Blog

  • புதிய தனி கடவுள் “சுத்த சிவம்”

    புதிய தனி கடவுள் “சுத்த சிவம்”

    இக்கடவுள் சமய,மத,மார்க்கங்களில் சொல்லப்பட்ட கடவுள் இல்லை –இக்கடவுளை தான் தான் கண்டதாக சொல்லுகிறார் வள்ளலார் –
    உலகில் பல சமய,மத,மார்க்கங்களில் பல கடவுள்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளது – அவரவர் நம்பிக்கை கொண்டு வழிப்பட்டு வருகிறார்கள் – சில மார்க்கங்கள் புதியதாக தோன்றினாலும் அதில் சமய, மதங்களில் வெளிப்பட்டுள்ள கடவுளரை தான் சுட்டி காட்டியுள்ளார்கள் –
    ஆனால், வள்ளலார் தன் சுத்த சன்மார்க்கத்தில் வருகிறகடவுள் இதற்கு முன் சமய, சாத்திரப் புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்,மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல என்கிறார் வள்ளலார்
    உலகில் பல வேறுப்பட்ட கடவுளர்கள், தேவர்கள் சமயங்களில், புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது – ஒரு மார்க்கக் கடவுளரை மற்றொரு மார்க்கத்தார்கள் ஏற்பதில்லை – மேற்படி சமய,மதங்களில் கடவுளரை உருவமாக, அல்லது அருவமாக அல்லது உருஅருவமாக காட்டப்பட்டுள்ளது –
    வள்ளலார் தன் வழியில் (மார்க்கத்தில்) கண்ட “உண்மை பொது” கடவுளரைப் பற்றி குறிப்பிடும் போது, கீழ் வருமாறு விள்ளக்குகிறார்கள் :
    ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
    உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
    அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
    ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
    என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
    யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
    ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
    ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

    எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
    இதுஅது எனஉரைப் பரிதாய்த்
    தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
    தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
    பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
    புத்தமு தருத்திஎன் உளத்தே
    அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

    • சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
      தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
      என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
      எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
      புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
      புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
      தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
      தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.

    வள்ளலார் குறிப்பிடும் கடவுள் பொதுவாகவும், அறிஞர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகவும் இருப்பதை பாருங்கள் – எது எல்லோராலும் ஒத்து கொள்ளப்படுகிறதோ அதுவே இறைவன் வீற்றியிருக்கும் இடமாகும் என்பதில் என்ன சந்தேகம்?
    மேலும் மற்ற மார்க்கங்களில் சொல்லப்பட்டுள்ள ஏற்பாட்டுக் கர்த்தர்கள்,மூர்த்திகள், கடவுளர், தேவர்,அடியார், யோகி,ஞானி முதலிய இவர்கள் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி யை தான் கண்டதாக வள்ளலார் சொல்லுகிறார்கள்இந்த உண்மை கடவுளை கண்டு அருள் பெற்றால் மரணம்,பிணி,மூப்பு,பயம், துன்பம் முதலிய அவத்தைகள் நீங்கும் என்கிறார்கள் – உண்மை கடவுளின் அருள் பெற யாருக்கும் யாதொரு தடையுமில்லை – அஞ்ச வேண்டாம் என்கிறார் வள்ளலார் –
    இன்றே அறிந்திடுவோம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தையும் அதில் வருகிற உண்மை கடவுளாகிய் சுத்த சிவத்தையும் –
    நன்றி வணக்கம் :::: ஏபிஜெ அருள் ::::::

     

  • நம் தாண்டவம், ஆட்டம், நாட்டியம் ஆண்டவன் அருளை பெற்றுத் தருமா?

    நம் தாண்டவம், ஆட்டம், நாட்டியம் ஆண்டவன் அருளை பெற்றுத் தருமா?

    இங்கு என்ன விசாரணை செய்யப் போகிறோம் என்றால் ஆண்டவன் அருள் பெறுவதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சாதனம் என்ன என்பதே!
    ஆண்டவன் அருள் பெறுவதற்கு ஆண்டவரின் நிலை காண வேண்டும் என்கிறார் வள்ளலார் – ஆண்டவர் நம்மிடம் எங்கு உள்ளார்? எந்நிலையில் வீற்றியிருக்கிறார்? என வள்ளலார் வியம்பும் போது;
    ஞானசபை யென்பது ஆன்மப் பிரகாசம். அந்தப் பிரகாசத்திற்குள் ளிருக்கும் பிரகாசம் கடவுள். அந்த உள்ளொளியின் அசைவே நடனம். இவற்றைத்தான் சித்சபை அல்லது ஞானசபை என்றும், நடராஜர் என்றும், நடனம் என்றும் சொல்லுகிறது-

    ஆக, ஆண்டவரின் நடனத்தை நாம் காணுதல் வேண்டும் –

    அதற்கு நாம் எந்த சாதனத்தை கைக்கொள்ள வேண்டும்?

    சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம்.
    மேலும், மற்றொரு இடத்தில்;
    பத்தி என்பது மனநெகிழ்ச்சி மனவுருக்கம். அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்மவுருக்கம். ஈசுவரபத்தி என்பது எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதல். ஜீவகாருண்யமுண்டானால் அருள் உண்டாகும்; அருள் உண்டானால் அன்புண்டாகும்; அன்புண்டானால் சிவானுபவம் உண்டாகும். அந்தக்கரண சுத்தியின் பிரயோஜனம் பத்தியை விளைவிப்பது.
    மேலும்;
    சுத்த சிவநிலை அறிவது எப்படியெனில்:
    “ ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்ப முண்டானால், நாம் தாழுங் குணம் வரும். அத்தருணத்தில் திருவருட்சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது நன்முயற்சியில் பழகல் வேண்டும்.” என்கிறார் வள்ளலார்-
    இங்குள்ள சங்கல்பத்தின் பொருள் என்ன எனப் பார்க்கும் போது;
    சங்கல்பத்தின் பொருளும் விரிவும் யாதெனில்:- விரிவாவது ஐந்து: நிர்விகல்பம், சவிகல்பம், சங்கல்பம், விகல்பம், கல்பம். இவற்றுள் நிர்விகல்பமாவது கடவுளறிவு. மேற்படி அறிவின் வியாபகமே சவிகல்பம். சங்கல்ப மென்பது கரணம் யாதொன்றிலும் பற்றாமல் சுத்தமாயிருந்த காலத்தில் தோன்றிய அசைவே சங்கல்பம்; ஒன்றிலும் பற்றாது அசைந்த மேலசைவென்னும் புடைபெயர்ச்சியே சங்கல்பம். நாம் நஷ்டமடையோம் என்று உள்ளழுந்திய பிரக்ஞையே சங்கல்பம். விகல்ப மென்பது பிரம சதாசிவ கால அளவைக் குறிக்கிறது. இதில் பலவாக விரிந்த அனுசந்தானங்கள் கல்பம். உள்ளழுந்தல், அதைச் சிந்தித்தல் சிந்தித்தலை விசாரித்தல் இம்மூன்றுமே சங்கல்ப விகல்ப கல்பம்.
    ஆக, மொத்தத்தில்;
    ஒழுக்கம் நிரப்பிக் கொள்ளுதல்
    எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவித்தல்
    கரணம் யாதொன்றிலும் பற்றாமல் இருத்தல்
    உள்ளழுந்துதல், சிந்தித்துதல் சிந்தித்தலே விசாரித்தல்
    இவையானவையில் நெகிழ்ந்து, உருகி இருப்பதிலேயே கடவுளின் நிலை அறிதல் முடியும்-
    இப்பொழுது நீங்களே சொல்லுங்கள், நாம் ஆடுவதினாலும், மற்றவர்களை ஆடச் சொவ்வதினாலும், ஆண்டவனின் நடனத்தை காண முடியாது அல்லது காண வைக்க முடியாது தானே!
    ஆண்டவனின் அசைவாகிய நடனம் காண,
    ஒழுக்கம் நிரப்பி, இடைவிடாது நன்முயற்சியில் நினைந்து ,உணர்ந்து, நெகிழ்ந்து உள்ளழுந்தி உள்ளத்தில் காண்போம் – அருள் பெறுவோம் – பேரின்ப பெருவாழ்வில் வாழ்வோம்-
    ஏபிஜெ அருள் – கருணை சபை-சாலை, மதுரை-

  • கடவுள் — கடவுள் — என்கிறார்களே யார் தான் அந்த கடவுள் ???

    கடவுள் — கடவுள் — என்கிறார்களே யார் தான் அந்த கடவுள் ???

    – இந்த கடவுளே கடவுள் என்கிறார் இந்த ஆத்திகர் –
    அவர் சொல்லும் கடவுள் கடவுள் இல்லை, எங்கள் கடவுளே கடவுள் என்கிறார் அந்த ஆத்திகர் –
    இவர்கள் சொல்லும் கடவுளர் கிடையாது – எந்த கடவுளும் கிடையாது என்கிறார்கள் நாத்திகர்கள் –
    கண்ணுக்கு புலப்படாத ஒன்றின் மேல் எனக்கு கவலையில்லை, மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களை போக்கி இன்பமாக இருக்க முயற்சிப்பதே சரி என்கிறார்கள் சில மார்க்கத்தினர் –
    (எதைப்பற்றியும் சிந்தனை இல்லாதவர்களும் இங்கு உண்டு- ஆனால் அது குறித்து இங்கு விசாரணை வேண்டாம் அவர்களுடனும் இங்கு விசாரணை இல்லை)
    இதில் எது உண்மை? எதை நம்புவது?
    தான் பிறந்த குடும்பம் எந்த சமய, மத, மார்க்கத்தை தழுவி வருகிறதோ, அம்மார்க்கத்தின் கடவுளரை அல்லது நெறியை பின் பற்றி கடைசி வரை வருபவர்களின் சதவிதமே 97% மேல் உள்ளதை எவரும் மறுக்க முடி;யாது- அப்படித்தானே?
    மிக குறைந்த சதவிகிதத்தனரே ஆத்திக எண்ணத்திலிருந்து நாத்திகத்திற்கும், நாத்திக எண்ணத்திலிருந்து ஆத்திக எண்ணத்திற்கும் மாறுகிறார்கள் –
    அதே போல் மிகச் சில எண்ணிக்கையிலே மார்க்கம் விட்டு மார்க்கம் மாறுகிறார்கள் –
    மேற்படியான மாற்றத்திற்கு கூட எந்தொரு விசாரணையும் அறிவு பூர்வமாக செய்து அதில் ஒரு முடிவை எடுத்து மாறினார்களா என்றால் அது கிடையாது- ஏதோ ஒரு செளகரித்திற்காக அல்லது பலனுக்காக அல்லது அங்குள்ள சடங்கின் மேல் விருப்பம் கொண்டோ அல்லது வேறு ஒரு காரணத்தின் அடிப்படையில் தான் மாறியுள்ளதை காணலாம் – அப்படித்தானே? –
    நிற்க!
    எல்லா சமய, மத, மார்க்கங்களும் நல்ல விசயங்களே வியம்புகிறது – அல்லது எந்தொரு மார்க்கமும் தீயதை செய் என கூறவில்லை என்போமா -மனிதர்களின் இச்சைகளை பூர்த்தி செய்வது, நல்லது நடக்க வேண்டுமானால் சடங்குகள் செய் எனச் சொல்வது – மனம் அடங்க பயிற்சி – காருண்யம், அன்பு,இரக்கம்,சாந்தம், என்பவைகளும் உள்ளது – இவைகள் குறித்து வியம்புவதில் மார்க்கங்களுக்குள் அளவு மாறுகிறது- மேலும், வெளிப்படுத்தப்பட்ட கடவுளை வணங்க வைக்கப் படுகிறோம் – மற்றவையில் நம்பிக்கை வைக்க கூடாது என்றும் கட்டளை உள்ளது –
    நிற்க!
    இதில் எது உண்மை? கண்டிப்பாக எல்லாமே உண்மையாக முடியாது – அப்படித்தானே ? அப்படியானால் எது உண்மை?
    இதில் எழும் கேள்விகள் மூன்று –
    1- கடவுள் உண்டா? இல்லையா?
    2- கடவுள் உண்டு என்றால் உண்மை கடவுள் யார்?
    3- கடவுள் இல்லை என்றால் மனிதனின் விசாரணை அறிவு எதை குறித்து?

    இவையே இங்கு தீர்மானிக்கப்படவேண்டியது ! அப்படித்தானே !
    ஆம் என்பவர்களுடன் விசாரணை மேலும் தொடர்வோம் –
    1) கடவுள் உண்டா? இல்லையா?
    எதை நினைத்து இங்கு “கடவுள்” என்கிறோம்? என்ற கேள்விக்கு முதலில் பதில் காணவேண்டும் – அப்படித்தானே?
    – சமய மத மார்க்கங்களில் சொல்லப்பட்ட கடவுள் உண்டா இல்லையா?
    – பொதுவாக கடவுள் உண்டா இல்லையா?
    இங்கு சமய மத மார்க்கங்களில் சொல்லப்பட்ட கடவுள் உண்டா இல்லையா? என்ற விசாரணை தலைப்பு 2 ல் செய்து கொள்வோம்? கடவுள் உண்டா ? இல்லையா? என்ற பொதுவான ஒரு விசாரணை இது – குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஆத்திகமா? நாத்திகமா? என்று முடிவு செய்ய வேண்டும் –
    (இங்கு நாம் விசாரணை செய்யும் போது நாம் பற்றுக்கொண்டுள்ள அல்லது நம்மை பற்றியுள்ள நம்பிக்கையை சற்று தள்ளி வைத்து, வள்ளுவர் குறளில் சொல்லிய அதாவது எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு என்ற அடிப்படையில் செல்கிறோம் என்று கவனத்தில் கொள்வோம் – அப்படிதானே – ஆம் என்பவர்களுடன் விசாரணை தொடர்கிறது)
    ஆக, ஆத்திகமா? நாத்திகமா? என்று முடிவு செய்ய வேண்டும்-
    ஆத்திகம் என்பது என்ன? அதன் விளக்கம் நாம் சமய, மத, மார்க்கங்களை கடந்து தான் காண வேண்டும் – இது முக்கியம் என கருதுகிறேன் – காரணம் நாம் கொண்டியிருக்கும் சமய,மத,மார்க்க கடவுளரை குறித்து தலைப்பு 2ல் காண உள்ளோம் – அதனால் தான் இங்கு பொதுவாக சமய, மத, மார்க்கங்களை கடந்த விசாரணை வேண்டும் என்றேன் –
    ஆத்திகம் என்பது;
    நாம் யார்? நம் நிலை என்ன? நமக்கு மேல் நம்மை அனுஸ்டிக்கும் ஆண்டவரின் நிலை என்ன? என்ற விசாரணையின் முடிவு செய்த ஒன்றில் நம்பிக்கை எனலாமா?
    நாத்திகம் என்றால் என்ன?
    மேற்படி செய்த விசாரணையின் முடிவை மறுப்பவர்கள் எனலாமா?
    இந்த மேற்படி விளக்கத்தின் அடிப்படையிலேயே ஆத்திகர் என்றும் நாத்திகர் என்றும் உலகில் பெயரிட்டு அழைக்கிறார்கள் என்பதே 99% சதவித பொருளாக உள்ளது – அப்படித்தானே?
    ஆனால்; மற்றொரு அறிவு விசாரணையில் ஆத்திகம், நாத்திகம் வேறு கோணத்தில் செல்கிறது – அது என்ன?
    ஆத்திகம் என்பது; ஒரு சக்தி அல்லது பல சத்திகள் உள்ளது என்றும்; நாத்திகம் என்பது; அப்படி எதுவும் இல்லை என்று மறுப்பதும் என உள்ளது-
    ஆக, பொதுவாக ஒரளவுக்கு நாம் முடிவு செய்வோம் – அது ஒன்றை விசாரித்து அல்லது ஏதேனும் வழியில் முடிவு செய்து மேற்படி விசாரித்ததில்,முடிவு செய்ததில் நம்பிக்கை வைப்பதை ஆத்திகம் என்றும், அதை மறுப்பது நாத்திகம் என்று கொள்வோம் இந்த விசாரணையில் –
    ஆக, சக்தி ஒன்று அல்லது சத்திகள் பல இருந்து இந்த அண்டங்களை, உலகங்களை,உயிர்களை,பொருள்களை தோற்றுவித்து,வாழ்வித்து,குற்றம் நீக்குவித்து,பக்குவம் வருவித்து,,விளக்கம் செய்வித்து வருகிறது– அந்த சக்தியை, சத்தர்களை ஆண்டவர் என்றும் தெய்வங்கள் என்றும் சொல்கிறோம் –
    அல்லது இப்படி காண்போம் –
    நாம் உள்ளோம் நாம் இயங்குகிறோம்
    நம்மை சுற்றி மற்றவை உள்ளது அவை இயங்குகிறது
    இங்கு உள்ளதின் நிலை என்ன? நம்மை சுற்றி உள்ளதின் நிலை என்ன?
    மொத்ததில் நாம், நம்மை சுற்றி உள்ளதை இயற்கை என்போமா?
    இயற்கை உண்மை (உள்ளது) இயற்கை விளக்கம் (இயக்கம்) மீது நம்பிக்கை வைத்து அதையே கடவுளாக வணங்கும் கொள்கை இங்கு ஆத்திகம் என வைத்துக் கொள்வோம் –
    அதனை அறிவது கடவுளின் நிலை அறிவது என்றும்;
    அதன் நிலையறிவதில் நமக்கு இன்பம் கிடைப்பதாக உள்ளது அருள் என்றும்;
    இயற்கையின் உண்மை அறிந்த பயனால் பல நன்மைகள், இன்பங்களை பெறுவதாக உள்ளது என்பதே; இங்கு ஆத்திகம் என்போம் –
    இங்ஙனம் ஆத்திகத்திற்கு பொருள் இங்கு கொள்ளப்படுகிறது என்றால் இந்த ஆத்திக நம்பிக்கையில் என்ன தவறு? – என்ன பொய்? – என்ன அறியாமை? இதை எங்ஙனம் மறுக்கும் விசாராணை வரும்?
    சக்தி என்றால் என்ன? இயக்கத்தின் காரணம் ஆகும்-
    எதை இயக்குகிறது? உள்ளதை இயக்குகிறது –

    இயற்கை என்றால் என்ன?
    உள்ளதும் இயக்கமும் –
    உள்ளதும் இயக்கமும் என்பது ஒன்றா இரண்டா? என்றால்;
    இது மிகப்பெரிய விசாரணையில் காண வேண்டிய ஓர் உண்மையாகும் –
    (அது தனி விசாரணையில் பார்ப்போம்)
    ஆக,ஆண்டவர் யார்?
    உள்ளதும் இயக்கமாகிய அவரே “ஆண்டவர்” என இங்கு இந்த விசாரணையில் முடிவு செய்யப்படுகிறது –
    இதில் என்ன மறுப்பு? மறுப்பு இருந்தால் அது இந்த முடிவின் எதிராக உள்ள நாத்திகம் ஆகும் – அப்படித்தானே –

    உள்ளது என்பதில் என்ன மறுப்பு? இயக்கம் என்பதில் என்ன மறுப்பு?
    உள்ளது இயக்கமாகிய இயற்கையில் என்ன மறுப்பு?
    ஆக, நாம் செய்த இந்த விசாரணையில்,
    “ இயற்கை உண்மை, இயற்கை விளக்கமே” ஆண்டவர் என்கிறோம் –
    இந்த ஆண்டவர் உண்டு என்று அறிந்து அறிவு பெற்றவர்களாக நாம் அனைவருமே உள்ளோம் – அப்படித்தானே – ஆக, இந்த கடவுள் கொள்கையில் நாத்திகம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனலாம் – இங்ஙனமாக கேள்வி ஒன்றுக்கு ஆண்டவர் உண்டு என்ற பதில் காணப்படுகிறது- இங்கு வெளிப்பட்ட “ உண்மை ஆண்டவராகிய இயற்கை உண்மை,விளக்கம்” குறித்து நல்ல விசாரணை செய்வதே மனித வாழ்வின் லட்சியம் என்றும் அதுவே உண்மையறிவு எனவும் இங்கு முடிவு எட்டப்படுகிறது –
    இல்லை – மறுப்பு உள்ளது என்ற சொல்லவும் உரிமை உண்டு –
    அவர்கள் உரிமையை மதிக்கிறோம் – மேலும் தொடரும் இவ்விசாரணை அவர்களுடன் இல்லை –
    கேள்வி 2 மற்றும் 3 ற்கான விசாரணை நம் அறிவு நம்பிக்கை ஒத்தவர்களுடன் தொடரும் —

    நன்றி அன்புடன் ஏபிஜெ அருள்

  • மரணமில்லா பெருவாழ்வு பெற்ற வள்ளலார் இப்பொழுது எங்கே??? வள்ளலாரையோ, ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே- ஏன் ???

          

     

    மரணமில்லா பெருவாழ்வு பெற்ற வள்ளலார் இப்பொழுது எங்கே??? வள்ளலாரையோ, ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே- ஏன் ???

    தைப்பூசம் 2017 ல் திருமதி ஏபிஜெ அருள் @ இராமலெட்சுமி வெளியிட்ட கட்டுரை;

    மதிப்பிற்குரிய பெரியவர்கள், சான்றோர்கள் அன்பிற்குரிய சகோதர சகோதரிகள், மற்றும் அனைவருக்கும் எனது மற்றும் மதுரை கருணை சபை சாலை சார்பாக வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் –

    திருவருட்பிரகாச வள்ளலார், இடைவிடாது நல்ல விசாரணை செய்து, உண்மை கடவுளை கண்டு, அருள் பெற்று, “மரணமில்லா பெருவாழ்வு” பெற்றார்கள் – தான் பெற்ற இந்த பேரின்பவாழ்வை எல்லோரும் பெறும் பொருட்டு ஒரு மார்க்கத்தை நிறுவினார்கள் – அந்த மார்க்கத்தின் பெயர் “சுத்த சன்மார்க்கம்” – என் மார்க்கம் இறப்பையொழிக்கும் மார்க்கம் – என் மார்க்கத்தில் “சாகா கல்வியை” தவிர வேறு ஒன்றுமில்லை – சாகாதவனே சுத்த சன்மார்க்கி என்கிறார் நம் வள்ளலார்

    இந்த உண்மை எல்லோருக்கு தெரியும் – அப்படித்தானே –

    எந்த உண்மை எல்லோருக்கும் தெரியும்? சொல்லுங்கள் –

    • ஆண்டவரை ஜோதி சொரூபமாக வள்ளலார் தரிசித்தார்கள்
    • நமது வள்ளலார் மரணமில்லா பெருவாழ்வு பெற்றார்கள் 
    • கடவுளின் அருளால் அவர்தம் தேகம் “ஒளிவடிவமாக” மாறியது –

    அன்பர்களே !
    வள்ளலார் தனக்கு ஒளி வடிவம் கிடைத்த பின்பும், நம்மோடு நம் பார்வையில் தெரியும் படியாக இரண்டரை வருட காலமாக இங்கு இருந்து வந்தார்கள் – எதற்காக?

    தனக்கு கிடைத்த இந்த பேரின்ப பெருவாழ்வு, எல்லோரும் பெறவேண்டும் என்ற ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையில் தெரிவிப்பதற்காகவே – தான் சென்ற வழியை மற்றும் கடைப்பிடித்த வழிபாட்டை, அப்படியே உலகத்தார்க்கு உள்ளது படியாக உரைத்தார்கள் –

    ஆனால் நடந்தது என்ன? இதோ வள்ளலார் அவர்களே சொல்கிறார்கள் கேளுங்கள் –

    “உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை”

    எப்படி நம் முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள் பாருங்கள்?
    ஏன் அவர்களை சொல்வானேன்?
    இன்று நாமும் வள்ளலார் சொல்ல வந்த உண்மையை தெரிந்துக் கொண்டோமா?
    இல்லை என்பதே உண்மை- தெரிந்து கொண்டியிருந்தால் நமக்கு ஏது அவத்தைகள் வரும்? பிணி, மூப்பு நாம் பெற்றுக் கொண்டியிருக்கிறோம் –

    இன்று நான் தெரிந்து கொள்ள ஆசை கொண்டுள்ளேன் – நீங்கள்?

    நாம் கண்டிப்பாக நம் வள்ளலார் சொன்ன உண்மையை தெரிந்துக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? பதில் சொல்லுங்கள் –

    மரணத்தை தவிர்த்து கொண்ட நம் வள்ளலார் இப்போது எங்கே? திருவருட்பிரகாச வள்ளலாரை இப்பொழுது இங்கே, நீங்கள் காண ஆசை கொண்டு உள்ளீர்களா? இல்லையா?

    ஆம் என ஆசை உள்ளவர்கள், சற்று நிமிந்து உட்காருங்கள் –

    திருமந்திரத்தை சொல்லி நம் வள்ளலாரை அழைப்போம் –

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    திருவருட்பிரகாச வள்ளலாரே ! எங்கள் ஆசானே !
    உண்மை கடவுளின் சொரூபத்தை கண்ட சுத்த ஞானியே !
    ஆண்டவரின் அருளை பெற்ற வள்ளலாரே!
    மரணத்தை தவிர்த்து கொண்ட சுத்த சன்மார்க்கியே !

    நீங்கள் இன்று வெளிப்பட வேண்டும் – இது சத்தியம் – இது சத்தியம் –

    உங்களை காண ஆசை உள்ளவர்களாக உள்ளோம் –
    நீங்கள் சொல்லும் உண்மையை தெரிந்து கொள்ள தயாராக உள்ளோம் – இது உண்மை –

    ஆண்டவர் உங்களுக்கு உரைத்த அந்த நான்கு மரபுகளை தெரிந்து கொள்ள ஆசை உள்ளவர்களாக உள்ளோம் –

    எங்கள் அய்யாவே ! எங்கள் ஆசானே !

    எங்களை மன்னியுங்கள் –

    இதுகாறும் வீண்காலம் கழித்து கொண்டியிருந்த எங்களை, மன்னித்து, உண்மை கடவுளின் உண்மை குறித்து எங்களுக்கு அறிவியுங்கள் –

    இதோ இடைவிடாது நீங்கள் சொல்லிய வண்ணம் எங்கள் அறிவு ஒழுக்கம் ஒத்தவர்களுடன் நல்ல விசாரணைக்கு தயாராகி விட்டோம் – திருவருட்பிரகாச வள்ளலாரே !
    எங்களுடனிருந்து, எங்களுக்கு சத்திய அறிவு வெளிப்பட உதவிட வேணுமாய் பிரார்த்திக்கின்றோம் –

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    அன்பர்களே !
    உண்மை நோக்கி நல்ல விசாரணை செய்வோம் –

    உண்மை கடவுளின் சொரூபத்தை கண்ட நம் வள்ளலார்க்கு இன்பமும், வியப்பும் ஏற்பட்டது-

    “இன்பம்” என்பது; கடவுளை கண்டது
    “வியப்பு” எதனால் ஏற்பட்டது ?

    இப்போது, தான் கண்டு கொண்டியிருக்கும் கடவுள்
    “அருட்பெருஞ்ஜோதியாகி தனிப்பெருங்கருணை கடவுள்” இதுவரை உலகில் வெளிப்பட்டிருந்த சமய, மத, மார்க்கங்களில் சொல்லப்பட்டியிருக்கவில்லை – என்பதே வள்ளலாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி –

    அன்பர்களே, இது குறித்து 12-04-1871 ல் ஒரு கடிதத்தில் அறிவித்துள்ளார் வள்ளலார் –

    அன்பர்களே ! நாம் இன்று இப்பொழுதே வள்ளலாரை காண வேண்டுமானால் நாம் செய்ய வேண்டியது “ஒன்றே ஒன்று” தான்

    அது அவர் சொன்ன உண்மையை
    தெரிந்து, அறிந்து, அனுபவிக்க வேண்டும் –
    அவர் கண்ட கடவுளை மட்டுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும் –

    வள்ளலார் சொன்னபடி வழிபாடு செய்ய வேண்டும் –

    நமக்கு சாதனம் ”கருணை” மட்டுமே !

    அன்பர்களே !
    – இங்கு இருக்கும் நம் எல்லோரிடமும் கருணை உள்ளது-
    – கருணை ஒன்றையே இதுநாள் வரை கொண்டு பிரார்த்திக்கிறோம்- அப்படிதானே !

    ஆனால், வள்ளலாரையோ ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே ?
    அது ஏன்?
    அதற்கு காரணம் என்ன தெரியுமா அன்பர்களே !
    நம்மிடம் கருணை உள்ளது – ஆனால்;
    நம் கருணை விருத்தியாகமலே உள்ளதை முதலில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும் –
    அதற்கு என்ன காரணம் ?

    அக்கருணை நம்மிடம் விருத்தியாகமல் தடை செய்வது நம்மிடம் உள்ள “ஆசாரங்களே” காரணம் என்கிறார் வள்ளலார் – வள்ளலார் நமக்கு சுட்டி காட்டியுள்ள ஆசாரங்கள் “13” ஆகும் –
    இவையை விட்டொழித்தே ஆக வேண்டும் என்கிறார்கள்-

    அன்பர்களே ! உங்களிடம் கேட்கிறேன் –

    சத்திய ஞான சபைக்குள் எல்லோரும் உள்ளே சென்று விட முடியாது – உள்ளே புகுதல் வேண்டுமானால் நம்மிடம் என்ன தகுதி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?
    “கொலை புலை தவிர்த்தவர்களாக” இருக்க வேண்டும் என்று வள்ளலார் கட்டளையிட்டுள்ளார்கள் – அப்படிதானே?

    ஆக, நம்மிடம் அடிப்படை தகுதியாக ஜீவகாருண்யம் உள்ளது – ஜீவகாருண்யம் உள்ளவர்களே ஞான சபைக்குள் செல்ல முடியும்-
    அன்பர்களே !
    உள்ளே சென்ற பிறகு எது குறித்து விசாரணை செய்ய வேண்டும்? அதே ஜீவகாருண்யம் குறித்தா? இல்லைஆண்டவரின் நிலை காணவே நாம் நன்முயற்சி செய்ய வேண்டும்அதற்கு, “உள்ளழுந்தி, சிந்தித்து, சிந்தித்தலை விசாரிக்க” வேண்டும் என்கிறார் நம் வள்ளலார் –
    இதற்கு பெயர் ”விசார சங்கல்பம்” ஆகும் –

    இதுவே, “வள்ளலார் சொல்லிய உண்மை” ஆகும்-
    என் மார்க்கம் உண்மையறியும் மார்க்கம்என் மார்க்கம் அறிவு மார்க்கம்என் மார்க்கத்தில் அக அனுபவே உண்மைஎன்கிறார்கள் –

    இப்பொழுது சொல்லுங்கள்;
    “நாம் வள்ளலாரை காண வேண்டுமானால்,
    ::::::அவர் நம்மிடம் சொல்ல வந்ததை தெரிந்து கொண்டோம் என்று அவரிடம் தெரிவிக்க வேண்டும்::::::

    இங்ஙனம் தெரிவிப்பவர்க்கு வள்ளலார் வெளிப்படுவார்
    இது சத்தியம் – இது சத்தியம் – இது சத்தியம் –

    மீண்டும் ஒரு முறை வள்ளலார் சொல்லிய உண்மை குறித்து காண்போம் –

    ஒன்று;
    கருணை விருத்தியாகாமல் செய்யும் ஆசாரங்களாகிய சாதி,குலம்,ஆசிரமம்,லோகம்,தேசம்,கிரியை,சமயம்,மதம்,மரபு, கலாசாரம்,சாதனம்,அந்தாசாரம்,சாஸ்திரம் முதலிய ஆசாரங்கள் நம்மிடமிருந்து ஒழிந்து போக வேண்டும் –

    இரண்டாவது;
    ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்ய வேண்டும் –

    மூன்றாவது;
    அத்தெய்வத்தை நினைந்தும் உணர்ந்தும்
    நமது குறையை ஊன்றியும் இவ்வண்ணமாக இடைவிடாது விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டும் என்கிற விசார சங்கல்பத்துடன் முயற்சியுடனிருத்தல் வேண்டும்-

    நமது இந்த நன்முயற்சி உண்மையாக தூய்மையாக இருக்குமே யானால் திருவருட்பிரகாச வள்ளலார் நேரில் வந்து நமக்கு துணை புரிவது சத்தியம் – சத்தியம் – சத்தியம் என நம்புதல் வேண்டும் –
    நான் “சுத்த சன்மார்க்க நெறி ஒன்றையே” சார்ந்து,
    குரோதம் காமத்தை ஞான அறிவினால் தடுத்து கொண்டு, ஆசாரத்தை ஒழித்து தலைவனையே தொழுது கொண்டியிருக்கிறேன்
    — என்று நாம் சொல்வோமானால் இன்றே இப்பொழுதே சபை முன்பு அமருங்கள் ஆண்டவர் உண்மை தெரிவிக்க வேண்டும் என்றும் அதற்கு துணை புரிய திருஅருட்பிரகாச வள்ளலாரே நீங்கள் வரவேண்டும் என அடம் பிடித்து உட்காருவோம் கண்ணீர் விட்டு நெகிழ்ந்து வேண்டுவோம் –
    இது உண்மையாயின் நான் பெறுவேன் – பெறுகின்றேன் – பெற்றேன் –
    என்னை அடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை – பெறுவீர்கள் – பெறுகின்றீர்கள் – பெற்றீர்கள் –
    அஞ்ச வேண்டாம் –

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    —-திருமதி ஏபிஜெ அருள்- கருணை சபை சாலை – 09-02-2017[தைபூசம் வடலூர்]

     

    Top of Form

  • உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி
    மாண்புமிகு திரு து.அரிபரந்தாமன் அவர்கள்

    மதுரை கருணை சபை-சாலை நடத்திய முப்பெரும் விழாவில்
    ஆற்றிய உரையில் முக்கிய சிலப்பகுதிகள்:

    அனைவருக்கும் வணக்கம்.
    எல்லோரும் பேசினார்கள் வள்ளலாரை போற்றியும்,
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்றார்கள்.
    நான் அப்படி இல்லை. ஆனால் வள்ளலாரை நீங்கள் ஒரு கோணத்தில் பார்க்கிறீங்க. நான் ஒரு கோணத்தில் பார்க்கிறேன். நீங்கள் எந்தளவுக்கு வள்ளலாரை நேசிக்கிறீர்களோ அதுக்கு குறைவாக நேசிக்கவில்லை. உங்கள் அளவுக்கு படிக்காவிட்டாலும் ஒரளவு வள்ளலாரை பற்றி தெரிந்துள்ளேன்.
    சுவாமிகள் என்று தன்னை அழைப்பதை வள்ளலார் எடுக்கச் சொன்னார்கள். தான் ஒரு ஆசாமி என்கிறார். வேலாயுத முதலியார் போன்றோர் வள்ளலாரிடம் மன்றாடி பாடல்களை பெற்று தான் வெளியிட்டார்கள். அவரை சாமியாக்கினால் அவர் மார்க்கம் மதமாகி விடும். நான் அவரை தமிழ் தேசியத்தின் ஒர் அடையாளம் என்கிறேன். சாதி சமயங்களை தூக்கி எறிய வேண்டும். பெண்கள் கணவரை இழந்தால் தாலி அறுக்க வேண்டாம். (அப்படியென்றால் தாலி போடவும் தேவையில்லை என்று பொருள். போட்டாலும் அறுக்க தேவையில்லை.) இங்ஙனமாக 19ம் நூற்றாண்டில் ஒலித்த ஒரு கலக குரலே வள்ளலார் குரல். அது புரட்சி குரல். மன்னிக்க வேண்டும். நான் ஒரு நாத்திகன். அதானால் வள்ளலாரை ஒரு புரட்சிக்காராகப் பார்க்கின்றேன்.
    நீங்கள் இந்த 21ம் நூற்றாண்டில் பார்க்காதீர்கள். 19ம் நூற்றாண்டை பாருங்கள். அந்த நூற்றாண்டில் சாதியை, சமயங்களை, மதங்களை, ஆச்சாரங்களை, வேதத்தை, புராணத்தை, இதிகாசத்தை,மூடப்பழக்கங்களை மறுத்து, ஓங்கி ஒலித்த முதல் குரல் வள்ளலாரின் குரல். இந்தியாவில் ஒலித்த முதல் குரலும் வள்ளலார் குரலே. அடுத்ததாக சொல்ல வேண்டுமானால் கேரளத்தில் நாராயணகுரு. அவர், மனிதனே,உனக்கு மனிதன் தான் சாதி; மனிதனே மதம்; மனிதன் தான் கடவுள்; என்றார்.
    வள்ளலாரின் ஆறாம்திருமுறை பாடல்களை தந்தை பெரியார் குடியரசில் பல முறை பதித்து வந்துள்ளார். அக்காலத்தில் மதமும் அரசும் பிண்ணி பிணைந்து கிடந்தது. மன்னர், ராஜாக்கள் மக்களிடையே பெயர் வாங்கிருக்கலாம். ஆனால் அரசு ஏதாவது ஒரு மதம் சார்ந்திருந்தது. சாதியை சாடியதில் வள்ளலாரை போல் யாரும் இல்லை. சாதிகள் குறித்து சமய, மதங்களில் தான் எழுதப்பட்டுள்ளது. சங்க காலத்தை விட 19 ம் நூற்றாண்டில் சாதி இறுகிப் போயிருந்தது. மடங்களில் மட்டுமே கல்வி இருந்தது. எல்லோரும் போய் படிக்க முடியாது. அங்கு சமய நூல்கள் தான் கற்றுக் கொடுக்கப்பட்டது. சங்க இலக்கியங்களோ, திருக்குறளோ, சிலப்பதிகாரமோ, சொல்லிக் கொடுக்கப்படவில்லை. இது குறித்து வ.உ.சாமிநாத அய்யர் அவர்கள்(ஆனந்த விகடனில் வந்தது) எழுதிய சரித்திரத்தில் காணலாம். சேலம் இராமசாமி சாமி நாத அய்யரிடம் பேசும் போது இவை குறித்து காணலாம்.
    இந்த நேரத்தில் வள்ளலார் திருக்குறள் போதித்தார் என்பது சிறப்பு. அன்பு, அருள், கருணை, வாய்மை, புலால் உண்ணாமை, கொல்லாமை, இவைகள் வழிக்காட்டுதலாக உள்ளது. மற்றொரு பிரச்சனையும் 19 நூற்றாண்டில் இருந்தது. வடமொழியின் ஆதிக்கம். வடமொழியின்றி தமிழ் மொழி இயங்காது என்று சிலரால் சொன்ன நேரம். அந்த நேரத்தில் வள்ளலார் தமிழ் மொழி தனித்து இயங்கும் என்கிறார். அவரின் தமிழ் பற்றுக்கு தலை வணங்க வேண்டும். சங்கராச்சாரியாரும் வள்ளலாரும் சந்தித்ததாக சொல்கிற போது, சங்கராச்சாரியார், வடமொழி தான் அனைத்து மொழிக்கும் மாத்ரூ பாஸை (தாய் மொழி) என்கிறார். அதற்கு அதை எதிர்க்காமல் அமைதியாக வள்ளலார் சங்கராச்சாரியாரிடம் வடமொழி மாத்ரூ (தாய்) மொழியென்றால், தமிழ் மொழி பித்ரு பாஸை அதாவது தந்தை மொழி என்று பதில் கொடுத்தார்.
    19 நூற்றாண்டில் கோயிலுக்குள் எல்லோரும் போய் விடமுடியாது. சாதியும் சமயமும் அதுவும் சாதியினால் பல பாதிப்புகள் இருந்தது.ஆனால், அவர் கட்டிய ஞான சபையிலே, தர்ம சாலையிலே, சித்தி வளாகத்திலே எந்த சாதியினரும், எம்மதத்தவரும், எச்சமயத்தவரும் எல்லோரும் வந்து தரிசிக்கலாம் பிரார்த்தனை செய்யலாம். இந்த செய்கையினால் தான் வள்ளலாரை நோக்கி என்னை தள்ளியது. ஞானசபையினுள் சாதி சமய வேறுபாடில்லாமல் கருணை அன்பு இரக்கம் உடையவர்கள், புலால் உண்ணாதவர்கள் எல்லோரும் வரலாம் என உள்ளது. ஆனால் அந்த கண்டிஸன் கூட இல்லாமல், தர்ம சாலைக்கு பசித்த எவரும் வரலாம் என்று உள்ளது. என்னை பாதித்த பாடல்கள் எவை எனச் சொல்ல முற்பட்டால் நேரம் காணாது. சாதி, சமயம், சாத்திரங்கள் தவிர்த்து கடவுளை கருணை, தயவு, இரக்கத்தால் மட்டுமே வழிபாடு செய்ய வேண்டும் என்ற அவரின் சமரச சுத்த சன்மார்க்கம் 1874 க்கு சில ஆண்டுகள் முன்பிலிருந்து தான். அதற்கு முன் அவர் பழுத்த சைவ சமயம். அந்த சைவ சமயத்தில் பற்றுக்கொண்டு பாடியது மேலும் பல ஸதலங்களுக்கு சென்று பாடிய சமய ஸ்தோத்திரப் பாடல்கள் தான் 1 முதல் 5 திருமுறையில் அதிகம் உண்டு. இதற்கு வள்ளலார் சொல்கிறார் அதன் பால் சைவ சமயத்தின் பால் நான் கொண்ட அளவில்லா அன்புகளுக்கு எனது ஸ்தோத்திரங்களே சாட்சியாக இருக்கும். அப்போது நான் சிற்றறிவாக இருந்தேன் என்கிறார். அவைகளில் லட்சியம் வையாதீர்கள் என்கிறார்.
    ஒருமையுடன் என்ற பாட்டை நான் பாடுவேன். அதில் கடைசி வரியை விட்டுவிடுவேன். எத்திராஜ் கல்லூரியில் இது தான் கடவுள் வழிபாடாக உள்ளது. இறை நம்பிக்கை உள்ளவர் மீது எனக்கு கோபம் கிடையாது. கருணை, அன்பு, உண்மை பேசுதல் வேண்டும், இரக்கம் வேண்டும் என்கிறார்கள். இன்று மாட்டை கொல்ல கூடாது என்கிறார்கள். மாட்டை மட்டும் ஏன் கொல்லக் கூடாது என்கிறார்கள்?. வள்ளலார் எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்கிறார்.
    நான் பேசும் இந்த இடம் ஒரு மகானின் ஆலயம் என்றார்கள். செருப்பு போட்டு மேலே ஏறக்கூடாது என்ற பலகையில் உள்ளதைக் கண்டு கழற்றி விட்டு தான் ஏறினேன். வள்ளலாரை சைவ நெறியில் அடக்கி விட்டார்கள். அவருக்கு பட்டை போட்டு விட்டார்கள். பட்டை போடக் கூடாது என்று சொல்லவில்லை. என் அப்பா கடைசி வரை பட்டை போட்டிருந்தார்கள். ஆனால் வள்ளலார் சைவ சமயத்தை விட்டு விட்டார்கள். அதணால் தான் அவருக்கு பட்டை போடாதீர்கள் என்கிறேன். வள்ளலார் மேலும் சொல்றதை கேட்டா புரியும். காதிலே, மூக்கிலே கம்மலுக்காக ஓட்டை போடும் சடங்கு கடவுளுக்கு சரியென்றால் மற்ற ஓட்டைகளை போட்டு அனுப்பினதை போல் இதற்கும் ஓட்டை போட்டியிருக்க மாட்டாரா? என்கிறார் வள்ளலார். சாதி, சமய சாத்திரங்களை மறுத்தவருக்கு விக்கிரக வழிபாட்டை முடியாது என்று சொன்னவருக்கு என்ன எல்லாம் நடந்து வந்தது?. இங்கு இருக்கும் ஏபிஜெ அருள் மற்றும் அவர் அன்பர்கள் வழக்கிட்டு மீட்டார்கள். நல்ல காலம் அருள் மற்றும் நீங்கள் சொன்னதை, வள்ளலாரின் நெறியை, இணை ஆணையர் புரிந்துக்கொண்டு ஆணையிட்டார். அதை திரு பிச்சாண்டி உறுதிபடுத்தி அதன்பின்பு நீதிபதி திரு சந்துரு தனது தீர்ப்பில் உறுதி படுத்தினார். அதணால் தான் சொல்கிறேன்.வள்ளலாரை மீண்டும் சைவ சமய சிறைக்குள் அனுப்பி விடாதீர்கள்.
    நீங்கள் வள்ளலாரின் கொள்கையை தொடர்ந்து பேசுங்கள்
    எனக் கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன். வணக்கம்.

     

  • சுத்த சன்மார்க்கத்தார்கள் எதற்காக சமய லட்சியத்தை கைவிடவேண்டும்?

    சுத்த சன்மார்க்கத்தார்கள் எதற்காக சமய லட்சியத்தை கைவிடவேண்டும்?

    சுத்த சன்மார்க்கத்தின் ஒரே சாதனம் “தயவு” என்னும் கருணையேஇறையருள்  கிடைக்க 

    இந்த ‘தயவு’ விருத்தியாக வேண்டும் என்கிறார் வள்ளலார்.

    தயவு விருத்திக்கு தடையாக சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் உள்ளன.அவையை ஒழித்தால்தான் “பொதுநோக்கம்” வரும்.

    இந்த “பொது நோக்கம்” சுத்த சன்மார்க்கத்தின் “சத்திய ஞானாசாரம்” ஆகும்.

    சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் எவை என தெரிதல் வேண்டும்.அவையாவன.

    ஜாதி, குலம், ஆசிரமம், லோக, தேச, கிரிய, சமய, மத, மரபு, கல, சாதன, அந்த, சாஸ்திர ஆசாரங்கள் ஆகும். தயவு விருத்திக்கு இவைகள் தடையாக உள்ளன. இவை அனைத்தும் உலகில் காணும் சமய, மதங்களில் உள்ளன.

    சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் ஒழித்தல் வேண்டும்.

     

    அற்பசித்தி – பூரண சித்தி

    சமய, மத மார்க்கங்களில் காணப்படும் கர்த்தார், கடவுளர், சமயத் தேவர்களை வழிபாடு செய்தால் அற்ப சித்தியைப் பெற்று, அதில் மகிழ்ந்து அகங்கரித்து, மேல் படிகள் ஏறவேண்டியவைள்ஏறிப் பூரண சித்தியை அடையாமல் தடைபட்டு விடும். எனவேதான் சமயதேவர்கள்வழிபாடு செய்வது அவசியமில்லை. இது சத்தியம், இது சத்தியம்,இது சத்தியம், என்கிறார் வள்ளலார்.

     

    சமய மதங்களில் ஐக்கியம் என்பதேயில்லை.

    சுத்த சன்மார்க்கத்தில் சொல்லப்படுவது சாகாத கல்வியே.

    பயன் : பூரண சித்தியைப் பெறுவதே. நித்திய வாழ்வை பெறுவதே நமதுமார்க்கத்தின் கொள்கை, முடிபு.

    இந்த “நித்திய வாழ்வை” சர்வசித்தி உடைய நித்தியரால்தான் தரமுடியும். அவரே பெரும் பதியாகிய ஒரே கடவுள் “பெருங்கருணை”கடவுள் ஆகும் என்கிறார் வள்ளலார். சமயக்கடவுளர் “உண்மை கடவுளுக்கு” கோடி கோடிபங்கு தாழ்ந்த தரத்தில் உள்ளனர் என்பதை அறிந்திடல் வேண்டும்.

    எனவே இந்த சமய மதங்களில் ஐக்கியம் என்பதே இல்லை.

    இந்த உண்மையை சுட்டிக் காட்டுவதினால் எதற்கு சமயத்தார் மனம் எங்ஙனம்புண்படும்?

    பண்படத்தான் செய்யும். இந்த கவலை நமக்கு கூடாது. வள்ளலார்சொல்கிறார்:-

    சுத்த சன்மார்க்கம் உண்மை தெரிவிக்கிற மார்க்கம்.

    வாச்சியலட்சியஉண்மை அனுபவம்

    மிக சுருக்கமாக காண்போம்.

    சன்மார்க்கங்கள் மூன்று :-

    1. சமயசன்மார்க்கம்.
    2. மதசன்மார்ககம்
    3. சுத்தசன்மார்க்கம்.
    4. சமயசன்மார்க்கத்தின் பொருள் :

    “குணத்தினது லட்சியத்தை அனுசந்தானம் செய்வது.” குணம் என்பது யாது?சத்துவ குணம்.

    இதனியல்பாவன :

    கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஆன்மஇயற்கைக் குணமாகிய ஜீவகாருணியம். இது சத்துவகுணத்தின் வாச்சியார்த்தம்.இவ்வண்ணம் “வாச்சியானுபவம்” பெற்று சொரூப அனுபவமாகிய சாதனமே சமயசன்மார்க்கம்.

    1. மதசன்மார்க்கத்தின் பொருள் :

    “நிர்க்குண லட்சியம்” செய்வது.

    நிர்குணமாவது பூர்வகுணமாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம் பெற்று”லட்சியானுபவம்” பெறுதல். இவ்வாறே தான் கடவுளுக்கு அடிமையாதல், புத்திரானாதல்,சிநேகனாதல், கடவுúளதானாதல். இது சத்துவகுண லட்சியார்த்தமாகிய மத சன்மார்க்கமுடிவு.

    1. சுத்தசன்மார்க்கம் :

    குண, நிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதத்தின்அனுபவமல்லாதது சுத்த சன்மார்க்கம்.

    மேற்குறித்த சமய, மத அனுபவங்கûள கடந்தது. இம்மார்க்கத்திற்குமேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவேயன்றி இல்லாதனவல்ல. இது சத்தென்னும்பொருளின் உண்மையைத் தெரிவிக்கிற மார்க்கம்.

    சமய மதங்களில் சொல்லுகிற கர்த்தா, மூர்த்திகள், ஈஸ்வரன், பிரமம், சிவம்முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதே ஒழிய அதற்குமேல் இரா.இவை தத்துவ சம்மாரங்கúள. புராணங்களினிருதயமெல்லாம் தத்துவ சம்மாரமே. இதன்உணமை சுத்த சன்மார்க்கத்தில் விவரமாய் வெளியாகும்.

    ஆக,

    சமய சன்மார்க்கம் : வாச்சியானுபவம்

    மத சன்மார்க்கம் : லட்சியானுபவம்

    சுத்த சன்மார்க்கம் : உண்மையறிதல்

    பயன்

    சுத்த சன்மார்க்கத்தில் “அக அனுபவமே” உண்மை.

    “கடவுள் நிலையறிய “ஒழுக்கம்” நிரப்புதல் வேண்டும்.

    சமய, மத சன்மார்க்கத்தின் பயன் “அற்ப சித்திகள்” பெறுதல்.

    சுத்த சன்மார்க்கத்தின் “பூரணசித்தி” பெறுதல். பூரண சித்தியே நித்தியவாழ்வைத் தரும்.

    எனவேதான் வள்ளலார்,

    சமய, மத மார்க்கங்கள்முற்றும் பற்றற கைவிட்டவர்கள்”சுத்தசன்மார்க்கத்தார்கள் ஆவார்கள். இது வள்ளலாரின் கட்டளை.

    சத்திய வாக்கியம்

    வள்ளலாரின் நெறி

    எல்லா சமயத்தார்களுக்கும்

    எல்லா மதத்தார்களுக்கும்

    எல்லா மார்க்கத்தார்களுக்கும்

    “உண்மைப் பொது நெறி” யாக விளங்கும் என்கிறார் வள்ளலார்.

    இங்ஙனமாக உண்மையை கண்ட வள்ளலாருக்கு ஒரு குறிப்பிட்ட சமயஅடையாளமான விபூதி பூசிய கோலத்தில் காட்டினால் எங்ஙனம் உண்மை பொதுநெறியாக விளங்கும்?

    கிரியாசாரம், சாதி ஆசாரம், ஆசிரம ஆசாரம், மேலும் பல கொண்டுள்ளசமயத்தை எப்படி ஏற்கமுடியும்.

    சமயத்தின் மீது லட்சியம் கைவிட்டுவிட்டால்தான் (விட்ட பிறகே) சுத்தசன்மார்க்க உண்மை பொது நெறி விளங்கும் என்பதை நாம் உணர வேண்டாமா?

    “இங்கு இருக்கின்ற ஒன்றையும் பொருளளைகக் கொள்ளளைதீர்கள்” என்பதுவள்ளலாரின் சுத்த சன்மார்க்க சத்திய வாக்கியமாகும்.

    வள்ளலார் சமய ஞானியாநாத்திகரா?

    வள்ளலார் தான் கைப்பட எழுதிய விண்ணப்பங்களில் :

    “சுத்த சன்மார்க்கத்தின் எக்காலத்தும் முக்கிய தடையாகிய சமய, மத,மார்க்கங்கள் ….. என வள்ளலார் குறிப்பிட்டு உள்ளார்கள்.

    எக்காலத்தும் முக்கியத்தடையாக சமயம், மதம் உள்ளது என வள்ளலார் மிகத்தெளிவாக சொல்லிய பிறகு வள்ளலாரை சைவ சமய ஞானியாக காட்டுவதும், நாத்திகராககாட்டுவதும் அறியாமையே. அபக்குவிகள் ஆவார்கள்.

    அழுகிய காய்கறிகûள நாம் உபயோகிப்பதில்லை.

    ஊசிய பண்டங்கûள நாம் உண்பதில்லை.

    நான்குமால் பார்க்காமல் சொத்தை வாங்குவதில்லை.

    கிழிந்த உடையை நாம் அணிவதில்லை.

    உடைந்த பண்டத்தில் சமைப்பதில்லை.

    கற்பனையில் சேர்த்த வரவில், செலவு செய்யமுடியாது.

    கூட்டிய குப்பையை மீண்டும் வீட்டில் போடுவதில்லை.

    இங்ஙனமாக ‘புலன் அறிவில்’ தெளிவாக உள்ள நாம் ‘ஆன்ம அறிவில்’ ஏன்அபக்குவமாக உள்úளளைம்.

    வள்ளலார் சமய, மதங்கûளப் பற்றி தனது திருஅகவலில், பாடல்களில்கீழ்வருமாறு குறிப்பிட்டு

     உள்ளார்கள்.

    அவை பொய், கற்பனை, வீண், குப்பை, குழப்பம், வீண்வாதம், திரிபுநிலை,மயக்கம் இன்னும்பல.

    இங்ஙனம் அவர் சமயம் பற்றி கண்ட உண்மையை எதற்காக நாம்வெளிப்படுத்தக்கூடாது. எதற்காக மற்ற சமயத்தார்களுக்காக அவ்வுண்மையைசொல்லாமல் இருக்க வேண்டும்? அவர் கண்டது பொது நெறி.

    அவரையும், அவர்தம் நிலையங்கûளயும் குறிப்பிட்ட சமய கோலத்தில்காட்டினால் மற்ற மார்க்கத்தார்கள் எங்ஙனம் உண்மையறிய அங்கு வருவர்?

    சைவ சமயம் சார்ந்த பெரியவர் ஞானி கிருபானந்த வாரியார்,நாத்திகவாதியான பெரியார் தந்தை ஈ.வெ.ராமசாமியும், இஸ்லாம் சார்ந்த சதாவதானிசெய்குதம்பி பாவலரும், கிறிஸ்த்துவ சகோதர சகோதரிகளும் உண்மை அறிய வந்தஇடமே சுத்த சன்மார்க்க நிலையங்கள்.

    ஏன் எதற்காக வந்தார்கள்?

    சாதி, சமய, மதங்கûள “பொய்” எனக்கூறியவரே வள்ளலார் எனத் தெரியாமலா?

    திரு அகவலில் மிகத் தெளிவாக உள்ளது.

    “சாதியும், சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி”

    ஆனால் கடந்த சில ஆண்டுகளளைக நடைபெற்ற செயல்கள் என்ன?

    மிக முக்கியமாக நாம் ஒன்று அறிய வேண்டும். சுத்த சன்மார்க்கத்தார்கள்,

    உலகில் காணும் சமய, மத, மார்க்கங்களில் முற்றும் பற்றற கைவிட வேண்டும்.

    அப்பொழுது தான்

    நம் சுத்த சன்மார்க்க நெறி எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாக விளங்கும்.

    ஆனால், 01.02.1874 முதல் 27.06.2010 உலக செம்மொழி மாநாடு கருத்தரங்கம்வரை வள்ளலாரை சமயத்திலேயே அல்லது சமயம் தவிர்த்த நாத்திகராகவே காட்டமுயற்சிக்கிறோம். அவர்தம் தனி நெறியில் இல்லை. இதற்கு நம் முயற்சி என்ன?

    “தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள்” – வள்ளலார்,

    “தனித்தலைவன் லட்சியம் தவிர உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும்மேற்குறித்த தலைவனை குறித்ததே தவிர வேறில்லை.” என்றதின் மூலம்,

    “உபாசனை” மூலம் வழிபடுதல் சரியாகாது. அவ்வழிபாடு மூலம் கடவுள் அருள்பெறுவதற்கு நமக்கு காலமில்லை. அவை மூலம் அற்ப சித்தி பெறலாம். இவை மீதுலட்சியம் வைத்தால் பூரண சித்தி பெற முடியாது என்பதே வள்ளலார் கண்ட உண்மை.

    மேலும், வள்ளலார், விண்ணப்பத்தில் :- “அவ்வாலிபப் பருவம் தோன்றியபோதே,சைவம், வைணவம், சமணம், பவுத்த முதலாகப் பலப் பெயர் கொண்டு பலபட விரிந்தஅளவிறந்த சமயங்களும், அச்சமயங்களில் குறித்த சாதனங்களும், தெய்வங்களும்,கதிகளும், தத்துவசித்தி விகற்பங்கùளன்றும் அச்சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள்,ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகùளல்லாம் தத்துவசித்திகற்பனைக் கலைகள் என்றும் உள்ளபடியே எனகறிவித்து அச்சமய ஆசாரங்கûளச் சிறிதும்அனுட்டியாமற்றடை செய்வித்தருளினீர். இதன் மூலம் அறிவது, வள்ளலார் வாலிபபருவத்தில் சைவ சமயத்தில் இருந்ததாக நாம் அறிய வந்தாலும், எந்தொரு அச்சமயஆசாரங்கûள அவர் அனுட்டிக்கவில்லை என்பதே உண்மை. “நன்முயற்சியுடனே”தொடர்ந்து இருந்து வந்ததினால் ‘உண்மைக் கடவுûள’ கண்டார்கள். ‘உண்மைக் கடவுûள’காண அவர் இருந்த சமயமே காரணமா என்றால், அதற்கு வள்ளலார் சொல்லியது;

    “நான் அப்படி அந்த சமயத்தில் வைத்திருந்த லட்சியமே என்னை இந்தநிலையில் துIக்கி விட்டதென்றாலோ, அந்த லட்சியம் துIக்கி விடவில்லை.”

    “என்னை இந்த இடத்துக்கு துIக்கிவிட்டது யாதெனில்; தயவு; தயவு என்னும்கருணையே என்னை துIக்கி விட்டது” என மிக தெளிவாகவே குறிப்பிட்டதை நாம் உணரவேண்டும்.

    சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கúள சித்தாந்தம், போதாந்தம்,நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் போன்ற மதங்கள் என வள்ளலார் சொல்லியதை நாம்நம்ப வேண்டும்.

    MOST RESPECTFULLY SUBMITTED FOR KIND PERUSAL AND CONSIDERATION.— APJ. ARUL.

     

     

  • A great miracle

     

    Beloved of this world!

    A great miracle happened
    at midnight 12 PM on 30th January 1874 in vadalur,
    Tamil Nadu, India-

    YES;

    Thiru Arutprakasa Vallalar who received the blessings of the “True God”
    transformed his physical body into the “Light Body”-

    His Holiness says; “ it is possible for all human beings” –

    His Holiness has created a marga /way (named as;sutha sanmargam) out of Universal Brotherhood Compassion and Oneness, so that the Grace(arul) received by him would be received by all-

    His Holiness Vallalar said;

    – My way is the way of destruction of death
    – In my Margam, there is nothing except the “education of immortality”
    – Fill yourself with the discipline and do Good proper enquiry to know the “True Sstate of God”
    – Compassion alone is the method and tool

    His Holiness Vallalar teaches us that the Conditional practices of the Caste and Religious are a hindrance to the development of the Compassion and therefore we must shun them and develop the thought of Commonness-

    My Margam is the way of the intellect – In my Margam internal realisation is the real truth said by His Holiness Vallalar –

    People of the world !

    Come and learn the teaching of His Holiness Vallalar and avoid death

    Thanking you;
    M/s karunai sabai-salai,Madurai- 34 Uthangudi,Madurai 625 107-
    -Saga kalvi – Deathlessness Education Good Enquiry Centre,
    Madurai- Tamil nadu, India 
    E mail : apjarul1@gmail .com
    (Translated by Mr . M .Kannan, Member of the Centre)

  • மிகப்பெரிய அற்புதம் நடந்த நாள்

    30 January- இன்று மிகப்பெரிய அற்புதம் நடந்த நாள்

    1874 ம் ஆண்டு ஜனவரி 30 இரவு 12 மணி

    ஆம், திருவருட்பிரகாச வள்ளலார் தான் பெற்ற பேரின்ப பெருவாழ்வில் வாழ சித்தி வளாக திரு அறையில் சென்று திருக்காப்பிட்டு கொண்ட நாள் –
    இதோ அன்று வள்ளலார் திருகதவு சென்று காப்பிட்டு கொண்ட இரவில் வெளியிட்ட அறிவிப்பு:
    இதை தடைபடாது ஆராதியுங்கள் – இந்த கதவைச் சாத்திவிடப் போகின்றேன் – இனி கொஞ்ச காலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல், நினைந்து நினைந்து” என்னும் தொடக்கமுடைய 28 பாசுர மடங்கிய பாடலிற் கண்டபடி தெய்வபாவணையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள் – நானிப்போது இந்த உடம்பிலிருக்கின்றேன் – இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் “
    மேலும்,
    திருக்கதவந் திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் “இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை. யாதெனில்: இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்” என்ற திருவார்த்தை யதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக வுடையது கடமை.


    அன்பர்களே மிகப் பெரிய விசயம் கடந்த 19ம் நூற்றாண்டில் நடந்து உள்ளது – இது குறித்த உண்மையில் நல்ல விசாரணை செய்ய இந்த நாடும் நாமும் முன் வரவில்லை என்பது எவ்வளவு வேதனைக்குரிய விசயம் – ஏன் முக்கியம் கொடுக்கவில்லை என்றால் தான் கண்ட கடவுள் உண்மை உலகில் காணும் சமய மத மார்க்கங்களில் சொல்லப்பட்ட கடவுளரோ தெய்வமோ இல்லை என்பதினால் ஆன்மிக பெரியவர்கள் இது குறித்து வெளியிட முன் வரவில்லை – அதே போல் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் நாக்கு முட நாக்கு என்று சொன்னதனால் நாத்திகர்களும் இதை வெளிப்படுத்த முன் வரவில்லை – ஆனால் வள்ளலார் நெறி எல்லா சமயங்களும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது என்ற உண்மை வெளிப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை – இதன் உண்மை குறித்து விசாரணை செய்ய இளைஞர்கள் முன் வர வேண்டும் – நன்றி : அன்புடன் ஏபிஜெ அருள் கருணை சபை –

  • WHO IS VALLALAR?

    WHO IS VALLALAR?

    All the Religions and the Marga’s in the World has common factors that their thoughts over GOD and their faith in it. But they differ on the type of their GODs and the Procedures, Prayers and Ceremonies in getting the Grace of their GOD.

    We cannot deny and dispute that due to the aforesaid difference, clashes are taking place, demolishing other Religious institutions/temples, shooting and burning others and accusing members of other Marga’s as sinners.

    Further, our scientific inventions and luxurious life are in a state of destroying our Earth. And due to competitive life each of us is not sincere to one another.

    To change this situation,we have to know the ‘ Truth of God’. To know such truth, We need a “True Path” and such path (way) must be common to all.

    RAMALINGAM who is called “THIRU ARUT PRAKASA VALLALAR” was the one who found the ‘true common path’. His path is called as ‘SAMARASA SUDHA SANMARGAM’. Initially, he was belonging to a Religion and later on he gave up his faith with the said religion and found a ‘ new true way ‘ which is common and correct to the entire world. The ‘ true path ‘ found by him does not belong to any Religions and Religious Denominations in the world, but it is above all of them.

    How is Vallalar’s thought is “True Common Path” to all the Religions and all the Marga (Spiritual Institutions) in the World ?.

    Further, the TRUE GOD found and shown by VALLALAR in his margam is not one and the same among the GODs, Saints, Priests, Angels, Religious leaders, Yogis and Sages said to be in Religions and marga’s in the world.

    His Holiness Vallalar also declared in His Message dated 12-4-1871 that the TRUE GOD shown in his Margam is arising on the basis of the respective experience of all the aforesaid Gods, Priests, Angels, Religious Leaders, Yogis, and Sages and they are awaiting for the arrival of the said TRUE GOD (Almighty).

    VALLALAR’S TRUE COMMON PATH

    ——————————————————

    His Holiness Vallalar specifically declared that the STATE OF GOD is to be realized in Sudha Sanmargam as follows:

    “IF ‘VISARA SANGALPAM’ WHICH IS IN THE FORM OF COMPASSION IS ATTAINED ON

    OVERFLOWING DISCIPLINE, SIMPLICITY COMES TO US. AT THAT MOMENT, KNOWLEDGE COMES ON UNDERSTANDING THE TRUTH OF GOD.

    THEREFORE, ONE HAS TO PRACTICE COMPASSION WITHOUT INTERRUPTION.”

    What is the Sankalpam?

    Vallalar said that the Sangalpam means that it consists of the following five.

    1. Nirvikalpam :It means GOD’s Knowledge.
    2. SAVIKALPAM :It means Manifestations of GOD’s Knowledge

    3.Sankalpam : It means; the movement happening during the purest thoughts without any attachment to the organ of senses.

    (i.e) to be impressed inside

    .

    4.VIKALPAM: Thinking

    1. KALPAM : Enquiry about the said thoughts.

    (To attain the said Sangalpam, there must be enquiries and such enquires must Good enquiries).

    So, to understand theTruth of GOD, there must be discipline, that too fullest discipline. On attaining full discipline, SANGALPAM will happen.

    THIS SAME PRINCIPLE OF VALLALAR CAN BE PROVED BY ONE OF HIS PREACHING.

    “In the perupadesam (22-10-1873), VALLALAR, emphatically states that the only‘ compassion” had uplifted him to present stage (blissful life). To attain Compassion, Individuality (orumai) is necessary and ‘Compassion’ is possible only which individuality (Orumai).

    WHAT IS INDIVIDUALITY (ORUMAI):

    Vallalar said that Individuality (orumai) will happen automatically where our Knowledge and Discipline come together.

    (for other place, though there is no harm from our side, bearing the harm done to us by others is called here Individuality)

    Therefore, Discipline is only required for realizing the truth of GOD.

    Therefore,

    # KNOWLEDGE comes only after UNDERSTANDING the truth of GOD

    # SIMPLICITY is required to get the TRUTH OF GOD.

    # FORM OF COMPASSION is necessary for SIMPLICITY

    # FORM OF COMPASSION is nothing but VISARA SANGALPAM

    # DISCIPLINE is to be maintained, till you attain SANGALPAM.

    Finally, Discipline is only required for realizing the Truth of God. Then, after getting the experience from the aforesaid received knowledge, the truth about “DeathlessState” is realized and it paves the way for “ Blissful Life”.

    In Perupathesam, His Holiness Vallalar says that His Holiness had been telling this for the past two and half years and said that though he came to tell the truth, no body understood.

    THE TRUTH IS “TO FOLLOW/MAINTAIN DISCIPLINE. In Sudha Sanmargam, Discipline is available and a Sudha Sanmargee means a man full of Discipline.

    Therefore HIS HOLINESS VALLALAR’S MARGAM is “true common path” to all Religions, Religious institutions and Margams in the World.

    An above article submitted before you for kind consideration –. APJ.ARUL