வள்ளலார் கண்ட பொது கடவுள் – “இயற்கை“

திருவருட்பிரகாச வள்ளலாரால் வெளிப்படுத்தப்பட்ட கடவுள் “இயற்கை கடவுள்” ஆகும். உண்மை கடவுள், ஓர் நித்திய மெய்ப்பொருள். இயற்கை இறவாத இயற்கையாகவுள்ளது. இறவாத இயற்கையை, இயற்கை உண்மை, இயற்கை விளக்கம், இயற்கை இன்பம் எனப்பிரித்து, இயற்கை கடவுளின் நிலையை எளிதாக நமக்கு விளக்குகிறார் வள்ளலார்.

இதுவே இங்கு விசாரம். திருவருள் துணைக்கொண்டு முயற்சிப்போம் (APJ அருள்).

இந்த இயற்கை கடவுளை வள்ளலார் எப்படி விவரிக்கிறார் என்றால்;

  • இயற்கை உண்மை வடிவனர்,
  • இயற்கை விளக்கத்தவர்,
  • இயற்கை இன்பமானவர்,
  • இயற்கை நிறைவானவர்.

இயற்கை உண்மை”

இயற்கை உண்மை என்பது கடவுளின் வடிவம் என்கிறார் வள்ளலார். அவ்வடிவம் அறிவாக உள்ளது. இயற்கை உண்மை விளங்கும் நிலை அருட்பெருஞ்ஜோதி சொரூப நிலையாகும். இந்த இயற்கை கடவுளை ஒவ்வொருவரும் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து அனுபவிப்பதே உண்மை அறிவும் உண்மை இன்பமும் ஆகும். இதுவே அக அனுபவம். இயற்கை உண்மை தான் சுத்த சன்மார்க்கத்தின் தனிப்பதியாக உள்ளது.

பாடல் வரி :

“……. சமரசசன் மார்க்க சத்தியமே, இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று கணிந்துளத்தே கனிந்து நினைந் துரைத்திடில்அப் பொழுதே காணாத காட்சிஎலாம் கண்டுகொளலாமே.”

இயற்கை உண்மை அறிவாக விளங்கும் நிலை;

  • அயர்வு அறு பேரறிவாகி,
  • அவ்வறிவுக்கு அறிவாய்,
  • அறிவு அறிவுள் அறிவாய்,
  • ஆங்கு அதனுள்ளோர் அறிவாய்,
  • மயர்வு அறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்.
  • செயற்கை மன்னும் அறிவு அனைத்தினுக்கும் வயங்கிய தாரகமாய்,,

வழிபாடுஎப்படி செய்வது ? :

நாம் நம்வழிபாட்டில் இந்த இயற்கை கடவுளையே உள்ளத்தில் கனிந்து நினைந்து உரைக்க வேண்டும். பணிந்து பாட வேண்டும் என்கிறார் வள்ளலார்.

நாம் எங்ஙனம் கனிந்து நினைந்து பணிந்து வழிபாடு செய்வது? இதற்கும் வள்ளலார் நமக்கு கருணை காட்டுகிறார்கள். கீழ்வருமாறு திருகுறிப்புகளால் இயற்கையை போற்றி வணங்குவோம்.

  • பரம்பரமே, சிதம்பரமே, பராபரமே, வரமே,
  • துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே,
  • துரியமுடி அனுபவமே, சுத்தசித்தாந் தமதாய்த்
  • தணிந்தநிலைப் பெருஞ்சுகமே, இயற்கை உண்மை பதியே,

மேலும்;

  • உத்தம சற்குருவே,
  • நித்திய வான் பொருளே,
  • எலா நிலைகளும் தான் ஆகி ஏர்உறவே விளங்குகின்றவரே,
  • சாகாக் கல்வி பயிற்றி என்னுள் சார்ந்து விளங்கும் சற்குருவே,
  • எல்லாம் தாமாகி ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவரே.

நீரே, சமரசசன் மார்க்க சத்தியம். சத்தியம், சத்தியம் என்கிறார் வள்ளலார்.

அன்பர்களே!, மேற்படி சத்திய சொற்களை தெரிந்து, அதன் பொருள் அறிந்து, மேற்படியாக பணிந்து கணிந்து நினைந்து உள்ளத்தில் உரைத்திட்டால், உரைப்பவர்கள் ஓர் அனுபவம் (காணாத காட்சி காணுதல்) பெறுகிறார்கள் என்கிறது சுத்த சன்மார்க்கம்.

யாருக்குஇந்த வழிபாடு சாத்தியம்?:

வள்ளலார் உறுதியாக கீழ்வருமாறு சொல்கிறார்கள் :

  • உண்மை கடவுளை, கடவுளின் உண்மையை நேர் உறவே எவராலும் கண்டுகொளற்கு அரிதாம் என்கிறார் வள்ளலார். (சுத்த சன்மார்க்கமே ஒன்றே வழி)
  • புலைசார் மனத்து உடையவரால் முடியாது. (புலால் உண்ணக் கூடாது)
  • கலைசார் முடிபு கடந்து உணர்வு கடக்க வேண்டும். (சமய மத வேத மற்றும் புராணங்கள் இதிகாசங்களில் லட்சியம் கூடாது)
  • சார் உலக வாதனையைத் தவிர்த்தவர் உள்ளம், ( சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரமில்லா நல்ல விசாரணை வேண்டும்)
  • ஓர்உறவு என்றடைந்து போற்றி மகிழ்ந்திடுபவரிடம், (எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொள்ளுதல் வேண்டும் )
  • உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தவரிடம். (கண்ணீருடன் உண்மையாய் இடைவிடாது வழிபாடு செய்தல் வேண்டும்)

இங்ஙனம் வழிபாடு செய்யின் நம் உள்ள அறிவினிலே இறைவன் அமர்ந்து அருளுவது சத்தியம் என்கிறார் வள்ளலார்.

கிடைக்கும்பயன்:

சுத்த சன்மார்க்க தனி வழியில் கிடைக்கும் பயன்களை பற்றி வள்ளலார் கீழ்வருமாறு சொல்கிறார்கள்:

  • அருட்சோதிநிலைசார் இறைமை அளிக்கப்படும். (இறைமை = உரிமை)
  • எல்லாம்செய் வல்லபம் அருளால் அளிக்கப்படும்.
  • பொன்றா வடிவு கொடுத்து எல்லாம் புரி வல்லபம் தரப்படும். (பொன்றா=அழியாத, என்றும் நிலைத்திருக்கும்)
  • மருவும் உலகம் மதித்திடவே மரண பயந்தீர்த் தெழில்உறுநல் (எக்காலத்திலும் உலகம் மதிக்கும். மரணப்பயம் தீரும். பேரின்பம் கிட்டும்)
  • உருவும் பொருள் ஒன்று எனத்தெளிந்த உணர்வு பெறுதல்,(கடவுள் ஒருவரே)
  • இறை உரு நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான் அது ஆனேனே

கடவுள்இடம்:

துரியநிலை கடந்தது அதன்மேல் சுத்தசிவ நிலையாய் உயர்வு உறு சிற்றம்பலம்.

சிற்றம்பலம் என்பது; இயற்கை உண்மை + இயற்கை விளக்கம் ஆகும்.

பூதவெளி பகுதிவெளி முதலா வகுக்கும்

அடிவெளிகளெலாம் வயங்கு வெளி யாகி

எண்ணம் உறு மாமவுன வெளியாகி அதன்மேல்

இசைத்த பரவெளியாகி இயல் உபய வெளியாய்

அண்ணு (அன்று) உறு சிற்பர வெளியாய்த் தற்பரமாம் வெளியாய்

அமர்ந்த பெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்

திண்ணம் (உறுதி) உறும் தனிஇயற்கை உண்மை வெளியான

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

கீழ் வரும் பாடலை நாம் பணிந்து பாடி பழக வேண்டும்:

உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உருவதாய் இன்பம்

புணர்ந்திட எனைத்தான் புணர்ந்தவா ஞானப் பொதுவிலே பொதுநடம் புரிந்தெண்

குணந்திகழ்ந் தோங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும்

தணந்தசன் மார்க்கத் தனிநிலை நிறுத்தும் தக்கவா மிக்கவாழ் வருளே.

அடுத்து;

இயற்கைவிளக்கம்:

பூத விளக்கம்

பகுதிகளின் விளக்கம்

தத்துவங்கள் விளக்கம்

(எலாம் தருவிளக்கம் நேர் ஆதி விளக்கமதாய்ப்)

பரைவிளக்கம்

பராபரை விளக்கம்

அகம் புறமும் பேராசை விளக்கம்

சுத்த விளக்கம்

பெருவிளக்கம்

(எலாம் பெற்றவிளக்கமதாய் சீராட விளங்குகின்ற)

இயற்கைவிளக்கம் அதாம் திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

ஆக, இயற்கை விளக்கம் என்பது இயற்கைஉண்மையில் அருளால் வெளிப்பட்டுள்ள அனைத்தும் எனப்படும்.

அடுத்து;

இயற்கைஇன்பம்:

இயற்கை உண்மை என்பது சிவம். இந்த உண்மை சிவத்தை அறிதல் வேண்டும்.

சிவம் கலந்து விளங்கும் நிலையை தான் இயற்கை இன்பம் என்கிறார் வள்ளலார்.

சுத்த சிவா சாக்கிரம் (சாக்கிராதீதம்) இதில் கிடைக்கும் இன்பம். இயற்கையின் திறம் அறிதலே இன்பம். கடவுளுடன் கலக்கும் நிலை / கடவுளை உணரும் நிலை அது;

இது தனி உரு ஆகும். இது (நன்மணி) ஒளியானது. இந்த உருஒளியை நம்முள் உணர்ந்து தரிசிக்க, நமக்கு தேன் சுவை கொடுக்கும். இவை திரிபு இன்றி விளங்கும் இன்பம் ஆகும். இதுவே இயற்கை இன்பம். மேற்படி இன்பம் குறித்து விரிக்கில்;

இந்திரிய இன்பம்

கரண இன்பம்

உலக இன்பம்

உயிர் இன்பம் முதல் எய்தும் இன்பம்

ஓர் ஆன்மஇன்பம்

தனித்த அறிவு இன்பம்

சத்திய பேரின்பம்

முத்தி இன்பம், அதன்மேல்

நடம்பெறு மெய்ப்பொருள் இன்பம்

நிரதிசய இன்பம்

ஞான சித்திப்பெரும்போக நாட்டரசி இன்பம்

திடம்பெற ஓங் கிய இயற்கைத் தனி இன்பம் – என்கிறார் வள்ளலார்.

இறைவன் நம் உளத்தே அமர்ந்து, தன்மயம் ஆக்கி, அதனால் பொங்கும் ஆனந்த போகம் நாம் பெறுதலே அருள் எனப்படும்.

ஆறாம் திருமுறை நடராஜபதி மாலை

எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்

எல்லாஞ்செய் வல்லதாகி

இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்

இயற்கையே இன்பமாகி

அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த

அருளாகி அருள்வெளியிலே

அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள்

அருட்பெருஞ் சோதியாகிக்

கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க்

காட்சியே கருணைநிறைவே

கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற

கதியே கனிந்தகனியே

வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே

வீற்றிருந் தருளும்அரசே

மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே

மேவுநட ராஜபதியே.

இயற்கை முடிபு

வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தாம், நாதாந்தம், கலாந்தம், யோகாந்தம் என ஆறு அந்தங்கள் வள்ளலாருக்கு முன்பு வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த ஆறு அந்தங்களின் முடிபு சார்ந்தது இல்லை வள்ளலாரின் சுத்த சன்மார்க்க முடிபு. சுத்த சன்மார்க்க முடிபை இயற்கை முடிபு எனத் தனியாக பெயரிட்டு அழைக்கிறார் வள்ளலார். இதுவரை வேத சமய மத மார்க்கங்களால் வெளிப்பட்டுள்ள மேற்படி ஆறு அந்தங்களின் முடிபுகளை கடந்ததே வள்ளலாரின் இயற்கை முடிபு.

துங்கம் உற்று அழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்

சங்க நின்று ஏத்தும் சத்திய ஞான சபைய வா அபய வாழ் வருளே.

அன்பர்களே,

  • இயற்கை அழிவில்லாது.
  • என்றும் இங்கிறவா இயற்கை என்றுறுமோ…
  • இறந்து இறந்தே இளைத்ததுஎலாம் போதும் இந்த உடம்பே

இயற்கை உடம்பாகஅருள்.

  • கடவுள் இயற்கைஅருட்செயலோ
  • இல்லைஉண்டெணும் இவ்விருமையும் கடந்தோர் இயற்கை
  • அனாதி இயற்கையோ
  • இறவானைப் பிறவானை இயற்கை யானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின்றேனே.
  • எல்லாஞ்செய் வல்லசித்தின் இயற்கையுந்தந் தனையே.
  • ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்

உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே

  • இரவு இலாது இயம்பும் பகலிலாது இருந்த

இயற்கையுள்  இயற்கையே என்கோ

  • அருட்சோதி இயற்கை என்னும்

துப்பாய உடலாதி தருவாயோ

வள்ளலார் கண்ட கடவுள் “இயற்கை கடவுள்”. இயற்கை எல்லோராலும் போற்றுதலுக்கு உரியது. எது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறதோ அதுவே பொது எனப்படும். எது பொதுவாக விளங்குகிறதோ அதுவே சிறப்புக்குரியது ஆகும். எது சிறப்புக்குரியதாக ஏற்று பார்க்கப்படுகிறதோ அதுவே மெய்ப்பொருள் எனலாம். அப்படித்தானே.

இதோ வள்ளலார் சொல்கிறார்கள்:

எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள்

அச்சபை யிடங்கொளு மருட்பெருஞ் ஜோதி (அகவல்)

எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது சுத்த சன்மார்க்கம்.

— நன்றி : APJ அருள் ( 8778874134)

இயற்கை உண்மை இயற்கை விளக்கம்  இயற்கை இன்பம்:

குறித்த சில பாடல்கள் :

திரு அகவல் :

இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்

அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

திருவருட்பா :

ஆறாம் திருமுறை அம்பலவாணர் அணையவருகை

இயற்கைஉண்மை வடிவினரே அணையவா ரீர்

எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர்

இயற்கைவிளக் கத்தவரே அணையவா ரீர்

எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர்

இயற்கைஇன்ப மானவரே அணையவா ரீர்

இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர்

இயற்கைநிறை வானவரே அணையவா ரீர்

என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்

ஆறாம் திருமுறை நடராஜபதி மாலை

எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்

எல்லாஞ்செய் வல்லதாகி

இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்

இயற்கையே இன்பமாகி

அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த

அருளாகி அருள்வெளியிலே

அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள்

அருட்பெருஞ் சோதியாகிக்

கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க்

காட்சியே கருணைநிறைவே

கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற

கதியே கனிந்தகனியே

வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே

வீற்றிருந் தருளும்அரசே

மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே

மேவுநட ராஜபதியே.

இயற்கை உண்மை :

ஆறாம் திருமுறை மரணமிலாப் பெருவாழ்வு

பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்

பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே

துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே

துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்

தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க

சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று

கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே

காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே.

சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே

சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை

நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்

நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி

ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை

எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை

ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்

உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.

ஆறாம் திருமுறை இறை இன்பக் குழைவு

கலைசார் முடிபு கடந்துணர்வு கடந்து நிறைவாய்க் கரிசிலதாய்க்

கருணை மயமாய் விளங்குசிதா காய நடுவில் இயற்கையுண்மைத்

தலைசார் வடிவில் இன்பநடம் புரியும் பெருமைத் தனிமுதலே

சாகாக் கல்வி பயிற்றிஎன்னுட் சார்ந்து விளங்கும் சற்குருவே

புலைசார் மனத்துச் சிறியேன்றன் குற்றம் அனைத்தும் பொறுத்தருளிப்

பொன்றா வடிவு கொடுத்தெல்லாம் புரிவல் லபந்தந் தருட்சோதி

நிலைசார் இறைமை அளித்தனைநான் பொதுவில் ஞான நீதிஎனும்

நிருத்தம் புரிகின் றேன்புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே.

ஆறாம் திருமுறை இனித்த வாழ்வருள் எனல்

உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உருவதாய் இன்பம்

புணர்ந்திட எனைத்தான் புணர்ந்தவா ஞானப் பொதுவிலே பொதுநடம் புரிந்தெண்

குணந்திகழ்ந் தோங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும்

தணந்தசன் மார்க்கத் தனிநிலை நிறுத்தும் தக்கவா மிக்கவாழ் வருளே.

தெய்வமணி மாலை:

அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்

அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்

மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை

மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்

துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்

துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்

உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

ஆறாம் திருமுறை திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை

வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா

வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி

எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்

இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய்

அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்

அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்

திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

இயற்கை விளக்கம் :

சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்

தத்துவங்கள் விளக்கமெலாந் தருவிளக்க மாகி

நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி

நிலைத்தபரா பரைவிளக்க மாகிஅகம் புறமும்

பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப்

பெருவிளக்க மாகிஎலாம் பெற்றவிளக் கமதாய்ச்

சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம்

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

இயற்கைஇன்பம்:

அனுபவ மாலை:

நான்புகலும் மொழிஇதுகேள் என்னுடைய தோழி

நாயகனார் தனிஉருவம் நான்தழுவும் தருணம்

வான்புகழும் சுத்தசிவ சாக்கிரம்என் றுணர்ந்தோர்

வழுத்துநிலை ஆகும்உருச் சுவைகலந்தே அதுவாய்த்

தேன்கலந்த சுவையொடுநன் மணிகலந்த ஒளியாய்த்

திரிபின்றி இயற்கைஇன்பச் சிவங்கலந்த நிலையே

தான்புகல்மற் றையமூன்றும் கடந்தப்பால் இருந்த

சாக்கிரா தீதம்எனத் தனித்துணர்ந்து கொள்ளே.

தெய்வமணி மாலை:

இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக

இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்

தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்

சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்

நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்

ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்

திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்

திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

இயற்கை:

அருட்பெருஞ்சோதி அட்டகம்

ஏகமோ அன்றி அனேகமோ என்றும்

இயற்கையோ செயற்கையோ சித்தோ

தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ

திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ

யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ

உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர்

ஆகமோ டுரைத்து வழுத்தநின் றோங்கும்

அருட்பெருஞ் சோதிஎன் அரசே

திரு அட்டகம்:

எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே

இதுஅது எனஉரைப் பரிதாய்த்

தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்

தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்

பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்

புத்தமு தருத்திஎன் உளத்தே

அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

ஆறாம் திருமுறை அருட்கொடைப் புகழ்ச்சி

மருவும் உலகம் மதித்திடவே மரண பயந்தீர்த் தெழில்உறுநல்

உருவும் பொருள்ஒன் றெனத்தெளிந்த உணர்வும்

என்றும் உலவாத

திருவும் பரம சித்திஎனும் சிறப்பும் இயற்கைச் சிவம்எனும்ஓர்

குருவும் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

ஆறாம் திருமுறை அனுபவ மாலை

கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்

கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்

இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்

இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே

பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்

புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே

நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி

நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே.

( – APJ அருள் – 8778874134 )