விசாரமே பயிற்சி, பயிற்சியில் திரைகள் விலக வேண்டும்.

வணக்கம், அன்புடன் ஏபிஜெ அருள்.

விசாரமே பயிற்சி, பயிற்சியில் திரைகள் விலக வேண்டும்.

ஆண்டவரே குருவாக இருந்து, வள்ளலாருக்கு தெரிவித்த யோகா: “சுத்த மெய் ஞான யோகா”. உண்மை அறிவால் செய்யப்படுகின்ற மேற்படி யோகா பயிற்சியில், கடவுளின் உண்மை நிலையை அறிந்துக் கொண்டார் வள்ளலார்.

இந்த யோகா பயிற்சில், வள்ளலார் தனது கருத்தில் கொண்டவை குறித்து இன்று நல்ல விசாரம், அருளால். இதோ;

  • ஓர் உண்மை கடவுள் உண்டென்றும், அக்கடவுளை,
  • உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிப்பட்டார்கள்.

மேற்படி இரு சத்திய வாக்கியங்களை அறிவால் ஊன்றி,  

கீழ்வருமாறு கருத்தில் மேலும் விரிவு படுத்த வேண்டும்.

எல்லா அண்டங்களையும்,

எல்லா உலகங்களையும்,

எல்லா உயிர்களையும்,

எல்லா பொருள்களையும்,

மற்ற எல்லாவற்றையும்,

தோற்றுவித்தும்

விளக்கம் செய்வித்தும்,

துரிசு நீக்குவித்தும்,

பக்குவம் வருவித்தும்,

பலன் தருவித்தும்,

எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் கடவுளே, உங்கள் திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து,

எக்காலத்தும்,

எவ்விடத்தும்,

எவ்விதத்தும்,

எவ்வளவும்,

தடைப்படாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைய அருள வேண்டும்.

இவ்வாறக அருள் அடைவதற்கு, நமது அறிவில், ஓர் ஞான சபை உணர்ந்து, திருவருள் நடம் செய்கின்ற உணர்ச்சியை பெற்று, விளக்கம் செய்வித்து அருளுமாறு, வழிபாட்டில் இடைவிடாது தலைவனையே தொழ வேண்டும்.

மேற்படி தொழுகையில்;

சர்வ வல்லபராகிய தனித்தலைமைக் கடவுளே!

தேவரீர், அற்புதத் திருவருள் விளக்கத்தால் எங்களையும் இவ்வுலகில் இத்தேகத்தைப் பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியர்களாக்கி உண்மை அறிவை விளக்கி உண்மை இன்பத்தை அளித்து சமரச சன்மார்க்க நிலையில் வைத்து, சத்திய வாழ்வை அடைவித்து நித்தியர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.

இதுவே வழிபாடு, வழிபாட்டில் நம் முயற்சி ஆகும்.

இந்த சுத்த சன்மார்க்க வழியில், வள்ளலாரின் உண்மை அறிவாகிய சத்திய ஞான சபையில், வள்ளலாருக்கு திருவருள் விளக்கம் செய்வித்து அருளப்பட்டது.

விளக்கத்தில், பெருங்கருணை கடவுளின் திருவுரு காட்சி அருட்பெருஞ்சோதி தரிசனம் கிடைத்து, கண்டு பெருங்களிப்பு அடைந்தார்கள் வள்ளலார். தனது விருப்பமாகிய நித்திய தேகத்திற்கான வரத்தை பெற்று இன்பமடைந்தார் வள்ளலார்..

தனது இறை அனுபவத்தை பதிவு செய்யும் போது, உண்மை கடவுள் கீழ்வருமாறு விளங்கிக் கொண்டுள்ளதை நமக்கு ஆன்ம நேயத்துடன் சொல்லியுள்ளார் வள்ளலார்:

இதோ;

“உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய் ஓங்குகின்றார்”

இந்த காட்சியை ஒவ்வொருவரின் அகத்திலே, உண்மை அறிவாகிய சபையில் கண்டு தரித்து, அருள் பெறுவதே “பேரருள் அமுதம்” என்கிறார் வள்ளலார்.

இதோ பாடல்: உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்

              உலவா ஒருபே ரருளா ரமுதம்

              தருவாய் இதுவே தருணம் தருணம்

இதுவே வள்ளலார் கண்ட, சென்ற வழி, சுத்த சன்மார்க்கம். அவரின் உறுதியான வழிபாட்டை பாருங்கள்:

     உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய்

     உலவா ஒருபே ரருளா ரமுதம்

     தருவாய் இதுவே தருணம் தருணம்

     தரியேன் சிறிதுந் தரியேன் இனிநீ

     வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான்

     மதிசேர் முடிஎம் பதியே அடியேன்

     குருவாய் முனமே மனமே இடமாக்

     குடிகொண் டவனே அபயம் அபயம்.      

— நன்றி: பணிவுடன் ஏபிஜெ அருள்.