Blog

  • நாம் (சுத்த சன்மார்க்க நெறியை பின் பற்றி நல்ல விசாரணை செய்துக் கொண்டியிருப்பவர்கள் மற்றும் தழுபவர்கள்) உடனே செய்ய வேண்டிய பணி – ஏபிஜெ அருள்

    நாம் (சுத்த சன்மார்க்க நெறியை பின் பற்றி நல்ல விசாரணை செய்துக் கொண்டியிருப்பவர்கள் மற்றும் தழுபவர்கள்) உடனே செய்ய வேண்டிய பணி ஏபிஜெ அருள்

     இவ்விசாரணை இம்மார்க்கத்திற்கு உரியவர்களுக்கான பகுதி: -மன்னிக்கவும்-

            திருவருட்பிரகாச வள்ளலார் தான் கண்ட மார்க்கத்திற்கு ஒரு சங்கத்தையும் நிறுவியுள்ளார்கள்

     அச்சங்கத்திற்குசமரச சுத்த சன்மார்க்கச் சத்தியச் சங்கம்என்று திருபெயர் வழங்கி உள்ளார்கள்இதை ஒரு அறிவிப்பு நாள் 18-07-1872 மூலம் அறிவித்து உள்ளார்கள்

    வள்ளலாரின் நிலையங்கள் அனைத்தும் இன்று மேதகு அரசு இந்து சமய அற நிலைய ஆட்சித்துறை கீழ் உள்ளது

    அந்நிலையில் மேற்படி சங்கமும் உயர்திரு நிலைய நிர்வாக அலுவலர் கீழ் செயல் பட்டு வருகிறதுஅச்சங்கத்தில் ஆண்டு, ஆயுள் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் சந்தா வசூலிக்கப்பட்டு வருகிறது

    வள்ளலார் தன் மார்க்கத்துக்கு உரியவர்கள் யார்? என வியம்பு போது கீழ் வருமாறு சொல்லுகிறார்கள்:

       ”சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடைகளாகிய சமயம், மதம், முதலிய் மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்-” என்கிறார் வள்ளலார் –

    ஆனால் மேற்படி சங்கத்தில் யார் பணம் கொடுத்தாலும் உறுப்பினர்களாக நிலையத்தார்கள் சேர்த்து விடுகிறார்கள்- இதணால் மேதகு நீதிமன்றத்தில் வழக்கிட்டு முறையிடப்பட்டதுவள்ளலாரின் சங்கத்தில் சேர்பவர்கள் சமயம், மதம், முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களாக, காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவர்களாக, கொலை புலை தவிர்த்தவர்களாக கருதப்படுவார்கள் என ரசீதில் பின் பக்கம் அச்சடித்தல் வேண்டும் என்பதே வழக்கின் கோரிக்கையாகும்

     இது குறித்து விசாரிக்கும் படி, அரசுக்கு ஓர் உத்திரவினை மேதகு நீதிமன்றம் உத்திரவிட்டதுஅதன் அடிப்படையில் Asst Commissioner முன்பு நடைப்பெற்றது- பின்பு Join Commissioner க்கு மாற்றப்பட்டது – எந்த பதிலும் இந்நாள் வரை இல்லைஇன்னும் நிலுவையில் தான் உள்ளது

     நல்ல பதில் வரும் என காத்துள்ளோம்வர வேண்டும்

      நிற்க!

    வள்ளலாரால் ஆரம்பிக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்கச் சத்தியச் சங்கம் இன்றும் அரசால் நடத்தப்பட்டு வரப்படுகிறதுஆனால் இதில் என்ன முக்கிய விசயம் என்றால் அதில் மிக குறைவான உறுப்பினரகளே உள்ளனர்இந்நிலையில் சன்மார்க்க அன்பர்களிடம் வேண்டுவது யாதெனில்;

    1 – வள்ளற்பெருமான் ஆரம்பித்த இன்று மேதகு அரசு கீழ உள்ளசமரச சுத்த சன்மார்க்கச் சத்தியச் சங்கம்”(வடலூர்) ஒன்றே நம் சங்கம்

    2 – அச்சங்கத்தில் நம்மை உறுப்பினராக்கி கொள்ள வேண்டும்

    3 – வள்ளற்பெருமான் ஆரம்பித்த சங்கத்தின் பெயர் போன்று நாம் சங்கங்களை ஆரம்பித்தல் கூடாது

    4 –நாம் விரும்பும் வண்ணம் மற்ற பெயரில் ஆரம்பித்துக் கொண்டு நெறிப் பணிகளையும் ஜீவகாருண்ய பணிகளையும் செய்யலாம்

     இது எங்களது தாழ்மையான வேண்டுகோள்

     அரசு என்பது தூய்மையானது உண்மையானது பொதுவானது 

    அதன் கீழ் வள்ளலாரின் நிலையங்கள் செயல் படுகின்றன 

    அதில் எந்தொரு குறை இருந்தாலோ, அல்லது இன்னும் சிறப்புடன் செயல்பட வேண்டும் என்றாலோ  உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு தீர்வு ஏற்படுத்திக் கொள்ளலாம்- அதற்கு அரசு சட்ட விதிகள் நமக்குள்ளது –

     இன்று நிலையம் இந்து சமய அற நிலைய ஆட்சித் துறையின் கீழ் உள்ளது அதன் சட்ட உறுப்புகள் எல்லா நிலையங்களுக்கும், அவரவர் மார்க்க தனி கொள்கைக்கும் பாதுகாப்பாக உள்ளது என அறிதல் வேண்டும் மேலும் நமது இந்திய அரசு அமைப்பு சட்டம் எல்லாருடையச்ல் தனிப்பட்ட பழக்க வழக்கங்களுக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கிறது என்பதையும் அறிதல் வேண்டும் 

    மேலும் எந்தொரு நிலையமும் அதன் ஸ்தாபகர் எழுதிய அடிப்படையிலேயே பராமரிககப்படும் வள்ளலார் எந்தொரு குறிப்பையும்/ scheme யையும் ஏற்படுத்தவில்லை

          வள்ளலார் அவர்கள் சாகா நிலைப் பெற்றவர் சுத்த தேகி அவரே என்றும் சபையையும் சாலையையும் நடத்துகிறார், நடத்துவார் என்பதில் நமக்கு ஏன் சந்தேகம்? மேதகு அரசின் சட்ட உறுப்புகள் மீது ஏன் நம்பிக்கையில்லை? 

        நிலைய நிர்வாகத்தை மேதகு 5 அறங்காவலர்களை அரசு நியமித்து சட்டப்படி நிர்வகித்து வருகிறது மேற்படி 5 அறங்காவலர்கள் சட்டப்படியே சுற்று வட்டாரத்திலிருந்தே நியமிக்கிறார்கள் இதில் சில கோரிக்கை வைத்து சட்டப்படி ஒரு வழக்கிட்டு அதன் அடிப்படையில் ஒரு நீண்ட விசாரணை திரு ஆணையர் அவர்களால் போன வருடம் நடைப்பெற்றதுஅதில் நமது கோரிக்கையானது;

    சட்டப்படி நியமிக்கப்படும் 5 பரம்பரை அல்லாத அறங்காவலர்களில் அனைவரும் கொலை புலை தவிர்த்தவர்களாகவும், மேலும் அதில் குறைந்தது மூன்று பேராவது எங்கள் மார்க்கத்தை சார்ந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்பதே !

    திரு ஆணையர் அவர்கள் தனது ஆணையின் முடிவில் அறங்காவலர்கள் நியமிக்கும் போது உங்கள் கோரிக்கை கருத்தில் கொண்டு பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்கள்-

    திருவருட்பிரகாசர் வள்ளலார் மார்க்கம் உலகின் சமய மத மார்க்கங்களிலிருந்து மாறுப்பட்டு எல்லோருக்கும் ஓர் உண்மை பொது நெறியாக உள்ளதால், இந்நிலையம் எங்ஙனம் HR & CE கீழ் வரும் எனக்கருதக்கூடும்

    இந்து என்றால் எவர் ஒருவருவர் முஸ்ஸிலீம், கிறிஸ்து, பாரசீகர்,, யூதர், இல்லையோ மற்றவர்கள் அனைவருமே இந்து என அழைக்கப்படுவர்- இது தான் சட்டத்தின் பால் இந்துக்கு உள்ள அர்த்தம்  

          ஒரு வேளை இச்சட்டத்தின் (HR & CE) தலைப்பில் மாற்றம் வேண்டும் என்றாலும் மனு செய்வோம்- இந்து சமய அற நிலைய மற்றும் மார்க்கங்கள் ஆட்சித் துறை சட்டம்என கோரிக்கை வைத்து வேண்டலாம் வேண்டப்படும்  

         வள்ளலாரின் உயரிய தனி பொது சிந்தனைக்கு சிறப்பு அங்கீகாரம் அளித்து நிலையத்தை தனிப் பார்வையில் பராமரிக்க வேணுமாயும் மேதகு அரசிடம் கோரிக்கை வைத்தும் வேண்டலாம் வேண்டுவோம் – 

    எப்பெயரில் இருந்தாலும் அரசும், அரசு சட்டங்களும் நம் நிலையங்களுக்கு உயரிய சட்ட பாதுகாப்பு ஆகும் என்று அறிக!

    நிலையம் தொடர்ந்து சிறப்புடன் செயல்பட நிலையத்தார்களும், பார்வதிபுர மக்களுக்கும் தொண்டினையும், நன்றியையும் செய்வோமாக! 

     நிற்க! ஆனால் திருவருட்பிரகாச வள்ளலார் ஆரம்பித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் உறுப்பினராகாமல் நாம் சுத்த சன்மார்க்கத்தை சார்ந்திருப்பவர் என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்? அடுத்த முறை வடலூர் செல்லும் போது திரு நிலைய நிர்வாகியை சந்தித்து மேற்படி அச்சங்கத்தில் நம்மை சேர்த்து கொள்வது நமது பணியும் புண்ணியமும் என்று அறிக!

    மேற்படி சங்கத்தில், சுத்த சன்மார்க்கத்தை விரும்புவர்களையும், சாதி சமயம், மதம் சாராதவர்களையும் மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற உங்கள் பதிவை பதிவு செய்தும்,

     தாங்களும், “ நான் ——– (பெயர், ஊர்,விலாசம்) , திருவருட் பிரகாச வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர் என்றும், கொலை புலை தவிர்த்தவர் என்றும், சமய மத மார்க்கங்களில் முற்றும் பற்றற கைவிட்டவர் என்றும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவனும் ஆவேன் என்று  இதன் மூலம் உறுதியளிக்கிறேன்என்று எழுதி கொடுத்திட வேண்டுகிறேன் 

     நல்ல விசாரணையை தொடர்ந்து செய்வோம் 

    அருட்பெருஞ்ஜோதி           அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங்கருணை     அருட்பெருஞ்ஜோதி

    ஏபிஜெ அருள்

     

  • வள்ளலார் வரலாறு [Vallalar History]

    வள்ளலார்

    இந்தியா, தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், வடலூர் அருகில் மருதூர் என்ற ஊரில் சைவ சமயம் சார்ந்து வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில் ஐந்தாவது மகவாக 1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள் பிறந்தவர் வள்ளலார். அவரது இயற்பெயர் இராமலிங்கம்.

    “சமயத்தில் பற்று”

    வள்ளலாரின் குடும்பத்தார்கள் சைவ சமயத்தைத் தழுவி வந்தார்கள். அதனால் வள்ளலார் அச்சமயத்தின் மீது பற்றுக் கொண்டு வாழ்ந்து வளர்ந்து வந்தார்கள். இளம் வயதில் திரு இராமலிங்கம் (வள்ளலார்) அவர்கள் சென்னையில் அமைந்துள்ள ஒரு முருகன் ஆலயம் சென்று கவிகள் பாடி துதித்தார்கள். அக்கோயிலுக்கு “கந்த கோட்டம்” என பெயரிட்டு அழைத்தவர் வள்ளலார் இராமலிங்கம் அவர்களே. அன்பு, ஒழுக்கம், கருணை, இரக்கம் இவை குறித்து இவர் பாடிய பாடல்கள் மிக்க சிறப்புடையதாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

    சமயக்கடவுளர்கள் குறித்து பாடல்கள் நிறைய பாடியுள்ளார்கள். புராணங்களை மிகத் தெளிவாகச் சொல்லி ஆற்றிய சொற்பொழிவுகள் ஏராளம். அங்ஙனமாக அவர்தம் இளம்பருவகாலங்கள் சமயத்தில் பற்றுடனும், ஒழுக்கங்களில் மேன்மையுடனும் கடந்தன.

    பன்முக ஞானம்:

       பன்முக ஞானம் பெற்ற திரு.இராமலிங்கம் பின்பு மக்களால் “வள்ளலார்” என்றழைக்கப்பட்டார்கள். அவர் நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகாசிரியர், போதகாசிரியர், ஞானாசிரியர் வியாக்கியானகர்த்தர், சித்த மருத்துவர், சீர்திருத்தவாதி, அருட்கவிஞர், அருள்ஞானி என்று அனைத்து திறமைகளையும் பெற்று தனிச்சிறப்புடன் முதன்மையாக விளங்கினார்கள்.

    நூல்கள்:  

                    மனுமுறைகண்ட வாசகம்

                    ஜீவகாருண்ய ஓழுக்கம்

    உரைநூல்கள்:

                    ஓழிவிலொடுக்கப் பாயிர விருத்தி உரை

                    தொண்ட மண்டல சதகத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் உரை

    பதிப்புகள்:

                    மேற்படியான உரைநூல்கள் பதிப்பித்தார்கள்

                    மேலும் ‘சின்மயதீபிகையை’யும் பதிப்பித்தார்கள்

    வியாக்கியானங்கள்:

                    “உலகெலாம்” என்னும் மெய்ம்மொழிப் பொருள் விளக்கம்.

                    “தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை

    சித்த மருத்துவம்:

                    மருத்துவ குணங்கள் குறித்த அட்டவணை.

                    தாமே பல மருந்துகளை செய்தது.

                    கடிதங்கள் வாயிலாக மருந்து குறிப்புகள்.

                    ரசவாதம் பொன் செய்வதில் வல்லப தன்மை.

    சீர்த்திருத்தங்கள்:

                    புருட(ஷ)ன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்.

                   மனைவி இறந்தால்   புருடன் வேறு கல்யாணம் செய்ய வேண்டாம்.

                    கர்ம காரியங்கள் ஓன்றும் செய்ய வேண்டாம்.

                    சாதி சமய கட்டுபாட்டு ஆசாரங்களை விட்டு ஒழியுங்கள்.

    முதன்மையான செயல்கள்:

    • பொது மக்களுக்கு முதன் முதலாக திருக்குறள் வகுப்பு நடத்தியவர்.
    • முதன்முதலாக முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர்.

    o    மும்மொழி (தமிழ், வடமொழி, ஆங்கிலம்) வகுப்பு நடத்தியவர்.

    o    தமிழ்நாட்டின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.

    o    19ம் நூற்றாண்டில் கடவுள் உண்மையறிய “ஒரு தனி மார்க்கத்தை ”           நிறுவியவர்.

    o    தன்மார்க்கத்திற்கென சங்கம், சபை, கொடி, நெறி, கட்டளைகள், தடைகள் ஆகியவை வகுத்தவர்.

    o    எந்தவொரு மார்க்கமும் வெளிப்படுத்திடாத “மரணமில்லா பெருவாழ்வு” என்ற பெரும்பயன் இறையருளால் பெறலாம் என வெளிப்படுத்தினார்கள்.

    o    இவர் கண்ட மார்க்கத்தின் கடவுள், இதுவரை சமய மத மார்க்கங்களில் வெளிப்படுத்திய கடவுகளில் ஒருவரல்ல என்கிறார்.

    வள்ளலாரின் முடிபான கொள்கையில்உண்மை பொது நெறி

    வள்ளலாரின் முடிபான கொள்கையானது அவர்தம் முந்தைய கொள்கைக்கு முற்றிலும் மாறுப்பட்டது. சமயத்தின் மீது வைத்திருந்த பற்றை கைவிட்டு விட்டு ஓரு புதிய வழியை கண்டு, அவ்வழிக்கு “சுத்த சன்மார்க்கம்” என்று பெயரிட்டு உலகிற்கு வெளிப்படுத்தினார்கள்.

                    இளம்பருவத்தில் சமயப் பாடல்கள் பாடியதற்கு காரணம், தனக்கு அப்பொழுது கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது என்கிறார் வள்ளலார்.

                    சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் “ஒருவரே” என்பது அவர் கண்ட கடவுள் உண்மையாகும். தான் கண்ட கடவுள் உலகில் காணப்படும் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஐயபாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல என திட்டவட்டமாக 12.04.1871ல் தன் அறிவிப்பின் மூலமாக உலகிற்கு அறிவித்துள்ளார்கள்.

    நல்லறிவு, கடவுள் பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஓழுக்கங்களையும் உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலிய நற்செய்கை ஓழுக்கங்களையும் பெற்று சுத்தசன்மார்க்கத்திற்கு உரியவர்களாகியிருத்தல் வேண்டும் என்கிறார் வள்ளலார். மேலும் அவர் வெளிப்படுத்தியது யாதெனில்;

    ‘கருணை’ என்ற ஓரே சாதனத்தால்

    மட்டுமே கடவுள் உண்மையறிந்து,

    இறையருள் பெற்று, பேரின்ப பெருவாழ்வாகிய

    மரணமில்லா பெருவாழ்வு கைகூடுவதாக உள்ளது.

    அக்கருணை விருத்திக்கு தடையாக

    சாதி சமய கட்டுபாட்டு ஆசாரங்கள் உள்ளன.

    எனவே மேற்படி ஆசாரங்களை விட்டு ஓழித்து

    சத்திய ஞான ஆசாரமாகிய பொது நோக்கத்தை

    வருவித்துக் கொள்ள வேண்டும்.

    இதுவே வள்ளலார் கண்ட தனிநெறி.

       மேலும்,  இந்த தனிநெறி எல்லா சமய மத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது என்கிறார் வள்ளலார். வள்ளலாரின் ‘சுத்த சன்மார்க்கத்தை’ கீழ்வருமாறு சுருங்க கூறலாம்.

    1. சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஓருவரே. அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்து மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
    2. சுத்த சன்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடைகளாகிய சமய மத மார்க்கங்களின் ஆசார சங்கற்ப விகற்பங்களிலும் வருணம், ஆசிரமம் முதலிய உலக ஆசாரங்களிலும் மனம் பற்றக்கூடாது.
    3. கடவுள் நிலையறிவதற்கு “ஓழுக்கம்” நிரம்புதல் வேண்டும்.
    4. இடைவிடாது “கருணை” நன்முயற்சியில் பழகல் வேண்டும்.
    5. கருணை என்பது எல்லா உயிர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்தில் அன்புமே. அக்கருணைக்கு ஓருமை வரவேண்டும்.
    6. ஒருமை என்பது தனது அறிவும், ஒழுக்கமும் ஒத்த ஆடத்தில் தானே தோன்றுவது.
    7. நம் அறிவும் ஒழுக்கமும் ஒத்தவர்களுடன் கூடியாவது, தனித் தனியாவது அல்லது தனியாவது ‘நல்ல விசாரணை’ செய்யுங்கள்.
    8. சுத்த சன்மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை
    9. சுத்தசன்மார்க்கத்தின் முடிபு “சாகா கல்வியை” தெரிவிப்பது அன்றி வேறு ஒன்றுமில்லை. (என் மார்க்கம் இறப்பை ஒழிக்கும் மார்க்கம் என்கிறார் வள்ளலார்).
    10. ஆன்ம நேய ஒருமைபாட்டுரிமையே சுத்த சன்மார்க்கத்தின் லட்சியம்.

     இத்தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கறிவித்த வண்ணமே அறிவித்து,அவரவர்களையும்உரிமையுடைவர்களாக்கி வாழ்வித்தலே வேண்டும். 

    சுத்த சன்மார்க்கத்தின் மகாமந்திரம்:

    அருட்பெருஞ்ஜோதி     அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங்கருணை     அருட்பெருஞ்ஜோதி

    முடிபான கொள்கையில் வெளிவந்த நூல்களும் நிறுவிய நிலையங்களும்

    நூல்கள்:

    1. திருஅகவல்
    2. திருஅட்டகம்
    3. சுத்தசன்மார்க்கப் பாடல்கள் (ஆறாம் திருமுறை என அழைக்கப்படுகிறது)
    4. சத்திய விண்ணப்பங்கள் நான்கு
    5. 12.4.1871ல் சுத்த சன்மார்க்க கடவுளை வெளிப்படுத்திய அறிவிப்பு
    6. அதன்பின்பு தொடர்ந்து வெளியிட்ட அறிவிப்புகள், கட்டளைகள்,

         விளம்பரம், விதிகள்.

    (மேற்படியான அனைத்தும் திரு அருட்பிரகாச வள்ளலாரால் கைப்பட எழுதியவைகள்.)

    மேலும், வள்ளலாரின் உபதேசங்களை அன்பர்களால் கேட்டு எழுதப் பெற்ற “உபதேசக் குறிப்புகள்”.  அதே போல் வள்ளலார் (1873ம் ஆண்டு) ஆற்றிய “மகாபேருபதேசம்” (மெய் அன்பரால் எழுதி வைக்கப்பட்டது.)

    நிலையங்கள்:

     “சத்திய ஞான சபை” (பார்வதிபுரம்)

    [Google map: https://goo.gl/maps/BXRkPjrDcvt],

      “சித்தி வளாகம்.” (மேட்டுக் குப்பம்)

    [Google map: https://goo.gl/maps/g22wrwhfWdJ2],

    “தனி ஒளி வடிவம்” பெற்ற திரு அறை. (மேட்டுக்குப்பம்)

     [Google map: https://goo.gl/maps/g22wrwhfWdJ2],

    வள்ளலாரின் முக்கிய சத்திய வாக்கியங்கள்:

                    தெய்வத்தை தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். (உரைநடை பக்கம் 471)

                    பலவகைப்பட்ட சமய பேதங்களும் சாத்திர பேதங்களும், ஜாதிபேதங்களும் ஆசார பேதங்களும் போய் சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் இனி விளங்கும் (அறிவிப்பு நாள் 12.04.1871)

                    இந்த சாலையால் எனக்கு மிகவும் சலிப்புண்டாகிறது. அந்த சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் சாலையிலிருக்கிறவர்களெல்லாம் “சுத்தசன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என்மேற் பழியில்லை. சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப்பட வேண்டும்”.

                    (அறிவிப்பு நாள். கார்த்திகை மாதம் 1873) கார்த்திகை மாதத்தில் உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து, வள்ளலார் சொன்னது:-

    “இதைத் தடைபடாது ஆராதியுங்கள். அந்தக்கதவைச் சாத்திவிடப் போகின்றேன். இனி கொஞ்சகாலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால் உங்களுடைய காலத்தை வீணிற்கழிக்காமல், ‘நினைந்து நினைந்து’ என்னும் தொடக்கமுடைய 28 பாசுர மடங்கிய-பாடலிற் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள். நானிப்போது இந்த உடம்பிலிருக்கின்றேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்.

                    சத்திய பெரு விண்ணப்பத்தில்:-

    “எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மை கடவுள் ‘ஓருவரே’ உள்ளார் என்றறிகின்ற மெய்யறிவை விளக்குவித் தருளினீர். வாலிபப் பருவந் தோன்றியபோதே, சைவம், வைணவம், சமணம், பவுத்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த சாதனங்களும், தெய்வங்களும், கதிகளும், தத்துவசித்தி விகற்பங்களென்றும் அவ்வச் சமயங்களிற் பலபட அளவிறந்த சமயங்களும், அச்சமயங்களில் குறித்த விரிந்த வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகளெல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகளென்றும், உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமய ஆசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமற்றடை செய்வித்தருளினீர். அன்றியும் வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்களென்று அறிவித்து, அவைகளையும் அனுட்டியாதபடி தடை செய்வித்தருளினீர்.”

    சத்திய பெரு விண்ணப்பத்தில்;-

                    இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய ஞானசபைக்கண்ணே, இயற்கை உண்மை என்கிற சத்தியத் திருவுருவினராய், இயற்கை இன்பமென்கின்ற சத்தியத் திருநடஞ் செய்தருள்கின்ற இயற்கைத் தனிப் பெருங்கருணைத் தனிப் பெரும்பதியாய் தனித் தலைமைக் கடவுளே!

                    சத்திய ஞான விண்ணப்பத்தில்:-

    தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்.  அவையாவன:

    ஜாதி ஆசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள். ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால் ஒழிய தயவு விருத்தியாகாது. மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது.

    (உபதேசக்குறிப்பில் பக்கம் 418) கடவுள் நிலையறிவது எப்படி எனில்;

    ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால், நாம் தாழுங்குணம் வரும். அத்தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது கருணை நன்முயற்சியில் பழகல் வேண்டும்.

    (பக்கம் 438);      சுத்த சன்மார்க்கத்துக்கு அனுபவ ஸ்தானங்கள் கண்டத்துக்கு மேல்.

    சமாதிப் பழக்கம் பழக்கமல்ல. சகஜப் பழக்கமே சுத்தசன்மார்க்க பழக்கம்.

    30.01.1874ல் முடிபாக அறிவித்தது:-

    திருக்கதவு திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் வள்ளலார் அறிவித்தது; ”இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சுத்தசன்மார்க்க ஒழுக்கம்             இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை.”. யாதெனில்;

    இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப்  பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்” என்ற திருவார்த்தையதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாகவுடையது கடமை.”

    மேலும்;             “இப்போது ஆண்டவர் என்னை ஏறா நிலைமேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் அது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்”.வள்ளலார் அவர்கள் ஆரம்ப காலத்தில் சமயத்தில் பற்றுடன்    இருந்தார்கள். அதன்பின்பு அவையில் வைத்திருந்த லட்சியத்தை   கைவிட்டு விட்டு உண்மை பொது நெறியைக் கண்டார்கள் என்பதை   கருத்தில் கொள்ள வேண்டும்.

    வள்ளலாரின் முதல் நான்கு திருமுறையில் உள்ள சமய ஸ்தோத்திர பாடல்கள் மற்றும் அதன்பின்பு சமயத்திலேயே இருந்து வந்த திருவேலாயுத முதலியாரால் வெளியிடப்பட்ட ஐந்தாம் திருமறையில் உள்ள சமய ஸ்தோத்திரப் பாடல்களிலும் நாம் லட்சியம் வையாது, சுத்த சன்மார்க்க பெருநெறி ஒழுக்கத்தில் மட்டுமே இடைவிடாது நன்முயற்சியில் பழகல் வேண்டும். வள்ளலார் கட்டளைப்படி, ஒழுக்கத்தில் ஒழுகி, உள்ளழுந்தி,சிந்தித்து,சிந்தித்தலை விசாரிக்க வேண்டும்.

    அருட்பெருஞ்ஜோதி                                                        அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங்கருணை                                              அருட்பெருஞ்ஜோதி

    — நன்றியுடன்: ஏபிஜெ அருள், கருணை சபை-சாலை, மதுரை, தமிழ் நாடு, இந்தியா apjarul1@gmail

    Karunai Sabai-Salai

    34, Poombuhar Nagar North Extn.,

    Uthangudi, Madurai-625 107. Tamil Nadu. India.

    http://www.atruegod.org/wp-content/uploads/2016/11/உண்மை-இரக்கம்-_27-9-2015_.pdf

    http://www.atruegod.org/wp-content/uploads/2016/11/உலக-ஒருமைப்பாட்டுரிமை-தினம்-_27-9-2015_.pdf

  • “யோக மெய்ஞ்ஞானம்- சுத்த சன்மார்க்கத் தொழுகை ”

    ss-tholugai

     

    மிக விரைவில் திருமிகு ஏபிஜெ அருள் நடத்தும்
    “யோக மெய்ஞ்ஞானம்- சுத்த சன்மார்க்கத் தொழுகை ” திருவருளால் வெளிப்படவுள்ளது.
    தைப்பூச விழாவில் இந்த யோக மெய்ஞ்ஞானம்- சுத்த சன்மார்க்கத் தொழுகை வடலூரிலும் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    வள்ளலார் வழியில் நடைப்பெறும் இந்த சுத்த சன்மார்க்க யோகத்தில் கலந்துக் கொள்ள விரும்பும் நம்மவர்கள் முன்கூட்டியே பதிவு செய்தல் வேண்டும். தக்க அறிவிப்பு விரைவில் வரும். மேற்படி யோகத்தில் கொலை புலை தவிர்த்தவர்களும், வள்ளலார் மார்க்க நெறியில் மட்டும் லட்சியம் வைத்துள்ள நம்மவர்களுக்கு மட்டுமே.
    மேலும் விபரங்களுக்கு செல்: 9442438423 & 9842818242

  • சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும் கடவுள் யார்?

    திருஅருட்பிரகாச வள்ளலார் சித்திரை 1ல் எழுதியுள்ள மடல் மூலம் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். உலகத்தார்களுக்கு/நமக்கு சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும் கடவுள் யார்? என்று தெளிவான முறையில் சொல்லியுள்ளார்கள். நல்ல விசாரணை செய்வோர்க்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த இனிய நாளில் மீண்டும் ஒரு முறை வாசிப்போம்.
    ”சுத்தசிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லாம் உலகத்தும் வழங்கும் இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன்மேலும் அதன்மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமய பேதங்களும், சாத்திர பேதங்களும், ஜாதிபேதங்களும், ஆசாரபேதங்களும் போய், சுத்த சன்மார்க்க பெருநெறி யொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம். இது 29 மாதத்திற்கு மேல்.
    இப்போது வருகிற நமது கடவுள் இங்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல.
    இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத்தேவர்களும், எல்லாக்கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனிப்தலைமைப் பெரும்பதி. இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன், பெறுகின்றேன், பெற்றேன். என்னை யடுத்த தாங்களும் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை. பெறுவீர்கள், பெறுகின்றீர்கள், பெற்றீர்கள், அஞ்சவேண்டாம்”.
    பிரஜோற்பத்தி சித்திரை-1

    அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை
    சுத்த சன்மார்க்கப் பெருவாழ்வு வாழ்த்துக்கள்.
    இந்த இனிய நாளில் மீண்டும் ஒருமுறை சத்திய வாக்கியத்தில் உறுதிக்கொள்வோம்.

    1. சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும் கடவுள் உலகில் காணும் சமய,மதம் மார்க்கங்களில் வெளிப்படுத்தியுள்ள கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல.
    2. சுத்த சன்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடைகளாக இருப்பது சமயங்கள், மதங்கள். அச்சமய, மத, மார்க்கங்களின் ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் நம் மனதில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும் என விண்ணப்பிக்க வேண்டும்.
    3. சுத்த சன்மார்க்கம் என்பது சன்மார்க்கம், சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது.
    4. சுத்த சிவம் என்பது சிவம், பரசிவம் இரண்டையும் மறுத்தது.
    5. சுத்த சன்மார்க்கத்திற்கு பூர்வத்தில் சொன்ன சன்மார்க்கங்கள் யாவும் அ ந ந் நியம். அ ந் நியமல்ல. எல்லா சமய, மத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது
    APJ ARUL. 9487417834 apjarul1@gmail.com

  • வள்ளலார் நெறி, எந்த ஒரு சமய மதச் சார்பும் கொண்டதல்ல. சுத்த சிவமே நம் சிவம் –- திண்டுக்கல் சுவாமி.

    வள்ளலார் நெறி, எந்த ஒரு சமய மதச் சார்பும் கொண்டதல்ல. சுத்த சிவமே நம் சிவம் –- திண்டுக்கல் சுவாமி. (உள்ளது உள்ளபடி – ஏபிஜெ அருள்)

    …..(சுத்த தேகத்தோடு) இந்த மாதிரியான இறவா நிலையே சாகாக் கல்வியின் உண்மையாயிருத்தலின் அதன் இலக்கணம், இலக்கியம், எல்லாம் நமது அருட்ஜோதியாகவே கண்டு கொள்ளப்படுகின்றாதாம். நமது ஆண்டவர் அருட்பெருஞ்ஜோதி மயமானவர். அவரை அடைவதுவே நம்முடைய குறிக்கோள் அல்லது இலட்சியம். அந்தக் கடவுளரைச் சார்வதற்கு மெய்யருள் தானே மார்க்கமாயிருத்தலின் அப்பதியின் இலக்கணமாகவும் கருவியாகவும் அமைந்துள்ளது. அவ்வருளேயாகும். இது இதுவாய்த் தோற்றுகின்ற யாவும் அந்த அருட்ஜோதியின் பாலிருந்து வெளியுற்றிருப்பதாக இருக்கின்றதாகவும் குறிக்கப் படுகின்றது. இதற்கு மேல் அருட்பெரும்பதியை (சுத்த) சிவமே என்கின்றார்.
    இந்தச் சிவமோ, தொம்பதம் + தத்பதம் + அசிபதம் ஆக இருப்பது.
    நீ அதுவாய் இருக்கின்றாய் என உபதேசிக்கப்படுகின்றதே இதன் கருத்தாம். நீ என்பது சுத்த ஆன்மா;
    இதுவே சிவனது உண்மை வடிவம் ஆம்; அவனது அருள் ஒளியிற் பிறந்து விளங்குகின்ற தேகாதி பிரபஞ்சம். அசிபதப் பொருளாக உள்ளது. இவை மூன்றும் ஒன்று கூடி விளங்குமிடத்து தான் இன்பானுபவம் உண்டாவது சாத்தியம், ஆகையால் தான், தொம்பதமும், உடனுற்ற தற்பதமும், அசிபதச் சுகமும் ஒன்றானான் சிவமே என்றார். இவ்வின்புருவாம் சிவமென்னும் கடவுள் ஒருவர் தானே இவ்வகைத் திரி நிலை கொண்டு திகழ்கின்றதை இன்று திருவருளால் கண்டு பயன் அடைகின்றோம்.
    இவற்றைச் சைவ சித்தாந்தம் பதி, பசு, பாசம் என்றது.
    என்றாலும் அருள் உண்மை விளங்காத தாலே இம் மூன்றும் இணைந்தே முழுமை பெற்றுத் திகழும் இயல்பு ஏற்கப்படவில்லை.
    பாசம் விட வேண்டும் என்றும், பசு நிலை கெடவேண்டுமென்றும் அப்பொழுதுதான் பதி நிலை கூடும் என்றும் கொண்டு கூறி வாழ்வற்றுப் போக நேர்ந்த தாகும்.
    ஆனால் இப்பொழுது திருவருளாலே நம் அருட்பெருஞ்ஜோதி பதி வெளிப்பட்டு சுத்த சன்மார்க்கிக்குப் பூர்ணத் திருவருளை வழங்கி, பதி, பசு, பாசத்தையே ஞான தேகம், பிரவண தேகம், சுத்த தேகம் என்றும் திரிதேக சித்தி வடிவாக்கி அது கொண்டு பேரின்போடு விளங்கச் செய்து விடுகின்றார். இன்றைய சாகாக் கல்வியின் பயன் இதுவாகும்.
    நமது திருவருட்பிரகாச வள்ளலார் அருட்பெருஞ்ஜோதிப் பொது நெறியை திறந்து விட்டார்.
    இந்நெறியில் உற்று உளம் நிறை அருளொடு ஒழுகினால், உண்மையை எல்லாம் உள்ளவாறு கண்டு உயர் பயன் பெறலாம். இவர் வழங்கியுள்ள அருட்பெரு நெறி, எந்த ஒரு சமய மதச் சார்பும் கொண்டதல்ல.
    மேலெழுந்த வாரியாகவும் குறுகிய நோக்கோடும், மதமார்க்கப் பற்று கொண்டும், இதனை அறிந்து அடையாது விலகிச் சென்றால் அது அறியாமையே. அன்றியும் ஆண்டவரின் ஆணைக்குச் செவி கொடுக்காது மறுத்துச் சென்று, துன்புற்று அழிவு படுகின்ற செயலே ஆகும். ஆகையால் இந்த அருட்பெருஞ்ஜோதி பதியின் உண்மையை யாவரும் கண்டு கொள்ளவே ஈண்டு இவ்வளவுக்குச் சொல்ல நேர்ந்ததாம்.

  • யாருடைய பசியை நீக்குதல் வேண்டும் என வள்ளலார் குறிப்பிடுகிறார்?

    யாருடைய பசியை நீக்குதல் வேண்டும் என வள்ளலார் குறிப்பிடுகிறார்?
    யாருடைய பசியைக் குறித்து யோசிப்பது அவசியமல்ல?

    இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:.

    ‘”…ஆகலில் நாமனைவரும் எந்த வகையிலும் ஆதாரமில்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்டபோது மிகவும் கருணை உள்ளவர்களாகி நம்மால் கூடியமட்டில் அந்தப் பசி என்கின்ற ஆபத்தைப் பொதுவாக நிவர்த்திப்பதற்கு முயற்சி செய்வதே ஆன்ம லாபம் என்று அவசியம் அறிய வேண்டும்.”

    இதை நாம் எல்லாரும் கண்டிப்பாக செய்தல் வேண்டும். நம்மால் கூடியமட்டில் இந்த ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடித்து மற்ற சீவர்களுக்கு ஏற்படுகின்ற இந்த அவத்தையை (பசியை) நீக்குதல் நம் உரிமை மற்றும் அடிப்படை ஒழுக்கம் ஆகும்.
    இந்த பசி என்கிற அவத்தையானது பொதுவாக எல்லா சீவர்களுக்கும் உண்டாகும். ஆனால் யாருக்கு/ யாருடைய பசியை நீக்கினால் போதுமானது என விரிவாக பார்க்கும் போது; (பக்கம்123):
    1. ஏழைகள்
    2. பசியினால் பாழகும் உடம்புக்கு
    3. பசியினால் நிலைதடுமாறி அழியும் தருணத்தில் உள்ள குடும்பம்
    4. பசியினால் மயக்கம் அடைபவர்கள்
    5. பசியினால் வருந்தி, பசி நீக்க வழி தெரியாமல் தவிக்கும் மானமுள்ளவர்கள் மற்றும் விவேகிகளானவர்கள்
    6. மற்ற உயிர்களுக்கு சத்துவ ஆகாரம் கொடுத்தல்
    இவர்களை தவிர மற்றவர்கள் அனைவராலும் தங்களுக்கு நேரிட்ட பசியைத் தங்கள் முயற்சியினாலேயே மாற்றிக் கொள்ளத்தக்க வல்லபமுடையவர்கள் ஆதலால் அவர்கள் பசியைக் குறித்து மற்றவர்கள் யோசிப்பது அவசியமல்ல என்கிறார் வள்ளலார். மேற்படியான இவர்களுக்கு பசி நேர்ந்தால் துன்பமுண்டாகுமே என்று இரங்குவது மாத்திரம் அவசியமென்று அறிதல் வேண்டும்.

    ஆக, பசியை தங்கள் முயற்சியினால் மாற்றிக் கொள்ளத் தக்கவர்களுக்கு பசியை தருமச் சாலையில் பசி நிவர்த்திக்க வேண்டிய அவசியமில்லை.

    ஏழைகள் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ளவர்களுக்கே அன்னதானமிடுதலே சரியாகும்.

    அங்ஙனம் மட்டும் நடைப்பெறுகின்ற தருமச்சாலைக்கு நம்மால் கூடியமட்டில் பொருள் முதலிய உதவி செய்தல் அவசியம்.இதனால் நம்மை சுத்த சன்மார்க்க நெறி அறிவதற்கான தகுதியுள்ளவர்களாக ஆக்கிக் கொள்கிறோம்.
    இந்த ஜீவகாருண்ய ஒழுக்கம் நம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் சேர்வதற்கான தகுதியே என தெரிதல் வேண்டும்.
    அடுத்து உள்ள ஒழுக்கம் சுத்த சன்மார்க்க ஒழுக்கம் ஆகும்.

    இந்த சுத்த சன்மார்க்க ஒழுக்கமே இறை வீட்டினுள் நாம் செய்யும் தொழிலாகும்.
    மேலே கண்ட ஜீவகாருண்ய ஒழுக்கம் இறை வீட்டின் திறவு கோல் என்கிறார் நம் வள்ளலார். அப்படியெனில் சுத்த சன்மார்க்க ஒழுக்கம் என்றால் என்ன? பக்கம் 410ல் வள்ளலார் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்கள்;
    ‘ இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்’ இதுவே நம் தொழில் எனவும் குறிப்பிடுகிறார் நம் வள்ளலார்.
    ஆக, அன்பர்களே!
    நம் அன்னதான தரும சாலையில் நம்மால் கூடிய மட்டில் நம் வள்ளலார் குறிப்பிட்டுள்ளவர்களின் பசியை நீக்குவோம்,
    அடுத்து, நம் ஞான சபையில் நம் வள்ளலார் குறிப்பிட்டுள்ளப்படி தலைவனாகிய உண்மைக் கடவுளை மட்டும் கருத்தில் கருதி தொழுவோம்.
    இவை முறையே;
    உண்மையான ஜீவகாருண்யமாகும் மற்றும்
    நம் உண்மைத் தொழிலாகும்
    —–என்றும் அன்புடன் ஏ.பி.ஜெ.அருள்.

  • சுத்த சன்மார்க்க நன்முயற்சி (பயிற்சி) வகுப்பு

    சுத்த சன்மார்க்க நன்முயற்சி (பயிற்சி) வகுப்பு ஆரம்பம். (1) -ஏபிஜெ. அருள்

    http://www.vallalarspace.com/KarunaiSabai/c/V000020603B

    முதல் நாள் வகுப்பு -1.

    அன்பர்களே!
    திருஅருட்பிரகாச வள்ளலாரே நமக்கு துணை.
    அவர்தம் நெறியிலேயே நம் பயிற்சி.
    வகுப்பில் சேர்ந்திருப்பவர்கள் அனைவருமே கீழ்க்காணும் தகுதியை ஏற்கனவே பெற்றவர்களாக கருதுகிறோம்.

    அதாவது;

    1. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
    2. நல்லறிவு கடவுள் பக்தி உடையவர்கள்
    3. உயிரிரக்கம் பொது நோக்கம் கொண்டவர்கள்
    4. திரிகரண அடக்கம் பெற்றவர்கள். – முதலிய நற்குண ஒழுக்கங்கள்

    மேலும்;
    1.உண்மையுரைத்தல்,
    2.இன்சொல்லாடல்,
    3.உயிர்க்குபகரித்தல் — முதலிய நற்செய்கை ஒழுக்கங்கள் பெற்றவர்கள்.
    அன்பர்களே, மேலே சொன்ன ஒழுக்கங்களை பெற்று உள்ள நாம் நன்முயற்சி பயிற்சி வகுப்புக்கு உரியவர்களாகி விட்டோம். (மேற்படிச் சொல்லப்பட்ட தகுதிகள் வள்ளலாராலேயே வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.)

    விண்ணப்பம்:

    திருமந்திரம் சொல்வோம்:

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

    (சம்மணம் அல்லது நாற்காலியில் அமர்ந்து நிமிர்ந்து உட்கார வேண்டும்.
    நம் கைகள் நம் அய்யா வைத்திருப்பது போல் வைக்கவும்.)
    (முதலில் உரக்கச் சொல்லிக் கொள்ளலாம் பின்பு மெல்லனெ விண்ணப்பித்தலே வேண்டும்)

    இதோ விண்ணப்பம் செய்வோம்:

    ”நாங்கள் பிறவிகள் தோறும் அடைந்த அலுப்பும் அச்சமும் அவலமும் களைப்பும் துன்பமும் திருவுளத்தடைத்து, இரங்கியருளி,
    அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய உயரறிவுடைய
    இம்மனித தேகத்தில் செலுத்தியருளிய தேவரீரது பெருங்கருணைக்கு யாங்கள் செய்யுங் கைம்மாறு ஒன்றுந் தெரிந்தோமில்லை.
    கடவுளே! யாங்கள் விண்ணப்பிக்கின்ற அற்ப வாசத்தில் உரிமை நோக்காது அங்கீகரித்தருளி யெங்களைக் காத்தருளல் வேண்டும்.”
    உலகத்தில் இருக்கின்ற எல்லா ஜனங்களுக்காக ஆண்டவராகிய உங்களிடத்தில் விண்ணப்பித்து தேவரீர் திருவருளைப் பெற்ற திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள் கண்ட உண்மை பொது நெறியிலேயே உங்களின் திரு நிலைக் காண
    இன்று விசாரம் செய்கிறோம். எங்களை அங்கீகரித்து அருள வேண்டும்.

    :வழிபாடு:

    அன்பர்களே!
    கீழ்க்காணும் திருவாசகத்தை நாம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

    (ஆரம்பத்தில் இவ்வாசகத்தை உரக்கச் சொல்லாம். பின்பு மெல்லென சொல்லுதலே வேண்டும்.)

    இதோ, சொல்லுவோம்;

    “எல்லா அண்டங்களையும்,
    எல்லா உலகங்களையும்,
    எல்லாஉயிர்களையும்,
    எல்லாப் பொருள்களையும்,
    மற்றையெல்லாவற்றையும்
    தோற்றுவித்தும், விளக்கம் செய்வித்தும்,
    துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும்,
    பலன் தருவித்தும், எங்கும் பூரணராகி விளங்குகின்ற
    “ஓர் உண்மைக்கடவுள்” உண்டு.
    அக்கடவுளை உண்மையன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்கிறேன்.
    அக்கடவுள் திருவருள் என் கருத்தின்கண் வெளிப்பட்டு விளங்கும் என்றும், அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை நான் பெறுதல் முடியுமென்றும்,
    என் அறிவில் தேவரீர் திருவருளால்
    உண்மைப்பட உணர்த்தியருளப் பெற்றேன் இன்று.
    அன்பர்களே!
    மேற்படி திரு வாசகங்கள் அனைத்தும் நம் வள்ளலார் ஆண்டவரிடத்தில் வைத்த விண்ணப்ப வாசகங்களே என அறிக.
    நாம் எப்பொழுதெல்லாம் திரு விளக்கை தெய்வபாவனை செய்கிறோமோ அப்பொழுதெல்லாம் இத் திருவாசகங்களை வாசித்து வழிபாடு செய்தல் வேண்டும்.

    இன்றைய வகுப்பு முற்றிற்று.

    இன்றைய வகுப்பு மூலம் நாம் கருத்தில்கொண்டவை:
    1. கடவுள் ஒருவரே!
    2. உண்மை அன்பால் கருத வேண்டிய கடவுள் எங்கு உள்ளார்
    3. எங்ஙனம் துதித்து, நினைந்து, உணர வேண்டும்
    4. கடவுள் திருவருளால் என்னன்ன அவத்தைகள் நீங்கும்
    5. கடவுள் திருவருளால் நாம் அடைவது எது
    மேற்படியானவைக்கு மேலே கண்ட வாசகத்திலிருந்தே பதில் சொல்ல வேண்டும்.
    வகுப்பில் சேர்ந்து உள்ளவர்கள் தங்களின் முகவரி, செல் நம்பரை செல் மூலம் (9487417834 க்கு) எஸ் எம் எஸ் அனுப்பி பதிவு பண்ணிக் கொள்ள வேண்டுகிறோம்.
    மாதத்தில் 2 அல்லது 3 முறை தான் வகுப்பு உண்டு.
    வகுப்பில் சொல்லப்பட்டவையை அடுத்த வகுப்புக்குள் ஊன்றிப் படித்து கருத்தில் கொள்ள வேண்டும். (இது மிக முக்கியம்).
    சந்தேகங்களை தபால் மூலம்/ எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பவும்.
    மீண்டும் சத்தியம் செய்து சொல்கிறேன். வகுப்பின் பாடங்கள் அனைத்தும் வள்ளலாரின் கட்டளைப்படியே. ஆதாரத்துடனே எடுத்துரைக்கப்படும். ஆதாரம் விரும்புவர்களுக்கு எடுத்து உரைக்கப்படும்.
    ஆதாரங்கள் அனைத்தும் புத்தகத்தில் வரும்.
    (முழு வகுப்புகள் அடங்கிய புத்தகத்தை/ & ஆடியோவை செலவு ஏற்று வெளியிட விருப்பம் உள்ளவர்கள் முன் வர எதிர்பார்க்கிறோம்.)
    ஏபிஜெ. அருள்

    ——————————————————————————————————–

    “பயிற்சி” -: வகுப்பு நாள் : 2 – நல்ல விசாரணை — ஏபிஜெ அருள்.

    http://www.vallalarspace.com/KarunaiSabai/c/V000020609B

    அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
    (ஒன்றை பணிந்து சமர்பிக்கின்றேன். அன்பர்களே!
    எனக்கு எல்லாம் தெரிந்துக்கொண்டு இந்தப் பயிற்சியை ஆரம்பித்துள்ளேன் எனக்கருதவேண்டாம்.எப்படியாவது வள்ளலார் அய்யா நமக்கு சொல்லவந்த உண்மையை தெரிந்துக் கொள்ள நான் முயற்சி எடுத்துள்ளேன்.என்னுடன் என்னைப்போல் ஆசைக் கொண்டவரையும் அழைத்தேனே அன்றி வேறு ஒன்றுமில்லை – சகோதரி ஏபிஜெ அருள்)
    தரையில் ஒரு விரிப்பில் சம்மணம் அல்லது நாற்காலியில் அமர்ந்து கால் மாட்டில் விரிப்பு வேண்டும். நிமிர்ந்து உட்காரவோம்.
    நம் கைகளை நம் அய்யா வைத்திருப்பது போல் வைப்போம்.

    திருமந்திரம் சொல்வோம்:

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

    இதோ விண்ணப்பம் செய்வோம்:

    அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
    ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
    எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
    எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
    செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
    திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
    தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
    தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
    சிறிது நேரம் அமைதியாக இருந்து நமக்குள் உள்ளழுந்துவோம்.

    உள்ளழுந்தியுள்ள நாம்,

    சிந்தனையில்,
    நாம் யார்?
    நமக்கு மேல் நம்மை அனுட்டிக்கின்ற கடவுளின் நிலை என்ன?

    அன்பர்களே! மிக முக்கியம்:
    எவர் ஒருவர் மனத்தில் மற்ற எந்தொரு விசாரமின்றி நாம் யார்?
    நமக்கு மேல் நம்மை அனுட்டிக்கின்ற கடவுளின் நிலை என்ன?
    என்பதில் மட்டும் சிந்தித்து விசாரிக்கிறார்களோ அவர்களுக்கு
    உண்மை உள்ளத்தில் பதியும் என்கிறார் நம் வள்ளலார்.

    நாம் யார்??? நாம் யார்???

    இதோ நம் வள்ளலார் நாம் யார் என விளக்குகிறார்கள்:

    இயற்கையே அஞ்ஞான விருளில், அஞ்ஞான வுருவில் அஞ்ஞானிகளாய் அஞ்ஞானத்திற் பயின்று ஏதுந் தெரியாது கிடந்த எங்களைத் தேவரீர் பெருங்கருணையாற் பவுதிக வுடம்பிற் சிறிதறிவு தோற்றி விடுத்த அஞ்ஞான்று தொட்டு இஞ்ஞான்று வரையும், அது கொண்டு அறிவே வடிவாய், அறிவே யுருவாய், அறிவே பொறியாய், அறிவே மனமாய், அறிவே யறிவாய், அறிவே யனுபவமாய் அனுபவிக்கத் தெரிந்து கொள்ளாது, குற்றமே வடிவாய்க், குற்றமே யுருவாய்க், குற்றமே பொறியாய்க், குற்றமே மனமாய்க், குற்றமே யறிவாய்க், குற்றமே யனுபவமாய் அனுபவிக்கின்ற சிறியேங்கள் திருச்சமுகத்தில் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பமும் குற்றமே வடிவாய்க் குற்றமே குறிக்குமென்றறிந்தோ மாயினும், குற்றங் குறியாத வகை விண்ணப்பஞ் செய்தற்கு ஒருவாற்றானு முணர்ச்சி யில்லோ மாதலிற் துணிவு கொண்டு விண்ணப்பிக்கின்றோம். குற்றங்களையே குணங்களாகக் கொள்ளுதல் தேவரீர் திருவருட் பெருமைக்கியற்கை யாதலின் இவ்விண்ணப்பங்களிற் குற்றங் குறியாது கடைக்கணித் தருளிக் கருணை செய்தல் வேண்டும்.
    அஞ்ஞான விருளில் ஒன்றுந் தெரியா துணர்ச்சி யின்றிக்கிடந்த காலம்போக, அவ்விருணைவிட்டு நீங்கிய காலத்தே,

    இவ்வுலகினிடத்து புல், நெல், மரம், செடி, பூடு முதலியவாகவும் கல், மலை, குன்று முதலியவாகவும் பிறந்து பிறந்து களையுண்டல், வெட்டுண்டல், அறுப்புண்டல் கிள்ளுண்டல், உலர்ப்புண்டல், உடைப்புண்டல், வெடிப்புண்டல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அத்தாவர யோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்.

    பின்னர் எறும்பு, செல், புழு. பாம்பு, உடும்பு, பல்லி முதலியவாகவும் தவளை, சிறுமீன், முதலை, சுறா, திமிங்கலம் முதலியவாகவும் பிறந்து பிறந்து தேய்ப்புண்டல், நசுக்குண்டல், அடியுண்டல், பிடியுண்டல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அவ்வூர்வன நீர் வாழ்வன யோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்.

    பின்னர் ஈ, வண்டு, தும்பி, குருவி, காக்கை, பருந்து. கழுகு முதலியவாகப் பிறந்து பிறந்து, அடியுண்டல், பிடியுண்டல், அலைப்புண்டல், உலைப்புண்டல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்திறந்து அப்பறவையோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்.

    பின்னர் அணில், குரங்கு, நாய், பன்றி, பூனை, ஆடு, மாடு, யானை, குதிரை, புலி, கரடி முதலியவாகப் பிறந்து பிறந்து பிடியுண்டல், அடியுண்டல், குத்துண்டல், வெட்டுண்டல், தாக்குண்டல், கட்டுண்டல், தட்டுண்டல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்திறந்து அவ்விலங்கு யோனிவர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்.

    பின்னர் பைசாசர், பூதர், இராக்கதர், அசுரர். சுரர் முதலியராகப் பிறந்து பிறந்து அலைப்படுதல், அகப்படுதல், அகங்கரித்தல், அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைப்படுதல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அத்தேவயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்;
    பின்னர் காட்டகத்தார், கரவு செய்வார், கொலை செய்வார் முதலியராகப் பிறந்து பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளால் இறந்திறந்து அந்நரகயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்;
    அங்ஙனம் யாங்கள் அப்பிறவிகள் தோறும் அடைந்த அலுப்பும் அச்சமும் அவலமும் களைப்பும் துன்பமும் திருவுளத்தடைத்து இரங்கியருளி அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய உயரறிவுடைய இம்மனித தேகத்தில் செலுத்தியருளிய தேவரீரது பெருங்கருணைக்கு யாங்கள் செய்யுங் கைம்மாறு ஒன்றுந் தெரிந்தோமில்லை.
    உயிர்களின் அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே!

    நான் யார் என்று இன்று தெரிந்துக் கொண்டேன்.
    நான் யார் என்று இன்று தெரிந்துக் கொண்டதால்
    எல்லா உயிர்களும் என் உயிர் போல்
    என இன்று அறிந்து அனுபவிக்கின்றேன்.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
    எல்லா உயிர்களிடத்தும் தயவு செலுத்துகின்றேன்.
    அன்பர்களே!

    திருமந்திரம் சொல்வோம்:

    அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

    வகுப்பு 1 & 2 உள்ள குறிப்புகளை பல முறை ஊன்றி படிக்க வேண்டும். ஏதேனும் சந்தேகமிருந்தால் நம் வகுப்பில் சேர்ந்துள்ள அன்பர்களிடம் அது குறித்து சொல்லி விசாரித்துக்கொள்வோம்.
    தினமும் வகுப்பு 1 & 2 ல் உள்ள விண்ணப்பங்களை வாசித்து கருத்தில் ஏற்றியே ஆக வேண்டும்.
    இது சத்தியம்.
    வகுப்பு தொடரும்…… அன்புடன் .ஏபிஜெ அருள். மதுரை.

    பல அன்பர்கள் வகுப்பில் சேர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
    விருப்பம் உள்ளவர்கள் பெயர் , விலாசம், செல் நம்பர் கீழ் வரும் செல்க்கு அனுப்பவும். 9487417834 (செல் போனில் விசாரணை தவிர்க்கவும்.)
    அடுத்த வகுப்பில் சந்திப்போம். மீண்டும் நன்றி.

    ——————————————————————————————————-

    CLASS: 3 ”பயிற்சி வகுப்பு” நாள் 3. நல்ல விசாரணை.—ஏபிஜெ.அருள்.

    http://www.vallalarspace.com/KarunaiSabai/c/V000020645B

    எல்லோருக்கும் வணக்கம். உலகில் காணும் சமய,மத,மார்க்கங்களை எக்காலத்தும் முக்கிய தடையாக அறிவிக்கிறது சுத்த சன்மார்க்கம். அதே நேரத்தில் எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்குகிறதும் சுத்த சன்மார்க்கமே- இந்த சிறப்பின் உண்மையை தான் நாம் வகுப்புகளில் தெரிந்துக் கொள்ளப் போகிறோம்,
    அன்பர்களே!!. இன்றைய விண்ணப்பம் வாசிப்போம். (வள்ளலார் கைப்பட எழுதியது)
    எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்திற் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.
    வள்ளலாரின் மேலும் ஒரு சத்திய வாக்கியத்தை வாசிப்போம்:
    ””எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்குகிறது சுத்த சன்மார்க்கம்.””

    முதல் வகுப்பில் கடவுள் யார்? என்று கருத்தில் கருத வேண்டும் என்று குறித்தும்,
    இரண்டாம் வகுப்பில் நாம் யார்? என்றும் ஓரளவு தெரிந்துக் கொண்டோம்.
    மேற்படி 2 நாட்கள் வகுப்பில் தெரிந்துக் கொண்டதை தலைப்பாக காண்போம்.
    கடவுள்: கடவுள் ஒருவரே!
    நாம் : பலப் பிறவிகளில் பிறந்து பிறந்து இறந்து இறந்து பின் உயர்வுடையதாகிய இந்த மனித தேகத்தில் வந்துள்ளோம்.
    ஒவ்வொருவரும் உண்மையன்பால் கடவுளை கருத்தில் கருத வேண்டும்.
    அன்பர்களே!!
    வள்ளலாரின் மார்க்கத்தில் கருத்தில் கருதப்பட வேண்டிய கடவுள் ஒருவரே!
    அதாவது தெய்வம் ஒன்றே!
    அதாவது தனிக்கடவுள் ஒருவரே!
    இந்நிலையில் வள்ளலார் மார்க்கத்தில் உரியவர்களாக்கிக் கொண்ட நமக்கு நம் அறிவில் பதிய வைக்க வேண்டியது:- கடவுள் ஒருவரே!
    அன்பர்களே! இதை உள்ளத்தில் ஏற்றிக் கொண்டே ஆக வேண்டும்.
    அடுத்து,
    இந்த வகுப்பில் காண இருப்பது யாதெனில்:
    அந்த ஓர் உண்மைக் கடவுளை நாம் காண என்னச் செய்ய வேண்டும்?
    எந்தொரு மார்க்கத்திலும் கடவுளை காண்க என அறிவுறுத்தப் படவில்லை. காரணம் கடவுள் (கள்) இவர்களே என வெளிப்படுத்தி, அவர்களை வணங்கி, ஆச்சாரங்கள் மூலமாக வழிபாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    இங்கு கருத்தில் கருதப்பட்டுள்ள அந்த ஓர் உண்மைக் கடவுளை நாம் தான் காண வேண்டும்.
    ஆக,
    வள்ளலாரின் மார்க்கத்தில் அருள் பெறுவதற்கு நம் அறிவில் கடவுளின் நிலையை அறிந்தே ஆக வேண்டும்.
    வள்ளலார் அவர்தம் இடைவிடாத நன்முயற்சியில் சத்திய அறிவில் கடவுளின் நிலையை கண்டார்கள்.
    அங்ஙனம் கண்ட அந்த உண்மை கடவுளை நமக்கு அகவல், பாடல்கள், குறிப்புகள் மூலம் சொல்லியுள்ளார்கள்.
    இங்ஙனம் வள்ளலார் கண்டது போல் நம் ஒவ்வொருவரையும் கடவுளின் நிலையை காணச் சொல்கிறார்கள்.எனவே தான் வள்ளலார் தன் மார்க்கத்திற்கு சமயங்கள், மதங்கள், மார்க்கங்களை எக்காலத்தும் முக்கியத் தடைகளாக அறிவித்து உள்ளார்கள். (பார்க்க முதல் விண்ணப்பம்)
    நிற்க! வள்ளலார் அவர்தம் அறிவில் கண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத்தான் ஒவ்வொருவரும் காண்போம். ஏன்னென்றால் கடவுள் ஒருவரே.
    ஆனால் வள்ளலார் அறிவித்த, அனுபவித்தில் கண்ட ஆண்டவர் மற்றும் அவர் பெற்ற அருள் அவருக்கே அன்றி நமக்கு இல்லை என அறிதல் வேண்டும். நம் முயற்சியில் காணாமல் நாம் கடவுளின் அருளைப் பெறவே முடியாது. இது சத்தியம்.
    என்ன அன்பர்களே! புரியுது ஆனா புரியவில்லையா?
    இதுவே உண்மை. இந்த உண்மையில் நம்மை தெளிவு படுத்தாமல், நாம் மேல் விசாரணைக்கு செல்ல முடியாது. அதாவது, ஒவ்வொருவரும் நல்ல விசாரணை இதில் செய்தே ஆக வேண்டும்.
    நல்ல விசாரணையில் கடவுளின் உண்மை ( நிலை) அறிதல் வேண்டும்.
    இந்த தனி வழியை கண்டு அதில் நன்முயற்சி செய்து உண்மை கடவுளை காண்கிறார் வள்ளலார். இந்த வழியை அங்ஙனமே ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையால் எல்லாருக்குமே நமக்கெல்லாம் அறிவித்த மகானே நம் வள்ளலார். வள்ளலாரிடம் வெளிப்பட்ட இந்த கருணைப்போல் எவரிடமும் வெளிப்படவில்லை.
    அதணாலேயே ஆண்டவர் தன் இயலையே வள்ளலாருக்கு அருளுகிறார்கள்.
    அன்பர்களே!
    பாருங்கள் நம் அய்யாவின் கைகளை.
    கடவுளின் அருள் பெற்றாலும் மற்ற….வர்களைப் போல் ஆசிர்வாதம் பண்ணாமல் இருக்கும் நிலையை.. காரணம் தாம் என்னப் பெற்றோமே அதை எல்லோருமே பெறும் நிலையிலுள்ளது என்ற உண்மையை வள்ளலார் உணர்ந்திருந்தே.
    அய்யாவின் அருகிலேயே முழுஅன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான சிலர் இருந்தார்கள். அதில் ஒருவர் திரு கல்பட்டு அய்யா. வள்ளலார் பெற்றது போல் பெரும்பயனாகிய மரணமில்லா பெருவாழ்வை அவர்கள் ஏன் பெறவில்லை. அல்லது வள்ளலாரின் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் பாத்தியப்பட்டிருந்த அவருக்கு ஏன் வள்ளலார் அந்த பயனை கொடுக்கவில்லை. கல்பட்டு அய்யா இறந்தார்கள். அவரின் சமாதி தருமச்சாலை அருகில் உள்ளது. (இதை நமக்குள் வகுப்பில் உள்ளவர்கள் விசாரணைக்கு தான் எடுக்கிறோமே அன்றி அந்த பெரியவரை, சான்றோரை குறை கூறுவதாக எடுக்க கூடாது. அவரி(களி)ன் அன்பு,பணிவு,கருணைக்கு நாம் சிறிதும் அருகதையாக மாட்டோம்.) இதை நாம் எதற்காக குறிப்பிடுகிறோம் என்றால்; வள்ளலார் பெற்ற மரணமில்லா பெருவாழ்வை. நாமும் பெற வேண்டுமானால் நம் அய்யா வள்ளலார் என்ன செய்தார்களோ அல்லது எங்ஙனம் நம்மை செய்ய சொல்கிறார்களோ அங்ஙனம் செய்தாலன்றி கைக்கூடாது. இது சத்தியம்.

    எத்தனை அறிஞர்கள், சான்றோர்கள்,ஞானிகள் இருந்தார்கள். அவர்களால் சுத்த சன்மார்க்கம் குறித்து பல உரை நூல்கள், உபதேசங்கள், நமக்கு கிடைத்துள்ளன. நமக்கு மிக பயனுள்ளதாக இருக்கின்றன. ஆனால் அவர்கள் வள்ளலாரைப் போல் ஒளி தேகம் ஏன் பெறவில்லை. இறந்தார்கள். சமாதியானர்கள். இன்றும் நம்மைச் சுற்றி எத்தனை அறிஞர்கள், சான்றோர்கள்,ஞானிகள் இருக்கிறார்கள். அவர்களால் பல நன்மைகள் நமக்கு உள்ளது. ஆனால் மூப்பு, பயம், துன்பம் அவர்களை வந்துடைகிறதே. நாளை நமக்கும்.
    ஆனால்’
    ”””தன்னைப் போல் எல்லாரும் பெறக்கூடியதாக உள்ளது””” என சத்தியம் செய்கிறார் நம் வள்ளலார்.
    அப்படியென்றால் என்ன தான் செய்வது??
    நாம் வள்ளலாரின் மீது அவர்தம் வழியின் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளவர்கள்.
    அன்பர்களே!
    இதற்கான பயிற்சியை தான் நமக்கு வள்ளலார் சத்திய ஞான சபையில் தருகிறார்கள்.
    இதை கருத்தில் கொண்டு சத்திய ஞான சபைக்கு செல்லுங்கள்.
    அங்கு வெளிப்பட்டுள்ள அனைத்துமே நம் விசாரணக்கே (பயிற்சிக்கே). வள்ளலார் குறிப்பிட்டுள்ள ஒழுக்கத்தை நிரப்பிக் கொண்டவர்களாக நாம் இங்கு இருந்தோம் என்றால், நமக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுக்க வள்ளலார் வருவது சத்தியம். நம் வள்ளலார் அனைத்தையும் நமக்கு அங்கு விளக்கமாக தெரிவிக்கிறார்கள். தகுதியாக வருபவர்கள் உள்ளத்தில் வள்ளலார் வெளிப்படுகிறார். வெளிப்படுவார்.
    இது சத்தியம். இது சத்தியம்.
    இதணால் தான் வள்ளலார் தன் மார்க்கத்தை கீழ்வருமாறு கூறுகிறார்கள்:
    என் மார்க்கம் அறிவு மார்க்கம்.
    என் மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை. —- தொடரும்.

    இன்றைய வகுப்பு முடிந்தது. அடுத்த வகுப்பில் நம்மை தகுதியாக்கும் ஒழுக்கம் குறித்து காண்போம். ——- அன்புடனும் பணிவுடனும் ஏபிஜெ.அருள்.
    பல அன்பர்கள் வகுப்பில் சேர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
    விருப்பம் உள்ளவர்கள் பெயர் , விலாசம், செல் நம்பர் கீழ் வரும்
    செல்க்கு அனுப்பவும். 9487683114 (செல் போனில் விசாரணை தவிர்க்கவும்.)
    கேள்விகள் இருப்பின் இ மெயில் apjarul1@gmail.comஅனுப்பலாம். வகுப்பில் சேர்ந்தவர்கள் மட்டுமே விசாரணைக்கு அனுமதிக்கப்படுவர்.
    அடுத்த வகுப்பில் சந்திப்போம். மீண்டும் நன்றி.

    ——————————————————————————————————-

    வகுப்பு நாள்: 4 : நல்ல விசாரணைப் பயிற்சி : ஏபிஜெ. அருள்.

    http://www.vallalarspace.com/KarunaiSabai/c/V000020708B

    வகுப்பு உறுப்பினர்கள் எல்லோருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.
    “ இங்கு மற்றவைகளை உன்னி அவலமடைந்து நில்லாமல், சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, பூரண சித்தியைப் பெற வேண்டுவது சன்மார்க்கக் கொள்கை.” கொள்கை அடிப்படையில் நமது வகுப்பு தொடரட்டும்.
    எனக்கு ஆதரவு அளித்த/அளித்துக்கொண்டியிருக்கிற சான்றோர்கள், பெரியவர்கள், புதியவர்கள் பலர் குறிப்பாக இளைஞர்கள்,இளைஞிகள், மற்றும் அயல் நாடுகள்; பர்மா, அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமுதாபி, சிலோன், போன்றப் பல நாட்டிலிருந்து அன்பர்கள் மற்றும் மிகப்பெரியவர்கள் பலர் எனக்கு தொலைப்பேசி, மின்னஞ்சல், ஸ்கைப் மூலம் தொடர்புக் கொண்டு நல்ல விசாரணை வகுப்பு தொடர வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்தனர். நான் அவர்களிடம் மிகத்தெளிவாக தெரிவித்ததது யாதெனில்: ”நான் வள்ளலார் நெறியை அறிந்து, அனுபவித்து சொல்லவில்லை. தெரிந்ததை அங்ஙனமே உள்ளது உள்ளபடியே என் உள்ளத்தில் நிறுத்தி கொள்ளும் போது, என்னைப் போல் விருப்பம் கொண்ட ஒத்த அறிவு, ஒழுக்கம், கருத்து உடையவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளும் விருப்பத்திலேயே இந்த வகுப்பு என்றேன்.
    நான் எவரையும் தாழ்வாக பார்க்கவில்லை. பார்க்க முடியாது.காரணம், அந்த தாழ்வான நிலையிலிருந்தும், அறியாமையிலிருந்தும் தான் நான் மற்றும் எல்லாருமே வந்தோம். வருகிறோம் என்பதை ஏற்கனவே தெரிந்துள்ளேன். எனது தூய்மையான எண்ணத்தை நீங்கள் முழுமையாக புரிந்துக் கொண்டது என் பாக்கியமே.
    இந்த அரிய வாய்ப்பை எனக்கு அளித்த இந்த இனைய தளம், அதன் எம்.டி மற்றும் டீமுக்குமே எல்லா பாராட்டுதல்களும்.உங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களும் சேரும்.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
    நமது வகுப்புக்கு எல்லாம் வல்ல நம் வள்ளலார் என்றும் ஆசிரியராக வந்திருந்து, நாம் எல்லாரும் உண்மை வழியை (சுத்த சன்மார்க்கத்தை) தெரிந்துக் கொள்ள செய்விப்பார். இது சத்தியம். இது சத்தியம்.
    அன்பர்களே, இந்த வகுப்பு நமக்கு மிக மிக முக்கியம்.
    இதை கருத்தில் கொண்டால் வள்ளலார் கண்ட மார்க்கத்தின் கொள்கையை நாம் தெரிந்தவர்களாகுவோம். கண்டிப்பாக இந்த சுத்த சன்மார்க்க பயிற்சியில் நமக்கு திருவருள் கைக்கூடும்.

    இன்றைய நம் வகுப்பு பாடத்திற்கு ஆதாரமாக எடுத்துள்ளவை. உரை நடைப் பகுதி & முதல் விண்ணப்பம் & மகாபேருபதேசம்.
    சுத்த சன்மார்க்க சாதனம்:
    சுத்த சன்மார்க்க சாதனம் 2 வகைப்படும்:
    பரோபகாரம், சத்விசாரம்,
    பரோபகாரம் என்பது தேகத்தாலும், வாக்காலும், திரவியத்தாலும் உபகாரஞ் செய்வது. சத்விசாரம் என்பது நேரிடாத பக்ஷத்தில் ஆன்மநேய சம்பந்தமான தயாவிசாரத்தோடு இருப்பது.
    கடவுளது புகழை விசாரித்தல், ஆன்மாவின் உண்மையை விசாரித்தல், தன் சிறுமையைக் கடவுளிடத்தில் விண்ணப்பித்தல்.
    இந்த மார்க்கத்தால்தான் சுத்தமாதி மூன்று தேகங்களைப் பெற வேண்டும்.
    அன்பர்களே!

    நம் சிறுமைகள் எவை? நமக்கு தெரிந்தும் மற்றும் தெரியாமலேயே நம்மிடம் ஒட்டியுள்ள சிறுமைகளில் முக்கியமானது;
    சாதி,குலம்,சாத்திர சடங்குகள், குரோதம், காமம் முதலியவை.
    நாம் சொல்லலாம் என்னிடம் இவை இல்லைஎன்று. இது அவரவர் முடிபுக்கு அறிவுக்கு விட்டுவிடுவோம்.
    இந்த வகுப்பில் அந்த கட்டுப்பாட்டு ஆச்சாரங்களை குறித்தும், ஒழுக்கத்தை நிரப்பிக் கொள்ளவது குறித்தும் முடிந்த வரை நம் வள்ளலாரின் சத்திய வாக்கியங்களைக் கொண்டு காண உள்ளோம்.
    நம் அய்யா சொல்கிறார்கள் இதோ: (பக்கம்:418):
    ”தத்துவவொழுக்கம் பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தொழிலொழுக்கம் பற்றி ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.

    தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள். அவையாவன: ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள். ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்தசிவசன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது”
    ஆக நம்மிடம் ஒழிந்து போக வேண்டிய ஆச்சாரங்கள் (முக்கியமானவை):
    .
    1.ஜாதியாசாரம், 2.குலாசாரம், 3.ஆசிரமாசாரம், 4.லோகாசாரம், 5.தேசாசாரம், 6.கிரியாசாரம், 7.சமயாசாரம், 8.மதாசாரம், 9.மரபாசாரம், 10.கலாசாரம், 11.சாதனாசாரம், 12.அந்தாசாரம், 13.சாத்திராசாரம்,
    இந்த ஆசாரங்களொழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் ஒன்றே இது தொட்டு வழங்க வேண்டும்.
    பெருந்தயவே வடிவமாக இருக்க வேண்டும்.
    பொது நோக்கம் வருவித்துக்கொள்ளல் வேண்டும்.
    சாதி, குலம், ஆசிரமம், லோகம், தேசம், கிரியா, சமயம், மதம், மரபு, கலா, சாதனம், அந்தம், சாத்திரம் என்றால் என்ன? இதில் சிலது தெரியும்.
    ஆசாரம் என்றால்; ”வழக்கம்” எனப்படும்.
    1. ஜாதி : வருணம், இனம் ( இனப்பழக்க வழக்கங்கள்)
    2. குலம் : குடி (வீடு) (குலப்படியான வழக்கம், வீட்டு முறை)
    3. ஆசிரமம் : ஆச்சிரமம். வாழ்க்கை முறை / உறைவிடம்
    4. லோகம் : உலகம் (உலகத்தாரொழுக்கம்- உலக பழக்க வழக்கம்)
    5. தேசம் : நாடு ( நாட்டு வழக்கம்)
    6. கிரியை : செய்கை – உபாயம் – சடங்கு விதி (உபாய வழி வழக்கம்)
    7. சமயம் : சைவம், வைணவம், பெளத்துவம் போன்ற சமயங்களின்
    வழக்கங்கள்
    8. மதம் : வேதம், சித்தாந்தம் போன்ற மதங்களின் வழக்கங்கள்.
    9. மரபு ; பாரம்பரியம், பழமை, ( பழமையான, பாரம்பரியமான வழக்கம்)
    10.கலா : பண்பாடு ( பண்பாடு, மொழி பழக்க வழக்கம்)
    11.சாதனம் : கருவி, சின்னம், பயிற்சி (இவைகளின் வழக்கம்)
    12 அந்த : உள்ளடங்கிருத்தல் (முடிவாக மரணமே என்ற அஞ்ஞான
    வழக்கம்/முக்தி)
    13. சாத்திரம் : சமய,மத நூல்கள் அடிப்படையில் பழக்க வழக்கங்கள்.
    ஆச்சாரங்களை விட்டொழிக்க வேண்டும். விட்டொழிக்காமல் கருணையை விருத்தி செய்ய முடியாது. கருணை நம்மிடம் விருத்தியாகவில்லை என்றால் உண்மை நம் உள்ளத்தில் பதியாது.
    இதை பல இடங்களில் உறுதி செய்யலாம்.
    வள்ளாலாரின் சத்திய சிறு விண்ணப்பம்: பக்கம் 556 கடைசி பாரா.
    “எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்திற் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.”
    மீண்டும் வாசியுங்கள்: “……முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும்,…..”
    இங்கு, சங்கற்பம் என்றால்;- மனோ நிச்சயமான கொள்கை, கருத்து
    விகற்பம் என்றால்:- மனோ மாறுபாட்டிலுள்ள வழக்கங்கள்.
    அன்பர்களே! இங்ஙனம் வள்ளலார் சொல்லிருக்க, மற்ற சமய,மத மார்க்கங்களின் கொள்கை மற்றும் உலக பழக்க வழக்கங்கள் எல்லாம் நமக்கு எக்காலத்தும் முக்கியத்தடைகளா இல்லையா?
    இன்னொரு இடத்திலும் இதை உறுதி செய்வோம்.. பக்கம் : 410 அதுவும் திருக்கதவு திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் நம் வள்ளலார் கீழ் வருமாறு சொல்கிறார்கள்:
    “இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்துக் கொள்ளவில்லை.”
    யாதெனில்;
    இங்கு இருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்;
    எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்” என்ற திருவார்த்தை அதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக உடையது கடமை.”
    அன்பர்களே! இந்த உண்மை நம் வள்ளலார் சொன்னாலும் நாம் கடைப்பிடிக்கிறோமா? சிந்தியுங்கள். விசாரியுங்கள்?
    அன்பர்களே! உண்மையாக நான் இந்த இடத்தில் அழுகிறேன். கண்ணீர் வழிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நெறி குறித்து ஆடியோ பதிவு செய்யப்பட்டது. இந்த வரியை நான் வாசித்த போது இதே போல் அழுதேன். ஏங்கி ஏங்கி அழுதேன். உள்ளத்தில் ஓர் உணர்ச்சி உண்டாகியது. பதிவு சில மணி நேரம் தடைப்பட்டது. தொடர்ந்து வாசித்தேன்.
    பேருபதேசத்தில் ஒரு சத்திய வாக்கியம்: அது இதோ:
    பக்கம்: 475:
    ”உண்மை சொல்ல வந்தனனே என்று
    உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை.”
    நாம் அந்த உண்மையை இன்று இந்த வகுப்பில் தெரிந்துக் கொண்டோம். உரக்க சொல்லுங்கள் நம் அய்யாவிடம்.
    அன்பர்களே! உண்மையை தான் தெரிந்துக் கொண்டுள்ளோம் என்பதினால் சுத்த சன்மார்க்கப் பயன் கிட்டாது. அந்த உண்மையை நாம் அறிய வேண்டும். அகத்தில் அனுபவிக்க வேண்டும். என் மார்க்கம் அறிவு மார்க்கம். என் மார்க்கம் உண்மையறியும் மார்க்கம். என் மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை (பக்கம்439) என்கிறார் நம் வள்ளலார்.
    பக்கம்: 419;
    “…ஆச்சாரங்களை விட்டொழித்திப் பொது நோக்கம் வந்தாலொழிய, காருண்ணியம் விருத்தி ஆகிக் கடவுள் அருளைப் பெற்று அனந்த சித்தி வல்லபங்களைப் பெறமுடியாது…”
    அன்பர்களே!
    நம் மார்க்கத்தில் எங்கும் பரிபூரணராக நிறைந்துள்ள ஓர் உண்மைக் கடவுளை நம் ஒவ்வொருவரும் உள்ளத்தில் (அகத்தில்) காணச் சொல்வதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்.
    ஆக, அந்த உண்மைக் கடவுள் குறித்து பார்ப்பதற்கு முன்பே நாம் எங்ஙனம் உண்மைக் கடவுள் நிலைக் குறித்து வியம்ப முடியும்? நம் வள்ளலார் அவர் கண்ட உணமையை பாடல்கள், விண்ணப்பங்கள், உபதேசம் மூலமாக பதிவு செய்துள்ளார்கள். ஆனால் நாமோ அதை மனப்பாடம் பண்ணிக்கொண்டு கடவுள் நிலை இங்ஙனமே என்று நம்மிடையே விவாதிக்கிறோம். அன்பர்களே! உண்மைக் கடவுளின் நிலை கண்டவுடனே நமக்கு பிணி, மூப்பு, துன்பம் ஏது? பிணி,மூப்பு,பயம்,துன்பம் நம்மிடம் உள்ளது என்றால் நாம் இன்னும் கடவுளின் நிலை காணாதவர்களே! அப்படித்தானே அன்பர்களே!
    அன்பர்களே!
    இது ஏதோ ஒரு கட்டுரை என நினைத்து படித்தால் பிரோயஜனம் ஏற்படாது. ஒவ்வொருவரும் உள் அழுந்தி, சிந்தித்து, சிந்தித்தலை விசாரிக்க வேண்டும். இதுவே சுத்த சன்மார்க்கத்தின் சங்கல்பம் ஆகும். (ஆதாரம் பக்கம்:392).
    வகுப்பு தொடரும்…… வணக்கம்; ஏபிஜெ அருள்.

  • சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம்

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    1. சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம்.

    இயற்கை உண்மையரென்றும்,
    இயற்கை அறிவினரென்றும்,
    இயற்கை இன்பினரென்றும்,
    நிர்க்குணரென்றும்,
    சிற்குணரென்றும்,
    நித்தியெரென்றும்,
    சத்தியரென்றும்,
    ஏகரென்றும்,
    அநேகரென்றும்,
    ஆதியரென்றும்,
    அமலரென்றும்,
    அருட்பெருஞ்ஜோதியரென்றும்,
    அற்புதரென்றும்,
    நிரதிசயரென்றும்,
    எல்லாமான வரென்றும்,
    எல்லாமுடைய வரென்றும்,
    எல்லாம் வல்லவரென்றும்,

    குறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த

    “திருக்குறிப்பு திருவார்த்தைகளாற் சுத்த சன்மார்க்க ஞானிகள்”

    துதித்தும்,
    நினைத்தும்,
    உணர்ந்தும்,
    புணர்ந்தும்,
    அனுபவிக்க விளங்குகின்ற “தனித்தலைமை பெரும் பதியாகிய பெருங்கருணை கடவுளே!”

    தேவரீரது திருவருட் சமூகத்தில் துரும்பினும் சிறியோமாகிய யாங்கள் சிற்றறிவாற் செய்து கொள்ளும் சிறு விண்ணப்பங்களைத் திருச்செவிக் கேற் பித்தருளி யெங்களை இரஷித்தருளல் வேண்டும்.

    எல்லாச் சத்திகளும், எல்லாச் சத்தர்களும், எல்லா தலைவர்களும் அறிந்து கொள்வதற்கு மிகவு மரியதாய், எல்லாத் தத்துவங்களுக்கும், எல்லாத் தத்துவிகளுக்கும் அப்பால் அப்பாலாய் விளங்கும் ஓர் சுத்த ஞான வெளியில் தமக்கு ஒரு விதத்தாலும் ஒப்புயர்வு சிறிதுங் குறிக்கப்படாத தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ்ஜோதியராகி விளங்குகின்ற தேவரீரது தனிப்பெருந் தன்மைக்கு மெய்யறிவுடையோரால் விதிக்கப்பட்ட வேதாகமங்களும் பெருந்தகை வாசகத்தைப் பெறாது சிறுதகை வாசகங்களைப் பெற்றுத் திகைப்படைகின்றன என்றால், மலத்திற் புழுத்த புழுவினுஞ் சிறியேமாகிய யாங்கள் திருச்சமூகத்தில் விண்ணப்பித்தற் குரிய பெருந்தகை வாசகத்தை எவ்வாறறிவோம்! எங்ஙனஞ் செய்வோம்! ஆகலில், கருணாநிதியாகிய கடவுளே! யாங்கள் விண்ணப்பிக்கின்ற அற்ப வாசகத்தில் உரிமை நோக்காது அங்கீகரித்தருளி யெங்களைக் காத்தருளல் வேண்டும்.

    அஞ்ஞானத்திற் பயின்று:

    தாயினுஞ் சிறந்த தயவுடைக் கடவுளே! இயற்கையே அஞ்ஞான விருளில் அஞ்ஞான வுருவில் அஞ்ஞானிகளாய் அஞ்ஞானத்திற் பயின்று ஏதுந் தெரியாது கிடந்த எங்களைத் தேவரீர் பெருங்கருணையாற் பவுதீக உடம்பிற் சிறிதளவு தோற்றி விடுத்த அஞ்ஞான்று தொட்டு இஞ்ஞான்று வரையும், அது கொண்டு அறிவே வடிவாய், அறிவே யுருவாய், அறிவே பொறியாய், அறிவே மனமாய், அறிவே யறிவாய், அறிவே யனுபவமாய் அனுபவிக்க தெரிந்து கொள்ளாது, குற்றமே வடிவாய்க், குற்றமே யுருவாய்க், குற்றமே பொறியாய்க், குற்றமே மனமாய்க், குற்றமே அறிவாய், குற்றமே அனுபவமாய் அனுபவிக்கின்ற சிறியேங்கள் திருச்சமூகத்தில் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பமும் குற்றமே வடிவாய் குற்றமே குறிக்குமென் றறிந்தோமாயினும், குற்றங்குறியாத வகை விண்ணப்பஞ் செய்வதற்கு ஒருவாற்றானு முணர்ச்சி யில்லோ மாதலிற் றுணிவு கொண்டு விண்ணப்பிக்கிறோம். குற்றங்களையே குணங்களாகக் கொள்ளுதல் தேவரீர் திருவருட் பெருமைக்கியற்கையாதலின் இவ்விண்ணப்பங்களிற் குற்றங்குறியாது கடைக்கணித்தருளிக் கருணை செய்தல் வேண்டும்.

    அஞ்ஞான விருளில் ஒன்றுந் தெரியா துணர்ச்சி யின்றிக்கிடந்த காலம் போக, அவ்விருளை விட்டு நீங்கிய காலத்தே,

    தாவரயோனி வர்க்கம்:

    இவ்வுளகினடத்தே புல், நெல், மரம், செடி, பூடு முதலியவாகவும் கல், மலை, குன்று முதலியவாகவும் பிறந்து பிறந்து, களையுண்டல், வெட்டுண்டல், அறுப்புண்டல், கிள்ளுண்டல், உலர்ப்புண்டல், உடைப்புண்டல், வெடிப்புண்டல் முதலிய பலவேறு அவத்தைகளால் இறந்து இறந்து அத்தாவரயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தேம்,

    ஊர்வன நீர் வாழ்வன யோனிவர்க்கம்:

    பின்னர் எறும்பு, செல், புழு, பாம்பு, உடும்பு, பல்லி முதலியவாகவும் தவளை, சிறுமீன், முதலை, சுறா, திமிங்கிலம் முதலியவாகவும் பிறந்து பிறந்து, தேய்ப்புண்டல்,
    நசுக்குண்டல், அடியுண்டல், பிடியுண்டல் முதலிய பல வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அவ்வூர்வன நீர் வாழ்வன யோனிவர்க்கங்க ளெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தேம்,

    பறவையோனி வர்க்கம்:

    பின்னர் ஈ, வண்டு, தும்பி, குருவி, காக்கை, பருந்து, கழுகு முதலியவாகப் பிறந்து பிறந்து, அடியுண்டல், பிடியுண்டல், அலைப்புண்டல், உலைப்புண்டல் முதலிய பலவேறு அவத்தைகளால் இறந்திறந்து அப்பறவையோனி வர்க்கங் களெல்லாஞ் சென்று சென்று உழன் றுழன்று அலுப்படைந்தேம்;

    விலங்குயோனி வர்க்கம்:

    பின்னர் அணில், குரங்கு, நாய், பன்றி, பூனை, ஆடு, மாடு, யானை, குதிரை, புலி, கரடி முதலியவாகப் பிறந்து பிறந்து பிடியுண்டல், அடியுண்டல், குத்துண்டல், வெட்டுண்டல், தாக்குண்டல், கட்டுண்டல், தட்டுண்டல், முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்திறந்து அவ்விலங்குயோனி வர்க்கங்க ளெல்லாம் சென்று சென்று, உழன்றுழன்று அலுப்படைந்ததேம்;

    தேவயோனி வர்க்கம்:

    பின்னர் பைசாசர், பூதர், இராக்கதர், அசுரர், சுரர் முதலியராகப் பிறந்து பிறந்து, அலைப்படுதல், அகப்படுதல், அகங்கரித்தல், அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து
    நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைபடுதல் முதலிய பல்வேறு அவத்தை களால் இறந்து இறந்து அத்தேவயோனி வர்க்கங்க ளெல்லாஞ் சென்று சென்று, உழன் றுழன்று அலுப்படைந்தோம்;

    நரகயோனி வர்க்கம்:

    பின்னர் காட்ட கத்தார், கரவு செய்வார், கொலை செய்வார் முதலியராக பிறந்து பிறந்து பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளால் இறந்திறந்து அந்நரகயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்றுழன்று அலுப்படந்ததேம்.(1)

    கைமாறு:

    அங்ஙனம் யாங்கள் அப்பிறவிகள் தோறும் அடைந்த அலுப்பும் அச்சமும் களைப்பும் துன்பமும், திருவுளத் தடைத்து இரங்கியருளி அழியாப் பெருவாழ்வைப் பெருதற்குரிய உயரறிவுடைய இம்மனித தேகத்தில் செலுத்தியருளிய தேவரீரது பெருங்கருணைக்கு யாங்கள் செய்யுங் கைமாறு ஒன்றுந் தெரிந்தோ மில்லை.

    உயிர்களின் அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே!

    வீண்போது:

    இம்மனித தேகத்திற் செலுத்திய காலத்திலும் தாய் வயிற்றிலும் சிசுப் பருவத்திலும் குமாரப் பருவத்திலும் பல வேறு அவத்தைகளால் அறிவின்றி யிருந்தோமாகலில்,
    தேவரீர் பெருங்கருணை திறத்தை அறிந்து கொள்ளாமல் வீண்போது கழித்தோம்.

    ஓர் உண்மை கடவுள்:

    அப்பருவங்கள் கழிய இப்பருவத்தினிடத்தே, எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லா பொருட்களையும், மற்றை யெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும்(2), எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மை கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யின் அக்கடவுள் திருவருள் நமது கருத்திங்கண் வெளிப்பட்டு விளங்குமென்றும், அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள்ளெல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவுந் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை யடைதல் கூடுமென்றும், எங்கள் அறிவில் தேவரீர் திருவருளால் உண்மைப்பட வுணர்த்தியருளப் பெற்றோம்,

    எஞ்ஞான்று செய்வோம்:

    அவ்வுணர்ச்சியைப் பெற்றது தொடங்கிக் கடவுள் வழிபாடு எஞ்ஞான்று செய்வோம்? கடவுள் திருவருள் விளக்கம் எந்நாளடைவோம்? மரணம், பிணி, மூப்பு, முதலிய அவத்தைகள் எப்போது நீங்கும்? என்று மழியாத பேரின்ப சித்தி எக்காலங் கிடைக்கும்? என்று எண்ணி யெண்ணி வழிதுறை தெரியாமல் வருந்திநின்ற தருணத்தே.

    ஓர் ஞான சபை காணுதல்:

    களைப்பறிந்துதவுங் கருணைக் கடலாகிய கடவுளே! தேவரீர் நெடுங்காலம் மரண முதலாகிய அவத்தைகளால் துன்பமுற்றுக் களைப்படைந்த உங்களை அவ்வவத்தைகளினின்றும் நீக்கிக் களைப்புங் கலக்கமுந் தவித்து அழியாத பேரின்ப சித்தியை அடைவித்தற் பொருட்டாகவே பூர்வஞான சிதம்பரத்தின் வடபால் பார்வதிபுரமென்று குறிக்கப்படுகின்ற உத்திரஞான சித்திபுரத்தில் யாம் அளவுகடந்த நெடுங்காலம் சித்தியெல்லாம் விளங்கத் திருவருள் நடனம் செய்வோ மென்றும்
    அது தருணம் மிகவும் அடுத்த சமீபித்த தருண மென்றும், “அப்பதியினிடத்தே யாம் அருள் நடனம் புரிதற்கு அடையளாமாக ஓர் ஞான சபை காணுதல் வேண்டு” மென்றும் திருவருட்குறிப்பால் அறிவித்தது மன்றி, அருளுருவாகி எங்களகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாதோர் தடைகளுமின்றி அத்திருஞான சபையையுந் தோன்றி விளங்கச் செய்வித்தருளிய தேவரீர் பெருங்கருணையை கருதுந்தோறும் பெருங்களிப்படைகின்றோம்.

    இனி அத்திருஞான சபையை அலங்கரித்தல் வேண்டுமெனக் குறிப்பித்த வண்ணம் அலங்கரிக்க தொடங்குகின்றோம்.

    அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!

    தேவரீர் அருளுருவாகி எங்கள் அகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாங்கள செய்யும் இவ்வலங்காரத்திருப்பணியில் எவ்விதத்தாலும் யாதொரு தடையும் வாராத வண்ணஞ் செய்வித்து அவ்வலங்காரத் திருப்பணியை முற்றுவித்தருளல் வேண்டும்,

    சர்வ வல்லபராகிய தனித்தலைமை கடவுளே!

    அத்திருவலங்காரத் திருப்பணி முற்றிய தருணத்தே தேவரீர் அமர்ந்தருளி எங்களையும் இவ்வுலகின் இத்தேகத்தை பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியர்களாக்கி உண்மையறிவை விளக்கி, உண்மையின்பத்தை அளித்துஸ் சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை யடைவித்து நித்தியர்களாகி வாழ்வித்தல் வேண்டும்.

    எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!

    இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.

    எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!
    தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!

     

  • ச.கா – சு.கா – APJ. அருள்

    சன்மார்க்கம்ச.கா

    சுத்தசன்மார்க்கம்சு.கா

    ஆசிரியர்:APJ. அருள்,நிறுவநர் – கருணை சபை-சாலை,உத்தங்குடி, மதுரை

    முன்னுரை:

    அன்பர்களே வணக்கம் தங்களின் மேலானப் பார்வைக்கு வள்ளலாரின் தனிநெறி பாகம் 1, பாகம் 2, சமர்ப்பிக்கப்பட்டது. அவை தொடர்ந்து இந்நூலின் வாயிலாக தங்கள் முன்பு பணிவுடன் வள்ளலாரின் சத்தியத்தை (தனிநெறி பாகம் 3) சமர்ப்பிக்கின்றேன்.

    பாகம் 1-ல்

    1. சுத்த சன்மார்க்க காலம் வெளிப்பட்ட ஆண்டு ஏப்ரல் 1871 ஆகும் என்பதை முதன்முதலில் வெளிப்படுத்தியது.
    2. சுத்த சன்மார்க்கத்தில் முதன்மையான மற்றும் முக்கிய பகுதிகள், மற்றும் முக்கியத் தடைகள்
    3. வள்ளலாரின் முடிபான தனி நெறிப்பாடல்களின் தொகுப்பை ஆறாவது திருமுறை என்று அழையாது, “சமரச சுத்த சன்மார்க்க திருஅருட்பா பாடல்கள்“ என்று அழைத்தல் கூடும்

    பாகம் 2-ல்

    வள்ளலாரின் சமரச சுத்தசன்மார்க்கத்தில் “திருவருள்” நிலையறிவது எப்படியெனில் என்று வள்ளற்பெருமான் எங்ஙனம் நேரிடையாக கூறியுள்ளளைர், சுத்தசன்மார்க்கத்தில் ஒழுக்கங்கள் எவை? கருணை, ஒருமை பற்றிய விளக்கம், ஆதாரங்களுடன் கோடிட்டு காண்பிக்கப்பட்டது.

    இந்த பாகம் 3ல் விசாரம் செய்வது எதுவெனில்;

    (ஆதாரம் : திருஅருட்பா உரைநடைப்பகுதி – தெய்வநிலைய வெளியீடு-2008)

    வள்ளலார் தன் மார்க்கத்திற்கு எவையை? எக்காலத்தும் முக்கியத் தடைகளளைக அறிவித்தார் என்பதை பற்றிய விசாரம். சுத்தசன்மார்க்கத்தை மட்டுமே அனுஷ்டிக்கிறவர்கள் வள்ளலார் அமைத்த கட்டளைப் படியே செயல்படக்கூடும். அந்நிலையிலேயே “கடவுள் உண்மை” பதிந்து அறிவு விளங்குவதாக உள்ளது. அன்பர்களே, இந்நுளைலில் அக அனுபவ விளக்கமோ அல்லது பொருள் விளக்கமோ தரப்படவில்லை. உள்ளதை உள்ளபடியே கோடிட்டு மட்டும் காட்டப்படுகிறது.

    ஓர் ஆசிரியர் தனது மாணவனிடம் கீழ்வரும் கேள்வியை கேட்கிறார்

    கேள்வி : 5 + 4 = ?

    மாணவன் பதில் : 7 (ஏழு)

    இங்கு, மாணவனின் பதில் “தவறு” என்று தான் ஆசிரியர் கூறுவார். மாணவர் “ஐந்து” உடன் “நான்கை” கூட்டும் போது ஐந்தைவிட கூடுதலாக வரும் என்று மாணவன் அறிந்திருக்கிறான் என்று ஆசிரியர் மகிழ்ந்தாலும், மாணவரின் “ஏழு” என்ற தவறான பதிலுக்கு மதிப்பெண் தரமாட்டார். அதுபோல் தான் உலகில் காணும் சமய, மத, மார்க்கங்களில் “இறைவனைப் பற்றியும், அக்கடவுளின் அருளை பெறுவது பற்றியும் வியம்பி இருந்தாலும் அத்திருவருள் பற்றிய முழு உண்மையை அவை வியம்பவில்லை.” அதனால் அவற்றை பொய் என்கிறார் வள்ளலார்.

    அதே நேரத்தில் சமய, மத, மார்க்கங்களில் இருந்த, இருக்கின்ற பெரியோர்களே நல்லறிவு கொண்டோர், மெய்யறிவு படைத்தோர் என்றும் கூறுகிறார் வள்ளலார். அந்த நல்லறிவு, மெய்யறிவு கொண்டோர்களும் அறிந்திடாத “உண்மையை” தனக்கு கடவுள் காட்டியதாக கூறுவதே வள்ளலாரின் சிறப்பு.

    மேலும், தான் கண்ட “உண்மை”யானது உலகில் காணும் சமய, மத, மார்க்கங்களுக்கும் பொதுநெறியாகி விளங்கும் என்கிறார் வள்ளலார்.(பக்கம் 550).

    “எது” எல்லோருக்கும் பொதுவாகவும், எல்லோரும் ஒத்துக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளதோ அதுவே “உண்மை”. “அந்த உண்மையை” கண்டவர் வள்ளலார்.

    வள்ளலார் சொல்ல வந்த உண்மை என்ன?

    தனது பேருபதேசத்தில் (22.10.1873) குறிப்பிட்டது …..

    “உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை

    சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.’’

    அந்த உண்மை என்ன?

    வள்ளற் பெருமான் பெற்ற அறிவினால் தெரிந்த அனுபவத்தில் கண்ட ’’கடவுளின் உண்மை’’ இதுநாள் வரை எந்ததொரு சமய, மத, மார்க்கங்களிலும் காணாத சத்தியம் ஆகும். சமய, மத, மார்க்கம் சார்ந்த நல்லறிவு கொண்டோர்களுக்கும், மற்றும் ஆன்மநேய ஒருமைபாட்டுரிமையில் அந்த சத்தியத்தை “சத்திய ஞான சபை“ அமைத்து ஒருவாறு புறத்திலே நமக்கும் விளக்கினார்கள்.

    அங்ஙனம் “உண்மை“ விளக்கினாலும் அன்றைய மக்களின் நிலைப்பற்றி வள்ளலார் குறிப்பிடுகையில்; (ஆதாரம் : பேருஉபதேசம்)

    “தெய்வத்தை தெரிந்து கொள்ளளைது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கெள்ளளைததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள் என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால் ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்ததினுடைய ருசிதெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தன் மேல் இச்சை போகாது அதுபோல், தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தால்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வராது, ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் மென்கிற முக்கிய லட்சுயத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்“ என்கிறார்கள். வள்ளலார் ஒரு வருடத்திற்கு மேலாக, இறுதி வரையில் சத்திய ஞான சபையை பூட்டியே வைத்திருந்தார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்….. ’’

    பக்கம் 560: (திருஅருட்பா உரைநடைப்பகுதி) சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம்: “எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே, இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள், என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்….. ”

    நிற்க

    சமயங்கள், மதங்கள், மார்க்கங்களை தான் கண்ட மார்க்கத்திற்கு தடைகள் என்று கூறினார்கள். அதுவும் முக்கியத்தடைகள் எனவும் மேலும் எக்காலத்திற்கும் என்றும் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளளைர்கள். மேலும், பக்கம் 570:- சத்திய பெருவிண்ணப்பத்தில்:- “வாலிபப் பருவந் தோன்றியபோதே, சைவம், வைணவம், சமணம், பவுத்த முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும், அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும், தெய்வங்களும், கதிகளும், தத்துவசித்தி விகற்பங்கùளன்றும், அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகùளல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகùளன்றும், உள்ளபடியே எனக்கறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமற்றடை செய்வித்தருளினீர்.“ மேலும் வள்ளலார் தனது சுத்த சன்மார்க்கப் பாடல்களில் (6வது திருமுறை) சமயம், மதம் மார்க்கங்களை பற்றி குறிப்பிடுகையில் …….

    பாடல் சுத்தசன்மார்க்கப் பாடல்கள்

    எண்

    64 மான மேலிடச் சாதியே மதமே

    வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன் …..

    …. அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.

    72 சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்

    சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்.

    185 கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்

    கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே

    நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்

    நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ……

    186 வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்

    விளம்புநெறிஇதிகாசம் விதித்தநெறி முழுதும்

    ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி

    உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே

    ஏதமற உணர்ந்தனன் வீண் போதுகழிப் பதற்கோர்

    எள்ளளவும் எண்ணம்இலேன் என்னோடுநீ புணர்ந்தே

    தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்

    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

    187 கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்

    கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக

    மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்

    வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே …..

    202 சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்

    புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்

    பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்

    உரியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்.

    220 மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி

    மன்னிய வடிவளித் தறிஞர் …..

    306 கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுகமற் றெல்லாம்

    மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்

    இருள்நெறி மாயை வினைகளளைல் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்

    தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.

    336 இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற் கரியபே ரின்பம்

    தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம் தயாநிதி தனிப்பெருந் தந்தை

    அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப்பொதுவில் ஐயர்தாம்வருகின்ற சமயம்

    சமயம்இப் போதென்றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம்அறியும்.

    353 இச்சாதி சமயவிகற் பங்கùளலாம் தவிர்ந்தே

    எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்…..

    363 சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்

    நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும்

    ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் ஜோதிஎன் றறிந்தேன்

    ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான் உரைப்பதென் அடிக்கடி உனக்கே.

    411 கருங்களிறு போல்மதத்தால் கண்செருக்கி வீணே

    காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்

    ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருள் வடிவாய்

    உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்

    பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்

    பிறர்அறியா வகைபெரிதும் பெறுதும்என உள்ளே

    மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ

    மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

    415 அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா

    தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில்

    புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளளைக்கி அருளளைம்

    பொருள்அளிக்கப் பெற்றனன்

    417 அடிபிடித்துத் திரிகின்ற மறைகள் எலாம் காணா

    அருள்வடிவைக் காட்டிநம்மை ஆண்டுகொண்ட கருணைக் ….

    430 புல்லவா மனத்தேன் என்னினும் சமயம் புகுதவா பொய்ந்நெறி ஒழுக்கம்

    சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர் செப்பனத் தாயினும் நினையேன்

    கல்லவா மனத்தோர் உறவையுங் கருதேன் கனகமா மன்றிலே நடிக்கும்

    நல்லவா எல்லாம் வல்லவா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

    452 கொலைபல புரிந்தே புலைநுகர்ந் திருந்தேன் கோடுறு குரங்கினிற் குதித்தே

    அலைதரு மனத்தேன் அறிவிலேன் எல்லாம் அறிந்தவன் போல்பிறர்க் குரைத்தேன்

    மலைவுறு சமய வலைஅகப் பட்டே மயங்கிய மதியினேன் நல்லோர்

    நலையல எனவே திரிந்தேனன் எனினும் நம்பினேன் கைவிடேல் எனையே.

    474 தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே

    சிவமாலை அணிந்தனை அச் சிறுவயதில் இந்த

    உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள்

    ஒடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ

    495 இருளளைன மலம்அறுத் திகபரங் கண்டே

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ

    மருளளைன பற்பல மார்க்கங்கள் எல்லாம்

    வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்

    தெருளளைன சுத்தசன் மார்க்கம தொன்றே

    சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்

    அருளளைனவீதியில் ஆடச்செய் தீரே

    அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

    496 இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை

    இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

    மருட்சாதி சமயங்கள் மதங்களளைச் சிரம

    வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்

    தெருட்சாறும் சுத்தசன் மார்க்கநன் னீதி

    சிறந்து விளங்கஒர் சிற்சபை காட்டும்

    அருட்ஜோதி வீதியில் ஆடச்செய் தீரே

    அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே

    514 பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர்

    புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்

    சதுமறைஆ கமங்கள்எலாம் சாற்றரிய பெரிய

    தனித்தலைமைத் தந்தையரே

    518 என்னே செய்வேன் செய்வகை ஒன்றிங் கிதுஎன் றருள்வாய் இதுவே தருணம்

    மன்னே அயனும் திருமா லவனும் மதித்தற் கரிய பெரிய பொருளே

    544 மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே

    மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே

    துதிக்கும் அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே

    சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.

    559 சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றி

    தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே

    ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்

    ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே

    ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்

    ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே

    சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்

    தூயநடத் தரசேஎன் சொல்லும் அணிந் தருளே.

    579 …… பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்

    பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே

    பெற்றியுளளைர் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்

    பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே.

    585 வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்

    வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே

    தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்

    திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழி ஏற் றருளே.

    588 மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய

    முடியாத முடிவெல்லாம் முன்னியஒர் தினத்தே

    ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்

    அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே

    601 மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்

    மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்

    பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்

    பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த

    விதம்ஒன்றும் தெரியாதே மயங்கிய என் தனக்கே

    வெட்டவெளி யாஅறிவித் திட்ட அருள் இறையே

    சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்

    தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும் அணிந் தருளே.

    620 கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்

    கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்

    கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்

    காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்

    பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே

    பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே

    தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்

    தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.

    621 நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

    நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளைவிளை யாட்டே

    மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ

    விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே

    கால்வருணங் கலையாதே வீணில் அலை யாதே

    காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே

    மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற

    வயங்குநடந் தரசேஎன் மாலைஅணிந் தருளே.

    623 இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்

    இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்

    மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்

    மகனேநீ நூல் அனைத்தும் சாலம்என அறிக

    செயல் அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே

    திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே

    அயல் அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற

    ஆடுகின்ற அரசே என் அலங்கல் அளிந்திருளே.

    624 தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்

    சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்

    ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்

    உலகறிவே தாகமத்தைப் பொய்எனக் கண் டுணர்வாய்

    ஆன்றதிரு அருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே

    ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே

    ஏன்றதிரு வழுதெனக்கும் ஈந்தபெரும் பொருளே

    இலங்குநடத் தரசேஎன் இசையும் அணிந் தருளே.

    625 நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்

    நவில் அருகர் புத்தர் முதல் மதத்தலைவர் எல்லாம்

    வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து

    வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே

    தேன்முகந்துண் டவர் எனவே விளையாடா நின்ற

    சிறுபிள்ளைளக் கூடடம்என அருட்பெருஞ்ஜோ தியினால்

    தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே

    சபையில்நடத் தரசேஎன் சாற்றும் அணிந் தருளே.

    633 எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்

    ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே

    மெய்த்துணையாம் திருவருட்பே ரமுதம்மிக அளித்து

    வேண்டியவா றடிநாயேன் விளையாடப் புரிந்து

    சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்

    துலங்கு அருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்

    சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே

    சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருளே.

    638 மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள் மன்னுருத் திரர்கள் முதலா

    ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங் குறுபெருந் தொழில்பல இயற்றி

    இன்புறச் சிறிதே கடைக்கணித் தருளி இலங்கும்ஓர் இறைவன்இன் றடியேன்.

    அன்பெனும் குடிசை நுழைந்தனன் அந்தோ அவன்தனை மறுப்பவர் யாரே.

    639 தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித் தனித்தனி மறைகள் ஆ கமங்கள்

    உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா ஒருதனிப் பெரும்பதி உவந்தே

    புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள் பொறுத்தருட் பூரண வடிவாய்

    என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ எந்தையைத் தடுப்பவர் யாரே.

    657 குற்றமெலாம் குணமாக் கொள்ளும்

    குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை

    எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே

    ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

    689 மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த

    மருந்தைமா மந்திரந் தன்னை

    இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட

    இறைவனைக் கண்டுகொண் டேனே.

    705 சமயமும் மதமும் கடந்ததோர் ஞான

    சபைநடம் புரிகின்ற தனியைத் …………

    717 உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள் உலப்பிலா அண்டத்தின் பகுதி

    அலகுகாண் பரிய பெரியகூட் டத்த அவைஎலாம் புறத்திறைச் சார்பில்

    விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற் றிருந்தென விருந்தன மிடைந்தே

    இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத் தென்பர்வான் திருவடி நிலையே.

    718 தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா யேச்சுரன் சதாசிவன் விந்து

    நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி நவில்பர சிவம் எனும் இவர்கள்

    இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும் இடதுகாற் கடைவிரல் நகத்தின்

    கடையுறு துகள் என் றறிந்தனன் அதன்மேற் கண்டனன் திருவடி நிலையே.

    719 அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால் அரன்மயேச் சுரன்சதா சிவன்வான் படர்தரு விந்து பிரணவப்பிரமம் பரைபரம் பரன்எனும்இவர்கள்

    சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும் துணையடிப் பாதுகைப் புறத்தே

    இடர்கெட வயங்கு துகள் என அறிந்தே ஏத்துவன் திருவடி நிலையே

    720 இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால் பிரமன்ஈ சானனே முதலாம்

    மகத்துழல் சமய வானவர் மன்றின் மலரடிப் பாதுகைப் புறத்தும்

    புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்

    செகத் தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில் தெரிந்தனன் திருவடிநிலையே.

    736 சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்

    விடுவித்தென் தன்னை ஞான

    நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க

    நிலைதனிலே நிறுத்தி னானைப்

    பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்

    பராபரனைப் பதிஅ னாதி

    ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்ஜோ

    தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

    774 தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ

    சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந் தனில்உறும் அனுபவம் என்கோ

    796 அனந்தமறை ஆகமங்கள் அளப்பரிய சிவமே

    அம்மேஎன் அபபாஎன் ஐயாஎன் அரசே

    மனந்தருவா தனைதவிர்த்தோர்

    927 மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு

    வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்

    கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே

    கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்

    பதம்பிடித் தவர் எல்லாம் அம்பலப் பாட்டே

    பாடினார் ஆடினர் பரவிநிற் கின்றார்

    இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ்ஜோதி

    என்னைய னேபள்ளி யெழுந்தருள் வாயே.

    945 நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் நெடுநாள் முயன்று வருந்திநின்று

    வேண்ட அவைகட் கொருசிறிதும் விளங்கக் காட்டா தென்மொழியைப்

    பூண்ட அடியை என்தலைமேல் பொருந்தப் பொருத்தி என்தன்னை

    ஆண்ட கருணைப் பெருங்கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே.

    961 தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்

    சேர்கதி பலபல செப்புகின் றாரும்

    பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்

    பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்

    மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்

    மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்

    எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்

    எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.

    978 ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில் உற்றகள் பனைகளும் தவிர்ந்தேன்

    பாடல்செய்மனத்தால் கலங்கினேன் எனினும் மன்றினை மறந்ததிங்குண்டோ.

    995 மதத்திலே சமய வழக்கிலே மாயை மருட்டிலே இருட்டிலே மறவாக்

    கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்

    பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும் பரிந்தெனை அழிவிலா நல்ல

    பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே.

    996 குலத்திலே சமயக் குழியிலே நரகக் குழியிலே குமைந்துவீண் பொழுது

    நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து நிற்கின்றார்

    978 ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில் உற்றஎன் பனைகளும் தவிர்ந்தேன்

    வாடல்செய்மனத்தால் கலங்கினேன் எனிலும் மன்றினை மறந்ததிங்குண்டோ.

    1005 சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக

    ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.

    1006 துரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்

    கரியபதம் எனக்களித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ.

    1014 எக்கரையும் காணாதே இருட்கடலில் கிடந்தேனை எடுத்தாட் கொண்டு

    அக்கரைசேர்த் தருùளனுமோர் சர்க்கரையும் எனக்களித்தான் அந்தோ அந்தோ

    1112 மருளளைத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்

    மருண்டனவே என்னடி என் மனவாக்கின் அளவோ….

    1154 அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை

    வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார்

    விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி

    1161 மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர் அங் கவர்பால்

    இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்

    இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.

    1272 குலத்தே சமயக் குழியிடத்தே விழுந்திவ் வுலகம் குமையாதே

    நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டா நின்றேன் நாட்டகத்தே

    1364 வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய

    மாமதியின் அழுதநிறைவே

    1387 பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்

    பவநெறி இதுவரை பரவிய திதனால்

    சென்னெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்

    செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ

    புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்

    புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்

    தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே

    தனிநட ராஜஎன் சற்குரு மணியே

    1395 சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே

    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.

    1473 சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

    சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

    ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

    அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழ கலவே

    நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே ஞான

    நிருத்தமிடும் தனித்தலைவர்ஒருத்தர் அவர் தாமே

    வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய

    மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே.

    1477 எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்

    எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று

    கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்

    கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்

    ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்

    அழியும்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்

    உய்வகை என் தனித்தந்தை வருகின்ற தருணம்

    உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.

    1501 ஆரணமும் ஆகமழும் ஆங்காங் குரைக்கின்ற

    காரணமும் காரியமும் காட்டுவித்தான் – தாரணியில்

    கண்டேன் களிக்கின்றேன் கங்குல்பகல் அற்றவிடத்

    துண்டேன் அமுதம் உவந்து

    1502 துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ

    சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் – என்மார்க்கம்

    நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்

    மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.

    1503 பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே

    சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே – சொன்மார்க்கத்

    தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்

    கொல்லா நெறி அருளைக் கொண்டு.

    1504 சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப

    நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் ஓதுகின்ற

    பேயாட்ட மெல்லாம் பிதிரிந்தொழிந்த வேபிறர்தம்

    வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.

    1511 சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி

    நேத்திரங்கள் போல்காட்ட நேராவே – நேத்திரங்கள்

    சிற்றம் பலவன் திருவருள்சீர் வண்ணமென்றே

    உற்றிங் கறிந்தேன் உவந்து.

    1512 வேதாக மங்கùளன்று வீண்வாதம் ஆடுகின்றீர்

    வேதாக மத்தின்விளைவறியீர் – சூதாகச்

    சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை

    என்ன பயனோ இவை.

    1541 திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்

    சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு

    வருநெறியில் எனையாட்கொண்ட டருளமுதம் அளித்து

    வல்லபசத் திகùளல்லாம் வழங்கியஓர் வள்ளல்

    பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

    பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

    கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

    கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.

    1544 சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்தம் எல்லாம்

    தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்

    நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்

    நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை

    அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்

    ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்

    சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்

    சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.

    1546 முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்

    முடுகி அழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே

    இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்

    எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்

    துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்

    தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்

    பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்

    படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.

    1549 குறித்துரைக்கின் றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

    கோணும்மணக் குரங்காலே நாணுகின்ற உலகீர்

    வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

    மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்

    பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்

    புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்

    செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்

    சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.

    1571 முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன

    மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது

    பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின

    என்னுளத் தருட்பெருஞ் ஜோதியார் எய்தவே.

    1582 இயங்காளிபுலிகரடி எனப் பெயர்கேட் டுளம்நடுங்கி இருந்தேன் ஊரில்

    சயங்காளிக் கோயிலைக்கண் டஞ்சிமனம் தழுதழுத்துத்தளர்ந்தேன் இந்தப்

    பயங்காளிப் பயல்போலப் பயந்தவர்கள் எங்குளர்காண் பதியே என்னை

    வயங்காளில் ஒருவன்என நினையேல்கைப்பிள்ளை என மதித்தி டாயே.

    1591 கிழக்குவெளுத் ததுகருணை அருட்ஜோதி உதயம்

    கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே

    சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்

    சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக

    வழக்கு வெளுத் ததுபலவாம்பொய்ந்நூல்கற் றவர்தம்

    மனம்வெளுத் ததுசிவமே பொருள் எனும் சன் மார்க்க

    முழுநெறியில் பரநாத முரசு முழங் கியதே.

    1626 சேய்போல் உலகத் துயிரைஎல் லாம்எண்ணிச் சேர்ந்துபெற்ற

    தாய்போல் உரைப்பர்சன் மார்க்கசங் கத்தவர் சாற்றும்எட்டிக்

    காய்போல் பிறர்தமைக் கண்டால் கசந்துள் கடுகடுத்தே

    நாய்போல் குரைப்பர்துன் மார்க்கசங் கத்தவர் நானிலத்தே.

    1705 கண்கொண்ட பூதலம் எல்லாம்சன் மார்க்கம் கலந்துகொண்டே

    பண்கொண்ட பாடலில் பாடிப் படித்துப் பரவுகின்றார்

    விண்கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்ற

    தெண்கொண்ட மற்றை மதமார்க்கம் யாவும் இறந்தனவே.

    1734 சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது

    தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்

    என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்

    எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்

    புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே

    புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்

    தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே

    தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே

    1735 ஆதியும்நடுவும் அந்தமும் இல்லா

    அருட்பெருஞ் ஜோதிஎன் உளத்தே

    நீதியில் கலந்து நிறைந்தது நானும்

    நித்தியன் ஆயினேன் உலகீர்

    சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே

    சத்தியச் சுத்தசன் மார்க்க

    வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை

    விளம்பினேன் வம்மினோ விரைந்தே.

    1802 சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்ன வே

    சாற்றப் புகினும் சாலா அருளின் பெருமை உன்ன வே

    அமையும் அண்டப் பகுதி பலவும் அணுவின் பொடியி லே

    அனந்தத்தொன்றென் றுரைத்துஞ்சாலாநின்பொன் னடியிலே.

    எனக்கும் உனக்கும்

    1824 வேதா கமத்தின் அடியும் நடுவும் முடியு மற்று மே

    வெட்ட வெளிய தாகி விளங்கக் கண்டேன் முற்று மே

    நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்ட தே

    நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்ட தே.

    எனக்கும் உனக்கும்

    1919 எச்சம யங்களும் பொய்ச்சம யமென்றீர்

    இச்சம யம்இங்கு வாரீர்

    மெய்ச்சம யந்தந்தீர் வாரீர்.

    1984 சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்

    சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ

    விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா

    வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்

    பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்

    பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்

    அதுஇது என்னாமல் ஆடேடி பந்து

    அருட்பெருஞ் ஜோதிகண் டாடேடி பந்து.

    2076 தருநெறி எல்லாம்உள் வாங்கும் – சுத்த

    சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்

    திருநெறிக் கேசென்று பாரீர் – திருச்

    சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

    2077 எம்பொருள் எம்பொருள் என்றே – சொல்லும்

    எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே

    செம்பொருள் என்பது பாரீர் – திருச்

    சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

    2078 சைவ முதலாக நாட்டும் – பல

    சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்

    தெய்வம் இதுவந்து பாரீர் – திருச்

    சிற்றம் பலத்தே திருநட ஜோதி

    2113 மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது

    வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது

    கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது

    கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது.

    2114 குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று

    குதித்த மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று

    வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது

    விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்ததுஇதுநல்ல

    2141 எச்சம யத்தும் இலங்கிய பாதம்

    எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்

    அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்

    ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம்.

    2177 சாதி சமயச் சழக்கெலாம் அற்றது

    சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது

    2213 சாதி சமயச் சழங்கைவிட் டேன்அருட்

    ஜோதியைக் கண்டேன டி – அக்கச்சி

    ஜோதியைக் கண்டேனடி.

    2294 சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்

    சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்

    அருட்பெருஞ்ஜோதி அகவல்

    வரிகள் அகவல்

    1-2 அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

    அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

    5-6 ஆகம முடிமேல் ஆரண முடிமேல்

    ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி

    21-22 ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை

    யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி

    29-30 சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்

    அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

    51-52 சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்

    ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி

    61-62 சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்

    அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி

    115-116 சாதியு மதமுஞ் சமயமுங் காணா

    ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி

    211-212 சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென

    ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி

    293-294 சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த

    அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி

    1317-1318 தாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா

    வாழ்வெனக் களித்த வளரொளி மணியே

    1327-1328 மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு

    கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே

    1543-1544 வேதமு மாகம விரிவும் பரம்பர

    நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே

    1553-1556 சமரச சத்தியச் சபையி னடம்புரி

    சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே

    சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே

    அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி

    1567-1568 சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்

    சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்

    இங்ஙனமாக வள்ளற் பெருமான் தெரிவித்தப்பிற்கு, கட்டளையிட்டப்பிறகு அவர்தம் நெறியை அனுஷ்டிக்கிறவர்கள் சமய, மத, மார்க்கங்கள் மீது பற்று உடையவர்களளைக இருத்தல் கூடாது.

    அன்பர்கள், வள்ளற்பொருமான் ஏன் சமய, மத, மார்க்கங்கள் எக்காலத்தும் முக்கியதடைகளளைக அறிவித்தார்கள்? வள்ளலார் “கடவுளின் உண்மை” எவ்வறாக கண்டார்கள்? திருஅருட்பா உரைநடைப் பகுதி பக்கம் 556-ல்:- “சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்:- “இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும், இயற்கை இன்பினரென்றும், நிர்க்குணரென்றும், சிற்குணரென்றும் நித்தியரென்றும், சத்தியரென்றும், ஏகரென்றும், அநேகரென்றும், ஆதியரென்றும், அனாதியரென்றும், அமலரென்றும் அருட்பெருஞ்ஜோதிரென்றும் அற்புத ரென்றும், நிரதிசயரென்றும், “எல்லாமானவரென்றும் எல்லாமுடையவரென்றும் எல்லாம் வல்லவரென்றும்” குறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த திருக்குறிப்புத் திருவார்த்தைகளளைற் சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும், நினைத்தும், உணர்ந்தும், புணர்ந்தும் அனுபவிக்க விளங்குகின்ற தனித்தலைமைப் பெரும் பதியாகிய “பெருங்கருணைக் கடவுள்.”

    மேலே “அருட்பெருஞ்ஜோதி“ உட்பட 18 திருக்குறிப்புத் திருவார்த்தைகளளைல் குறிப்பிட்டு சுத்த சன்மார்க்கத்தில் காணும் கடவுள் “பெருங்கருணை”. இந்த சத்தியக் கடவுள் பற்றி தனது அறிவிப்பு 12.4.1871ல் (பக்கம் 547) குறிப்பிடுகையில்:- “இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத்தேவர்களும், எல்லாக்கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பாக்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி.” என்கிறார்கள். வள்ளற்பெருமான் சத்திய அறிவால் அறியப்படட உண்மைக் கடவுள் “ஒருவரே”. ஆதாரம்:- சபை விளம்பரம் நாள் 25.11.1872:- “ஆண்டவர் ஒருவர் உள்ளளைர் என்றும், அவர் பொதுப்பட உலகத்திலுள்ளளைர் யாவரும் சுத்த சன்மார்க்கப் பெரும்பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற்பொருட்டு வெளிப்படக் காரியப்படுகின்றார்”.

    அந்த, “ஒருவராகிய” உண்மைக் கடவுள்.

    எல்லா அண்டங்களையும்,

    எல்லா உலகங்களையும்,

    எல்லா உயிர்களையும்,

    எல்லா பொருள்களையும்,

    மற்றை எல்லாவற்றையும்

    தோற்றுவித்து, விளக்கம் செய்வித்து, துரிசு நீக்குவித்து பக்குவம் வருவித்து, பலன் தருவித்து விளங்குகிறார். ஆக, மேற்படி எல்லா அண்டங்கள், உலகங்கள், உயிர்கள், பொருள்கள் மற்றை அனைத்தும் இல்லா நிலையில், தோற்றுவிப்பதற்கு முன் இருந்த, இருக்கின்ற, இருக்கக் கூடிய, மெய்ப் பொருளே “கடவுள்” ஆகும். சத்திய அறிவால் அறியப்படுகின்ற இக்கடவுள் (ஒருவரே) அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்து, சுத்த மெய்யறிவென்னும் பூரணப்பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.”

    வள்ளலார் பேருபதேசத்தில் மேலும் குறிப்பிடுகையில்; தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில் கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். தெய்வத்துக்குக் கை, கால் முதலியன இருக்குமா? என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கùளன்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால் ஆதியிலே கடவுளின் உண்மையை மறைத்தவன் ஒர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை அவைகளில் ஏகதேச கர்மசித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்கும் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால் அற்ப சித்திகள் அடையலாம். அதற்காக அவற்றில் லட்சியம் வைத்தால், ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கின்ற லட்சியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லட்சியம் போய் விட்டால் நீங்கள் அடையப்போகின்ற பெரிய பிரயோஜனம்போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து அவ்வளவு காலம் உழைத்து அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும் ஆகையால், அவைகளில் லட்சியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லட்சியம் வைக்க வேண்டியது.

    இதுபோல், சைவம், வைணவம், முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குமூஉக் குறியாகக் குறித்திருக்கின்றதே அன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை. ஆதலால் அவற்றில் லட்சியம் வைக்கவேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது. ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானு பவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கு எல்லாம் சாஷி நானேயிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவு வென்று அளவு சொல்லமுடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும், வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும். அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களளை அப்படி லட்சியம் வைத்ததற்குச் சாஷிவேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற திருவருட்பாலில் அடங்கியிருக்கிற ஸ்தோததிரங்களே போதும்.அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்த தென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.

    இப்போது ஆண்டவர் என்னை ஏறாதநிலைமேல் ஏற்றயிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களளை? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலே, அந்த லட்சியம் தூக்கி விடவில்லை.

    என்னை யேறாநிலைமிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

    அந்தத் தயவுக்கு ஒருமை வரவேண்டும். அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப் போல் ஒருமையுடனிருங்கள்” என்கிறார் வள்ளற்பெருமான்.

    ஆக, கடவுளின் உண்மையை குழித்தோண்டி புதைத்துவிட்டு- சூதுவினால் தோன்றியதே வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கற்பனைகள். அவை உண்மை உரைக்காது தெய்வத்தை புறங்கவிய கூறவில்லை. அவை தத்துவ சித்திவிகற்பங்களளைகிய சமயங்களின் தோற்றங்கள் என்கிறார் வள்ளலார்..

    வேதம், ஆகமம் புராணம் இதிகாசம் இவையில் இருப்பவைகள்

    சமய, மதங்களில் (சைவம், வைணவம், வேதாந்தம் சிந்தாந்தம்) இருப்பவைகள்

    சுத்த சன்மார்க்கத்தில் இருப்பது.

    வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் இவையில் இருப்பவைகள்

    சமய, மதங்களில் (சைவம், வைணவம், வேதாந்தம் சிந்தாந்தம்) இருப்பவைகள்

    சுத்த சன்மார்க்கத்தில்

    இருப்பது.

    தெய்வம் இன்னபடி என்றும் தெய்வத்தின் உண்மை இன்னதென்றும் கூறவில்லை

    இவைகளில் புறங்கவிய தெய்வத்தைப்பற்றிகூறாது குழு உக்குறியாக குறிப்பித்தல்

    பெருங்கருணை கடவுளளைக கண்டது

    அவைக்கு கைலாசபதி, வைகுண்டபதி சத்தியலோகாதிபதி என்று பெயர்கள் இட்டனர்.

    அற்பபிரயோஜனம் பெறக்கூடுமேயன்றி

    தயவு என்னும் “கருணையே”

    தெய்வத்திற்கு இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் அமைத்திருத்தல்

    ஒப்பற்ற வாழ்வு கிட்டாது

    இறையருள் பெறுவதற்கு சாதனம் “கருணையே”

    கை, கால், முதலியன இருக்கும் தெய்வங்களுக்குரிய அமைத்து காட்டப்படுதல்.

    அற்பசித்திகளை பெறக்கூடியதாக மட்டுமே உள்ளது.

    கருணை வருவதற்கு ஒருமை வேண்டும் ஒருமைக்கு ஒழுக்கம்.

    அருட்பெருவெளியில் எங்கும் பூரணராகி அகத்தும் புறத்தும் நீக்கமற நிறைந்திருக்கும் பெருஞ்ஜோதியாகிய கடவுள் “பெருங்கருணை”. அருள் அனுவில் அருளால் தோன்றுவித்த தோன்றிய உயிர்களிடத்தில் தெய்வஅம்சமாகிய கருணையும் இருக்கும். ஒழுக்கம், அறிவினால் இடைவிடாது நன்முயற்ச்சியில் கருணை சுத்தமாதி மூன்று தேகங்கள் பெறலாம் (ஆதாரம் பக் 394).

    இந்நிலையில், ஒருவராகிய பெருங்கருணைக் கடவுள் ஒன்றாகவும் இரண்டாகவும் காண்பது எந்நிலையில் சரியாகும்.? எங்கும் நீக்கமற நிறைத்திருக்கும் இத்திருவருள் ஒரு குறிப்பிட்ட பெயரிட்டு இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் அமைக்கின்ற சமய, மத, மார்க்கங்கள் பொய் என்றுதானே கூறவேண்டும்.

    மேலும், தன் சமய, மத, மார்க்கங்கள் அனுஷ்ட்டிக்காதவர்கள் /எதிரானவர்கள் கொல்லச் சொல்வதும், பிறர் உயிர்களை தன்னுயிராக பாவிக்கச் சொல்லாத மார்க்கங்களையும் பொய் என்றுதானே கூறமுடியும். மேலும் வள்ளற் பெருமான் கூறுகையில் அவைகளில் ஏகதேச கர்மசித்திகளைக் கற்பனைகளைச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்கும் பத்து வருஷம், எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால் அற்ப சித்தகளை அடையலாம் அதற்காக அவற்றில் லட்சியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் லட்சியம் போய்விடும் என்கிறார்…. ஆகையால், அவைகளில் லட்சியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லட்சியம் வைக்க வேண்டியது என்கிறார் வள்ளலார்.

    முடிவுரை:

    அன்பர்களே,

    சுத்தசன்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கியத் தடைகளளைவன உலகில் காணும் சமய, மத மார்க்கங்கள் என்று வள்ள பெருமான் குறிப்பிட்டாலும், சத்திய ஞான சபை விளம்பரம் 25.11.1872-ல்

    “எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப்பொது நெறியாகி விளங்குவது சுத்த சன்மார்க்கம் ஆகும்” என்கிறார் பெருமான்.

    ஆம்,

    வள்ளற்பெருமான் கடவுளின் அருளை பெறுவதற்கான சத்தியவழியை (சுத்தசன்மார்க்கத்தை) கண்டார்கள் அந்த சுத்த சன்மார்க்கத்தில் திருவருள் நிலையறிவது எப்படி எனில் என வள்ளலர் கூறுகையில் (பக்கம் 438ல்)

    “ஒழுக்கம் நிரம்பி, கருணையே வடிவாக நிற்கும் ‘விசார சங்கல்பம்’ உண்டானால், நாம் தாழுங்குணம் வரும். அத்தருணத்தில் திருவருட் சக்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது கருணை நன்முயற்சியில் பழகல் வேண்டும்.”

    “ஒழுக்கம் நிரம்பி சங்கல்பம் உண்டானால் தான் கடவுளின் உண்மை வெளிப்படும்” என்கிறார்கள். கடவுளின் அருளை பெறுவதற்கு கருணையே சாதனம் என்கிறார். அக்கருணைக்கு ஒருமை வேண்டும். ஒருமை என்பது “தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும்; மற்ற இடத்தில், தன்னால் இதரர்களுக்கு இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்பது.”

    ஒழுக்கம் நிரப்பிக் கொள்ளுதலே பெருநெறியாக, சத்திய வழியாக வள்ளலாரால் கண்டறியப்பட்டது. இது “உண்மை பொதுநெறி” என்று அனைவராலும் ஒப்புக் கொள்ளக் கூடியதே.

    சமரச சுத்தசன்மார்க்க சத்திய சங்கத்தில் “ஒழுக்கம் பயிலுதலே” உள்ளது. சுத்த சன்மார்க்கி என்பவர் ஒழுக்கம் நிரம்பியவர் மற்றும் சத்திய அறிவு பெற்றவர் ஆவார். அதற்கு இடைவிடாது கருணை நன்முயற்சி பழகல் வேண்டும் என்கிறார் வள்ளலார். அதன் விபரம் கடவுள் நிலையும், ஒழுக்கமும் என்ற பாகம்-2ல் காணுங்கள்.

    அன்பர்களே!

    கால்பாதங்கள் தொட்டு வணங்கி வேண்டுவது “வள்ளலாரின் தனிநெறியை” மறுப்பதற்கோ, சாராமல் இருப்பதற்கோ உரிமையுண்டு. ஆனால் அத்தனிநெறியை திரித்து கூறுவது மிகப்பெரிய பாவம் மற்றும் சட்டப்படி குற்றமும் ஆகும். சுத்தமாதி மூன்று தேகங்களைப் பெற்ற ஞானி “வள்ளலார்”. உலகில் எல்லா அறிஞர்கள், விஞ்ஞானிகள், தத்துவ மேதைகள், அவரவர்களின் முடிவான இறுதியாக சொல்லிய கருத்துக்கள், அறிவிப்புகள், போதனைகள் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கும் போது வள்ளலாரின் முடிவான நெறியை, இறுதியாகச் சொல்லிய உண்மையை உள்ளபடியே வெளிப்படுத்தாமலும் அல்லது மறைத்து திரித்துக் கூறுவது அறியாமையிலா? அல்லது அறிந்தும் செய்யும் சூதுவினாலா? இதற்கு பதில் உங்களின் ஒழுக்கத்திற்கும் அறிவிற்கும் விட்டுவிடுகிறேன்

     

  • யார் சொல்றதுதான் இங்கு உண்மை?? (யானை கதை)– ஏபிஜெ. அருள்.

    elephant-1 elephant

    ஓர் வேண்டுகோள்:
    எனது பணி, கருணை சபையின் பணி, என் குடும்பம், என்னை சுற்றியுள்ள அன்பர்களின் குடும்பங்கள் அனைத்துமே, அனைவரிடத்திலுமே ஒரே குறிக்கோள் தான். அது யாதெனில்; வள்ளலாரின் நெறியானது எந்த ஒரு சமய,மத,மார்க்கத்தின் கீழும் இருப்பது அல்ல அவர்தம் நெறி ஒரு தனி நெறி, அவர் தம் மார்க்கத்தின் சாதனம் புதியது, அவர்தம் மார்க்க பயன் புதியது அது மட்டுமில்லைமிகப்பெரியது என்பதை தான் இந்த உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோளே அன்றி வேறு ஒன்றுமில்லை. வள்ளலார் கண்டது உண்மை கடவுள், பொது வழி, பெரிய பயன் என்றுச் சொல்ல வேண்டுமானால் அது எந்தொரு சமய,மத,மார்க்கத்தின் கடவுளையோ, அதன் ஆச்சாரங்களையோ, அவை தரும் பலன் போலவோ இருக்க முடியாது. கூடாது.

    அப்படித்தானே!!!

    ஆம் என்றால், —-, —–, எப்படி நம் கடவுளாக கருதமுடியும்?
    ஆம் என்றால், —-, —-, யை எப்படி நாம் அணிந்துக் கொள்ள முடியும்?
    ( –, —, யை நீங்களே நிரப்பிக் கொள்ளுங்கள். எதுக்கு பிறர் வம்பு..comments..)
    ஆம் என்றால், சொர்க்கம், நரகம் குறித்து நமக்கு ஏது விசாரணை?

    பல முறை சொல்லியாச்சு. எவரையும் தாழ்வாக பார்க்கவில்லை. பார்க்கவும் முடியாது. பிறர் குற்றம் விசாரியாதிருத்தல் வேண்டும் என்பது வள்ளலாரின் கட்டளை. வள்ளலாரின் நெறியே சிறந்தது. உயர்ந்தது என்று கூட சொல்ல முயற்சிக்கவில்லை. காரணம், அனுபவம் நான் ( நாங்கள்) பெறவில்லை என்பதே.
    ஆனால் அதே நேரத்தில்……
    வள்ளலாரின் முடிபான நெறியை மறைத்து, அவரால் கைவிடப்பட்ட சமய நெறியிலேயும், அச்சமய அடையாளத்துடனும் அவரைக் காட்டுவது மிக மிக தவறே ஆகும். இதை சுட்டிக்காட்ட பெரிய அறிவு தேவைப்படவில்லை.இந்த அடிப்படையிலேயே எங்களின் பணி கடந்த 11 வருடங்களாக நடைப்பெற்று வருகிறது. நெருங்கிய அன்பர்கள் சிலருக்கே என்ன என்ன பணிகளை மேற்க்கொண்டுள்ளோம், எத்தனையில் சிறப்பான ஆணைகள் பெற்றுள்ளோம் என்பதை அறிவர். இந்த விசயத்தை எங்களை உயர்த்திக்கொள்ள சொல்லவில்லை எங்கள் பணியில் சுய நலம், அறியாமை,பொய், குரோதம் இல்லை என்பதற்கே. இந்த விளக்கம் கூட இங்கு தரப்பட்டதற்க்கு காரணமே எங்களை பல்லாயிரம் பேர்கள் பாராட்டி வந்தாலும், சிலர் அதுவும் 4,5 பேர்கள் புரியாமல் இருப்பதை கருத்தில் ஆன்ம நேயத்துடன் எடுத்துக் கொண்டு, அவர்களையும் நம்மவர்களாக ஆக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசையே என்னிடத்தில் உண்மையாக உள்ளது. அவர்களும் எங்களின் அன்புக்குரியவரகளாக ஆகும் நாள் வெகு தூரமில்லை. வள்ளலார் எனக்கு துணை புரிவார்கள். உண்மை ஆண்டவரும் அருள் புரிவார். எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே. நன்றி.– ஏபிஜெ. அருள்.)

    ஆம். நல்ல விசாரணைக்கு வருவோம்.

    யார் சொல்றது தான் இங்கு உண்மை? (யானை கதை)

    ஆண்டவர் நம்மை பல பிறவிகள் எடுக்க வைத்து உயர் அறிவை பெறுதற்குறிய இந்த மனித தேகத்தில் செலுத்தியுள்ளார்கள்.
    நிற்க! இந்த மனித தேகத்தில் நமக்கு சிறிதறிவு மட்டுமே தோற்றி விடுத்துள்ளார் ஆண்டவர் என்பதை நாம் தெரித்துக்கொள்ள வேண்டும். இந்த சிறிதறிவை தான் நல்ல விசாரணையில், இந்த பிறவிலேயே சத்திய அறிவாக நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த மனித தேகத்திலேயே பல லட்ச பிறவிகள் எடுத்த பின்பே சத்திய அறிவை பெற முடியுமென்பதே இயற்கை. நம் ஆன்மிக சான்றோர்கள் கூறும் உண்மை. இந்த பிறவிலேயே (எந்த தாழ்ந்த தரத்தில் இருந்தாலும்) சத்திய அறிவை பெறக்கூடிய வழியை கண்டுபிடித்தவரே நம் வள்ளலார். அந்த வழியின் பெயரே “சுத்த சன்மார்க்கம்” ஆகும். இந்த வழி போல் எந்த மார்க்கத்திலும் இல்லை.
    சரி ஒரு யானை கதைக்கு வருவோம். ( ஒரு பெரிய மகான் சொன்னது தான். நம் வள்ளலாரும் ஒரு பாட்டில் சொல்லியுள்ளார்கள்.).
    நான்கு குருடர்கள் ஒரு யானையை பிடித்திருந்தனர். அவர்கள் பிடித்திருந்த பகுதியை வைத்து பேசிக் கொள்கிறார்கள். காலை பிடித்திருந்த ஒருவன் “யானை தூண் போல் உள்ளது” என்றான். யானையின் காதை பிடித்திருந்த 2ம் நபர்; “ இல்லை இல்லை யானை சோலகு போல் உள்ளது” என்றான். வாலை பிடித்திருந்த 3ம் நபர்; “ இல்லை. யானை குச்சி போலுள்ளது” என்றான். துதிக்கையை பிடித்திருந்த 4 ம் நபர்; “இல்லவே இல்லை யானை உலக்கை போலுள்ளது” என்றான். இவர்கள் இடத்திற்கு வந்து இவர்கள் பேசியதை கேட்ட கண் பார்வை உடைய 5ம் நபர் அவர்களிடம்; நீங்கள் அனைவரும் சொல்லியது முழு உண்மையல்ல என்று கூறி யானையின் ”முழு வடிவத்தையும்” அதன் உண்மை நிலையையும் அவர்களுக்கு விளக்கினார்.
    அன்பர்களே!
    அந்த 4 பேர்கள் சொல்வதில் பொய் இல்லை. அதே நேரத்தில் 4 பேர்களும் முழு உண்மை உரைக்கவில்லை. காலை பிடித்தவர் யானை தூண் போல் உள்ளது என்பதில், அவர் என்ன பொய் சொல்லிவிட்டார்?. அவர் பிடித்தளவில், அவர்க்கு இருந்த அறிவில் அறிந்தளவில், நண்பர்களுக்கு நல்ல
    எண்ணத்தில் தானே வியம்பினார்? ஆனால் அவர் முழு உண்மையவா உரைத்தார்? அவரை குறைச் சொல்ல முடியாது. அதே நேரத்தில் அவர் கூற்றை சத்திய அறிவில் ஒத்துக் கொள்ள முடியாது.
    இது போல் தான் சமயங்களை, மார்க்கங்களை உருவாக்கிய நம் சான்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்கள் அவர்களுக்கு தெரிந்த வண்ணம்,அறிந்த வண்ணம் நமக்கு நல்லெண்ணத்தில் தான் தெரியப்படுத்தினார்கள். ஆனால் இன்று சுத்த சன்மார்க்க வழியில் உண்மைக் கடவுளின் நிலையானது, ”எங்கும் பரிபூரணராக ஒளி வடிவில்” உள்ளது என்று தெரிய வந்தப் பிறகு,எங்ஙனம் கடவுளை பல வடிவத்தில் காட்டப்பட்டுள்ளதில் நாம் லட்சியம் வைக்க முடியும்?
    அன்பர்களே!
    யானையிடத்தில் அவன் கண்ட கால் உள்ளது. ஆனால் கால் யானையாகாது
    யானையே முழு உண்மை. அதன் கால் அதன் அம்சம்.
    இந்த நோக்கிலே தான் வள்ளலார் சொல்லிய உண்மையை தெரிதல் வேண்டும். அவர் பாடிய பாடல்களையும் ஊற்று நோக்க வேண்டும்.
    என் மார்க்கம் அறிவு மார்க்கம்.
    என் மார்க்கத்தில் உண்மையறிதலே, என்கிறார் வள்ளலார்.
    (ஆதாரம்:
    வள்ளலார் அவர் கைப்பட எழுதி வெளியிட்ட அறிவிப்பு நாள் 21-04-1871.)

    ஆறாம் திருமுறை –

    அனுபவ மாலை –

    எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே
    இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம்
    கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே
    கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார்
    நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய்
    ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன்
    செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே
    சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே.


    நன்றி.– ஏபிஜெ. அருள்.