Category: tamil katturai APJ arul

கட்டுரைகள் APJ அருள்

  • கடவுளின் உண்மை என்ன?

    கடவுளின் உண்மை என்ன?

    இந்த அத்தியாயம் மிக மிக முக்கியமான ஒன்று ஆகும். -APJ.ARUL.

    மார்க்கம் என்றால் வழி.

    சன்மார்க்கம் என்றால் சத்மார்க்கம்.
    சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கின்ற மார்க்கம்.

    நிற்க!
    உலகில் காணும் சமய மத மார்க்கங்களில் சொல்லப்பட்டுள்ள கர்த்தர், கடவுள், தெய்வங்கள் இவர்களின் நிலையை அறிகின்ற “வழி” என்னவாக உள்ளது?
    அம்மார்க்கங்களில் கடவுள் நிலையை கண்டு அக் கடவுள் அருளைப் பெற்றவர்களாக உள்ளவர்கள் “யோகி” களே.
    அந்த யோகிகள் எந்த வழியில் கடவுள் அருளைப் பெற்றார்கள்? என்பதே முக்கியமாக நாம் இங்கு சிந்திக்க வேண்டும்.
    அந்த வழி, “தவமே”. தவத்திற்கான இடங்கள்; வனம், மலை, முழை அதற்கு தேவைப்படும் கால அளவு; நூறு, ஆயிரம் முதலிய வருஷகாலம். மேற்படி தவத்தில் யோகிகள் செய்தது;
    # சில மந்திர வாசக பதவர்ணாதிகள் விந்து, நாத, ஓம், ஹரி, சச்சிதானந்தம், ஜோதியுள் ஜோதி, சிவாயநம, நமச் சிவாய உட்பட பல பரிபாஷைகள் மூலம்
    # தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும்,
    # தத்துவாதீதத்தைத் தியானித்தும் இடையில் ஜபித்தும்
    # கரணலயமாகச் சமாதி செய்தும்
    # தத்துவச் சேட்டைகளை அடக்க விரதமிருந்தும்
    # சாதாரண யோகபாகத்தில் மூச்சடக்கியும் செய்தார்கள்.
    நிற்க!
    மேற்படியான வழிவகைகளே சமய, மத சன்மார்க்கங்களில் உள்ளன. அந்தந்த யோகிகள் தங்கள் அனுபவத்தில் தெரிந்துக் கொண்ட உண்மையளவில் (அவர்களால்) பல சமய, மத சன்மார்க்கங்களை அவர்கள் ஏற்படுத்தினார்கள்.
    அச்சமய, மத மார்க்கங்களில் நம் நிலை என்ன?
    மேற்படி யோகிகளால் வெளிப்படுத்தப்பட்ட கடவுள், கர்த்தர், ஆண்டவர், தெய்வங்களை வணங்குதலே நம் நிலையாக உள்ளதே அன்றி அக்கடவுளின் நிலையறியும் உரிமையோ தகுதியோ அங்கு நமக்கு இல்லை.
    சில மார்க்கங்களில் யோகிகளையே தெய்வங்களாக, குமாரனாக, தூதுவராக ஏற்றுள்ளோம்.
    நிற்க! தவநிலையை யோகிகள் போன்று மனுஷ்ய தரத்தில் நம்மால் செய்ய முடியாது. சாதாரண மனுஷத்தரத்தில் நாம் வாழ்கிறோம்.
    அன்பர்களே!
    இறைவன் உண்டு.
    இறைவன் மிகப்பெரியவன்
    இறைவனே நம்மையும் உலகங்களையும் படைத்தான் என்ற உண்மைகள் யோகிகளால் வெளிப்படுத்தப்பட்டு அந்த இறைவனை வணங்குதல் வேண்டும் என்றுதான் நாம் பணிக்கப்பட்டுள்ளோம். யோகிகளின் அனுபவ கால அளவு கணக்கில் அடங்காது. அனுபவங்கள் பலவிதம், அவை உண்மையுடனும், திரித்தும், புனைந்தும் மற்றும் முழு கற்பனையாலும் மாற்றப்பட்டு நமக்கு பல புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் தரப்பட்டுள்ளது.
    நிற்க!
    # இங்கு நம் அறிவு எதை விரும்புகிறது? காட்டப்பட்டுள்ள இறைவனை, கடவுளை, தேவர்களை வணங்குவதிலா?
    அல்லது
    # நமக்கு மேல் அதிஷ்டிக்கின்ற கடவுளின் நிலை எப்படிப்பட்டது என்று அறியும் ஆவலிலா?
    அன்பர்களே!
    கடவுளின் உண்மை என்ன? உண்மைக் கடவுளை கண்டு அருள் பெறுவது எப்படி? என்று ஆசைப்படும் அறிவுக்கே இவ்விசாரணை மேலும் தொடரப்படுகிறது.
    ஆக, சமய, மதங்களில் இறைவனின் நிலை காண உள்ள வழி (தவ வழி) எல்லாருக்கும் (எல்லா மனிதர்களுக்கும்) ஒத்து வராது. அதில் சொல்லப்பட்டுள்ள தியானம், விரதம், மூச்சுப்பயிற்சி, மந்திரங்கள் எல்லாம் எல்லோராலும் செய்யக்கூடியதாக இல்லை. இதனால் வள்ளலார் கடவுள்நிலை குறித்து விஷேச நன்முயற்ச்சியில் தொடர்ந்து இருந்தார்கள். வள்ளலாரின் இந்த இடைவிடாத நன் முயற்ச்சியின் பயனாக அவருக்கு ஆண்டவராலேயே அறிவிக்கப்பட்ட வழியே “சுத்த சன்மார்க்கம்” ஆகும்.
    # இவ்வழி தனி வழி மட்டுமில்லை. உண்மை பொது வழியாகவும் உள்ளது.
    # இவ்வழி மற்ற எல்லா வழிகளையும் மறுக்க வந்தது என்கிறார் வள்ளலார்.
    # இவ்வழியில் எல்லா மனிதர்களாலும் பயணித்து இறையருளை பெறுவதாக உள்ளது.
    மனுஷ்யதரத்தில் அமைந்துள்ள உயர்வான “சுத்த சன்மார்க்கம்” சுத்த சன்மார்க்கத்தில் “நல்ல விசாரணை” செய்ய வேண்டும். நல்ல விசாரணை என்பது உலக விசாரம் அல்ல. பரலோக விசாரத்தையே குறிக்கும் என்கிறார் வள்ளலார்.
    ஆக, ஆறறிவு உள்ள தேகத்தைப் பெற்ற மனிதர்கள் அனைவருமே கடவுளின் உண்மை நிலையறிந்து அக்கடவுளின் அருளை பெறுதற்கான வழியை கொண்டதே சுத்த சன்மார்க்கம் ஆகும்.
    அதாவது; உஷ்ணத்தை தவம் செய்து உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் இதைவிடக் கோடிபங்கு பத்து கோடி பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.
    எதற்கு உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ள வேண்டும்?
    ஆன்மாவை தெரியவொட்டாமல் மூடி இருக்கின்ற திரையை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது.
    ஆக,
    மற்ற சமய, மத மார்க்கங்களுக்கும் சுத்த சன்மார்க்கத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் யாதெனில்;

    மற்ற சமய மத மார்க்கங்கள்
    ——————————————————-
    # இறைவனின் நிலையை காணும் வழி மனுஷ்ய தரத்தில் இல்லை

    # இறை உண்மையை தெரியவொட்டாமல் மூடி இருக்கின்ற திரைகளை விலக்கும் வழி “பொது” வழியாக இல்லை “யோகி”களின் தரத்திலே உள்ளது.

    # திரைகளை நீக்குவதற்கு வேண்டிய அதியுஷ்ணத்திற்கு” யோகிகள் தவத்தை இங்கு மேற்க்கொள்கிறார்கள்.

    # யோகிகள் வனம், மலை, முழை முதலியவற்றிற்குப் போய் நூறு, ஆயிரம் முதலிய வருஷ காலம் தவம் செய்ய வேண்டியுள்ளது.

    # காட்டப்பட்ட கடவுளை வணங்குதலும் வழிபாட்டு மற்றும் கட்டுப்பாட்டு ஆசாரங்களும் இங்கு உள்ளது.

    # ஏகதேச கர்ம சித்திகளை கற்ப னைகளாகச் சொல்லி இருக்கின்றார்கள். அவையில் லட்சியம் வைக்கப்படுகிறது.

    # பல வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால் அற்ப சித்திகளை அடையலாம்.

    # பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டப்பட்டுள்ளது

    # தெய்வத்திற்கு பெயரிட்டு இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம்முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள்.

    # வேதம், ஆகமம், புராணம் இதிகாசம் முதலிய கலைகள் உண்டு.
    ழூ தெய்வத்தைப் பற்றி புறங்கவியச் சொல்லவில்லை. ஆதலால் இறை உண்மை காண நமக்கு காலமில்லை.

    # “கருணை “ சாதனமாக சொல்லப் பட்டிருப்பினும், ஆசாரங்கள் இருப்பதால் அக்கருணை விருத்தியாகாமல் உள்ளது.

    # இங்கு முக்தி, சமாதி, மரணம் உண்டு.

    # காட்டப்பட்ட கடவுளை தொழுதலும் அக்கடவுளிடத்தில் வேண்டுதலுமே நாம் செய்கிறோம்.

    # சமய, மத மார்க்கங்கள் ஒவவொன்றும் ஒன்றிற்கு ஒன்று வேறுபட்டு உள்ளது.

    # பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஜீவகாருண்யம் இவையனைத்தும் இதன் இயல்புகள் ஆகும்.

    சுத்த சன்மார்க்கம்-
    ——————————————–

    # சுத்த சன்மார்க்கத்தில் மனுஷ்ய தரத்தில் இறைவனின் நிலையை அறிவதாக உள்ளது.

    # இறை உண்மை காணும் வழி உண்மை பொது வழியாக உள்ளது. எல்லா மனிதப் பிறவிகளுக்கும் உரியதாக உள்ளது.

    # “நல்ல விசாரணை” மட்டுமே இங்கு வழியாக உள்ளது.

    # மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தை சிந்தித்துக் கொண்டாவது அல்லது தோத்திரம் செய்து கொண்டாவது இருத்தல் போதுமானது.

    # கடவுள் உண்மை தெரிய வேண்டுமென நன்முயற்சியுடன் இருக்க வேண்டும். எந்தொரு ஆசாரமும் கிடையாது. கூடாது.

    # ஆண்டவரிடத்தில் மட்டுமே லட்சியம் வைக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்கு தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

    # கோடி கோடிப் பங்கு அதிகமாக கொடுக்கும் படியான இடம் இந்த இடம்

    # “அருள் ஒளியை காண்க” என உரைக்கப்படுகிறது.

    # ஒவ்வொருவரின் அக அனுபவத்தில்தான் இறைவனின் உண்மை வெளிப்படுவதாகவே சொல்லப்பட்டுள்ளது. எங்கும் பரிபூரணமாக விளங்கும் ஒரே மெய் பொருளாக்காட்டப் பட்டுள்ளது.

    # எந்தொரு கலையும் இங்கு இல்லை.

    # நினைந்து, உணர்ந்து, நெகிழ்ந்து இருப்பின் இப்பிறவிலேயே இறைநிலைக் கண்டு அருள் பெறலாம்.

    # கருணை விருத்திக்கு தடையாக உள்ள ஆசாரங்களை விட்டொழிக் குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    # சாகா கல்வியை தெரிவிப் பதன்றி வேறு ஒன்றுமில்லை.

    # உண்மை கடவுளின் நிலைக் காண ஒவ்வொருவரும் நல்ல விசாரணை செய்ய வேண்டும்.

    # மற்ற சமய, மத மார்க்கங்கள் யாவும் சுத்த சன்மார்கத்திற்கு அநநநியம் ஆனால் அந்நியம் அல்ல.
    # சுத்த சன்மார்க்கம். சமய, மத மார்க்கங்களின் அனுபவங்களை கடந்தது. இங்கு அக அனுபவமே உண்மை.

     

  • வள்ளலார் செய்த சத்தியம். & கடவுளை எங்ஙனம் வழிபாடு செய்தல் வேண்டும்?

    வள்ளலார் செய்த சத்தியம். & கடவுளை எங்ஙனம் வழிபாடு செய்தல் வேண்டும்?BY APJ.ARUL.

     

    Author :RAMALAKSHMI

    அன்பர்களே!
    திருஅருட்பிரகாச வள்ளலார் நம்மிடம் சத்தியம் செய்து சொல்வது என்னத் தெரியுமா?
    “வம்மின் உலகியலீர், மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர். புனைந்துரையேன், பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன். பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே. புகுந்தருணம் இது கண்டீர் நம்மவரே நான்தான் புகழ்கின்றேன் என்மொழி ஓர்பொய்மொழி எண்ணாதீர்”
    ஆக வள்ளலார் நம்மிடம் சத்தியம் செய்து அறிவித்தது; “மரணமில்லா பெருவாழ்வில் நாம் வாழ்ந்திடலாம்” என்பதைத் தான்.
    கடவுளை எங்ஙனம்
    வழிபாடு செய்தல் வேண்டும்?
    நமக்கு துணையாக எவரேனும் உண்டா?
    மேற்படி கேள்விக்கு பதில்;
    “உற்றவரும், பெற்றவரும், பிறரும், உடைமைகளும், உலகியலும், உற்றதுணை அன்றே” என்கிறார் வள்ளலார்.
    இறைநிலையை அறிய இறைவனே துணை என்பதை நாம் இங்கு சத்தியமாக அறிய வேண்டும். எனவே ஆண்டவனின் நிலையறிய அவர்தம் துணையையே தான் நாம் பக்தியோடு பணிந்து வேண்டுதல் வேண்டும்.
    வள்ளலார் கீழ்வருமாறு பக்தியோடு பணிந்து உரைக்கிறார்கள்.
    “மிகுந்த சுவைக் கரும்பே, செங்கனியே, கோந் தேனே, மெய்ப்பயனே, கைப்பொருளே, விலையறியா மணியே, தகுந்த தனிப் பெரும்பதியே, தயாநிதியே, கதியே, சத்தியமே.”
    மேலும், வள்ளலார் கீழ்வருமாறு கணிந்துளத்தே கனிந்து நினைந்துரைக்கிறார்.
    “பரம்பரமே, சிதம்பரமே, பராபரமே, வரமே, துணிந்து வந்த வேதாந்த சுத்த அனுபவமே, துரியமுடி அனுபவமே, சுத்த சித்தாந்த மதாய்த் தணிந்தநிலைப் பெருஞ்சுகமே, சமரச சன்மார்க்க சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே” என்கிறார்கள்.
    அன்பர்களே!
    மேற்படியாக பத்தியொடு பணிந்து, கணிந்துளத்தே கனிந்து நினைத்துரைத்திடில் அப்பொழுதே காணாத காட்சி எலாம் கண்டு கொளல் ஆமே! என்கிறார் வள்ளலார்.
    நிற்க! அன்பர்களே, இந்த இடம் மிகவும் முக்கியமான இடமாகும்.
    மேலும் மிக முக்கியமாக மற்றொன்றையும் நமக்கு குறிப்பிட்டு சொல்கிறார்கள்.
    அஃது யாதெனில்;
    “கண்டதெலாம் அநித்தியமே
    கேட்டதெலாம் பழுதே
    கற்றதெலாம் பொய்யே
    நீர் களித்ததெலாம் வீணே
    உண்டதெலாம் மலமே
    உட்கொண்ட தெலாம் குறையே
    உலகியலீர் இதுவரையும் உண்மையறிந்திலிரே”
    என்கிறார் வள்ளலார். மேலும்,
    சாதியும், சமயமும், மதமும் பொய்யென (211)
    ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி (212)
    சாதியும், மதமும் சமயமும் காணா (115)
    ஆதிய நாதியா மருட்பெருஞ்ஜோதி (116) மற்றும்
    உரைநடைப் பகுதி பக்கம் 411&ல்;
    “சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயம், மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காம, குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும், கொலை, புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.”
    மேலும், எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடையாகிய சமயங்கள், மதங்கள் மார்க்கங்கள், என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்” என கடவுளிடத்தில் விண்ணப்பிக்க சொல்கிறார் வள்ளலார்.
    ஆக, அன்பர்களே,
    உண்மைக் கடவுளை கருத்தில் கருதி அக்கடவுளை உண்மை அன்பால் வழிபாடு செய்வதற்கு முன்பு, உலகில் காணும் சமய, மத, (மார்க்கங்களில்) சாதிகளில் லட்சியம் வையாது, அவற்றின் ஆசாரங்களை விட்டொழித்து பொது நோக்கத்தை வருவித்துக் கொண்டு நம்மை சுத்த சன்மார்கக நெறிக்கு தகுதியாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் சத்தியமாக தெரிந்திருக்க வேண்டும்.

  • இஃது ரகசியம். எதனால் இங்கு சிலை,உருவங்கள், தலங்கள்,ஆச்சாரங்கள் இல்லை? –ஏபி ஜெ அருள்

    நம் வள்ளலார் நம்மை நேரடியாகவே ஆன்ம அறிவை கொண்டே விசாரிக்கச் சொல்கிறார்கள். என் மார்க்கம் அறிவுமார்க்கம். என் மார்க்கம் உண்மையறியும் மார்க்கம் என்கிறார் வள்ளலார்.
    எப்படி என்று ந‌ம் வள்ளலாரின் சத்திய வாக்கியத்தைக் கொண்டே பார்ப்போம்.

    இந்திரிய அறிவு:
    ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக் காணுதல் இந்திரியக்காட்சி, இந்திரிய அறிவு.
    மனஅறிவு:
    அதன் நாம ரூபத்தையும் குண குற்றங்களையும் விசாரித்தறிதல் மனஅறிவு.
    ஜீவ அறிவு:
    அதன் பிரயோஜனத்தை யறிதல் ஜீவ அறிவு.
    ஆன்மஅறிவு:
    அந்தப் பொருளினது உண்மையை அறிதல் ஆன்மஅறிவு.
    ஞானசபை:
    ஞானசபை யென்பது ஆன்மப் பிரகாசம்.
    அந்தப் பிரகாசத்திற்குள் ளிருக்கும் பிரகாசம் கடவுள்.
    அந்த உள்ளொளியின் அசைவே நடனம்.
    இவற்றைத்தான் சித்சபை அல்லது ஞானசபை என்றும்,
    நடராஜர் என்றும், நடனம் என்றும் சொல்லுகிறது.
    ஆன்மாவும் ஜீவனும்
    ஆன்மா தனித்தே யிருக்கும்.
    ஜீவன் மன முதலாகிய அந்தக் கரணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும்.
    காட்சி
    பூர்வம் – புறப்புறம், இந்திரியக் காட்சி.
    பூர்வ பூர்வம் – புறம், கரணக் காட்சி.
    உத்தரம் – அகப்புறம், ஜீவக் காட்சி.
    உத்தரோத்தரம் – அகம், ஆன்மக் காட்சி.ஞான வகை:
    உபாய ஞானம் – ஜீவஅறிவு, நக்ஷத்திரப் பிரகாசம்.
    உண்மை ஞானம் – ஆன்மஅறிவு, சந்திரப் பிரகாசம்.
    அனுபவ ஞானம் – கடவுளறிவு, சூரியப் பிரகாசம்.
    உபாய ஞான மென்பது நக்ஷத்திரப் பிரகாசம்போல் தோன்றிய ஜீவஅறிவு. உண்மை ஞான மென்பது சந்திரப் பிரகாசம் போல் தோன்றிய ஆன்மஅறிவு. அனுபவ ஞான மென்பது எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுள்அறிவு. ஆகையால் கடவுளை ஆன்மஅறிவைக் கொண்டு அறியவேண்டும்.
    சுத்த சன்மார்க்க சாதனம்
    சுத்த சன்மார்க்க சாதனம் 2 வகைப்படும்:
    பரோபகாரம், சத்விசாரம், பரோபகாரம் என்பது தேகத்தாலும், வாக்காலும், திரவியத்தாலும் உபகாரஞ் செய்வது.
    சத்விசாரம் என்பது நேரிடாத பக்ஷத்தில் ஆன்மநேய சம்பந்தமான தயாவிசாரத்தோடு இருப்பது.
    கடவுளது புகழை விசாரித்தல், ஆன்மாவின் உண்மையை விசாரித்தல்,
    தன் சிறுமையைக் கடவுளிடத்தில் விண்ணப்பித்தல்.
    இந்த மார்க்கத்தால்தான் சுத்தமாதி மூன்று தேகங்களைப் பெற வேண்டும்.

    சத்திய ஞானாசாரம்
    ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரமாசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாத்திராசாரம் முதலிய ஆசாரங்களொழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் ஒன்றே இது தொட்டு வழங்க வேண்டும். அதாவது, பெருந்தயவே வடிவமாக இருக்க வேண்டும்.
    அந்நியரின் தோஷம் விசாரியாமல் இருக்க வேண்டும்.
    உபாய வகையை நம்புதல் கூடாது;
    உண்மையை நம்புதல் வேண்டும்.
    இஃது ரகசியம். (இரகசியம் என்றால் உண்மை. இது சத்தியம் ஆகும்.)
    மேலும் அறிய பார்க்க:www.vallalar.org

     

    vallalar sky.jpg
  • Karunai Sabai Salai – APJ Arul

    TRUTH OF GOD

    vallalar-the-great

           On  1st February 2009, Karunai Sabai Salai is opened successfully. Portriate of His Holiness VALLALAR and Thiruvalluvar are declared opened .

    The ” DISCIPLINE” is only to be practiced in  Samarasa Sutha Sanmargam. Therefore ,the aforesaid principle of His Holiness Vallalar is taught here. The last conclusion of His Holiness  is only revealed to the  Society.  As pointedout by His HOliness , all religions, margams available in the world are declared as Main obstacles of this Sabai.

    The Karunai Sabai Salai having a “GRACE HALL” (Sabai) for conducting meetings to realize the truth of GOD as per the doctrines / principles of HIS HOLINESS VALLALAR and  another a Room (SALAI) for Anna Dhanam for only poor people.

    We, (members of Karunai Sabai – Salai) have decided and promised ourself that we will realize the truth of GOD on the base of HIS HOLINESS philosophy available in only Agaval, Peru-Ubadesam, Vinnappangals and Sutha Sanmarga Songs (called as Sixth Thirumurai). The above all are the primary and integral parts of the “Samarasa Sutha Sanmarga Sathiya Sangam”.

    We are inviting and requesting you to see our website regularly and to share with us about truth of God.

    We invite you to see our site : www.atruegod.org

    Compassion is only way to get the Grace of God

             Arutperumjothi                Arutperumjothi

             Thaniperumkarunai           Arutperumjothi