயில்அரசைத் துதியாப் பவமும் போதாமல்

    வீழும் கொடியர் தமக்கன்றி மேவா நினைவும் மேவிஇன்று

    தாழும் படிஎன் தனைஅலைத்தாய் சவலை மனம்நீ சாகாயோ.

    #5-082 ஐந்தாம் திருமுறை / பேரன்புக் கண்ணி

    கற்றதென்றுஞ் சாகாத கல்வியென்று கண்டுகொண்டுன்

    அற்புதச்சிற் றம்பலத்தி லன்புவைத்தேன் ஐயாவே.

    #5-082 ஐந்தாம் திருமுறை / பேரன்புக் கண்ணி

    வாடலறச் சாகா வரங்கொடுக்கு மென்றுமன்றில்

    ஆடலடிப் பொன்மலர்க்கே அன்புவைத்தேன் ஐயாவே.

    #6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்

    சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்

    ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி

    #6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்

    கல்வியுஞ் சாகாக் கல்வியு மழியாச்

    செல்வமு மளித்த சிவமே சிவமே

    #6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்

    சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்

    தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே

    #6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்

    சாகா வரமுந் தனித்தபே ரறிவும்

    மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்

    #6-002 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்

    சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்

    சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்

    #6-009 ஆறாம் திருமுறை / முறையீடு

    சாகாத தலைஅறியேன் வேகாத காலின்

    தரம்அறியேன் போகாத தண்­ரை அறியேன்

    ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்

    அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்

    மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்

    மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ

    ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்

    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

    #6-009 ஆறாம் திருமுறை / முறையீடு

    தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்

    சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன்

    அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை

    அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன்

    சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே

    தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ

    எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன்

    யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

    #6-014 ஆறாம் திருமுறை / சிற்சபை விளக்கம்

    சிரத்தை ஆதிய சுபகுணம் சிறிதும்

    சேர்ந்தி லேன்அருட் செயலிலேன் சாகா

    வரத்தை வேண்டினேன் வந்துநிற் கின்றேன்

    வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்

    கரத்தை நேர்உளக் கடையன்என் றெனைநீ

    கைவி டேல்ஒரு கணம்இனி ஆற்றேன்

    தரத்தை ஈந்தருள் வாய்வடல் அரசே

    சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

    #6-015 ஆறாம் திருமுறை / பெற்ற பேற்றினை வியத்தல்

    களித்தென துடம்பில் புகுந்தனை எனது

    கருத்திலே அமர்ந்தனை கனிந்தே

    தெளித்தஎன் அறிவில் விளங்கினை உயிரில்

    சிறப்பினால் கலந்தனை உள்ளம்

    தளிர்த்திடச் சாகா வரங்கொடுத் தென்றும்

    தடைபடாச் சித்திகள் எல்லாம்

    அளித்தனை எனக்கே நின்பெருங் கருணை

    அடியன்மேல் வைத்தவா றென்னே.

    #6-032 ஆறாம் திருமுறை / சிவானந்தத் தழுந்தல்

    தானந்தம் இல்லாத தன்மையைக் காட்டும்

    சாகாத கல்வியைத் தந்தெனக் குள்ளே

    தேனந்தத் தெள்ளமு தூற்றிப் பெருக்கித்

    தித்தித்துச் சித்தம் சிவமய மாக்கி

    வானந்தம் ஆதியும் கண்டுகொண் டழியா

    வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்தவே தாந்த

    ஆனந்த வீதியில் ஆடச்செய் தீரே

    அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

    #6-032 ஆறாம் திருமுறை / சிவானந்தத் தழுந்தல்

    தத்துவம் எல்லாம்என் தன்வசம் ஆக்கிச்

    சாகாவ ரத்தையும் தந்தெனைத் தேற்றி

    ஒத்துவந் துள்ளே கலந்துகொண் டெல்லா

    உலகமும் போற்ற உயர்நிலை ஏற்றிச்

    சித்திஎ லாம்செயச் செய்வித்துச் சத்தும்

    சித்தும் வெளிப்படச் சுத்தநா தாந்த

    அத்திரு வீதியில் ஆடச்செய் தீரே

    அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

    #6-034 ஆறாம் திருமுறை / இறை எளிமையை வியத்தல்

    சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர்

    தடையறியாக் கால்காட்டித் தரம்பெறவும் அளித்தீர்

    மாகாதல் உடையவனா மனங்கனிவித் தழியா

    வான்அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும்உணப் புரிந்தீர்

    போகாத புனலாலே சுத்தஉடம் பினராம்

    புண்ணியரும் நண்ணரிய பொதுநிலையுந் தந்தீர்

    நாகாதி பதிகளும்நின் றேத்தவளர்க் கின்றீர்

    நடராஜ ரேநுமக்கு நான்எதுசெய் வேனே.

    #6-034 ஆறாம் திருமுறை / இறை எளிமையை வியத்தல்

    பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர்

    புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்

    சதுமறைஆ கமங்கள்எலாம் சாற்றரிய பெரிய

    தனித்தலைமைத் தந்தையரே சாகாத வரமும்

    எதுநினைத்தேன் நினைத்தாங்கே அதுபுரியும் திறமும்

    இன்பஅனு பவநிலையும் எனக்கருளு வதற்கே

    இதுதருணம் என்றேன்நான் என்பதன்முன் கொடுத்தீர்

    என்புகல்வேன் என்புடைநும் அன்பிருந்த வாறே.

    #6-037 ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை

    சாகாத கல்வியிலே தலையான நிலையே

    சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே

    ஏகாத புனலிடத்தே இடியாத புவியே

    ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே

    கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும்

    குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே

    மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில்

    மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.

    #6-041 ஆறாம் திருமுறை / காட்சிக் களிப்பு

    பாலானைத் தேனானைப் பழத்தி னானைப்

    பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக்

    காலானைக் கலைசாகாத் தலையி னானைக்

    கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா

    மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை

    மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி

    ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட

    எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

    #6-046 ஆறாம் திருமுறை / பரசிவ நிலை

    சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்

    சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்

    மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்

    மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்

    ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்

    எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்

    தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்

    சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

    #6-056 ஆறாம் திருமுறை / இறை இன்பக் குழைவு

    தானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுதளித்த

    தாயே எல்லாச் சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே

    ஊனே விளங்க ஊனமிலா ஒளிபெற் றெல்லா உலகமும்என்

    உடைமை யாக்கொண் டருள்நிலைமேல் உற்றேன் உன்றன் அருளாலே

    வானே மதிக்கச் சாகாத வரனாய்319 எல்லாம் வல்லசித்தே

    வயங்க உனையுட் கலந்துகொண்டேன் வகுக்குந் தொழிலே முதலைந்தும்

    நானே புரிகின் றேன்புரிதல் நானோ நீயோ நான்அறியேன்

    நான்நீ என்னும் பேதம்இலா நடஞ்செய் கருணை நாயகனே.

    #6-056 ஆறாம் திருமுறை / இறை இன்பக் குழைவு

    கலைசார் முடிபு கடந்துணர்வு கடந்து நிறைவாய்க் கரிசிலதாய்க்

    கருணை மயமாய் விளங்குசிதா காய நடுவில் இயற்கையுண்மைத்

    தலைசார் வடிவில் இன்பநடம் புரியும் பெருமைத் தனிமுதலே

    சாகாக் கல்வி பயிற்றிஎன்னுட் சார்ந்து விளங்கும் சற்குருவே

    புலைசார் மனத்துச் சிறியேன்றன் குற்றம் அனைத்தும் பொறுத்தருளிப்

    பொன்றா வடிவு கொடுத்தெல்லாம் புரிவல் லபந்தந் தருட்சோதி

    நிலைசார் இறைமை அளித்தனைநான் பொதுவில் ஞான நீதிஎனும்

    நிருத்தம் புரிகின் றேன்புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே.

    #6-056 ஆறாம் திருமுறை / இறை இன்பக் குழைவு

    புரைசேர் வினையும் கொடுமாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு

    புகலும் பிறவாம் தடைகளெலாம் போக்கி ஞானப் பொருள்விளங்கும்

    வரைசேர்த் தருளிச் சித்தியெலாம் வழங்கிச் சாகா வரங்கொடுத்து

    வலிந்தென் உளத்தில் அமர்ந்துயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய்

    பரைசேர் வெளியில் பதியாய்அப் பால்மேல் வெளியில் விளங்குசித்த

    பதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த

    அரைசே அமுதம் எனக்களித்த அம்மே உண்மை அறிவளித்த

    அப்பா பெரிய அருட்சோதி அப்பா வாழி நின்அருளே.

    #6-060 ஆறாம் திருமுறை / உலப்பில் இன்பம்

    கூகாஎனக் கூடி எடாதிக் கொடியனேற்கே

    சாகாவரம் தந்த தயாநிதித் தந்தையேநின்

    மாகாதலன் ஆகினன் நான்இங்கு வாழ்கின்றேன்என்

    யோகாதி சயங்கள் உரைக்க உலப்புறாதே.

    #6-064 ஆறாம் திருமுறை / திரு உந்தியார்

    தந்தையைக் கண்டேன்நான் சாகா வரம்பெற்றேன்

    சிந்தை களித்தேன்என்று உந்தீபற

    சித்தெலாம் வல்லேன்என்று உந்தீபற.

    #6-069 ஆறாம் திருமுறை / ஆனந்தானுபவம்

    காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்

    சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் – ஞாலமிசைச்

    சாகா வரம்பெற்றேன் தத்துவத்தின் மேல்நடிக்கும்

    ஏகா நினக்கடிமை ஏற்று.

    #6-070 ஆறாம் திருமுறை / சிவபுண்ணியப் பேறு

    உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ்

    வுலகிலே உயிர்பெற்று மீட்டும்

    நயத்தொடு வருவித் திடும்ஒரு ஞான

    நாட்டமும் கற்பகோ டியினும்

    வயத்தொடு சாகா வரமும்என் தனக்கே

    வழங்கிடப் பெற்றனன் மரண

    பயத்தைவிட் டொழித்தேன் எனக்கிது போதும்

    பண்ணிய தவம்பலித் ததுவே.

    #6-073 ஆறாம் திருமுறை / சிவானந்தப் பற்று

    தேகாதி மூன்றும்உன் பாற்கொடுத் தேன்நின் திருவடிக்கே

    மோகா திபன்என் றுலகவர் தூற்ற முயலுகின்றேன்

    நாகா திபரும் வியந்திட என்எதிர் நண்ணிஎன்றும்

    சாகா வரந்தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே.

    #6-073 ஆறாம் திருமுறை / சிவானந்தப் பற்று

    கற்றேன்சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி

    உற்றேன்எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்

    பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்

    பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.

    #6-082 ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்சோதி அடைவு

    வாழிஎன் றேஎனை மால்அயன் ஆதியர் வந்தருட்பேர்

    ஆழிஎன் றேதுதித் தேத்தப் புரிந்தனை அற்புதம்நீ

    டூழிஅன் றேஎன்றும் சாகா வரமும் உவந்தளித்தாய்

    வாழிமன் றோங்கும் அருட்பெருஞ் சோதிநின் மன்னருளே.

    #6-084 ஆறாம் திருமுறை / உத்திரஞானசிதம்பர மாலை

    பவமே தவிர்ப்பது சாகா வரமும் பயப்பதுநல்

    தவமே புரிந்தவர்க் கின்பந் தருவது தான்தனக்கே

    உவமே யமான தொளிஓங்கு கின்ற தொளிருஞ்சுத்த

    சிவமே நிறைகின்ற துத்தர ஞான சிதம்பரமே.

    #6-087 ஆறாம் திருமுறை / அருட்கொடைப் புகழ்ச்சி

    கடுத்த மனத்தை அடக்கிஒரு கணமும் இருக்க மாட்டாதே

    படுத்த சிறியேன் குற்றமெலாம் பொறுத்தென் அறிவைப் பலநாளும்

    தடுத்த தடையைத் தவிர்த்தென்றும் சாகா நலஞ்செய் தனிஅமுதம்

    கொடுத்த குருவே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

    #6-087 ஆறாம் திருமுறை / அருட்கொடைப் புகழ்ச்சி

    புலையைத் தவிர்த்தென் குற்றமெலாம் பொறுத்து ஞான பூரணமா

    நிலையைத் தெரித்துச் சன்மார்க்க நீதிப் பொதுவில் நிருத்தமிடும்

    மலையைக் காட்டி அதனடியில் வயங்க இருத்திச் சாகா

    கலையைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

    #6-087 ஆறாம் திருமுறை / அருட்கொடைப் புகழ்ச்சி

    பெண்ணே பொருளே எனச்சுழன்ற பேதை மனத்தால் பெரிதுழன்ற

    புண்ணே என

  • இறைவனுக்கு இறைச்சி உணவு சம்மதமா? புலால் உணவு உண்பது சரியா?

    இறைவனுக்கு இறைச்சி உணவு சம்மதமா? புலால் உணவு உண்பது சரியா? — ஏபிஜெ அருள்

    மனிதராகிய நம் எல்லோரிடத்திலும் இரக்கம், கருணை இயற்கையாகவே உள்ளது. அக் கருணையை நம்மிடையே விருத்தி செய்யாமல் இருக்கிறோம் அவ்வளவே. மற்ற உயிர்களை கொன்றே ஆக வேண்டும், அதுவே அறிவு செயல், என்று எந்த அறிஞரும் உங்கள் தலைவர் எவரும் அறிவிக்கவில்லை. எந்தளவிற்கு கொல்கிறீர்களோ அந்தளவு புண்ணியம் என்று எந்த மார்க்கமும் சொல்லவில்லை. வாங்க இரக்கம் குறித்து விசாரணை செய்வோம் என பணிவுடன் வேண்டி அழைக்கிறேன். அன்புடன் சகோதரி ஏபிஜெ அருள் 🙏

  • அருட்பாவில் நல்ல விசாரம்-2

    # அருட்பாவில் நல்ல விசாரம் -2#
    — ஏபிஜெ அருள்.
    பாடல்:-

    இணைஎன்று தான்தனக் கேற்றது போற்றும் எனக்குநல்ல

    துணைஎன்று வந்தது சுத்தசன் மார்க்கத்தில் தோய்ந்ததென்னை

    அணைஎன் றணைத்துக்கொண் டைந்தொழில் ஈந்த தருளுலகில்

    திணைஐந்து மாகிய துத்தர ஞான சிதம்பரமே”.

    விசாரம்: –
    இங்குள்ள
    இணை, துணை, தோய்ந்த  என்னை அணை..என்ற வார்த்தைகளை கருத்தில் வைத்து, திரும்பவும் இந்த  பாடலை ஒருமுறை  படியுங்கள்.
    சுத்த சன்மார்க்கத்தில் தோய்ந்த வள்ளலாரே, தனக்கு “இணை“யானவர்  என்றும், அதனால் வள்ளலாருக்கு நல்ல “துணை“யாக இருக்க வந்தார் ஆண்டவர். வந்தவர் “அணை” என்றுச் சொல்லி அவரே அணைத்துக்கொண்ட 
    “அன்புடைக்
    காமம்” இருவரிடையே நடந்தது.
    அன்புடைக்காமம் என்பதற்கு பொருள்
    ” ஐந்திணை ” என்கிறது தமிழ் அகராதி.
    இந்த  “திணைஐந்து”மாகியதே சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும் “பெருங்கருணை”யாகிய உத்தர ஞான சிதம்பரம்.
    நன்றி அன்புடன் ஏபிஜெ அருள். ?
    நல்ல விசாரமே 
    சுத்த சன்மார்க்கத்தில் வழிபாடு.
  • அருட்பாவில் நல்ல விசாரம்-1

    *அருள்விளக்கமாலை*:-

     *பான்மறுத்து* விளையாடும் சிறுபருவத் திடையே

    பகரும்உல கிச்சைஒன்றும் பதியாதென் உளத்தே

     *மான்மறுத்து* விளங்குதிரு ஐந்தெழுத்தே பதிய

    வைத்தபெரு வாழ்வேஎன் வாழ்வில்உறும் சுகமே

     *மீன்மறுத்துச்* சுடர்மயமாய் விளங்கியதோர் விண்ணே

    விண்அனந்தம் உள்ளடங்க விரிந்தபெரு வெளியே

     *ஊன்மறுத்த* பெருந்தவருக் கொளிவடிவம் கொடுத்தே

    ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே.

    – –இப்பாலில் ஒருவாறு விசாரம் — ஏபிஜெ அருள் ?
    #
    ஆகா, நல்ல விசாரத்திற்கானப் பாடல் இது. வாருங்கள் ஒருவாறு விசாரம் செய்வோம். 
    “பான் மறுத்து…” 
    அதாவது பால் குடி மறந்து விளங்கும் பருவத்தில்
    ” உலக இச்சையிலே” பதியாது,
    அடுத்து,
    “மான்” மறுத்து என்பது திருமால் – வைணவக் கொள்கையை மறுத்த சைவ சமய ஐந்தெழுத்து பஞ்சாக்கர அக்ஷரத்தில் லட்சியம் கொண்டு;
    அடுத்து,
    ” மீன் ” மறுத்து,  தான் கொண்டிருந்த
     ” சிவன் ” கொள்கை சைவ சமயம் மறுத்து
    ” விண் ஜோதி ” பெரு வெளிக்  கொள்கை கொண்டு;
    அடுத்து,
    ” ஊன் மறுத்த” அதாவது உடம்பால்  பெறும் பசுஞானக் கொள்கையான ஆன்மாவிலேயே கலந்து கிடக்கும் நிலையை மறுத்து, அது கடந்த ஓர் உயர்ந்த அறிவுடையோருக்கு  கிடைக்கும் உடல் பெறும் தனிவடிவம் “ஒளி வடிவக்”  கொள்கை ..  ( வள்ளலார் முதன்மையாக கண்ட தனி நெறி)
    “நல்ல விசாரமே” சுத்த சன்மார்க்கத்தில் வழிபாடு ?
    # அருட்பாவில் நல்ல விசாரம் -1#
    — ஏபிஜெ அருள். 
  • வள்ளலார் செய்த யோகம் – சாதனம் – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம் – மெய்ஞ்ஞான யோகம் – ஒருமை – விசாரம்

    வள்ளலார் செய்த யோகம் – சாதனம் – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம் – மெய்ஞ்ஞான யோகம் – ஒருமை – விசாரம்

    சுத்த சன்மார்க்கத்தில் எந்தொரு பயிற்சியும் சாதனமும் கிடையாது, கூடாது என்கிறார் வள்ளலார். சுத்த சன்மார்க்கம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கருணை, ஒருமை, சுத்த சன்மார்க்க ஒழுக்கம் இவைக்கு வள்ளலார் கொடுத்த விளக்கம் அறிந்திருக்க வேண்டும். ஆண்டவரே உரைத்த மரபு நான்கும் தெரிந்து அதில் விருப்பமும், நன்முயற்சியும் வேண்டும். உலகில் இரு மார்க்கங்கள் சமய சன்மார்க்கம் மத சன்மார்க்கம் இருந்தது. 19 ம் நூற்றாண்டில் வள்ளலார் கண்ட மூன்றாவது மார்க்கமே ” சுத்த சன்மார்க்கம் “. சுத்த சன்மார்க்கம் சார்வீர், பேரின்ப பெருவாழ்வை பெறுவோம்.

    — கருணை சபை சாலை