Author: unmai

  • WORDS OF HIS HOLINESS VALLALAR

    WORDS OF HIS HOLINESS VALLALAR. – APJ ARUL

    PLEASE TO DEPICT OUR VALLALAR ON HIS FINAL THOUGHTS.

    Beloved friends,

    I humbly submit that this article is made on base of the doctrine of His Holiness Vallalar. Kindly to note that each and every word used here is taken from his prose and songs. It is posted for good enquiry and for knowing the real final doctrine of His Holiness Vallalar .
    We have known that “COMPASSION” is only tool to get Grace of God.

    At the same time we have to know today that WHAT ARE MAIN OBSTACLES TO CULTIVATE THE COMPASSION SAID BY HIS HOLINESS VALLALAR?

    WHICH ARE MAIN OBSTACLES TO CULTIVATE COMPASSION?

    Evidence: Vallalar’s Prose at page No.418.

    ” CONDITIONAL PRACTICES OF CASTE AND RELIGION ARE DECLARED AS MAIN OBSTACLES TO CULTIVATE ‘ COMPASSION’.

    “Sathiya Vinnappam” ( original hand written of His Holiness available with HR & CE ).
    “.. Religion, Religious Denomination and Other Margas all are always main obstacles to SUTHA SANMARGA.” ; said by Vallalar.

    But at the same time; the principle of Suddha sanmarga is common to all Religion and Religious Denomination and margas said by Vallalr

    Further His Holiness Vallalar Said;

    “.. TO WIPE OUT THOSE CONDITIONAL BINDINGS, THE COMMON OUT LOOK, AND THEN ” KARUNYAM ( COMPASSION) WILL EMERGE AND ” GRACE OF GOD” will be achieved.

    “Beloved friends,Kindly to note that

    the followings, which are available at page No.410 of prose, are as Main Disciplines of Suddha Sanmarga

    (i) NOT TO CONSIDER ANY ONE AVAILABLE HERE.
    (ii) TO WASH OUT ALL ATTACHMENT ( according Sastra and rituals)
    (ii) TO WORSHIP THE ONLY LEADER (GOD).

    Kindly to note that His Holiness Vallalar said in ” MAHA PERUBADESAM” held at Mettukuppam on 22-10-1873 (page468);

    ” I HAD SOME LITTLE KNOWLEDGE WHILE COMPOSING RELIGION PRAYER SONGS IN THIRU ARUTPA.DO NOT GIVE IMPORTANCE TO THE SONGS” said by Vallalar.

    BELOVED FRIENDS,

    THEREFORE,

    WE SHOULD OBEY THE ORDER OF HIS HOLINESS VALLALAR.

    IN FINAL,

    TO KNOW THE TRUTH OF GOD AND and TO GET GRACE OF GOD,
    we have to leave the Vallalar’s earlier songs WHICH are relating to the religion and about their God and their custom and practices.

    — apj.arul

    We will see what are main principle of Vallalar’s Marga.

  • “Does the divine God possess hand and legs similar to a human being ?”

    “Does the divine God possess hand and legs similar to a human being ?”VALLALAR.

    If anybody enquires,

    “Does the divine God
    possess hand and legs similar to a human being ?”.

    They hesitate and get be wildered without knowing to reply. The later followers, calling or naming themselves as great men, had puffled and bluffed nonsense things by closing their eyes of Truth vision.

    But the ancient one who had covered and hidden the Para Truth was a great Adept or genius and powerful person.
    Till now, nobody had discovered and found out what he had veiled and hidden, what he had looked or covered, no one had struck and broken the lock that he had sealed.

    In the false religions,

    some occult power (KARMA), Siddhi had been imaginatively promised.
    If we try perseveringly for ten or eight years for every SIDDHI, it is possible to attain little siddhi.

    If we put our Goal or Aim for these siddhis, the goal towards the Almighty God, will get deviated away.
    If the aim of God realization goes, at last the great profit or benefit will go in vain. Or, otherwise, if anyone tries for a long time, and attains a little siddhi, the great gain or soul benefit will go away.

    So, let no one put the aim to attain the little siddhi but should aim at the Almighty God only.

    The evidence for the imaginary description of above said siddhis: the prose writing ‘PERU VINNAPPAM’ (of Vallalar) and THIRU ARUTPAA – ARUL VILAKKA MAALAI poem which begins as “IYAL VEDHA AAHANAMGAL” and also one should realize the important notes and ideas in them.

  • சமய, மதங்களுக்கும் வள்ளலாரின் மார்க்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

    சமயமதங்களுக்கும் வள்ளலாரின் மார்க்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன

    எல்லா சமய மதங்களிலும் அதனதன் கடவுளர்தெய்வம்இவர்களே என வெளிப்படுத்தி அக்கடவுளரை/தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்ய பணிக்கப்பட்டுள்ளனர்.

    ஆனால்,

     சுத்தசன்மார்க்கத்தில் ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல் வேண்டும் என்கிறார் வள்ளலார்இங்ஙனமாக இருந்து,  தான் கண்ட கடவுள் பெருங்கருணை கடவுள் (அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்என்கிறார்கள்ஒவ்வொருவரும் கடவுள் நிலை காண நன்முயற்சி செய்ய வேண்டும் – தன் மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை என்கிறார்கள்.

    ஆனால்,

          சமயமத மார்க்கங்களில் கடவுள் அருள் பெறுவதற்கு சாதனமாக பல சடங்குசம்பிராதயங்கள்சாத்திரங்கள்,முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் உள்ளனசமயமத மார்க்கங்களில் முக்திசமாதியில் பலன் முடிகிறது நீண்ட ஆயுள் கைக்கூடுகிறது மரணத்திற்கு பின்பு நரகம்சொர்க்கம் என்றெல்லாம் உண்டு.

     

    சுத்த சன் மார்க்கத்தில் சுவர்க்க நரகம் பற்றி விசாரமில்லை என்கிறார் வள்ளலார்முக்தி அடைதல் என்பதில் லட்சியம் கொண்டுதடைப்பட்டு நிற்றல்போல் நில்லாமல்பூரண சித்தியைப் பெறுவதே சுத்த சன்மார்க்கத்தின் கொள்கைஇதை ஆண்டவரே தெரிவித்தார் என்கிறார் வள்ளலார்தன் மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியை தெரிவிப்பதேயன்றி வேறில்லை என்கிறார் வள்ளலார்.

    சுத்த சன்மார்க்கத்தில் கடவுளின் உண்மையைத் தெரிவிக்கிற மார்க்கம். மற்றவைகளிலிருந்து

    அதீதமாக விளங்கும் மார்க்கம். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஸ்டைகூடல்

    என்னும் நான்கும் கடந்து ஆருடராக நிற்பதால் சாதனமொன்றும் வேண்டுவதில்லை

    மேற்படி சாத்தியர்களே சுத்ததேகிகள்.

     ஆனால்சமயங்களில் அதனதன் கடவுள்தெய்வங்களை அறிய சாத்திரங்கள்புராணங்கள்இதிகாசங்கள் முதலிய கலைகள் உள்ளனமேலும் பல உபாயங்கள் உள்ளன.

    சுத்தசன்மார்க்கிகள் எந்தொரு கலைகளிலும் லட்சியம் வைக்காமல் தலைவனையே தொழுதல் வேண்டும் தலைவனை தொழுவதே தொழிலாக உள்ளது கடமை என்கிறார் வள்ளலார்இங்கு உபாய வகைகளான அபரமார்க்கக் காட்சி கூடாது.பரமார்க்கமாகிய அக அனுபவமே உண்மையாகும்இங்கு கடவுள் நிலையை படிப்பால் அறிய முடியாதுஎல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டு தலைவனையே தொழுதல் வேண்டும்உண்மையை நம்புதல் வேண்டும் என்கிறார் வள்ளலார் 

    சமயங்களில் மதங்களில் புராணங்களில் சொல்லப்பட்டுள்ள கடவுளர், தெய்வங்கள், ஏற்பாட்டுகர்த்தர்கள், யோகி, ஞானி, மூர்த்திகள், இவர்கள் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடிஎழுத்தருளுகின்ற தனித்தலைமைப் பதியை தான் வள்ளலார் கண்டதாக சொல்கிறார்கள்.

    ஆனால்

    சமய,மதங்களில் அதன் கொள்கையறிய பல ”நூல்களும்”,

    கொள்கையில் பிடித்தம் ஏற்பட பல ”சாத்திரங்களும்”,

    கடவுள்,தேவர்களை போற்றி வணங்க ”தோத்திரங்களும்”,

    வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம், போன்ற ”கலைகளும்”,

    உள்ளன – ஆண்டவரை வேண்டி தவம் இருந்தவர்கள் பலர் – அவர்கள் மேற்கொண்ட வழி தான் பல சமயங்களாகும் – அந்தந்தச் சமயங்களில் இவர்களையே தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்து வருகிறார்கள் –

     

    வள்ளலாரின் கட்டளையும் விண்ணப்பமும்:

    ” இங்கு இருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்-

    எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத்

    தலைவனையே தொழுவீர்கள் “

     

     “சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடைகளாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள்”

     

     “ எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே ! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம், முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்திற் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும் – “

    ஆனால்,

    சமயங்களில் தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும், தத்துவாதீதத்தைத் தியானித்தும், இடையில் ஜபித்தும், கரணலயமாகச் சாமாதிசெய்தும், தத்துவச் சேட்டைகளை அடக்க விரதமிருந்தும், சாதாரண யோகபாகத்தில் மூச்சுடக்கியும் சாதர்கள் மேற்குறித்த வண்ணம் செய்வார்கள்-

    மொத்ததில்;-

     சுத்தசன்மார்க்கத்தில் அடிப்படை ஒழுக்கம் பெற்ற தகுதியுடையவர்கள் மற்ற எதிலும் பற்று இல்லாமல் ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கொண்டு உள்ளழுந்தி,சிந்தித்து, சிந்தித்தலை விசாரிக்கும் சங்கற்பத்தை ஒவ்வொருவரும் பெற்று ஆண்டவரை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து இடைவிடாதிருந்தால் ஆண்டவரே எல்லா உண்மைகளையும் நமக்கு உரைப்பார் – உண்மை அறிந்தவர்களே அருள் பெற்றவர்கள் ஆவார்கள் – அருளால் பெறப்படும் பயன் மரணமில்லா பெருவாழ்வு ஆகும்-

     

    ஆனால்,

    சமயங்களில் சத்துவகுண இயல்பாகிய, கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஜீவகாருண்யம் மேற்படி உண்மையை லட்சியம் செய்வதே சமய சன்மார்க்கம்-

    அடுத்து மதம்;

    சமயாதீத மாவது மதம் – இங்கு நிர்க்குணம் அதாவது முன்னே சொன்ன சத்துவ குணத்தினை பெற்று லட்சிய அனுபவம் பெறுதல் யாதெனில்; கடவுளுக்கு அடிமையாதல், புத்திரானாதல், சிநேகனாதல், கடவுளேதானாதல் இதுவே மதம்-

    முடிபாக,

    சுத்த சன்மார்க்கத்தில்:  ஒரு கோடி அறுபது லட்ச அனுபவங்களின் அனைத்து உண்மையையும் சுத்த சன்மார்க்கத்தில் ஆண்டவரே தெரிவிப்பார் – ஆண்டவர் உண்மையை தெரிவிக்க வேண்டும் என நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து அன்பு நிறைந்த கண்ணீரால் விண்ணப்பம் செய்து நன்முயற்சி செய்தலே சுத்த சன்மார்க்கம்-

    ஆனால்;

    சூல்வண்டி (400 வண்டிச் சுமை ஒரு சூல்வண்டி) ஆயிரங்கொண்ட நூல்கள் கொண்டதே சமய மத மார்க்கங்கள் – இதற்கு ஆயிரம் ஜென்மம் எடுக்க வேண்டியதாக உள்ளது – கலைகளின் உண்மையை சொல்லி கொண்டே வரும் மார்க்கமே சமய, மத மார்க்கங்கள் –

     

    இதோ வள்ளலார் அழைக்கிறார் —

    இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழித்து கொண்டிராதீர்கள் –

    சமயமதங்களில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும்- எனவே ஆண்டவர் இடத்திலேயே லட்சியம் வைக்க வேண்டியது-

    ஒவ்வொரு சித்திக்கும் பத்து வருசம் எட்டு வருசம் பிராயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளை அடையலாம்- ஆனால் ஆண்டவரிடத்தில் லட்சியம் வைத்தால் பெரிய பிரயோஜனத்தை பெறலாம்-

    சமயங்கள்,மதங்கள்,கலைகள் இவற்றில் பயிலுவோமானால் நமக்கு காலமில்லை

    லாபத்தை பெற அறிவு வேண்டும் – அறிவு என்பது உண்மை அறிதல் – உண்மை அனந்த கோடி – காலமில்லை – இந்த பிறவிலேயே நமக்கு ஆண்டவரே உண்மை தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு நன்முயற்சியில் 19 ம் நூற்றாண்டில் ஒருவர் இறங்கி அருள் பெற்று மரணம் தவிர்த்து பேரின்ப பெருவாழ்வு பெற்றார்கள் – இப்படி ஒரு புதிய தனி வழியை கண்டுபிடித்தவர் வள்ளலார் – அவ்வழியின் பெயர் சுத்த சன்மார்க்கம் – என்னை போல் நீங்களும் பெற வேண்டும் என ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையில் தெரிவித்தார்கள் –

    ஆக,

    சமய,மத,மார்க்கங்கள் என்பதிலிருந்து கடந்து தனி நெறியாக விளங்குகிறது சுத்த சன்மார்க்கம்-

    சுத்த சன்மார்க்கம் என்பது சன்மார்க்கம், சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது- சுத்த சிவம் என்பது சிவம், பரசிவம் இரண்டையும் மறுத்தது என்கிறார் திருவருட்பிரகாச வள்ளலார் 

     

    —-நன்றி வணக்கம் ஏபிஜெ அருள் – கருணை சபை சாலை –

     

     

  • ”அவசரம். சீக்கிரம் வா.”– ஏபிஜெ. அருள்

    நான் ஒரு வழக்கறிஞர்.
    காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து பேப்ரின் செய்திகளை படித்தேன்.
    நாட்டு நடப்புகளை அறிந்ததால் களைப்பு ஏற்பட்டது.
    செல் ரிங் அடித்தது. கேஸ் விசயமாக பார்டி பேசுவார்கள் என எண்ணி எடுக்காமல் உட்கார்ந்து விட்டேன். மீண்டும் தொடர்ந்து அடிக்க, சென்று எடுத்தேன். எனது தோழன்.
    ”என்னடா என்ன விசயம்?” என கேட்டேன்.
    “ அவசரம் சீக்கிரம் வா” என்றான்.
    விசயத்தை சொல்லு என்றேன்.
    வேதாச்சலம் வந்திருக்காரு. அதான் எனக்கு வீடு விற்றாரே. அந்த வேதாச்சலம் தான் என்றான்.
    “நல்ல மனிதர் தானே. என்ன பிரச்சனை” என்றேன்.
    நீ நேரே வா. அவர் சொல்லறத கேட்டா கோபம் கோபமாக வருகிறது.
    சரிப்பா நீயே கோபப்படலாமா? வள்ளலார் மார்க்கத்தை சேர்ந்தவன். பொறுமையாக இரு என்றேன் அவனிடம்.
    அவன் பேசறத நீ கேட்டுப் பாரு அப்பறம் புரியும் என்றான் என் நண்பன்.
    சரி வரேன் என்று கூறி கிளம்பிவிட்டேன்.
    (வண்டி ஓட்டும் பொழுது என்னவாக இருக்கும்? என்ற சிந்தனையே. வேதாச்சலம் நல்ல மனிதர் தானே. பிரச்சனை பண்ணக்கூடிய ஆளில்லையே. தன் வீட்டை ஒரு நல்ல மனிதருக்குதான் கொடுப்பேன் என்றுக்கூறினார். அதணால் தான் எனது நண்பரை அறிமுகப்படுத்தி இந்த வீட்டை அவனுக்கு விற்கச் செய்தேன். என்ன பிரச்சனை????? ஒன்றுமே புரிய மாட்டேன்கிறதே.)
    இதோ வீடு வந்து விட்டது.
    வாங்க வேதாச்சலம் அய்யா, நலமா? ஏன் வீட்டுக்கு வெளியேவே உட்கார்ந்து விட்டீர்கள். உள்ளே வாங்க என்றேன்.
    இல்லப்பா உன் நண்பனிடம் நியாயம் இல்லை என்றார்.
    சரி அமைதியா இருங்க விசாரிக்கிறேன் என்று உள்ளே சென்றேன்.
    என் நண்பனிடம் விசயம் என்ன? என்றேன்.
    ””சொல்றேன் கேளு. உனக்கும் தலையே சுத்தும்.என்னிடம் வந்து, இது என் வீடு நீங்க இருக்கீறீங்கன்னாரு? ஏதோ விளையாடுறாரு என நினைச்சா… சீரியசா தான் சொல்றேன் என்கிறாரு.
    என்னய்யா விளையாடுறீங்களா? இந்த பாருங்க நீங்க 2013 ல் எழுதி கொடுத்த பத்திரம் என்றேன்.
    அது இருக்கட்டும். இந்த நான் வைத்திருக்கும் பத்திரத்தைப் பாரு என்றார். வாங்கி பார்த்தேன். அது 2000 ல் அவர் இந்த வீட்டை கிரையம் வாங்கிய பத்திரம். அய்யா இதுக்கு பின்பு உங்களிடம் நான் இந்த வீட்டை கிரையம் வாங்கி விட்டேன். கடைசியாக இந்நாள் வரை எனது பத்திரமே செல்லும் என்றேன். அதற்கு திரும்பவும் அவர்: தம்பி எனது பத்திரத்தை பாருன்னு 2000 த்தில் எழுதியுள்ள பத்திரத்தையே காட்டி, யார் பெயரில் வீடு உள்ளது.? என் பெயரில் தானே!!! என்கிறான்.
    மீண்டும் நான்:: “ அய்யா, அதற்கு பின்பு நான் கிரையம் செய்து உள்ளனே….என்றேன். காதிலேயே வாங்காமல் அது இருக்கட்டும் மீண்டும்; “இந்த பத்திரத்தை பாரு” என்கிறார்??? அதனால் தான் உன்னை கூப்பிட்டேன். நீயே கேளு.””
    வெளியே வந்து என்ன அய்யா, ஏன் இப்படி? என்றேன்.
    என்ன இப்படி என்றார்?
    என்ன அய்யா என்னிடமேவா?? என்று சற்று சத்தமாக கேட்டேன்.
    தம்பீ, உன் நண்பன் செய்தால் சரி. நான் செய்தால் தவறா? என்றார்.
    என்ன அய்யா விளக்கமாகச் சொல்லுங்கள் என்றேன்.
    “உன் நண்பரின் கட்டுரையை நெட்டில் படித்தேன். அதில் வள்ளலாரை அவரால் முற்றிலும் கைவிடப்பட்ட அவரின் முந்தைய சமயப் பற்றில் வெளிப்படுத்தியிருந்தார். வள்ளலார் முதலில் ஓர் சமயத்தில் பற்று வைத்திருந்தார். அதன் திருஅடையாளமாக இருக்கும் திரு நீறை பூசியிருந்தார்கள். எல்லாருக்கும் கொடுத்தார்கள்.பலருக்கு கொடுத்து ஆசீர்வதித்துள்ளார்.
    அதன் பின்பு, தான் வைத்திருந்த சமயப்பற்று, சாத்திர ஆச்சாரங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு, ஓர் புதிய மார்க்கத்தை கண்டார்கள். ஆனால் உன் நண்பரோ வள்ளலாரை அவர்தம் முந்தையப் பற்றுலேயே வெளிப்படுத்தி வருகிறார். யாரெனும் கேட்டால் இதுவும் வள்ளலார் தானே சொல்லியுள்ளார் என பதில் சொல்கிறார்.வெளிப்படுத்தும் செயலை தவறு எனச் சுட்டிக் காட்டுவதற்கே இப்படி நடித்தேன். சொந்த விசயத்துக்கு ஒரு நியாயம். வள்ளலாருக்கு ஒரு நியாயமா? எனது பத்திரத்திற்கு பின்பு ஏற்படுத்திய அவர் பத்திரம் அவருக்கு வேணும்.ஆனால் வள்ளலார் பின்பு ஏற்படுத்திய புதிய நெறி வேண்டாமோ??
    வள்ளலாரை அவரின் முடிபான நெறியில் காட்டாமல் பழைய கைவிடப்பட்ட நெறியில் வெளிப்படுத்துவது என்ன நியாயம் என்கிறேன்?
    “”நீங்களே சொல்லுங்க.””
    திகைத்து நின்றேன்.
    இதை விட உனக்கு விளக்க முடியாதுப்பா என நண்பனிடம் கூறினேன். நான் வாரேனு கிளம்பி விட்டேன்.
    சிறிது தூரம் சென்று திரும்பி பார்த்தேன்.
    வேதாச்சல அய்யாவின் கைகளை என் நண்பன் பற்றிக் கொண்டிருந்தான்.
    உண்மை வெளிப்பட்டே தீரும். உண்மையை உணர்ந்தே ஆக வேண்டும்.

  • தூங்குபவரை எழுப்பி விடலாம். தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது

    ஊர் பக்கத்திலிருந்த வள்ளலார் சபைக்கு நான் சென்றிருந்தேன். அங்கிருந்த ஒருவரிடம் வள்ளலார் குறித்து விளக்கும் படி எனது தோழி கேட்டுக் கொண்டாள். அவரிடம் நான் பேச ஆரம்பித்தேன். அய்யா வள்ளலார் சமய பற்றை கைவிட்டுவிட்டார். உடனே அவர் என்னத்தை விட்டுவிட்டார்? அதற்கு நான்: ஆரம்ப காலத்திலிருந்த சமய பற்றை என்றேன். உடனே அவர்: என்ன சமயப் பற்றை? அய்யா… என்றேன். அதற்கு என்ன அய்யா?என்றார். அதாவது…. என்றேன். என்ன அதாவது ? என்றார். எனது தோழியை பார்த்தேன். அப்பொழது தான் புரிந்தது நம்மை மாட்ட வைத்துள்ளார்கள் என்று.
    என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற பெரியோரின் வாக்கு ஞாபகத்துக்கு வந்தது.
    நான் அவரிடம் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தேன். அய்யா, வள்ளலார் ஆரம்ப காலத்தில் சைவ சமயத்தில் பற்றுக்கொண்டு இருந்தார்கள். சமயப் பற்றுடன் இருந்தாலும், எந்தொரு சமய ஆச்சாரத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவே இல்லை. காரணம் தனக்கு வெளிப்படுத்திய,/காட்டிய கடவுள் நிலையையும் கடந்து ஓர் உண்மை இருப்பதாக உணர்ந்தார்கள். ஓர் புதிய வழியில் இது குறித்து விசாரணை செய்ய தொடங்கி விட்டார். இடைவிடாத நன்முயற்சியில் இறங்கிய அவருக்கு ஆண்டவர் உண்மையை, வெட்ட வெளிச்சமாக அவருக்கு காட்டினார். தான் சென்ற வழியில் எல்லாரும் சென்று தன் போல் எல்லாரும் பயன் பெறுதல் பொருட்டு அதற்கு சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டு வெளிப்படுத்தினார்கள். அவ்வழி தனி வழி புதிய வழியாக மட்டுமில்லை உணமை பொது வழியாகவும் உள்ளது.
    திருவருட்பாவில் உள்ள சமய ஸ்தோத்திரப்பாடல்களில் லட்சியம் வையாதீர்கள் என்று கட்டளை பிறப்பித்தார்கள்.
    சமயத்தில் பற்று வைத்திருந்த காலத்திலிருந்தே உண்மைக் கடவுளின் நிலை குறித்து விசாரணையை தொடங்கினாலும் நமக்கு உலகிற்கு வெளிப்படையாக 12-04-1871 ல் ஓர் அறிவிப்பு மூலம் பிரகடனம் செய்தார்கள். (அறிவிப்பை வாசித்து உணர்க.) உண்மைக் கடவுளின் நிலை குறித்தே எல்லா சமய,மத,மார்க்கங்களும் சொல்ல/காண/வெளிப்படுத்த தான் முயல்கின்றன. எல்லா ஞானிகளும், யோகிகளும், தெய்வங்களும், கர்த்தரும், தங்கள், தங்கள் அனுபவங்களை குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதியை தான் நம் வள்ளலார் கண்டு வெளிப்படுத்தினார்கள். எந்தொரு சமய,மத வழியை,ஆச்சாரங்களை பின் பற்றாமல் ஓர் உண்மை பொது வழியில் (சுத்த சன்மார்க்க வழி) தான் கடவுள் உண்மையை கண்டார்கள் அருள் பெற்றார்கள்.
    அவரை மதித்து அவர் அருகில் அமர்ந்து பணிவுடன் சமர்பித்துக்கொண்டிருந்த என்னை குறிக்கிட்டு: “ அப்படின்னா என் கேள்விகளுக்கு பதில் சொல்லு பார்க்கலாம்” என்றார்.
    கேள்வி 1. வள்ளலார் விபூதி பூசியிருந்தாரா இல்லையா? மற்றவர்களுக்கு கொடுத்து நோய் போக்கினாரா இல்லையா?
    கேள்வி 2. வள்ளலார் சிவம், சிவ சிவ என்பது சைவசமய கடவுள் இல்லாமல் வேறு ஏது?
    கேள்வி 3. நடராஜர் என்கிறாரே!
    கேள்வி 4. திருசிற்றம்பலம் என்பது சைவசமய வார்த்தை தானே?
    கேள்வி 5. சிவகாமவல்லி என்பது யாரை?
    கேள்வி 6: கடித்தில் சிதம்பரம் என்கிறாரே?
    கேள்வி 7: சமயதலங்களுக்கு சென்று வழிப்பட்டாரா இல்லையா?
    கேள்வி 8: கல்பட்டு அய்யா, வேலாயுத முதலியார் மற்றும் ரத்ன ஓதுவார் இவர்களின் அறிக்கைகள் இப்படி உள்ளதே?,
    கேள்வி 9: சத்திய ஞாசபையில் சபாபதி சிவாச்சாரியார் முதல் பல நூற்றாண்டுகள் வரை வழிபாடுகள் ஆகமவிதிப்படி தானே நடந்த்து.
    கேள்வி 10. வள்ளலார் சமயக்கடவுள்கள்,(கணபதி,முருகன், பரம், பைரவர் உட்பட) பற்றி சொல்லியுள்ளார்களே? தைப்பூசத்தை தானே தேர்ந்து எடுத்துள்ளார்.?
    அய்யா உங்கள் கேள்விகளுக்கு என்னால் என அனுபவத்தில் பதில் தர இயலாது
    அய்யாவின் சத்திய வாக்கியத்தை மற்றும் அகராதி கொண்டுதான் என்னால் பதில் தருவேன் என்றேன்.நான் பதில் அளித்து விட்டால் நான் கேட்பதை தரவேண்டும் என்றேன். என்ன வேண்டும் என்றார். பதில் கொடுத்து பெற்றுக்கொள்கிறேன் என்றேன்.
    ம்ம்ம்ம்.. பதில் சொல்லு.. பதில் சொல்லு…என்று பக்கத்திலிருந்த பாத்திரத்திலிருந்து தண்ணீரை எடுத்து குடித்து விட்டு எனக்கும் குடிக்க தண்ணீர் கொடுத்தார். வாங்கி குடித்து விட்டு நன்றி கூறினேன். இருக்கட்டும் இருக்கட்டும் பதில் சொல்லு… என்றார்.
    கேள்வி 1. வள்ளலார் விபூதி பூசியிருந்தாரா இல்லையா? மற்றவர்களுக்கு கொடுத்து நோய் போக்கினாரா இல்லையா?
    பதில் : வள்ளலார் விபூதி அணிந்திருந்தார்கள். மற்றவர்களுக்கும் விபூதி கொடுத்தார்கள். மறுக்கவில்லை.
    கருங்குழியிலிருந்து வடலூர்க்கு சென்று உரைகிறார்கள். உண்மை கடவுள் குறித்து விசாரணையில் எப்போதிலிருந்து இருந்தார்கள் என்பதை வெளிப்படையாக அன்பர்கள் உணர முடியாவிட்டாலும், வடலூரிலிருந்து மேட்டுக்குப்பம் சென்று உரையத்தொடங்கிய காலத்திலிருந்து (1870 லிருந்து) வள்ளலார் தன்னை முழுமையாக சமய பற்றிலிருந்து விலக்கிக் கொள்கிறார்கள். விபூதி அணியவில்லை. கொடுக்கவும் இல்லை. மிகத்தெளிவாக 12-04-1871 ல் ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார்கள். நீங்களே படியுங்கள் என்று உரை நடைப்பகுதி பக்கம் 547 யை எடுத்து கொடுத்தேன். அதன் பின்பு 22-10-1874ல் ஆற்றிய மகாபேருபதேசத்தை எடுத்து கொடுத்தேன். கைப்பட எழுதிய விண்ணப்பத்தினை (பக்கம் 556) (சமயப்பற்றை விட்ட செய்தியை) எடுத்து கொடுத்தேன். பாடல்கள் எடுத்துக் கொடுத்தேன்.
    சரி….சரி…. அடுத்த கேள்விக்கு பதில் சொல்லு…
    கேள்வி 2. வள்ளலார் சிவம், சிவ சிவ என்பது சைவசமய கடவுள் இல்லாமல் வேறு ஏது?
    சென்னைப் பல்கலைகழகம் வெளியிட்ட தமிழ் அகராதி வால்யூம்/பக்கம் எடுத்து காண்பித்தேன்.
    சிவம் : நன்மை என்றும் சித்துருவாகி சுயம் பிரகாசமாய் நிற்கும் சிவலொரூபம் (திரு 51.1)
    தூய அறிவுருவாக இருக்கும் இறைவன், கடவுள் என்று பொருள் என இருந்தது.
    சிவ சிவ என்பதற்கு ”ஓர் இரக்க குறிப்பு”.
    சிவஞானம் என்பதற்கு பதியுணர்வு என்கிறது அகராதிகள்.
    அய்யா கேள்வி 3க்கு செல்லவா?
    ம்ம்ம்..ம்ம்.. போ..போ..
    கேள்வி 3,4,5 & 6 நடராஜர் என்கிறாரே! திருசிற்றம்பலம் என்பது சைவசமய வார்த்தை தானே?. சிவகாமவல்லி என்பது யாரை? கடித்தில் சிதம்பரம் என்கிறாரே?
    சமயத்தார்கள் ” வாயு பகவான் “ என்றதினால் வாயு என்றச்சொல்லை எவரும் பயன்படுத்த கூடாது என்பதை சொல்லமுடியாதோ அது போல் நடராஜரும். நடம் என்பது கூத்து நடமாடுதல் ராஜர் என்பது மிகச்சிறந்தவன். நடமாடுதல் என்பது பரவியிருத்தல். ஆக, எங்கும் பரவியிருந்து எல்லா உயிர்களும் இன்பமடைதற் பொருட்டே ஒருமைத் திரு நடச்செய்கையை செய்யும் மிகச்சிறந்தவனை “ நடராஜர்’ என்று திருக்குறிப்புத் திருவார்த்தைகளால் குறிக்காமல் எப்படி வேறு மாதிரி குறிப்பிட முடியும்? நீங்களே சொல்லுங்களேன் அய்யா?
    கேள்வி 4. திருசிற்றம்பலம் என்பது சைவசமய வார்த்தை தானே?
    மேலே சொன்னமாதிரி தான். திருச்சிற்றம்பலம் என்பது “ சிற்சபை”. சிற்சபை என்ன என்பதை பக்கம் 346 உட்பட பலப்பாடல்களில் வள்ளலார் விளக்குகிறார்கள். நம் சரவணானந்தா அய்யா அவர்கள் சொல்கிறார்கள்; சிதம்பரம் என்றால், சித் + அம்பரம் = ஞான ஆகாசம் நம் பதியின், அருள் ஞானம் விளங்கும் அக ஆகாசமே சுட்டப்படுவதாம்.
    சிவத்தின் ஆற்றலை அல்லது சிவத்தின் தன்மையை உணரும் ஆற்றலை சிவகாமி ஆகும். வல்லி என்பது கல்யாணம் எனப்படும். சிவகாம வல்லி மணவாளா. சமய ஸ்தோத்திரப்பாடல்களில் பயன்படுத்திய சிவகாம வல்லி வார்த்தையையே வேறுவகையாக பொருள் கொண்டிருப்பதை தக்க ஆசிரியர்க் கொண்டு அறியலாம். அல்லது நாமே ஊன்றி பாடும் போது அறியலாம். பொது பெயர்களையே வல்லவர்கள் கற்பனைகளுக்கும், த்த்துவங்களுக்கு கொடுத்து, உண்மையை மறைத்துள்ளார்கள் என்கிறார் வள்ளலார்.
    திண்டுக்கள் தயவு அய்யா சொல்கிறார்கள்;.
    “…புனைப்பெயர்கள் எல்லாம் பொருள் தெரிந்தே ஆக்கப்பட வேண்டும். முன்னோர் கற்பித்தனவாகக் கொண்டு ஓதல் சிறப்பன்றாம்….”” .
    கேள்வி 7: சமயதலங்களுக்கு சென்று வழிப்பட்டாரா இல்லையா?
    ஆரம்ப காலங்களில் சமய தலங்களுக்கு சென்றார்கள். அத்தெய்வங்களை பற்றி ஸ்தோத்திரங்கள் பல பாடியுள்ளார்கள்
    சுத்தசன்மார்க்க வழியில் செல்லும் வரை இங்ஙனம் நடைப்பெற்றது. அதன்பின்பு அதாவது 1870 க்கு பின்பு எந்தொரு தலங்களுக்கும் செல்லவே இல்லை. சமய ஸ்தோத்திரம் எதுவும் பாடவில்லை.
    கேள்வி 8: கல்பட்டு அய்யா, வேலாயுத முதலியார் மற்றும் ரத்ன ஓதுவார் இவர்களின் அறிக்கைகள் இப்படி உள்ளதே?,
    திருவருட்பிராகச வள்ளலார் என்னச் சொன்னார்கள்? எனப் பார்க்க வேண்டுமே அன்றி அருகில் இருந்தவர்களின் சொல்கள், செய்கைகள் வள்ளலாரின் சொல்கள் செய்கைகள் ஆகாது. இவர்கள் கூட வள்ளலாரின் முடிபான நெறியை அறிந்தவர்களாக இல்லை என்பதே உண்மை. அதற்கு வள்ளலாரின் சத்திய வாக்கியமே சான்று: “உண்மைச் சொல்ல வந்தனனே என்றுச் சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை.”
    கேள்வி 9: சத்திய ஞாசபையில் சபாபதி சிவாச்சாரியார் முதல் பல நூற்றாண்டுகள் வரை வழிபாடுகள் ஆகமவிதிப்படி தானே நடந்த்து.
    இன்று இவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. குத்து விளக்கு, லிங்கம், சிலைகள், பூசை கருவிகள், எல்லாம், அகற்றப்பட்டுவிட்டது நிலையத்தார்களால். இதுவரை வள்ளலாரின் நெறி படி நிலையம் நடைப்பெறவில்லை என்பதை அற நிலையத்துறையே ஒத்துக்கொண்டது. ஆணயையும் பிறப்பித்துள்ளார்கள்.
    கேள்வி 10. வள்ளலார் சமயக்கடவுள்கள்,(கணபதி,முருகன், பரம், பைரவர் உட்பட) பற்றி சொல்லியுள்ளார்களே? தைப்பூசத்தை தானே தேர்ந்து எடுத்துள்ளார்.?
    அய்யா அவைகள் சிறு குழந்தைக்கு கூட புரியும் படியுள்ளது. எல்லாமே தத்துவங்களே என்கிறார்கள். த்த்துவ சம்மாரமே என்கிறார்கள். உண்மைக் கடவுளுக்கு மனிதன் போல் மூக்கு, வாய் கை, கால்கள் கிடையாது என்று. இவைகளை படித்தாலே தெரிந்துவிடும். தை மாசம் குறிப்பிட்ட சமயத்தார்களூக்கு உரியது போல் சொல்கீறீர்கள். இயற்கையின் உண்மைகள் எல்லா உயிர்களுக்குமே சொந்தம். அதன் விளக்கங்கள், சிறப்புகள், எவர் அறிந்தாலும் எல்லோருக்குமே. முடிபாக சொல்ல வேண்டுமானால் முடிபான உண்மை பொது நெறி அறிய 1871 க்கு பின் உள்ளவைகளே போதுமானது ஆகும். எல்லாம் தெரிந்து, அறிந்து, அனுபவிக்க இவைகளே போதுமானது ஆகும். வள்ளலாரின் குரு ஆண்டவரே! நமக்கும் குரு ஆண்டவரே! இந்த உண்மை அறிய, அனுபவிக்க என்றும் விலகாது நமக்கு துணை நிற்பவர் நம் திருவருட்பிரகாச வள்ளலார்.
    பணிவுடன் சொல்லி நிமிர்ந்தேன். கைகட்டி வாய் பொத்தி குறிப்பால் வரையப்பட்ட வள்ளலாரின் படம் முன்பு நின்றிருந்தார்.
    சபையின் ஸ்தாபகர் சத்தமாக கூறினார்: “ சாப்பாடு ரெடி வாருங்கள் “
    எல்லோருமே விரைவாக எழுந்திருந்தோம். வேற்றுமையின்றி ஒத்துவர்களாக பக்கம் பக்கம் அமர்ந்திருந்தோம். பச்சை விரிக்கப்பட்ட்து. வெண்மை போடப்பட்ட்து. மஞ்சள் ஊற்றப்பட்ட்து. அனைத்து கலரும் வைக்கப்பட்ட்து. கண் ஒளிப்பெற்றது. மனம் மகிழ்ந்தது. ஜீவன் திருப்தி கொண்டது. ஆனால் ஆன்ம அறிவு (உண்மை அறிய )வெளிப்பட்டமாதிரி தெரியவில்லை எனக்கு. எனக்கு மட்டுமே.
    நல்ல விசாரணைக்கு வித்திட்ட அவரை தேடினேன். பிசியாக இருந்தைக் கண்டேன். நானும் பிசியானேன். (இன்சொல்லாடல் வேண்டும்).அவரின் ஆதரவை பரிசாக கேட்க காத்திருப்பேன். நன்றி. என்றும் உங்களின் ஆதரவில் ஏபிஜெ அருள்..
  • சாதி, சமயம், மதம் பொய் என்ற வள்ளலாரின் நெறி

    சாதி, சமயம், மதம் பொய் என்ற வள்ளலாரின் நெறி எங்ஙனம் எல்லோருக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது ?— Apj Arul
    அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் – இது ஒரு நல்ல விசாரணையாகவே கருதுகிறேன் – இவ்விசாரணை நம் பகுதியிலேயே செய்யப்படுகிறது – அன்பர்களே !
    உலகில் எத்தனையோ மார்க்கங்கள் (சமயங்கள்/மதங்கள்) உள்ளன – அதனை நிறுவியவர்கள் ”மெய்யறிவு உடையவர்கள்” என்கிறார் வள்ளலார் –மேற்படியான சமய, மத நூல்களின் சரத்தை நம் அறிவில் அறிய வேண்டின் நாம் எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டும் என நமக்கு தெரியாது – அவ்வளவு பெரிய விசயம் – திருமூலர், மாணிக்கவாசகர், பெரியாழ்வார், தாயுமானவர், என இங்கும், – மகான் தேவர் இயேசு, – மகான் இறை தூதர் நபிகள் நாயகம் ஸல் – புத்தர் – மகாவீர் – குருநானக் இன்னும் பல கடவுளர், தேவர், யோகிகள், ஞானிகள் உள்ளனர் –
    நமது பிறப்பிடம் அதாவது பெற்றோர் சார்ந்த சமய கொள்கையை தான் நாம் ஏற்று வாழ்கிறோம் – மிக மிக குறைந்த அளவு சதவீத மனிதர்கள் தான் தனது ஆரம்ப சமய மத கோட்பாட்டை மாற்றிக் கொள்கிறார்கள் – அம்மாற்றத்திற்கும் பல காரணங்கள் உள்ளது – நிற்க !
    அன்பர்களே !
    மேற்படி சமய, மத, மார்க்கங்களை நிறுவிய, கடவுளர், தெய்வம், தலைவர் ஞானி,யோகி, கர்த்தர் ஆகிய இவர்கள் மீது மனிதர் அனைவருக்கும் பக்தி உண்டு – பக்தி இல்லாவிடிலும் மதிப்பு, மரியாதை உண்டு – ஏனென்றால் எல்லோருமே நமக்கு மேல் நம்மை அனுஸ்டிக்கும் கடவுள் குறித்தே சொல்கிறார்கள் – கடவுள் இவரே, அவர் இங்ஙனமாக உள்ளார் என வெளிப்படுத்துவதில் தான் வேறுபடுகிறார்கள் –
    அதே போல் மேற்படி மார்க்கங்களில் பற்று ஏற்படுவதற்கு உள்ள பல வகை வழிபாடு சாதனங்களிலும் இவைகள் மாறுபாடு கொண்டுள்ளது – வெளிப்படுத்திய வழியில் முழு நம்பிக்கையை ஏற்படுத்தி, கருத்தில் ஆழமாக பதிய வைக்கும் அளவுக்கு, கலைகள் பல சொல்லப்பட்டு, அதன் கட்டுப்பாட்டில் நாம் வைக்கப்பட்டுள்ளோம் அல்லது நமக்கு ஓதப்படுகிறது
    அன்பர்களே !
    நாம் பற்று வைத்திருக்கும் சமய, மத, கோட்பாடு / வழிபாடு நமது அன்றாட நடவடிக்கையில் ஒன்றாக அமைந்து விட்டது – அதன் கட்டுப்பாட்டு ஆச்சார அடிப்படையிலேயே வழிபாடு, பழக்க வழக்கங்கள், நம் மனதில் பற்றி விடுகிறது – எந்தொரு காலத்திலும், எதற்காகவும் நாம் வைத்திருக்கும் பற்றை யாரிடமும் விட்டு கொடுக்காத அளவு கருத்தில் பதிந்து விடுகிறது – நாமும் நம் பற்றை விசாரணைக்கு உட்படுத்தியதும் இல்லை –
    ஆம் அன்பர்களே ! நாம் வணங்கும் கடவுள், தலைவர்கள் குறித்து ஏன் விசாரணை செய்ய வேண்டும் ? 💡  சொல்லப் பட்டவை அனைத்தும் தலைவர்களும் நல்ல விசயத்தை தானே சொல்லியுள்ளார்கள் ! அதனால் தான் நாம் அவை குறித்து விசாரம் செய்யவில்லை – ஆச்சாரங்கள் மீதும் எந்தொரு விசாரமும் கிடையாது – ஆச்சாரங்கள் அனைத்தும் கட்டுபாட்டு விதிகளை பெற்றுள்ளது –இந்த நேரத்தில், இந்த இடத்தில், இங்ஙனமாக மட்டிலும் சடங்குகள் செய்ய சொல்லும் கட்டுபாட்டு விதியை பெற்றுள்ளோம்–
    நீங்களே சொல்லுங்கள் ? ➡  நாம் கொண்டியிருக்கும் கொள்கையின் உண்மை என்ன ? நம் நிலை என்ன ? நம்மை அனுஸ்டிக்கும் கடவுளின் நிலை என்ன? இப்படியாகவா நாம் தினமும் வழிப்பாட்டில் துதித்து, நினைந்து, உணர்கின்றோம்? இல்லையே!

    நமக்கு இவரே கடவுள் ? அவரை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும் – தியானத்தில் நமது கடவுளையே தியானிக்கிறோம் – அவ்வளவு தான் – மற்ற எந்தொரு விசாரத்திற்கும் வழி வகை இல்லை –ஆக, கடவுள் குறித்தே எல்லா சமய, மதங்கள் போதித்தாலும் மேற்படி கட்டுப்பாட்டு ஆச்சார அடிப்படையிலேயே நமக்குள் பற்றும், மற்ற சமய, மத, மார்க்கங்களிலிருந்தும் வேறுப்பட்டு, கொள்கை அளவில் எதிராக நிற்கின்றோம் 😳 
    நமது இச்சைகளை நிறைவேற்றுவதற்கும் அன்றாட தேவைகளுக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் இவை போன்றவைகளுக்காக மட்டும் நமக்குள் / மனிதர்களுக்குள் ஒத்து போய் புலனிச்சை செய்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம் – ஆனால் மேற்படி கடவுள் கொள்கையில் சமரசமோ அல்லது இணைதலோ ஏற்படவில்லை காரணம் ஒவ்வொன்றிலும் உள்ள கட்டுபாட்டு ஆச்சாரங்களே ஆகும் –
    இந்த உண்மையை தான் வள்ளலார் கண்டு வெளிப்படுத்துகிறார்கள்கடவுளின் அருள் பெற கருணை வேண்டும் என்ற வாசகத்தை எல்லா சமய,மத,மார்க்கங்கள் பெற்றிருந்தாலும், அதில் எந்தொரு உரிமையையும் நாம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை – முடியாது – ஏனென்றால் ஒவ்வொரு மார்க்கத்திலும் இருக்கும் ஆச்சார கட்டுப்பாடுகள் நம்மை நம் அறிவை கொண்டு கடவுளின் நிலையை விசாரிக்க அனுமதிக்கவில்லை –
    இவரே கடவுள் இதுவே வழிபாடு இதுவே முடிவு என்கிறது நாம் சார்ந்திருக்கும் மார்க்கங்கள் யாவும் – அதை அங்ஙனமே எவ்வித விசாரமின்றி ஒத்துக் கொண்டு அதன் வழி நடக்கிறோம் – அங்ஙனம் அவ்வழியில் நடக்கும் போது அந்த சமய,மத,மார்க்க தலைவர்களால், ஞானிகளால், யோகிகளால், கடவுளரால், தேவரால், கர்த்தர்களால் பெறப்பட்ட பயனையே அவ்வழி சார்ந்தோர் பெறமுடியுமே அன்றி அதற்கு மேல் பெறமுடியாது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை –
    நிற்க ! இங்கு கடவுளின் கருணை எது ? என நாம் கேட்க கூடும் – இந்த இடம் தான் நம் அறிவின் அளவும் அது மேலும் விருத்தியாகும் இடமும் ஆகும் – கடவுள் கருணையை பெற நாம் தான் நன்முயற்சி செய்தாக வேண்டும் – கடவுளின் வழி திறந்தே உள்ளது – கடவுள் உண்மை நிலை காண எந்தொரு தடையுமில்லை –நாம் சார்ந்துள்ள சமய,மத,மார்க்கங்களின் ஆச்சார வகைகளே நமக்கு தடை ஏற்படுத்துகின்றன என இங்கு சத்தியமாக அறிதல் வேண்டும்

    அன்பர்களே !
    இந்த பிரபஞ்சத்தின் உண்மைகள் அதாவது பிரபஞ்சத்தின் வெளிப்பாடுகள் அதில் உள்ளவைகளான அண்டங்கள், உலகங்கள், உயிர்கள், பொருள்கள், இன்னும் பலவற்றையும் நாம் அறிந்திருக்கவில்லை ஆனால் இவை படைத்த இறைவன் இவரே என்று எங்ஙனம் முடிவு செய்துள்ளது நமது மார்க்கங்கள்? நான் சொல்வது நாம் இன்று சார்ந்திருக்கும் சமய,மத,மார்க்கங்களை சுட்டி காட்டுகிறேன் – இப்படி கூற காரணம், உண்மையை ( நம் மற்றும் கடவுளின் உண்மையை ) கற்பனை திரைகளால் அறியாமலும் வல்லப தன்மையாலும் மறைக்கப்பட்டுள்ளது – உண்மை என்றுமே இருந்தது இருக்கிறது இருக்கும் – அதுவே கடவுள் –
    உண்மையறிந்தவனுக்கு ஏது அவத்தைகள்? – நமக்கு வெளிப்படுத்தியுள்ள சமய,மத,மார்க்கங்கள் அனைத்துமே உண்மை நோக்கிய பயணமே அன்றி உண்மையின் எல்லை இல்லை என அறிதல் வேண்டும் – அதனதன் தலைவர்கள், ஞானிகள், கர்த்தர்கள், யோகிகள், கடவுளர், தேவர்கள் எந்தளவு சென்றுள்ளார்களோ அந்தளவு மட்டுமே பயனை பெறமுடியுமே அன்றி முழு பயனை அடையவே முடியாது என அறிக – பல சித்திகள் மற்றும் நெடுங்காலம் வாழுதல் போன்றவை நம் மார்க்க நெறியை கடைப்பிடிப்பதால் கிடைக்கும் – ஆனால் அதுவா பெரும் பயன்? –எந்தொரு மார்க்கத்தை சார்ந்திருந்தாலும் நம் எல்லாருக்கும் துன்பம்,பயம்,மூப்பு, பிணி, மரணம் பொதுவாகவே வருகிறது – ஏன், அந்த மார்க்கத்தின் தலைவர், யோகி, ஞானி,கடவுளர், தேவர்களுக்கு மரணம் இறுதியாக உள்ளது – எல்லோருமே செத்து அல்லாவா ஒழிந்தனர் அல்லது முக்தி, சாமாதி என்ற அமைப்பில் ஒடுங்கியல்லவா போயினர் என்கிறார் வள்ளலார் இதுவா கடவுளின் உண்மையருள்? இதுவா பெரும் பயன்?
    துன்பம், பயம், மூப்பு, பிணி, மரணம் போன்றவை மனிதன் (உயிர்கள்) பெறும் அவத்தைகள் ஆகும் – இந்த அவத்தைகளை போக்கி கொள்வதே நம் முயற்சி – பிறந்த நாம் , ’மரணமில்லாமல் வாழ்வதே சிறப்பு’ என அறிதலே உயர் அறிவாகும் – அந்த உயரறிவை நோக்கியே நம் அறிவு வளர்ச்சியடைகிறது – அதுவே இயற்கை அமைப்பு – இதற்கு பல லட்ச பிறவிகள் வேண்டியுள்ளது – இயற்கையை விதியை வெல்ல முடியாது என்பதே இது வரை கண்ட ஆய்வு முடிவு – வாழும் வரை பிறருக்கு உதவுவதும் அல்லது பிறர் துன்பம் செய்தாலும் சகித்து அடங்கியிருப்பதே ஒருமை (உண்மையின் மேன்மை) என்கிறது நமது முன் மார்க்கங்கள் – ஆனால் இதுவல்ல உண்மையின் முடிவு – அவத்தைகளை நீக்கிக் கொண்டு மரணமில்லா பெருவாழ்வு பெறுதலே உண்மையின் மேன்மை – இவ்வின்பம் சத்திய அறிவால் மட்டுமே பெற முடியும் – இந்த பெருவாழ்வு கடவுளின் அருளாலே கிடைக்கிறது – எவர் ஒருவர் கடவுள் நிலை குறித்த நல்ல விசாரணை செய்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அருள் கிட்டுவதாக உள்ளது – என் மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை என்கிறார்கள்
    ஆனால் நாம் சார்ந்திருக்கும் மார்க்கத்தில் கடவுளின் உண்மை குறித்து விசாரிக்க நாம் அனுமதிக்கப் படுகிறோமா ? அனுமதியில்லை – இவரே கடவுள், இதுவே சாதனம், இதுவே முடிவு என்கிறார்கள் – உலகில் வெளிப்பட்டுள்ள எல்லா சமய,மத,மார்க்கங்களிலும் நரகம், சொர்க்கம் உள்ளது – அவை மரணத்திற்கு பின் உள்ள அமைப்புகளாகும் என்கிறார்கள் – இங்ஙனம் இருக்க, ”மரணம் தவிர்த்தல்” என்ற உண்மை அவையில் எங்கு வெளிப்பட்டுள்ளதாக சொல்லமுடியும்? – வள்ளலார் என் மார்க்கத்தில் நரகம்,சொர்க்கம் என்பதில் எந்தொரு விசாரமில்லை என்கிறார் – சாகாதவனே சுத்த சன்மார்க்கி என்கிறார்கள் 
    அன்பர்களே !
    மனிதன் பிரிந்து பல சமய,மத,மார்க்கங்களை சார்ந்து உள்ளான் – நாம் எந்தொரு மார்க்கத்தில் இருந்தாலும் எல்லா மார்க்கத்தார்கள் என்ன என்ன பெறுகிறார்களோ அவையை தான் எல்லோரும் பெறுகிறோம் – எல்லோருக்குமே துன்பம்,பயம்,மூப்பு,பிணி,மரணம் வந்து சேருகிறது

    எல்லா மார்க்கத்திலும் நல்லவர்கள், அறிவு சான்றோர்கள், நீண்ட வாழ்வு பெறுபவர்கள் இருக்கிறார்கள் – அப்படியெனில் மார்க்கங்களிடையே வேறுபட்டிருக்கும் கடவுள் கொள்கை இதற்கு காரணமில்லை – நல்லவர்,அறிவு சான்றோர் ஆகுவதற்கும் நீண்ட வாழ்வு பெறுவதற்கும் ஒழுக்க நெறியும், அன்பும், அவரவர் தத்துவங்களை (உடலை) பராமரித்தலுமே போதுமானதாக உள்ளது என அறிக! – அன்பு, ஒழுக்கம் மேற்படி அனைத்து மார்க்கங்களிலும் உள்ளது என அறிதல் வேண்டும் –ஆனால், இதுவல்ல சுத்த சன்மார்க்க கொள்கை முடிபான முடிபு நோக்கி செல்கிறது – இதுவரை வெளிப்பட்டவையை உள்ளடக்கி மேலும் நல்ல விசாரணை இங்கு மேற்கொள்ளப்படுகிறது –நாம் மேலும் படிகள் ஏற கீழ்ப்படிகளாக முன் மார்க்கங்கள் உள்ளது என்கிறார் வள்ளலார் – சுத்த சன்மார்க்கத்திற்கு மற்ற மார்க்கங்கள் யாவும் அநந்நியம்- அந்நியமல்ல – இம்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல – சமயமத அனுபவங்களை கடந்தது என்கிறார் வள்ளலார் – உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் உண்மை கடவுளை குறித்ததே தவிர வேறில்லை – உபாசனாதி வழியாய் வழிபடுவது கொள்கை அல்ல – என் மார்க்கம் உண்மையறிம் அறிவு மார்க்கம் என்கிறார் வள்ளலார் – உண்மையறிய யாருக்கும் யாதொரு தடையுமில்லை – உண்மையறிதலே லட்சியமாக கொள்ள வேண்டும் – அதுவே உண்மையறிவு ஆகும் 

    அன்பர்களே ! சமய,மத,மார்க்கங்களிலும் உண்மைகள் உரைக்கப்பட்டுள்ளது ஆனால் முழு உண்மை அவையில் உரைக்கவில்லை – முழு உண்மை உரைக்காததால் தான் சமயம்,மதம் பொய் என்கிறார் வள்ளலார் – நாம் ஒருவருக்கு 1000/- கொடுத்திருந்தோம் சில காலங்கள் கழித்து பணம் வாங்கியவர் நம்மிடம் வாங்கியது 900/- என்கிறார் – அவர் மறதியால் அல்லது வேறு காரணத்திற்காக சொன்னாலும் அவர் பொய் சொல்கிறார் அல்லது தவறாக சொல்கிறார் என்று தானே சொல்வோம் –
    நம் வீட்டு பிள்ளைகளை புறப் படிப்பில் 100/100 வாங்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லும் நாம், நாம் கொண்டியிருக்கும் கொள்கையில் உண்மை முழுமையாக இருக்க வேண்டும் என ஏன் சிந்திக்கவில்லை ? பெரிய படிப்பை படிக்க வைக்கும், நாம் சாகாகல்வி குறித்து ஏன் படிக்கவில்லை? – நன்றாக படித்து பெரிய பதவிக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தும் நாம், கடவுள் அருளால் பெறக்கூடிய பெரும் பயனில் (மரணம் தவிர்த்தல்) ஏனில்லை அறிவு? இவை நம்மிடம் இல்லாமல் போனதற்கு இரு காரணங்களே ஆகும் – ஒன்று கொள்கை, மற்றொன்று காலம் – நமது சமய,மத,மார்க்கங்களில் நமக்கு ஏது விசாரணைக்கு அனுமதி? – நமது சமய,மத,மார்க்கங்களின் கட்டுபாட்டு ஆச்சாரங்களில் பற்று கொண்ட பின்பு நமக்கு ஏது காலம்? எனவே தான் அவையில் லட்சியம் வைக்காதீர்கள் என்று கட்டளையிடுகிறார் வள்ளலார் –

    அன்பர்களே !
    அச்சம் வேண்டாம் – நேற்று வரை கொண்டிருந்த லட்சியத்தை கைவிட்டு மற்றொரு லட்சியத்தில் –?? அஞ்ச வேண்டாம் – சுத்த சன்மார்க்கம் ஓர் உண்மை பொது மார்க்கம் – இங்கு உண்மை கடவுள் நிலை கண்டு அக்கடவுளின் அருள் பெற்று பேரின்ப பெருவாழ்வை பெறுவதே லட்சியம் – நமது முன்னோர்களை தொடர்ந்து தான் இந்த விசாரணை செய்கிறோம் என அறிக – இங்கு வெளிப்படும் நமது உண்மை கடவுள், நமது ஞானிகள், யோகிகள், தலைவர்கள், தேவர், கடவுளர், கர்த்தர் ஆகிய இவர்கள் எதிர்பார்த்தின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதியை தான் குறிப்பிடுகிறார் நம் வள்ளலார் – எனவே தான் அஞ்ச வேண்டாம் என்கிறார் வள்ளலார் –

    அன்பர்களே !
    இது வரை நாம் லட்சியம் கொண்டியிருந்த சமயங்கள், மதங்கள் குறித்து சற்று உற்று நோக்குங்கள் – அவையில் நம் பிண்ட லட்சணத்தை தான் கடவுளாக காட்டியுள்ளதை காணலாம் – இதை அண்டத்தில் காட்டி, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனுசனுக்கு அமைப்பது போல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லி யிருக்கின்றார்கள் – அடுத்து உண்மை கடவுளை நோக்கி விசாரணம் செய்து கொண்டிருந்த நம் தலைவர்களை, ஞானிகளை, யோகிகளை நாம் வணங்கும் கடவுளாக ஆக்கி கொண்டுள்ளோம் – இதுவே உண்மை – நம்புங்கள் என சொல்லவில்லை – நீங்களே உற்று நோக்குங்கள் என்றுதான் சொல்லுகிறோம் – , நாம் நம் நிலை மற்றும் கடவுள் நிலை காண ஒவ்வொருவரும் அவரவர் அறிவால் வள்ளலார் மார்க்கத்தில் நல்ல விசாரணை செய்தே ஆக வேண்டும் – கருணை ஒன்றே சாதனமாக உள்ளது – சாதனம் என்றால் பயிற்சி – கருணை என்றால் எல்லா உயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்பும் என்கிறார் வள்ளலார் – நம் நிலை காணும் போது எல்லா உயிர்களிடத்தும் நமக்கு தயவு ஏற்படும் – அதே போல் கடவுள் நிலை காணும் போது அக்கடவுளிடத்தில் அன்பு வந்து விடும் – அதன் பின்பு அருள் பெறுவதற்கு ஏது தடை? – இங்ஙனமாக வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்க உண்மை பொது நெறி உள்ளது –
    ஆனால் இதற்கு என்ன வேண்டும்? ஆசை வேண்டும் – எனவே தான் வள்ளலார் ”ஆசை உண்டேல் வம்மீன்” என்றும் ”ஆசை உடையவர்கள்” காலம் தாழ்த்தாது விரைந்து வாரீர் என்கிறார்கள் –

    நல்ல விசாரணை தொடரும்…

    – ஏபிஜெ அருள் – கருணை சபை மதுரை

  • பேருபதேசம் (தமிழ்) & THE GREAT SERMON (English)

    fb_img_15122963764391492990233.jpgபேருபதேசம் தமிழ் & ஆங்கிலம்

    — ஐப்பசி 7 (22-October-1873) சித்திவளாகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டி பேருபதேசம் ஆற்றிய‌ நாள்

     பேருபதேசம்

    ஸ்ரீமுக வருஷம், ஐப்பசி மாதம், 7ஆம் நாள், புதவாரம், பகல் 8 மணிக்கு, மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டினவுடனே நடந்த விவகாரத்தின் குறிப்பு.

    இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண்டிராதீர்கள். இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற – பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் – வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது – வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் – அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையிலிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் – இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.

    அவ்விசாரம் பரம் அபரம் என்று இரண்டு வகையா யிருக்கின்றது இவற்றிற் பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக விசாரம் விசார மல்ல. சாதாரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டிருக்கின்றானேயென்றால், அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை விசாரமுமல்ல. ஏனெனில்: விசார மென்கின்றதற்குப் பொருள்: வி-சாரம் என்பதில் வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது; அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் – இதைவிடக் – கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். எவ்வாறெனில்: ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம். ஆதலால், இவ்வுலகத்தில் வி-சாரமென்கின்ற உண்மை தெரியாது, விசாரமென்று வழங்கி, அதைத் துக்கமென்றே சொல்லுவார்கள். நாம் அப்படி அர்த்தம் பண்ணக்கூடாது. அவர்கள் பண்ணுகின்றது – துக்கமே விசாரமென்கின்றது – அது தப்பு; அவ்வர்த்தமுமன்று. சார மென்கின்றது துக்கம். விசார மென்கின்றது துக்க நிவர்த்தி. வி உபசர்க்கம். சாரமென்கின்ற துக்கத்தை நிவர்த்தித்தது வி ஆதலால், விசாரமென்கின்றது முன் சொன்னபடி பரலோக விசாரத்தையே குறிக்கின்றது. ஆதலால் இடைவிடாது நாம் விசார வசத்தராயிருக்க வேண்டியது. மேலும் வி – சாரமென்பது: வி விபத்து; சாரம் நீக்குதல், நடத்தல். ஆதலால் இடைவிடாது நன் முயற்சியின்கண் பயிலுதல் வேண்டும்.

    மேலும், சிலர் “இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுக் கொள்ளப்படாதோ?” என்று வினவலாம். ஆம், இஃது – தாம் வினவியது நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றது சத்தியந்தான். நம்மவர்களின் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுகின்றதுஞ் சத்தியந்தான். ஆனால், முன் சொன்ன ராக சம்பந்தமான பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்: அசுத்தமாயாதிரை சுத்தமாயாதிரை யென்னும் இரண்டுமாம். இவை கீழ்ப்பாகத்திலொருகூறும் மேற்பாகத்திலொரு கூறுமாக இருக்கும். கீழ்ப்பாகத்திலுள்ளது அசுத்தமாயாதிரை. மேற் பாகத்தில் சுத்தமாயாதிரை இருக்கும். இவற்றில் அசுத்தமாயாதிரை இகலோக போக லக்ஷியமுடையது. சுத்தமாயாதிரை பரலோக சாத்தியத்தையுடையது. இவற்றில் – ஆண்டவர் வந்து அனுக்கிரகஞ் செய்கின்றபோது, முயற்சியில்லாத சாதாரண மனுஷ்யர்களுடைய கீழ்ப்பாகத்திலிருக்கிற அசுத்தமாயை யென்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார். ஆதலால், அக்காலத்தில் நாம் அத்திரை நீங்கியவுடன் கூடியவரையில் சுத்தமாய்ப் புனிதர்களாக இருக்கலாமேயல்லது, பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுகிறதற்குக் கூடாது. மேலும், பஞ்சகிருத்திய விபவங்களும் இதர சித்தி முதலியவையும் ஆன்மானுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே மேலேற வேண்டும்.

    மேலும், இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின. ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும். கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை. பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்தமாயா திரை. கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்தமாயாதிரை நீங்கினபிறகு, மற்ற எட்டுத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். இத்திரைகளின் விவரத்தைத் திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க. மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

    இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். “தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?” என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளையடையலாம். அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால், நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்கவேண்டியது. முன் சொன்ன ஏகதேச சித்தி கற்பனையென்கின்றது வாசகப் பெரு விண்ணப்பத்தாலும் இயல்வேதாகமங்கள் புராணங்கள் என்ற அருள்விளக்கமாலைப் பாசுரத்தாலு* முணர்க. மேலும் அதிற்கண்ட குறிப்பையுந் தெரிந்து கொள்ளுங்கள்.

    இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
    இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
    மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
    மகனேநீ நூலனைத்தும் சாலம்என அறிக
    செயல்அனைத்தும் அருளொளியால் காண்கஎன எனக்கே
    திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
    அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
    ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
    – திருஅருட்பா 4176

    இதுபோல் வியாகரணம், தொல்காப்பியம், பாணிநீயம் முதலியவைகளில் சொல்லியிருக்கின்ற இலக்கணங்கள் முழுவதும் குற்றமே. அவைகளில் குற்றமே சொல்லியிருக்கின்றார்கள். எவ்வாறெனில்: தொண்ணூறு தொள்ளாயிரம் என்கிற கணிதத்தின் உண்மை நான் சொன்ன பிறகு தெரிந்து கொண்டீர்களல்லவா? இப்படியே ஒன்று இரண்டு முதல் நூறு முதலான இலக்கணங்களுக்கும் உகர இறுதி வருவானேன்? ஒருவாறு சித்தர்கள் காரணப் பெயராக இட்டிருக்கிறார்கள். தொல் – நூறு தொண்ணூறென்றும், தொல் – ஆயிரம் தொள்ளாயிரமென்றும் வழங்குகின்றன. தொல் என்பது ஒன்று குறையத் தொக்கது. தொன்மை தொல்லெனப் பிரிந்தது. வழக்கத்தில் தொள்ளாயிரம் தொண்ணூறு என மருவியது. இதற்குப் பத்திடத்திற்கு ஓரிடம் குறைந்த முன் ஆயிரமென்றும், ஒன்று குறைந்த பத்தென்றும் ஒருவாறு கொள்க. இப்படி நான் சொன்னதுபோல் சொன்னால், சிறு குழந்தைகள் கூட அறிந்து கொள்ளும்.

    இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் – அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானேயிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற – திருவருட்பாவில் அடங்கியிருக்கிற – ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.

    இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்தலாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், “எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, “தேடியதுண்டு நினதுருவுண்மை” என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். “கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக”** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றிவிட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

    மாயையாற் கலங்கி வருந்திய போதும்
    வள்ளல்உன் தன்னையே மதித்துன்
    சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்
    தலைவவே றெண்ணிய துண்டோ
    தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
    துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
    நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
    நன்றருள் புரிவதுன் கடனே.
    – திருஅருட்பா 3635

    கருணையும் சிவமே பொருள்எனக் காணும்
    காட்சியும் பெறுகமற் றெல்லாம்
    மருள்நெறி எனநீ எனக்கறி வித்த
    வண்ணமே பெற்றிருக் கின்றேன்
    இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்
    எய்திய தென்செய்வேன் எந்தாய்
    தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்
    சிறுநெறி பிடித்ததொன் றிலையே.
    – திருஅருட்பா 3503

    அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்.இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள். என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்; மிரட்டிச் சொல்லுவேன்; தெண்டன் விழுந்து சொல்லுவேன்; அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்; அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன். இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும். இராத்திரிகூட “நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டார்களே என்று, என்று…” ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திரமல்ல. உலகத்திலிருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன். ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்: எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும், நான் அங்ஙனம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்.

    இப்போது நீங்கள் – இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் – சாலைக்குப் போகக் கொஞ்சதினமிருக்கின்றது – அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட, மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது. நீங்கள் கொஞ்ச தினத்துக்கு அப்படிச் செய்து கொண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்திலுள்ள எல்லா ஜீவர்களும் நன்மையடையப் பிரார்த்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக்கொண்டும் வருகின்றேன். ஆதலால், நீங்கள் அப்படிச் செய்து கொண்டிருங்கள்.

    சமயந்தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை யறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம் எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை. “தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!” என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால்: ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.

    அந்த விசாரம் செய்வது எப்படியென்றால்: அண்டத்தில் சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் – இவைகள் எப்படிப்பட்டன? இவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன? இவை முதலான அண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார்? இத் தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் – இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன்? நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன? கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந்நகம் வளர்தலும் – இவை போன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமுஞ் செய்து கொண்டிருங்கள். இப்படி இடைவிடாது விசாரஞ் செய்து கொண்டிருந்தால், இவ்வுலகத்தின்கணுள்ள ஜனங்கள் அதைக்குறித்து ஏளனமாக சொல்லுவார்கள். அப்படிச் சொல்லுவது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில், அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலால் நீங்கள் அதை லக்ஷியம் செய்யக்கூடாது.

    இப்படியே “காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர் – ஆணுக்குக் கடுக்கனிடுதலும் பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்குச் சம்மதமானால் – காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா” என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகிற பக்ஷத்தில், காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா? இப்படி விசாரித்துப் பிரபஞ்ச போகத்தின்கண் அலக்ஷியம் தோன்றினால், நிராசை உண்டாம், ஆதலால், சரியை முதலிய சாதகம் நான்கில், நான்காவது ஞானத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கில், மூன்றாவது படியாகிய ஞானத்தில் யோகம் செய்கின்ற பலனாகிய நிராசை யென்னும்படி உண்டாகின்றது. ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்.

    இவ்விசாரஞ் செய்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே, கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார். ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள். இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். இனி நீங்கள் இதுவரைக்கும் இருந்ததுபோல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. இது முதல் – கொஞ்ச காலம் – சாலைக்குப் போகின்ற வரைக்கும், ஜாக்கிரதையாக மேற்சொன்ன பிரகாரம் விசாரஞ் செய்து கொண்டிருங்கள்.

    மேலும், சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதின்மூன்று பதினைந்து பதினாறு இருபத்துநான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது. அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்…. நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை. இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.

    இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை – தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை – எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த – உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ் ஜோதி 

    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி

    என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. “சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்”* என்னும் பிரமாணத்தால் உணர்க.

    மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.

    இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்: நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.

    உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃதுஆண்டவர் கட்டளை.

    எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம்(சித்தி வளாகம், மேட்டுக்குப்பம், வடலூர்). இது ஆண்டவர் கட்டளை.

    அருட்பெருஞ்ஜோதி    அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங்கருணை    அருட்பெருஞ்ஜோதி

    திருச்சிற்றம்பலம்

    பேருபதேசம் முற்றிற்று.

    THE GREAT SERMON(பேருபதேசம்) SAINT RAMALINGAM.(Revealed on 22-10-1873)

    This was revealed on 22nd October, 1873 (Tamil month of Aipasi 7th day),

    Tuesday morning 8a.m. at Mettukkuppam, Siddhivalaaham Thirumaligai,Cuddalore District.

    (Home of perfection where Vallalar attained Immortal body and made his body invisible and mingled with Arutperunjothi Almighty). After unfurling the Suddha Sanmarkam Flag, (one fourth yellow colour at the topand three fourth white colour at the bottom). This Maha Upadesa (or) Perupadeasam was given to be noted down by the disciples.

    “All of you living here are advised not to waste the time in vain, as you had been doing now.

    Until for some time when it is expected for the outward manifestation of the “Almighty” Arutperunjothi at the salai at Vadalur, you must be continuously involved in good enquiry and inquiry of the soul and God.

    To know how to do the “VICHAARAM” self inquiry, it is:- What is the nature and conditioned state of our-selves and our soul. And all so, what is the nature of self-existing Almighty God who is mastering and ruling us being seated above all of us.

    Accordingly, all of you should do “VICHAARAM”, either individually solitarily or collectively, along with amicable friends who are harmonious with or fit to your intelligence or knowledge and disciple, or otherwise, if you can have inquiry with VELAYUTHAM , (His disciple), he will reply upto the maximum standard of a man’s enough understanding.

    If we can do this kind of ‘VICHAARAM’, the fore most veil of dark green, which obstructs strongly our soul-knowledge without enlightment will get removed and vanish.

    If that first veil vanishes, all other veils will vanish more quickly and automatically. That Green colours the fundamental colour of black.

    We should appeal to the “Almighty” ARUTPERUNJOTHI”, with continuous thinking and singing with prayer for the removal of the so called Thick veil and also realizing our short comings and faults combined with our needs, even when we are sitting and relaxing by lying down on bed; and also we should make efforts with Devotion, and Divine love so that the real truth will be revealed to us. This “VICHAARAM”, is of two kinds;

    1. Param, the Supremely higher one which is about “ARUTPERUNJOTHI”

    2. Aparam, the lower which is related to The World of the Divine, or Param; where as aparam is related to This World, Aparam.

    Between these two, the ‘VICHARAM”, which is related to this world “IHA – LOHAM”: is not the real inquiry (VICHAARAM). Because, if anyone is involved in VICHAARAM, it should not be considered as standard “VICHAARAM” is VI + CHAARAM, Here this “VI” is prefixed to distinguish and deny the ordinary worldly “VICHAARAM”; Truly, CHAARAM means misery, sorrow. So “VI + CHAARAM” means to remove and renounce the misery and sorrow. Moreover, “VICHAARAM” is revealed only to refer to “para-loka-VICHAARAM” the inquiry about the divine world and divine life.

    Just as we remove the fungus above the stagnant water of the pond, it is not easy to remove the thick dark green veil of “RAAGA DHUVESA”, the “likes” and ‘dis-likes” which obstructs the vision of our soul knowledge, without the transcendental heat of “VICHAARAM”, ‘VICHAARA ATHI-USHNAM”. This kind of divine causal heat can be realized by the spiritual experience of an adept yogi.

    This Divine heat is not be known to be created or kindled by any other human efforts. Even more than that “VICHAARAM” exceedingly great heat. ATHI – USHNAM can be created by doing melting prayer, praying with devotional songs, and meditating and thinking about the Divine nature, Divine truth and glory. Only for this ATHI – USHNAM, the Yogi, go and live in forests, mountains and caves, for hundreds and thousands of years and kindle the heat with severe tapas, penance and strict observances and self-control.

    Besides doing this kind of TAPAS and creating “ATHI – USHNAM” or heat, it is by singing the Divine glory and greatness with prayerful songs and meditating the Almighty God Arutperunjothi, it is possible to create crores and ten crores (millions and billions) times of “ATHI – USHNAM”.

    How to produce that VICHAARA – ATHI – USHNAM ?. It is as follows:

    If we can try for one JAAMA or YAAMAM, (three or four hours of duration continuously) involved in Para VICHAARAM (i.e.) Divine inquiry. Without (IHA-VICHAARAM) this worldly enquiry, and also meditating or singing the glory, along with prayer of Devotional songs with melting of the soul and mind, we can attain and achieve whatever we have to attain.

    And hence in this world, the worldly people would refer to the VICHAARAM as misery and sorrow without knowing or understanding real truth and meaning of VICHAARAM. But we should not consider that kind of meaning. What they mean is that VICHAARAM itself as misery or sorrow, which is wrong, and also it is not the right meaning, ‘CHAARAM’ means, misery and sorrow (DHUKKAM). But “VICHAARAM” means the removal or destruction of sorrow and misery. And hence VI + CHAARAM = removing or driving away, the misery and sorrow. The prefix, “VI”, which had removed the misery and sorrow, (i.e.) CHAARAM so VICHAARAM refer only to PARA – LOKA – VICHAARAM, inquiry of the Divine World. And so we have to be continuously involved in VICHAARAM. Also VI + CHAARAM means “VI” danger or accident and mishappening, CHAARAM means removal or driving away danger and accident. Conclusively we should be trained and inculcated in good efforts continuously in SATH – VICHAARAM.

    Moreover, somebody may ask: Oh ! This is the best occasion or proper – time for the advent of the Almighty “ARUTPERUNJOTHI”.

    Why is it necessary to do efforts at this time of the manifestation of God ? Can we attain and achieve whatever we have to achieve ?

    Yes. This is good that you asked this; it is really True that the Almighty is to manifest. Also it is True that the veil and obscuring screen is going to be removed by Him. It is also true that you will achieve or obtain whatever you have to obtain. But the already mentioned green veil or screen which is connected with RAGA DHUVESA, the likes and dislikes, is existing in two parts.

    That is as follows:

    (1) Asuddha Maya veil, which is related to impure kind of Maya.

    (2) Suddha maya veil, which is related to pure kind of maya or illusion. Among these two one part is at the base on the lower portion; another at the top portion. That which is at the lower is the veil of Asuddha Maya. That which is at the top is veil of Suddha Maya. Among these two, Asuddha Maya veil has the aim, and tendency of enjoying this worldly enjoyment “IHA LOKA PHOGA”, But the suddha Maya veil is related to the achievement and perfect realization of paraloka, the Divine world and life.

    When the Almighty ARUTPERUNJOTHI manifests, and grants favour by His Omni Grace, he will remove only the Asuddha Maya Veil at the lower part of the ordinary human beings, who had no effort and practice of SATH – VICHAARAM.

    Therefore it is possible at that time when that lower veil get removed, we will be blessed with purity to become purified persons, but we can not achieve whatever wish and goal of perfection. Moreover we cannot obtain the Divine favours of performing the penta-divine functions (of creation, production, purification, involution and evolution by grace-blessing), along with other siddhis or (supernatural powers of perfection) and also to practice and gain the spiritual experience, ANMA – ANUPAVA.

    Therefore, we will have to do good efforts and get spiritual upliftment.

    Also the confusion and loud crying and noisy talks, etc., had emeroad, with the divine, purpose, of preparing training the true, and adherents and devotees to perfection and ripening of soul and also to avoid and remove the sinners and criminals. And so if we can live with continuous effort along with special attention or awareness, both Asuddha Maya Veil at the bottom and suddha Maya veil at the top which is of green colour will be removed at the time of the advent and manifestation of the Almighty God. Asuddha Maya Veil is of dark green colour but the Suddha Maya Veil of golden green colour. When the Suddha Maya Veil of dark green colour had been removed, other following veils will be very quickly removed.

    You can find and realize the detailed descriptionof these Veils or screen detailed or described in the Arutperunjothi Agaval poem (of 1596 lines). Moreover, when these veil get removed, anyone can perform the divine, penta functions, etc., Super natural deeds. And so, if every one can try with good efforts, it is possible to gain proper and sufficient benefits and profits.

    Further more, let us not put our belief or faith and goal in the philosophical Art’s and stories such as VEDAS, AHAMAS, PURANAS, ITHIHASA etc. Because, in these books of imaginary arts, only symbolic and hidden Truths are erotic without revealing the real facts, the authors had veiled and obscured the truth, as though somebody is covering with soil and dust (over the death body). Even without revealing with a little atomic measure, they had symbolically represented the micro-cosmic (pindami-Nature superimposed upon the micro-cosem (Andam).

    For example, the false authors had named and represented the Almighty as “KAILASAPATHI”, ‘VAIKUNTAPATHI’ and ‘SATHYA YOKAATHIPATHI’ and also imaginarily constructed the proper shrine, the vehicle (VAAHANAM, WEAPONS (ARPUTHAM). The inner mould (VADIVAM), the external form “RUPAM” etc., exactly like a human being and even forgetting the Truth, they had expressed the imagination itself as Truth. If anybody enquires, “Does the divine God possess hand and legs similar to a human being ?”. They hesitate and get be wildered without knowing to reply. The later followers, calling or naming themselves as great men, had puff led and bluffed nonsense things by closing their eyes of Truth vision.

    But the ancient one who had covered and hidden the Para Truth was a great Adept or genius and powerful person. Till now, nobody had discovered and found out what he had veiled and hidden, what he had looked or covered, no one had struck and broken the lock that he had sealed.

    In the false religions, some occult power (KARMA), Siddhi had been imaginatively promised. If we try perseveringly for ten or eight years for every SIDDHI, it is possible to attain little siddhi. If we put our Goal or Aim for these siddhis, the goal towards the Almighty God, will get deviated away.

    If the aim of God realisation goes, at last the great profit or benefit will go in vain. Or, otherwise, if anyone tries for a long time, and attains a little siddhi, the great gain or soul benefit will go away.

    So, let no one put the aim to attain the little siddhi but should aim at the Almighty God only. The evidence for the imaginatory description of above said siddhis: the prose writing ‘PERU VINNAPPAM’ (of Vallalar) and THIRU ARUTPAA – ARUL VILAKKA MAALAI poem which begins as “IYAL VEDHA AAHANAMGAL” and also one should realize the important notes and ideas in them.

    Like this, the grammatical formulas in “VYAAKARANAS, THOLKAAPIYAM, PAANINEEYAM” etc., are almost false and imperfect. The explanation is (90 ninety, Thonnooru) 900 Nine hundred, THOLLAAYIRAM, which are the numerical names “THOL’ – The real meaning of “Thol” is one digit less than the said 90, 900 also ONDRU (one-1, two-2…) Nooru (hundred) 100…. (999). The last letter ends in ‘U’.

    This is because the siddhar’s had named the number to end in “U” for some reasons.THOL + NOORU = THONNOORU, 90 = 100 – 10. THOL + AAYIRAM = THOLLAAYIRAM: 900= 1000 – 100. “THOL’ means one digit less than the said. “THONMAI” had been inflected or reduced to “THOL’ (THOL + MAI) = THONMAI.

    Likewise, we should not put faith in ‘SAIVAM, VAISHNAVISM” etc., religious and VETHAANTHA AND SIDDHAANTHAM ETC. philosophies. Because in them, the Truth had been revealed only partially, and Mystically (secretely, obscuring the Truth but not expressed plainly and perfectly). If we learn and practice these arts, there is not enough time for us. And so, let no one put the aim on the above religions etc., Because we can gain only a little benefit but cannot attain the great life of eternal bliss of soul gain which is natural truth and also realize with active living Because there is no time for us, I stand evidence for this truth. First, in my early life time, I had put my full aim and goal in SAIVA RELIGION with intense devotion, as known or witnessed even by PATTANATHTHU SWAMIGAL VELAYUTHA MUDHALIYAR ETC. and also few others. That Dogmatic faith had gone away (how ?) you will know from my early poems (of Fifth Volume) of ‘THIRU ARUTPAA SONGS’.

    Why I(Vallalar) had that much attachment and was immersed in that was that I had been a very little knowledge and so-little understanding, but now the Almighty Arutperunjothi had lifted me up above lofty Summit heights. This because I had abandoned every thing or attachments and also if you can leave anything untrue and unwanted things, you can get great gain like me(Deathless life).

    Had anyone, who had not renounced or sacrificed fully gainedany Profit no but they had only lost what they had got. They had not gained any profit, if anyone assumes that the attachment and aim on the religion had lifted me up. But what is that which had lifted me to this highest place, that the DHAYAVU – (THANIPERUNGARUNAI’ or supreme compassion) ‘the Almighty had revealed that which had to be INFORMED even in my early times”, the reference from my Prose Writings of great Appeals (PERU VINNAPPAM) and also from the songs of grace (THIRUVARUTPA POEMS) beginning from ETHTHEAVARAIYUM NIN SAAYAIYAAI”, I viewed all Gods or Devas as the shadow or similitude of ‘ARUTPERUNJOTHI’ and also in the poem ‘THEDIYATHUNDU NINATHURUVUNMAI’. “That I had searched for the truth of Thy Reality.

    Moreover, what He had revealed the true and great discipline is “KARUNAIYUM SIVAMEA PORUL ENAK KAANUM KAATCHIYUM PERUGA’ meaning ‘the compassion and the aim of God Almighty, ARUTPERUNJOTHI, is the aim of real matter and goal to be seen as the view point. Only this Gracious compassion had lifted me up. That is DHAYAVU, Compassion. Only this mercy or compassion had uplifted me up, for that compassion “ORUMAI” the oneness or the unity feeling of souls, is necessary. Only when that “ORUMAI” the oneness of unity of souls is realized the compassion will emerge or manifests ‘only when compassion comes, we can go up to great heights. Now my knowledge had transcended above so many millions of universes (ANDAMS), that had resulted from this ‘ONENESS’ of soul fellowship.

    If anyone who is obstinate, does not come along with my path or does not heed to my words, or obey my advices and instructions,in whatever manner, but behaves rudely. I will try my best with skilful STRATEGEM or by any trick (THANTHIRAM), of

    1. அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்

    2. மிரட்டிச் சொல்லுவேன்

    3. தெண்டன் விழுந்து சொல்லுவேன்

    4. அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்

    5. அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன்

    1. saying good or friendly words or speeches; or

    2. I will teach or mend with threats or scoldings or challenges (of strict observances of spells) or;

    3. I will fall prostratedly at the feet, making entreaties to condescend to my words or I will surrender with obedience and obeisance to get him friendly; or

    4. I will try by giving money and other desirable objects, gift articles to bring anybody under my control and favourable co-operation or;

    5. atleast I will try my earnest prayer, (appellations, worshipful chantings or singing songs of Divine – Love and compassion). Like wise, I will bring anybody to come to the path of virtue and goodness of compassion and grace.

    Let all of you also try and pursue, like me, in the same method and manner.

    Even during the previous night, I had been appealing and soliciting with prayers to the ALMIGHTY ARUTPERUNJOTHI, that without any active presence, even for a second, the people here would not feel at home and live satisfactorily.

    That is NOT meant exclusively to the people living HERE ONLY, but also to the whole human beings, or groups of people living all over the world.

    The reason is that I had been appealing to the Lord that all are my brothers and sisters of integral unity of Right of soul love and be loved by compassion, I had been revealing this truth of the universal Right of the Integrity or oneness of soul-love, ‘AANMA NEYA – ORUMAIPPAATTU – URIMAI’.

    If anyone does not come to the path of discipline and perfection, but behave like mean-minded or petty minded persons with lower intentions (of animal feelings and behaviour), I will try my best as there is little or short time for the manifestation of the Almighty before the sanctum sanctorum of Sathya Dharma – Saalai (Sanctuary of Eternal Service) or in the public way of common preparation and collective evolution, till then let all of you come to accordance to fit with true discipline and also try to pursue and mend others also, to bring into harmonious trend of ourselves or merciful beings, try and through any trick or means of psychological methodology.

    Let you all try and do like this for some time. I will also pray and appeal to the Lord, for the attainment of soul profits and so all of you also should behave and not according to me.

    NOT ONLY the religious persons but also the God men VEDANTHA AND SIDDHAANTHA systems of philosophy, who had been proclaiming and calling themselves as great man and great genius or leaders, prattle and babble like religious fanatics are revealing ONLY false rumours and statements leaving the Truth.

    They are NOT revealing the truth outwardly or explicitly to be understood by clear reasoning.

    I had been sympathizing with or feeling heavy at heart at those people who, without knowing or realizing the Divine, are circumventing me or coming round in obeisance to me. Considering me as the Divine-embodiment or God head. Oh ! Pity ! I had been fully sympathizing with them that these (our) brothers, not knowing or realizing the Divine are coming round me and accompanying me always.

    The reason why they had not realized the Divine is that without experiencing the taste of any eatable, the real taste could not be known there will be no wish or liking for any eatable, whose taste had not been known or experienced already.

    Likewise, until one has the direct experience of Divine, there will be no wish or devotion for the Divine.

    And hence, let you be involved in doing “SATH VICHAARAM” with the main goal or intention or realizing of knowing the Divine.

    The methodology of doing SATH – VICHAARAM is as follows: –

    ‘What is the real position and status of the sun, the moon and the stars in the macrocosmic-universe (ANDAM) ? What is the inner form, outer form and the real nature of them (the son, the moon and the stars).

    Who are in this physical body, the Microcosmic-form, (PINDAM) ?

    What is the reason that there is the over growth of hair on the eye-brows, hand-pits etc., What is the factor of reason for the hair, not growing upon the parts of the body like the forehead etc.,?

    What is the reason for the emanation or germination and their further growth of the nails on the fingers at the legs and hands ?

    What is the inner form, outer form and the self existent Nature of them ? Likewise, one should enquire about the Micro-cosmic phenomenon (PINDAM). This should be done uninterruptedly and continuously. If we are deeply involved in this and continuously in doing SATH – VICHAARAM, the worldly people would speak ridiculously or criticize about that.

    To speak ridiculously ill of this (SATH – VICHAARAM), like that is the inner tendency or nature of those people. Because they don’t know the real TRUTH (UNMAI) about this.

    And hence, let you NOT consider or bother about their criticism (or let you not intently worry about their ridiculous censures).

    Likewise, if we can inquire about the fact that the Almighty Creator, who had put proper and sufficient holes in the ear-lobes, He could have already put proper and fit holes in the ear and nose, if HE (THE ALMIGHTY) had the wish and will to adore the ears with ear-studs for the males and to adore the nose with nose-rings for the females, then no one would have the acceptance and preparation for adorning the ear with the ear-rings and the nose with diamond-studs etc,

    If we do self enquiry thus and create carelessness or intention less ness for the worldly enjoyments, the state of desire less ness (NIRAASAI), would be attained.

    And hence, the fifteenth state of YOGAM IN GNAANAM (Gnaanaththil Yogam) which is among the four kind of steps of divine practice of preparation (SAADHANAM), like

    i) SARIYAI (divine discipline and observances)

    ii) KIRIYAI (divine action or divinely deeds of devotion etc., )

    iii) YOGAM (Divine union);

    iv) GNAANAM (Divine Wisdom)

    Then the third step of Yogam in Gnanam

    Whereas,

    i) Gnaana – Sariyai, 13th step.

    ii) Gnaana – Kiriyai, 14th step.

    iii) Gnaana – Yogam 15th step.

    iv) Gnaana – Gnaanam, 16th step.

    And hence, let you be involved fully in this VICHAARAM or self enquiry.

    If you could be practicing this Saadhana of Vichaaram, continuously, the Almighty will reveal to you limitedly for the conditioned knowledge).

    (KANDAMAAHA – கண்டமாக) when the Almighty manifests out (for collective evolution) and again, when you attain the state of ONENESS ofINTEGRITY (ORUMAI) of feeling and realization. He will (surely) manifest fully or unlimitedly (AKANDAMAAHA அகண்டமாக), (without reserve or exemption or exception).

    And hence, let you be involved peaseveningly in this effort.

    I had been advising and revealing the TRUTH to you for about 2 ½ (Two and half) years, Further, there will be some “STOPPING” or half of involution for those who will tell or revel to you.

    Further more, let you NOT think and behave or live as you had been so, in the past till now.

    (THIS WILL BE THE LAST WORD OR REVELATION (KADAISI VAARTHTHAI)

    “From NOW ONWARDS”, let you be involved for some time, until the manifestation of the Almighty in the public or common revelation at the DHARMA SALAI (Sanctuary for the external service) in doing SATH – VICHAARAM or self inquiry.

    Moreover, in the sacred tests or Religious and Religio-philosopher, their so-called authors or authorities had hinted or noted the Divine Truth, as symbolic Representation and also without revealing exoternically or explicitly, they had revealed the partial truth, esoterically or mystically, such as or like this “SIVAAYANAMA” (Salutations to the Lord Siva) combining, with the core formula ‘SIVAAYANAMA” other complex forms (SANGAI) of 1, 2, 3, 4, 5, 6, 8, 10, 13, 15, 16 etc., permutations and combinations of MANTRAS and had put them into practice and it is seen prevailing in the daily practice of the public.

    The meaning of the Mantras will vary in many measures and interpretations. And hence, our GOAL to be attained is ONLY the (AANMA – LAABAM) Soul-experience or Soul Profit which is the experience or enjoyment of the Divine Bliss (SIVVANUBHAVAM).

    For all of you living here (with Almighty’s faith), there is no worry or enquiry about (SUVARGA (Heaven) or NARAHA (hell).

    Those who are concerned about the heaven or hell, will practice so many Saadhana or practices and after attaining little profit or infinitesomel Boddhis (occult or supernatural powers), will get obstructed in their spiritual path and at last,,by divine favour or Divine help of omnnigrace, they will practice the good effort or perseverance of compassionate service (KARUNAI – NAN MUYARCHI) and consequently or ultimately obtain the ultimate perfection of bliss (Siddhi – inbam). This process is very rare and tedious.

    At his moment, the Almighty ARUTPERUNJOTHI had removed or abolished everything (untruth or non bliss or all miserable manifestations) had been revealing as to me, in order to attain the supreme, soul-bliss, with the favourable help and guide of the primary saadhana, for the ultimate experience or enjoyment of the Divine Bliss (of Eternal Blissful Life).

    I had already revealed, I am revealing this NOW and I will also reveal in this future out of the sympathetic feeling of the universal Right of the Integrity or Oneness of Soul-love and compassion (AANMA NEAYA ORUMAIPPAATTU URIMAI) this TRUTH, emerging from the soul experience of Truth knowledge (MEYYARIVU), the Truth experience of Truth knowledge and the enjoyment of the soul bliss of (Eternal Blissful Life), so that all of you have to attain like me. without doubt, misconception or confusion or of understanding.

    The Divine commandment of our Almighty ARUTPERUNJOTHI, is as follows: –

    “As our FIRST or FOREMOST Saadhana or spiritual practice, is the “KARUNAI” the Discipline of soulful compassion, the Almighty had taken explicitly this Divine Formula (THIRU MANTRA), as the Foremost practice or primary saadhana, as

    “ARUTPERUNJOTHI ARUTPERUNJOTHI

    THANIPERUNGARUNAIARUTPERUNJOTHI”

    “Omnigracious Infinite Light,

    Omnigracious Infinite Light,

    Unique-Immense-compassion

    Omnigracious Infinite Light”

    Mercy (DHAYAVU),compassion (KARUNAI) and omnigrace (ARUL) will reveal or hear the same, and similar meaning, and hence, the soul knowledge with Supreme compassion ITSELF, is the fully perfect and whole Bliss. That is, the Supreme Knowledge with its Supreme Compassion. This is the word – for word meaning of the MAHAMANTRA VAAKYA, the Great sentence of the Greatly Divine – formula.

    If anyone continuous and got ripened into the spiritual Saadhana of Practice, there is no obstacle for the ultimate enjoyment of the Divine Bliss (INBA – ANUBHAVAM).

    Let your realize this fact through the evidence of proof of the classical Text:

    “SANTHATHAMUM VEDAMOZHI, YAATHONRU PATRIN ATHUTHAAN VANTHU MUTRUM”

    Meaning, whatever VEDA or Truth of knowledge, you take as the word of belief of faith, to be realized, the ultimate GOAL will be attained accordingly.

    Moreover, the Karma Siddhar (Supernatural persons of divine action, with occult powers), of impure – maaya – nature, had obscured or veiled the Divine – TRUTH, with revealing it explicitly.

    Till today, these had been not other – Gnaana Siddhar of pure – Maaya (illusion),nature, who were great in experience of Truth knowledge and Bliss. Till now, there had been no prevalence of Suddha-Sanmaarkam, the Absolutely True path of compassion and Eternal Blissful Life.

    Moreover, even the dead would have got resurrected back to new spiritual life. And hence, NOW, THIS ONLY, IS THE PERIOD OR Duration of SUDDHA SANMAARKAM.

    ONLY to hear witness to this TRUTH, the external symbol of aanman, a Flag had been unfurled, NOW ONLY.

    The bare TRUTH of the Flag is that, there is a system of plexus, starting from the navel (umbilicus, NAADI) and terminating at the eye-brow centre.

    At the fore end of the fore head, there is a membrance hanging within.

    The base or bottom of that membrance is of white colour, whereas the upper part of it is yellow colour

    Below this membrance, there is a NERVE, moving up and down in simple Harmonic Motion.

    This kind of FLAG could be got realized in our soul experience.

    ONLY to refer to this experience, symbolic colour had been unfurled.

    Further more, better experience will be revealed for all in our soul knowledge.

    Even when I start to reveal the TRUTH, as I had been ORDAINED to do so, there is NONE, to understand and realize this fully.

    As there is the Sanmarka Flag got unfurled externally, all of them will realize the TRUTH. Those who had come earlier with this Mission of Messengers to reveal the TRUTH, had NOT ONLY hidden the truth, but also obscuredit as though throwing mud and soil upon the TRUTH.

    At this moment, the Almighty had been revealing them, revealing NOW, and will be revealing further. Let all of you perseverinoly pursue, with continuity SATH VICHAARAM Self inquiry, with full vigilance, attention and true knowledge.

    Necessarily and compulsorily, there should be the discipline of compassion, which is the basic for SATH VICHAARAM.

    Also, there should ALSO be the general, public and common feeling of the soul Right of sharing with the common Right of Integrity or Oneness of Soul Love.

    If you can live like this, you will gain all benefits, and gains at the time of the manifestation of the Almighty ARUTPERUNJOTHI.

    This SHRINE (of Siddhivalaga Thirumaligai – Sanctum Sanctorum) will bestow millions and billions times help and assistance, more than that which could be done by one’s father, mother elder and younger, brothers etc.,

    This is TRUE, TRUE, TRUE as this is the Divine commandment or the ORDAINED DECREE of the Almighty.

    Arutperunjothi Arutperunjothi

    Thaniperungarunai Arutperunjothi

    Karunai Sabai-Salai

    34, Poombuhar Nagar North Extn.,

    Uthangudi, Madurai-625 107. Tamil Nadu. India.

  • வள்ளலார் உடைத்த பூட்டு – ஏபிஜெ அருள்

    No automatic alt text available.

    இனி எத்தனைக் காலம் தான் கடவுளை நாம் ஏமாற்றப் போகிறோம்?-

    ஆம்- பணம் தேடுதல், வேலைப் பழு, பந்த பாசம், தீராத இச்சை, சுகப்போகம், சடங்கு ஆச்சாரங்கள் மூலம் கடவுள் வழிபாடு, முதலிய இவையில் தான் நாம் விழுந்து கிடைக்கிறோம்-

    கடவுள் பக்தி அதிகம்  உள்ளவர்களாக தோற்றத்தில் காட்டுகிறோம்-

    உண்டியலில் ஒரு பெரிய தொகையை போட்டுவிட்டு திருப்தியடைகிறோம்-
    ஏதேனும் ஒன்றை வேண்டிக்கொண்டு காணிக்கை செய்து முடித்து விடுகிறோம்-

    இங்ஙனமாகவே நம் வழிபாடும்- நாம் கொண்டியிருக்கும் நெறியும் உள்ளது-

    இதுவா நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு-
    இதுவா உண்மை அறிவு?

    இதோ வள்ளலார் சொல்கிறார்கள் ;
    இது போல் இனி இராதீர்கள்- காலத்தை வீணில் கழிக்காமல் – நம் நம்முடைய நிலை என்ன? நமக்கு மேல் நம்மை அனுட்டிக்கும் கடவுளின் நிலை என்ன? என விசாரம் செய்யுங்கள்- என்கிறார் வள்ளலார்-

    ஆம் அன்பர்களே!
    இன்றைய வேகமான சூழ்நிலையில் ஏனோ தானமாக இனி கடவுளை வழிபாடு செய்யாமலும்,கடமை முடிந்தது என எந்தொரு சடங்கு சம்பிராதயம் செய்யாமல், உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்வோம்-

    பெண்ணை நேரில் பார்த்து கல்யாணம் செய்த நாம்;
    நிலத்தை நேரில் சென்று பார்த்து பத்திரம் பண்ணிய நாம்;
    கொடுத்த பணத்தை எண்ணி பார்த்து வாங்கும் நாம்;
    சுவையை தேடிப்பார்த்து உணவு சாப்பிடும் நாம்;

    கடவுளை மட்டும் நேரில் காண ஆசை இல்லாமல் போனது ஏன்????
    இங்ஙனம் ஆசையில்லாமல் இருக்கும் நம்மிடம் உள்ள பக்தி எப்படி பட்டது? கடவுளை காண வழி வகுக்காத மார்க்கம் என்ன மார்க்கம்?

    இதோ வள்ளலார் அழைக்கிறார்-

    “கடவுள் நிலைக் காண ஆசை உண்டேல் வம்மீன்” – என்கிறார்-

    சுத்த சன்மார்க்கம் சார்ந்து உண்மை கடவுள் நிலை காண்போம்-
    இது சத்தியம் இது சத்தியம் இது சத்தியம் என்கிறார்-

    வள்ளலார் மார்க்கத்தில் ஒவ்வொருவரும் கடவுள் நிலை காணுதல் வேண்டும் என உள்ளது- அக அனுபவமே உண்மை என்கிறது –

    கடவுள் நித்திய வஸ்து என்றால் கடவுளிடத்தில் கடவுளால் தோன்றிய நாம் ஏன் அழிய வேண்டும்? எனச் சிந்தனை வள்ளலாரிடத்தில் மட்டுமே தோன்றிற்று-
    அதன் அடிப்படையிலேயே தொடர்ந்து விசாரித்தார்கள்-
    ஆனால்—-
    உண்மை கடவுள் குறித்த அவரின் விசாரணைக்கு தான் வைத்திருந்த சமய நெறிப்பற்றும் ஆச்சார கட்டுப்பாடுகளும் தடையாக உள்ளன எனக் கண்டார்கள்-
    ஆம் அன்பர்களே! எந்தொரு மார்க்கத்திலும் அதன் கடவுளை தாண்டியோ, சடங்குகளை விட்டோ செல்ல/ சிந்திக்க உரிமையுள்ளதா?

    இந்நிலையிலேயே நம் வள்ளலார் சமயப் பற்றை கைவிட்டார்கள்-
    சடங்கு, ஆச்சாரங்களை விட்டொழித்தார்கள்- இவை கை விட்ட உடன் எந்தொரு கட்டுப்பாடும் வள்ளலாருக்கு இல்லை- உள் அழுந்துவதற்கும், சிந்திப்பதற்கும், சிந்தித்ததை விசாரிப்பதற்கும் தடை ஏதும் ஏற்படவில்லை-

    சமயத்தில் இருந்தால் இவரே கடவுள் என கருத்தில் ஏற்றியே சிந்திப்போம்-
    நமக்குள் ஏற்படும் ஒளியில் சிந்தித்ததே தோன்றும்- ஆனால் அந்த சிற்றொளியை கண்டு பல் இளித்து இறுமாந்து இருந்து விடாதீர்கள் என்கிறார் வள்ளலார்
    – நமக்கு தோன்றிய சிற்றொளி உண்மை கடவுளின் திருவுருவம் அல்ல-

    உண்மை கடவுள் திருவுருவம் காண வள்ளலார் கீழ்வருமாறு வழிபாடு செய்ய சொல்கிறார்கள்;

    “ ஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்யின் —” என்கிறார்கள்-

    “கடவுளே! நீங்கள் இருக்கிறீர்கள் என்று எனது மனித அறிவும், பிறவி தோறும் பெற்ற அனுபவமும் உணர்த்துகிறது- நம்பிக்கை என்னிடம் ஏற்பட்டுள்ளது – ஆனால் உங்களை என் அறிவில் அனுபவத்தில் பார்க்க வேண்டும் என்ற வேண்டுதலே உண்மை அறிவு ஆகும்- அப்படித்தானே?
    அன்பர்களே! என்றாவது நாம் சென்று வணங்கும் கோயிலுக்கு சென்று, இன்று நான் என் தெய்வத்தை கண்டு பேசாமல் வரப்போவதில்லை என்று இருந்தோமா? அல்லது ஆசை நமக்கு ஏற்பட்டதா? அந்தளவில் தான் நமக்கு கடவுளையும், சிந்திக்க விடாமல் சடங்குகளையும் செய்ய வைத்து விட்டார்கள்-

    இதோ வள்ளலார் சொல்லுகிறார்கள்;
    “கடவுளின் உண்மையை மறைத்தவன் ஓர் வல்லவன் – அவன் மறைத்தை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை- அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்க வில்லை- இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை-”
    மேலும் கூறுகையில்;
    சமயங்களிலும், புராணங்களிலும் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்” என்கிறார்-

    வல்லவன் பூட்டிய பூட்டை உடைத்தார்-
    கடவுளின் உண்மை கண்டு உலகிற்கு வெளிப்படுத்தினார் வள்ளலார்-
    இங்கு சாதியில்லை – சமய,மத, வேறுபாடில்லை – சடங்குகள் இல்லை –

    அன்பர்களே! உண்மை அன்புடன் அழைக்கின்றேன்!
    வாருங்கள் சுத்த சன்மார்க்கம் சாருங்கள்!

    நல்ல விசாரணையை தொடர்ந்து செய்வோம்- ஏபிஜெ அருள்

  • சாகாகல்வி என்றால்,,,???

    Image may contain: 1 person

    சுத்த சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை- சாகின்றவன் சுத்தசன்மார்க்க நிலையைப் பெற்றவனல்லன் – சாகாதவனே சுத்த சன்மார்க்கி- என்கிறார் வள்ளலார் 

    நிற்க!
    இது உண்மையா ? இது சாத்தியமா ? என்று ஒரு பக்கம் சந்தேகம் இருந்தாலும் மேற்படியாக சொன்ன ஒரே மார்க்கம் வள்ளலாரின் மார்க்கமே

    சாகா கல்வியை இறைவனே உரைத்தார் என்றும், அப்பயனை தான் பெற்றதாக சொல்லுகிறார் வள்ளலார்- மேலும் எல்லோரும் பெறுவதாகவும் உள்ளது என்கிறார்கள்- இந்த உண்மையை ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையால் தெரிவித்தேன் என்கிறார்கள்-
    மேலும் வள்ளலார் கூறுகையில்; தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிக்கின்றது- அதை தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்- என்கிறார்கள்

    திருவள்ளுவர் எழுதியது திருக்குறள் என எல்லோரும் அறிவோம்-

    நிற்க! திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து பாடல்களில்;

    குறள் 3:
    “ நிலமிசை நீடுவாழ் வார் ”
    (குறள்: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்)

    குறள் 4:
    ”வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல”
    இதில் இடும்பை என்பது துன்பங்கள் எனப்படும்- சமய சான்றோர்கள் துன்பம் என்றால் பிறவித் துன்பங்கள் என்பர்-
    ஆனால் துன்பங்களில் பெரிய துன்பம் மரணம் தானே! இறைவனின் அருள் பெற்றவர்க்கு மரணம் என்ற துன்பம் கிடையாது என திருவள்ளுவர் சொல்லியுள்ளார்கள் என ஏன் சொல்லக் கூடாது-

    குறள் 6:
    பொறிவாயில் ஜந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடுவாழ் வார்

    குறள் 8: ”அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது”
    இதில் “பிற ஆழி நீந்தல் = பிறவாகிய கடல்களை நீந்தல், அரிது

    குறள் 10:

    ”பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்”

    நிற்க!

    மேலே நாம் கண்ட குறள்களில்;
    “பிறவி கடல்” “ நீடுவாழ் வார்” “இடும்பை இல” என கண்டோம்-
    இதற்கு தக்க ஆசிரியர் மூலமாய் தெரிந்து கொள்ளலாம் என்ற வள்ளலாரின் வார்த்தை நினைவில் கொள்ள வேண்டும்-
    ஆனால்;
    ஆனால் திருவள்ளுவர் திருக்குறளை தவிர வேறு பல நூலையும் எழுதியுள்ளார்-
    திருவள்ளுவ நாயனார் திருக்குறள் தவிர அருளிய நூல்கள்;

    -ஞான வெட்டியான்
    -பஞ்ச ரத்தினம்
    – நவரத்தின சிந்தாமணி
    -கற்ப நூல் – குரு நூல் – சர நூல்
    -முப்பு (சூத்திர)

    இதில் ஞான வெட்டியான் – 1500 ல்;

    பாடல் 8 ;
    தசநாடி சுவாசமதுஞ் ஜெனித்த வாறுஞ்
    ஜெகதலத்தி லெனைப்பழித்த செய்திவாறும்
    அசைவதிருந் தாக்கையசை யாதவாறு
    மடி நடுவு முடிவான கற்ப வாறும்
    பசைந்தமண்ணீ ருப்புவுவ ரெடுத்த வாறும்
    பஞ்சபட்சி யஞ்சு நிலைத் திருந்த வாறும்
    இசையுந்தச தீட்சைமதி ரவியின் வாறு
    மிராஜயோ கத்தினருள் காப்புத் தானே-

    (மேற்படி பாடலில் அசைவதிருந் தாக்கையசை யாதவாறு என்பது;
    இந்தத் தேகத்தை அழியாமலிருத்தி வைக்கத் தக்க —- மார்க்கத்தை)

    அடுத்த பாடல் 9;

    யோகாதி யோக நிலைத் திருந்த பேர்க்கு
    முற்பன்மாங் கற்பமுண்டு சாவாப் போக்கும்
    வேகாத் தலையுமதி ரவியின் போக்கும்
    வெண்சாரை கரு நெல்லி விதித்த போக்கும்
    போகாப்புனலுஞ் சவர்க்காரப் பூ நீர்ப் போக்கும்
    பூதலமெ லாமகிழும் பொருளின் போக்கும்
    ஆகாத மணிதர்களை யகற்றும் போக்கு
    மசடில்லா மாதுரச குளிகை காப்பாம்

    (இங்கு; சாவாப் போக்கும் வேகாத் தலை, போகாப்புனல், உள்ளது-
    வள்ளலார் சொல்வது; சாகாத்தலை, வேகாக்கால்,போகாப்புனல் இம்மூன்றும் சாகாத கல்வியைத் தெரிவிக்கும் என்று சொன்னதை நினைவில் கொள்க)

    அடுத்த பாடலில் 11;

    ”—-உயிருமுடல் நிலைத்திடவு பாயஞ் சொன்னாள்”

    ஆக; வள்ளலார் சொன்ன சாகாகல்வி ஏற்கனவே திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த “ ஞான் வெட்டியான்” ல் சொல்லப்பட்டுள்ளது-
    அதன் பின்பு சமய,மத,வேதங்கள்,புராணங்கள்,இதிகாசங்கள் இவையின் தோன்றலால், ஆதிக்கத்தால் மேற்படி ”சாகாகல்வி” மறைக்கப்பட்டு, பூட்டப்பட்டு விட்டிருந்தது-
    வள்ளலாரின் சத்திய அறிவால் இடைவிடாத கருணை முயற்சியின் பயனால் இறையருளால் அக்கல்வி வெளிப்பட்டுள்ளது- அக்கல்வியால் மரணத்தை வென்ற முதல் சுத்த ஞானியே நம் வள்ளலார்-
    அவர் பெற்ற பயனை நாமும் பெறலாம் எனச் சத்தியம் செய்து சொல்கிறார்கள்-
    நிற்க!
    ஆனால் வள்ளுவர்க்கும் வள்ளலாருக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய சமயங்களில், மதங்களில் மார்க்கங்களில் கடவுள் அருளால் நீடுழி வாழலாம் என்றும், சாமாதியடைதல் முக்தியடைதல் மீண்டும் பிறவாதிருத்தல் இவையே கடவுள் அருள் என சொல்லப்பட்டுள்ளது-
    இங்ஙனமாக கொள்கையை கொண்ட சமயத்தில் மதத்தில் பற்று வைத்தால் பற்று வைத்தவர்களால் அச்சமய, மத கட்டுப்பாட்டை மீறி எப்படி சிந்திக்க முடியும்- மரணத்தை ஒத்துக்கொண்டவர்கள் எங்ஙனம் சாகாகல்வி குறித்து விசாரிப்பார்கள்? ஆச்சாரங்களை கைக்கொண்டவர்களிடத்தில் கருணை விருத்தியாகாது என்ற உண்மையையும் வள்ளலார் கண்டு வெளிப்படுத்தி உள்ளார்கள்-

    எனவே, அன்பர்கள் சிறிது சிந்திக்கவேண்டும்-

    சரியோ, தப்போ,
    இயலுமோ, இயலாதோ,

    இங்ஙனம், அதாவது, சாகா கல்வியே வள்ளலார் மார்க்க நெறியாக சொல்லப்பட்டுள்ளது- சாகாகல்வி குறித்து பல பாடல்கள், உபதேசங்கள் வள்ளலார் செய்துள்ளார்கள்-
    தான் கொண்டியிருந்த சமயப் பற்றை கைவிட்டு விட்டு ஒரு புதிய தனி மார்க்கத்தை வள்ளலார் கண்டார்-
    அம்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடையாக சமயம் ,மதம், மார்க்கங்களை அறிவித்து உள்ளார் என்று சொல்வது தானே சரியாகும்- நியாயம் ஆகும்-
    இது தானே உண்மை-

    அன்பர்களே!

    வள்ளலார் சொல்கிறார்கள்;
    எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது சுத்த சன்மார்க்கம்-

    நன்றி;
    உங்களுடன் நல்ல விசாரணை செய்ய
    அனுமதித்தற்கு நன்றிகள் பல-

    ஏபிஜெ அருள்- மதுரை

     
  • பொங்கல் விழா! இயற்கையை வணங்கும் விழா!! பொது விழா!!

    Image may contain: 1 person

    பொங்கல் விழா! இயற்கையை வணங்கும் விழா!! பொது விழா!!
    சாதி, சமயம், மதம், ஆச்சாரம் கடந்த ஒரு இன்பத்திருநாள்-
    இயற்கையே இறைவன்.
    இயற்கையே சுத்த சன்மார்க்கம். –ஏபிஜெ அருள்-

    வள்ளலார் மார்க்கத்தில் இயற்கை என்பதற்கு பொருள் என்ன எனப்பார்க்கும் போது, ” இயற்கை” ஒரு முக்கிய முதன்மை மெய் பொருளாக உள்ளது.
    ஆம் அன்பர்களே,
    இயற்கையே இறைவன்.
    இயற்கையே சுத்த சன்மார்க்கம்.
    ”இயற்கை உண்மையை” தான் நம் வள்ளலார் சாதி,சமயம்.மதம் கடந்து செய்த நல்ல விசாரணையில் தெரிந்துக் கொண்டார்கள். அவரின் சத்திய அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும். நன்முயற்சிக்கும் இறைவனால் போதிக்கப்பட்டதே சுத்த சன்மார்க்க மரபுகளும், சாகா கல்வியும் ஆகும்- ”இயற்கை உண்மை” நம்மிடம் அக அனுபவத்தில் வெளி ப்படுவாதாக உள்ளதே அன்றி நமக்கு வேறு ஒருவராலோ அல்லது எந்த ஒரு நூல் வாயிலாகவோ கற்பதாக இல்லை. உண்மை அறிய முதலில் நாம் ஒழுக்கம் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
    ”இயற்கை” யை வள்ளலார் விவரிக்கும் போது:
    இயற்கை உண்மை, இயற்கை விளக்கம், இயற்கை இன்பம், இயற்கை அறிவு என்கிறார்.
    இங்கு, இயற்கை உண்மை என்றால் “ சத்திய திருவுருவம்”
    இயற்கை விளக்கம் என்றால் “சத்திய ஞானசபை’’
    இயற்கை இன்பம் என்றால் ‘” சத்திய திரு நடம்”
    ஆக, மொத்ததில் இயற்கையே, தனிப் பெருங்கருணைத் தனிப் பெரும்பதியாய தனித் தலைமைக் கடவுள்! என்கிறார் வள்ளலார்.
    மேலும் பார்க்கையில்;
    இயற்கை உண்மை நிறைவாகியுள்ளதே ’’சுத்த சிவானுபவ வெளி”
    இயற்கை விளக்கம் நிறைவாகி விளங்குவது “அருட்பெருஞ்ஜோதி சொரூபம்”
    ஆக,
    இயற்கையே (உண்மையாகவும், விளக்கமாகவும்) எங்கும் பூரணராகி விளங்குகின்றது.
    இயற்கை நம் உண்மை ஆண்டவர்.
    இயற்கையே நம் வழி (சுத்த சன்மார்க்கம்)
    இயற்கையானது நாம் சாகாமல் இருப்பதே.
    இந்த மரணம் தவிர்த்த இந்த இன்பத்தை பெற நமக்கு குருவாக இருப்பதும் ”இயற்கையே”.

    அன்பர்களே, இப்பொழுது சொல்லுங்கள், வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாக விளங்குகிறது தானே.
    ஆக, நாம் செய்ய வேண்டியது;
    எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லாப் பொருள்களையும், மற்றையெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும் எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக்கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யின் அக்கடவுள் திருவருள் நமது கருத்தின்கண் வெளிப்பட்டு விளங்குமென்றும், அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைக ளெல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவுந் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை யடைதல் கூடுமென்றும்………( நாம் நம்புதல் வேண்டும். இடைவிடாது நன்முயற்சியில் பயிலுதல் வேண்டும்.)
    அன்பர்களே, மேலே நாம் செய்த நல்ல விசாரணையும் கடவுள் அருளால் நம் அறிவில் உணர்ந்து செய்ய அருளப் பெற்றுள்ளோம்.
    தெரிந்துக்கொண்ட இந்த உண்மை, நம் சத்திய அறிவில் அறிந்து, நம் அனுபவத்தில் அனுபவிக்க அருள் செய்யுமாறு இயற்கை ஆண்டவரை துதிப்போம்.
    சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்தியச் சிறு விண்ணப்பத்தில்:
    இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும், இயற்கையின்பினரென்றும்,…..
    தாயினுஞ் சிறந்த தயவுடைக் கடவுளே! இயற்கையே!…..
    சமரசு சுத்த சன்மார்க்க சங்க சத்தியப் பெரு விண்ணப்பத்தில்:
    இயற்கை யுண்மை நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ வெளியில், இயற்கை விளக்க நிறைவாகி விளங்கிய அருட்பெருஞ்ஜோதி சொரூபராய், இயற்கை இன்ப நிறைவாகி யோங்கிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எல்லா உயிர்களும் இன்பமடைதற் பொருட்டுத் திருவுளக் கருணையாற் செய்தருளுகின்ற சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுளே!
    சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய ஞான விண்ணப்பத்தில்:
    இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய ஞானசபைக் கண்ணே, இயற்கை உண்மை என்கின்ற சத்தியத் திருவுருவினராய், இயற்கையின்ப மென்கின்ற சத்தியத் திருநடஞ் செய்தருள்கின்ற இயற்கைத் தனிப்பெருங்கருணைத் தனிப் பெரும்பதியாகிய தனித் தலைமைக் கடவுளே!
    சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தில்;
    உத்தர ஞானசித்திபுர மென்றும் உத்தர ஞான சிதம்பர மென்றும் திருவருளா லாக்கப்பட்ட ஆக்கச் சிறப்புப் பெயர்களும் பார்வதிபுரமென்றும் வடலூரென்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை விளக்க நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ திருவுருவைத் தரித்து, இயற்கையின்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே! தேவரீரது திருவருட் சமுகத்தில் யான் செய்து கொள்ளுகின்ற சமரசு சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்.
    சில சுத்த சன்மார்க்கப் பாடல்கள்;
    ”இயற்கையுண்மைத் தனிப்பதியே”..
    • இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
    சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே…
    • எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்
    எல்லாஞ்செய் வல்லதாகி
    • இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்
    இயற்கையே இன்பமாகி.
    • மருவும் உலகம் மதித்திடவே மரண பயந்தீர்த் தெழில்உறுநல்
    உருவும் பொருள்ஒன் றெனத்தெளிந்த உணர்வும் என்றும் உலவாத
    திருவும் பரம சித்திஎனும் சிறப்பும் இயற்கைச் சிவம்எனும்ஓர்
    குருவும் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
    • இயற்கைஉண்மை வடிவினரே அணையவா ரீர்
    எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர்
    • இயற்கைவிளக் கத்தவரே அணையவா ரீர்
    எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர்
    • இயற்கைஇன்ப மானவரே அணையவா ரீர்
    இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர்
    • இயற்கைநிறை வானவரே அணையவா ரீர்.
    முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால்
    • இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா
    றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன்
    என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே.
    என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
    • ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே
    அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
    ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்
    உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே
    ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும்
    ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்
    • சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த
    சத்தியனே உண்கின்றேன்354 சத்தியத்தெள் ளமுதே.
    எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
    இதுஅது எனஉரைப் பரிதாய்த்
    • தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
    தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
    பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
    புத்தமு தருத்திஎன் உளத்தே
    அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
    • இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்
    அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
    இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
    இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
    புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
    பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
    பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
    பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
    திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

    எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-

    ( இனிய நாளில் ஓரு நல்ல விசாரணை உங்களுடன் செய்தமைக்கு நன்றி.–.)

    ஏபிஜெ அருள்