ச நா த ந வழக்கு தீர்ப்பில் வள்ளலார் பற்றி கருத்துக்கள்.
சனாதன வழக்கு ஒன்றில் (FIR QUASH) பிறப்பிக்கப்பட்ட ஓர் உத்தரவில் மேதகு நீதிமன்றத்தால் (உயர்நீதிமன்றம் மதுரை கிளை) வள்ளலார் குறித்து ஒரு கருத்து (as observation) சொல்லப்பட்டுள்ளது.
“………25. Interestingly, It is stated in the counter that the respondents have referred to certain personalities and have those personalities have also stated against Sanathan Dharma. The first person…….. The next person referred is Vallalaar who hailed from Saivite philosophy and blendered with more emphasis on compassion for all living beings including animals, opposed slaughtering of animal, emphasized liberation of soul through “arutperumjothi” (burning lamp). Hence Vallalar is not against Sanathana Dharma. The above persons practiced some form of Sanathana Dharma and recommended the same. They stated to leave or shed unwanted things and practice Sanathan Dharma to attain liberation. The respondents are under the impression that since they recommended to leave or shed the unwanted things, they are against Sanathana Dharma, which is clear dis/misinformation. Except E.V.Ramasamy @ Periyar, none of them had uttered against the Santhana Dharma. Hence the counter has stated incorrect information….”
“………25. சுவாரஸ்யமாக, எதிர்மனுதாரர்கள் சில ஆளுமைகளைக் குறிப்பிட்டுள்ளனர் என்றும், அந்த ஆளுமைகள் சனாதன தர்மத்திற்கு எதிராகவும் கூறியுள்ளனர் என்றும் எதிர்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் நபர்…….. அடுத்த நபர் என்று குறிப்பிடப்பட்டவர் வள்ளலார், அவர் சைவ தத்துவத்தைச் சேர்ந்தவர், விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் கருணை காட்டுவதில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார், விலங்குகளை வெட்டுவதை எதிர்த்தார், “அருட்பெரும்ஜோதி” (எரியும் விளக்கு) மூலம் ஆன்மா விடுதலையை வலியுறுத்தினார். எனவே வள்ளலார் சனாதன தர்மத்திற்கு எதிரானவர் அல்ல. மேற்கண்ட நபர்கள் ஏதோ ஒரு வகையான சனாதன தர்மத்தைப் பின்பற்றினர், அதையே பரிந்துரைத்தனர். தேவையற்றவற்றை விட்டுவிட அல்லது வீழ்த்தி மற்றும் விடுதலை பெற சனாதன தர்மத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் கூறினர். எதிர்மனுதாரர்கள் தேவையற்றவற்றை விட்டுவிட அல்லது வீழ்த்தி விட பரிந்துரைத்ததால், அவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிரானவர்கள் என்ற எண்ணத்தில் உள்ளனர், இது தெளிவான தவறான தகவல்.பெரியாரின் ஈ.வி.ராமசாமியைத் தவிர, அவர்களில் யாரும் சந்தான தர்மத்திற்கு எதிராகப் பேசவில்லை. எனவே எதிர்மனுதாரர் தவறான தகவலைக் கூறியுள்ளார்….”
வழக்கு அரசியல் மற்றும் அரசு சம்பந்தப்பட்டது. உயர்திரு டெப்புடி சிம் சார் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக ஒருவர் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்ட வழக்கு. அந்த எப்.ஐ.ஆ-ரை ரத்து செய்ய வந்த வழக்கு ஆகும். இவ்வழக்கு குறித்து நாம் பேச வரவில்லை.
ஆனால், இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் வள்ளலார் குறித்து வந்துள்ள குறிப்புகள் பற்றியே பார்க்க வேண்டி உள்ளது. வள்ளலார் பற்றி மேலே சொன்ன எதுவும், எக்ஸ்செப்ட், வள்ளலார் ஒரு ஜீவகாருண்யர் என்பதை தவிர, மற்ற அனைத்துமே தவறான கருத்துக்கள் ஆகும்.
மேதகு நீதிமன்றம், வள்ளலாரை பற்றி குறிப்பிடும் போது, கீழ்வருபவையை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்ததை வரிசையாகப் பார்ப்போம்.
விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் கருணை காட்டுவதில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார், விலங்குகளை வெட்டுவதை எதிர்த்தார்……எனவே வள்ளலார் சனாதன தர்மத்திற்கு எதிரானவர் அல்ல.
இங்கு உயிர் இரக்கம் சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியே.
ஆனால், உயிரினங்களுக்கு கருணை காட்டினார், அதனால் வள்ளலார் சநாதன தர்மத்திற்கு எதிரானவர் அல்ல என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. இதில் தான் விசாரம் செய்ய வேண்டியுள்ளது.
வரலாற்றை பார்க்கும் போது, வள்ளுவர் தனது திருக்குறளை அரங்கேற்ற அன்றைய வேதியர்கள் மற்றும் சமய வாதிகள் மறுத்து விட்டனர். காரணம், புலால் மறுத்தல், கொல்லாமை இவையே முதல் அறம் என்று வள்ளுவர் சொல்லியிருப்பதால், மறுக்கிறோம் என்றனர் ஆன்மீகவாதிகள், என்பர். அன்று ஒளவையார் பாட்டியார் மூலம் சில அட்ஜசமென்ட் செய்து திருக்குறள் அரங்கேற்றப்பட்டது என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.
சனாதனத்தின் வேராகவுள்ள, வைதீகத்தின் நான்கு வேதங்களில் புலால் உணவு அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலும், வேள்விகளில் உயிர் பலிகள் கொடுக்கப்பட்டது. பலியிடப்பட்ட உயிர்களின் மாமிசங்களை, வேள்வி வேதியர்கள் உணவாக கொண்டனர். மேலும், இராமயணத்தில் இராமர் கறி சாப்பிட்டார் என உள்ளது, என்று சமயச் சொற்பொழிவாளர் திரு துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் சொல்லியுள்ளார்கள்.
இந்நிலையில் முழுமையான ஜீவகாருண்யம் வள்ளுவத்தால், சமணத்தால் இங்கு வெளிப்பட்டவையே எனத்தெளிவாகுகிறது. வள்ளுவர் வழியில் வந்ததாக சொல்பவரே வள்ளலார். இந்நிலையில், வள்ளலார் ஜீவகாருண்யர் எனவே அவர் சனாதனத்திற்கு எதிரானவர் அல்ல என்பதில் உள்ள வரலாறு பொய்யானது. காரணம், ஜீவகாருண்யம் வைதீகத்தில்,புராணங்களில் ஆரம்பத்தில் இல்லை என்பதே உண்மை.
அடுத்து,
வள்ளலார் ஆன்ம விடுதலையை வலியுறுத்தினார்.
ஆனால்;
ஆன்ம விடுதலை என்பது சமயத்தின் பயன் ஆகும். இங்கு ஆன்மா என்பது தத்துவமே. வள்ளலார் முடிபாக உபதேசித்தது; இறைஅனுபவம் பெற்று, நித்திய வாழ்வைப் பெறுவதே சுத்த சன்மார்க்க முடிபு என்கிறார் வள்ளலார்.
அடுத்து;
வள்ளலார் சைவ சமயத்தை சார்ந்தவர்.
ஆனால்;
வள்ளலார் தனது சைவ சமயப்பற்றை முற்றிலும் கைவிட்டு விட்டு, ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டு வெளிப்படுத்தியுள்ளார்கள். சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும், இதிகாசம் புராணங்கள் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வையாதீர்கள் என்று மார்க்கத்தார்களுக்கு கட்டளையாகயிட்டு, அவற்றின் ஆசாரங்களில் மனம் பற்றாத படி இருக்க வேண்டும் என்கிறார் வள்ளலார். அவர் கண்ட மார்க்கமானது; எல்லா சமய மத மார்க்கங்களுக்கு உண்மை பொது நெறியாக விளங்குகிறது. அதே நேரத்தில் உலக சமய மதங்களை தன் மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கியத் தடையாக அறிவித்துள்ளார் வள்ளலார். சைவம் உட்பட சமயங்களை சாடிய பாடல்கள் நூற்றுக்கணக்கில் உள்ளது. இக்கட்டுரையின் இறுதியில் சில பாடல்கள் தரப்பட்டுள்ளது.
அடுத்து;
ஏதோ ஒரு வகையில் சனாதன தர்மத்தைப் பின்பற்றினர், அதையே பரிந்துரைத்தனர்.
ஆனால்;
இங்கு சனாதனம் என்றால் என்ன? அது ஒரு சமயமா? மதமா? அல்லது நூலா? எனத் தெரியவில்லை. வழக்கின் தீர்ப்பில் சனாதனம் என்றால் என்ன என விளக்கமில்லை. வழக்கு தரப்பினர்களும் வாதங்கள் வைத்ததாக தெரியவில்லை. தீர்ப்பில் இடம்பெறவில்லை.
ஆனால், சென்னையில் நடைபெற்ற வழக்கில் சனாதனத்திற்கு 1905-ம் ஆண்டு வெளிவந்த திரு நாராயண அய்யர் அவர்களால் எழுதிய நூல் வைத்துதான் வாதாடப்பட்டதாக அறிய முடிகிறது. அந்த நூலை பார்க்கும் போது; வைதீக மதத்தை அடிப்படையாகக் கொண்டே தான் உள்ளது. நூலின் ஆசிரியரும் இப்படி தான் சொல்கிறார்கள்: “சுருதிகளை ஆதாரமாகக் கொண்ட சநாதன தருமம் அல்லது வேதீக தருமம் என்ற ஹிந்து சமயமானது” என்கிறார் ஆசிரியர் நூலின் முதல் பக்கத்தில்.
ஆக, இதில் எல்லா மார்க்கத்தின் நெறிகள் கோடிட்டு காட்டினாலும் முதன்மையாக உள்ளவை வைதீக மத கோட்பாடுகளே மற்றும் உயர்ந்த ரிசிகளால் வடிவமைக்கப்பட்ட சுருதி, ஸ்மிருதி, இதிகாசங்கள், புராணங்கள் இவை வலியுறுத்தும் நான்கு வேதங்கள், வருண ஆசிரமம், குலம், சோதிடம், சாதி அமைப்பு, சமூக அமைப்பு, அரசு அமைப்பு, அண்ட, பிண்ட தத்துவங்கள் என எல்லாம் பெற்று விளங்குவது தான் சனாதனம் ஆகும்.
ஆனால், இந்த நிலையில் வள்ளலார் சநாதன கோட்பாடுகளை மற்றும் எந்தொரு கோட்பாடுகளையும் பரிந்துரைக்க்கவுமில்லை அவர் பின்பற்றவுமில்லை என்பதை நாங்கள் சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
அடுத்து;
தேவையற்றவற்றை விட்டுவிட அல்லது வீழ்த்தி மற்றும் விடுதலை பெற சனாதன தர்மத்தைப் பின்பற்ற வேண்டும் என்று (வள்ளலார் உட்பட) அவர்கள் கூறினர்.
என மேதகு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆனால்
வள்ளலார் மிகத்தெளிவாக கட்டளையிட்டுள்ளது யாதெனில்;
“தத்துவவொழுக்கம் பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தொழிலொழுக்கம் பற்றி ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.
தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்.
# அவையாவன:
ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள். ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது.” – வள்ளலார்.
மேலே விட்டொழிக்க வேண்டிய பதின்மூன்று ஆசாரங்களில் பாதிக்கு மேல் சனாதநத்தில் உள்ளவையாகவும், மற்ற ஆசாரங்கள் உலக சமய மதங்களில் உள்ளவையாகவும் பார்க்கும் போது, வள்ளலார் எப்படி சனாதனத்தை பின்பற்ற வேண்டும் என சொல்லியிருப்பர்கள்?
மேற்படி விசாரம் செய்யும் போது; ஒன்று தெரிய வருகிறது. யாதெனில்;
தர்மம் என்றால் வைதீக மரபு படி ஆசாரங்கள் அல்லது கட்டுப்பாட்டு விதிகள் அல்லது முறைகள் எனப்படுகிறது. அன்றைய காலக்கட்டத்தில் சமூகம் மற்றும் அரசுகள் இந்த தர்மங்கள் படி தான் செயல் பட வேண்டும் என நடைமுறையில் ஆட்சியில் இருந்துள்ளது.
ஆக, மேற்படி தர்மங்கள் (வகுக்கப்பட்ட ஆசாரங்கள் என்று அர்த்தம்) என்றும் நிலைத்திருக்குபடி இருக்க வேண்டும் என சநாதன தர்மம் சொல்கிறது. இங்கு சனாதனம் என்றால் என்றும் நிலைத்திருத்தல் அல்லது மாறாது இருத்தல் எனப்படும். கடவுள் பற்றிய புதிய நிலைப்பாடுகளை கூட வைதீக
மாற்றிக் கொண்டுள்ளது. முதலில் பிரம்மம் ஒன்றே என்ற கொள்கை, பின்பு, அத்வைதம், துவைதம், விசிட்டாத்வைதம் என மாறியுள்ளது. ஆனால், எக்காலத்திலும் மாறாது உள்ளது மாறாமல் இருக்க வேண்டியது எதுவெனில்; “விதிக்கப்பட்ட ஆசாரங்கள்” என காண முடிகிறது. ஆக, வேதீகத்தில் மற்றும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ள ஆசாரங்கள் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதாகும். இதை வலியுறுத்தும் நூல் சனாதனம் என விசாரத்தில் ஒருவாறு பார்க்க முடிகிறது.
அடுத்து;
எதிர்மனுதாரர்கள் தேவையற்றவற்றை விட்டுவிட அல்லது வீழ்த்தி விட பரிந்துரைத்ததால், அவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிரானவர்கள் என்ற எண்ணத்தில் உள்ளனர், இது தெளிவான தவறான தகவல்.
ஆனால்;
எங்களுக்கு, அதாவது, வள்ளலார் மார்க்கத்திற்கும் அரசியலுக்கும் அல்லது மேற்படி வழக்கிற்கும் உள்ளே வரவில்லை, வரவிரும்பவில்லை.
ஆனால், வள்ளலாரின் கோட்பாடுகள் உலகில் தோன்றியுள்ள சமய மத மார்க்கங்களில் கீழ் வராது. அது, எல்லோருக்குமான உண்மை பொது நெறி ஆகும்.
இந்நிலையில் வள்ளலார் என்பவர் சனாதனத்திற்கு எதிரானவர் என்றோ அல்லது சனாதனத்தின் உச்சம் என்றோ சொல்ல முடியாது. காரணம் வள்ளலார் ஆகட்டும் அல்லது வள்ளுவர் ஆகட்டும் இவர்களின் பார்வையானது உலக உயிர்களுக்கானது. அதே நேரத்தில் வள்ளலார் சாதியை பொய் என்றும், அதனால் அதை ஒழிக்கச் சொல்கிறார். புராணங்கள் எல்லாம் கற்பனை அதனால் அவற்றில் லட்சியம் வையாதீர்கள் என்கிறார்.
அதே போல், மேலே குறிப்பிட்ட பதின்மூன்று ஆசார வகைகளை ஒழிந்து போக வைத்தால்தான், ஒருவருக்கு உண்மை அறிவும். அதனால் பொது நோக்கமும் வரும், பொது நோக்கம் உடையவரே கடவுளின் அருளை பெற முடியும் என்கிறார் வள்ளலார்.
இதுவே பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார் கண்டு வெளிப்படுத்திய உண்மை பொது நெறியாகும்.
எதற்காக இப்படி விளக்கம் கொடுக்கிறோம் என்றால், வடலூர் வள்ளலார் நிலையங்களில் வள்ளலாரின் முடிபான சுத்த சன்மார்க்கத்திற்கு முரணான வகையில் வேத ஆசாரத்தின் அடிப்படையிலும், சைவ ஆகமங்கள் அடிப்படையிலும் வழிபாடுகள் புகுத்தப்பட்டிருந்தது. எங்களால் இருபது வழக்குகளுக்கும் மேலாக வழக்குகள் தொடுக்கப்பட்டு, இருபது வருடங்கள் போராடி, ஆணையரின் உத்தரவுகள் மற்றும் அவற்றை உறுதி செய்த நீதிமன்றத் தீர்ப்புகள் இவையால் வைதீக மற்றும் சைவ சமய ஆசாரங்கள் அகற்றப்பட்டு, வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத் தனி நெறி வழிபாட்டு விதிப்படி நிலையத்தில் ஜோதி தரிசனம் இன்று நடைபெற வைக்கப்பட்டள்ளது
இந்நிலையில், வள்ளலார் சனாதனத்தை பின்பற்றினார் என்றோ அல்லது அவர் சைவ சமயத்தை சார்ந்தவர் என்றோ ஒரு நீதிமன்றமே தனது தீர்ப்பில் கருத்து தெரிவித்து இருப்பின், இருக்கின்றது. நாளைய காலத்தில், இதை மற்ற வழக்கில் எடுத்துக் காட்ட வாய்ப்புகள் உள்ளதால், இந்த விளக்கத்தை நாங்கள் தருவதற்கான சூழ்நிலையில் தள்ளப்பட்டு உள்ளோம்.
இதன் அடிப்படையில் மேதகு நீதிமன்றத்திற்கும் மக்களுக்கும் வள்ளலாரின் முடிபான சுத்த சன்மார்க்கத் தனி நெறி வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு உள்ளதையும் கருதினோம்.
நன்றி ஏபிஜே அருள்.
சமயம் மதம் இவை சாடி வள்ளலார் பாடியுள்ள பாடல்கள் :
ஆறாம் திருமுறை / அருட்பெருஞ்ஜோதி அகவல்
சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
சாதியு மதமுஞ் சமயமுங் காணா
ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி
சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி
சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த
அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி
ஆறாம் திருமுறை / முறையீடு
சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்
சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்
ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்
ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்
நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்
நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ
ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
ஆறாம் திருமுறை / திருக்கதவந் திறத்தல்
கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
ஆறாம் திருமுறை / சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.
ஆறாம் திருமுறை / ஆன்ம தரிசனம்
சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
நித்திய வாழ்க்கையும் சுகமும்
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ் சோதிஎன் றறிந்தேன்
ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான்
உரைப்பதென் அடிக்கடி உனக்கே.
ஆறாம் திருமுறை / சிவானந்தத் தழுந்தல்
இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்
தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்
ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே
ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்
ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே
சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.
ஆறாம் திருமுறை / அருள்விளக்க மாலை
கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.
ஆறாம் திருமுறை / கண்கொளாக் காட்சி
அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்றிங்
காண்டானைச் சிறுநெறிகள் அடையா தென்னைத்
தடுத்தானைப் பெருநெறிக்குத் தடைதீர்த் தானைத்
தன்னருளும் தன்பொருளும் தானே என்பால்
கொடுத்தானைக் குற்றமெலாம் குணமாக் கொள்ளும்
குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை
எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே
ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.
ஆறாம் திருமுறை / இறை திருக்காட்சி
சமயமும் மதமும் கடந்ததோர் ஞான
சபைநடம் புரிகின்ற தனியைத்
தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வைச்
சத்துவ நித்தசற் குருவை
அமையஎன் மனத்தைத் திருத்திநல் லருளா
ரமுதளித் தமர்ந்தஅற் புதத்தை
நிமலநிற் குணத்தைச் சிற்குணா கார
நிதியைக் கண்டுகொண் டேனே.
ஆறாம் திருமுறை / திருவடி நிலை
இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
பிரமன்ஈ சானனே முதலாம்
மகத்துழல் சமய வானவர் மன்றின்
மலரடிப் பாதுகைப் புறத்தும்
புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
தெரிந்தனன் திருவடி நிலையே.
ஆறாம் திருமுறை / அச்சோப் பத்து
சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்
விடுவித்தென் தன்னை ஞான
நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க
நிலைதனிலே நிறுத்தி னானைப்
பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்
பராபரனைப் பதிஅ னாதி
ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ
தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.
ஆறாம் திருமுறை / சிற்சத்தி துதி
வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாதவகை
மறிக்கும் ஒருபே ரறிவளித்த வள்ளற் கொடியே மனக்கொடியைச்
செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் தெய்வக் கொடியே சிவஞானம்
குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.
ஆறாம் திருமுறை / இறை பொறுப் பியம்பல்
ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன்
வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்
மன்றினை மறந்ததிங் குண்டோ
ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்
ஐயவோ சிறிதும்இங் காற்றேன்
பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்
பரிந்தருள் புரிவதுன் கடனே.
ஆறாம் திருமுறை / சிவபுண்ணியப் பேறு
மதத்திலே சமய வழக்கிலே மாயை
மருட்டிலே இருட்டிலே மறவாக்
கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது
கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்
பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும்
பரிந்தெனை அழிவிலா நல்ல
பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
ஆறாம் திருமுறை / சிவபுண்ணியப் பேறு
குலத்திலே சமயக் குழியிலே நரகக்
குழியிலே குமைந்துவீண் பொழுது
நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து
நிற்கின்றார் நிற்கநான் உவந்து
வலத்திலே நினது வசத்திலே நின்றேன்
மகிழ்ந்துநீ என்உளம் எனும்அம்
பலத்திலே நின்றாய் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.
ஆறாம் திருமுறை / ஆனந்தப் பரிவு
சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக
ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.
ஆறாம் திருமுறை / சிவானந்தப் பற்று
ஆதியும் அந்தமும் இல்லாத் தனிச்சுட ராகிஇன்ப
நீதியும் நீர்மையும் ஓங்கப் பொதுவில் நிருத்தமிடும்
சோதியும் வேதியும் நான்அறிந் தேன்இச் செகதலத்தில்
சாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே.
ஆறாம் திருமுறை / தலைவி வருந்தல்
இச்சைஎலாம் வல்லதுரை என்னைமணம் புரிந்தார்
ஏடிஎனக் கிணைஎவர்கள் என்றஅத னாலோ
எச்சமயத் தேவரையும் இனிமதிக்க மாட்டேன்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நச்சுமரக் கனிபோலே பாங்கிமனங் கசந்தாள்
நயந்தெடுத்து வளர்த்தவளும் கயந்தெடுப்புப் புகன்றாள்
அச்சமிலாள் இவள்என்றே அலர்உரைத்தார் மடவார்
அண்ணல்நட ராயர்திரு எண்ணம்அறிந் திலனே.
ஆறாம் திருமுறை / உற்ற துரைத்தல்
நிலத்தே அடைந்த இடர்அனைத்தும் நிமிடத் தொழித்தே நிலைபெற்றேன்
வலத்தே அழியா வரம்பெற்றேன் மணிமன் றேத்தும் வாழ்வடைந்தேன்
குலத்தே சமயக் குழியிடத்தே விழுந்திவ் வுலகம் குமையாதே
நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டா நின்றேன் நாட்டகத்தே.
ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை
பூதமுத லாயபல கருவிகள் அனைத்தும்என்
புகல்வழிப் பணிகள்கேட்பப்
பொய்படாச் சத்திகள் அனந்தகோ டிகளும்மெய்ப்
பொருள்கண்ட சத்தர்பலரும்
ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங்
கிசைந்தெடுத் துதவஎன்றும்
இறவாத பெருநிலையில் இணைசொலா இன்புற்
றிருக்கஎனை வைத்தகுருவே
நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும்
நலம்பெறச் சன்மார்க்கமாம்
ஞானநெறி ஓங்கஓர் திருவருட் செங்கோல்
நடத்திவரு நல்லஅரசே
வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய
மாமதியின் அமுதநிறைவே
மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
வல்லநட ராஜபதியே.
ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை
பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
பேதமுற் றங்கும்இங்கும்
போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
போகாத படிவிரைந்தே
புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
பொருளினை உணர்த்திஎல்லாம்
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
என்பிள்ளை ஆதலாலே
இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
றெண்ணற்க என்றகுருவே
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்திருள் அகற்றும்ஒளியே
நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு
நீதிநட ராஜபதியே
ஆறாம் திருமுறை / சற்குருமணி மாலை
பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்
பவநெறி இதுவரை பரவிய திதனால்
செந்நெறி247 அறிந்திலர் இறந்திறந் துலகோர்
செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ
புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்
புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்
தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
ஆறாம் திருமுறை / சற்குருமணி மாலை
ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி
அகம்புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே
உளங்கொள்சிற் சபைநடு விளங்குமெய்ப் பதியே
சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச்
சூழ்ந்தெனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
ஆறாம் திருமுறை / அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல்
சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும்
அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத்
தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும்
அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின்.
ஆறாம் திருமுறை / அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல்
ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல்
வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம்
தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி
வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர்.
ஆறாம் திருமுறை / அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல்
கதிஇ ருக்கின்ற திருச்சிற்றம் பலத்திலே கருணை
நீதிஇ ருக்கின்ற தாதலால் நீவீர்கள் எல்லாம்
பதிய இங்ஙனே வம்மினோ கொலைபயில் வீரேல்
விதியை நோமினோ போமினோ சமயவெப் பகத்தே.
ஆறாம் திருமுறை / புனித குலம் பெறுமாறு புகலல்
சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.
ஆறாம் திருமுறை / சுத்த சிவநிலை
சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் – ஓதுகின்ற
பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.
மரணமிலாப் பெருவாழ்வு
குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.
ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்
கிழக்குவெளுத் ததுகருணை அருட்சோதி உதயம்
கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்
சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவா தித்த
முழுக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும்சன் மார்க்க
முழுநெறியில் பரநாத முரசுமுழங் கியதே.
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே
நீதியில் கலந்து நிறைந்தது நானும்
நித்தியன் ஆயினேன் உலகீர்
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
சத்தியச் சுத்தசன் மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை
விளம்பினேன் வம்மினோ விரைந்தே.
ஆறாம் திருமுறை / ஜோதியுள் ஜோதி
எம்பொருள் எம்பொருள் என்றே – சொல்லும்
எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
செம்பொருள் என்பது பாரீர் – திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
ஜோதியுள் ஜோதி
சைவ முதலாக நாட்டும் – பல
சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
தெய்வம் இதுவந்து பாரீர் – திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி
ஆறாம் திருமுறை / இது நல்ல தருணம்
மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது
வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. இதுநல்ல
ஆறாம் திருமுறை / அருள் அற்புதம்
சாதி சமயச் சழக்கெலாம் அற்றது
சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது
மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம்
ஆறாம் திருமுறை / அருட்காட்சி
சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
சோதியைக் கண்டேன டி – அக்கச்சி
சோதியைக் கண்டேன டி.
ஆறாம் திருமுறை / கண்புருவப் பூட்டு
சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
இற்சமய வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு
என்பிறப்புத் துன்பமெலாம் இன்றோடே போச்சு.
ஆறாம் திருமுறை / அனுபவ மாலை
சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய்
பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய்
பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ
அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும்
அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே
சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத்
திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி.
இன்னும் பல நூறு பாடல்கள் சாதி சமய மத வேதாகமம் இவையெல்லாம் சாடி வள்ளலார் பாடியுள்ளார்கள்.