

” கோரானா ” விற்கான
‘இரு மருந்து’
– கருணை சபை சாலை.


” கோரானா ” விற்கான
‘இரு மருந்து’
– கருணை சபை சாலை.

” சும்மா ” தானே இருக்கிறாய் ?
சிந்தித்தால் என்ன?
— இ.
ஆம், ” கோரானா நோய் ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே இருப்பவன் நான்.
தூக்கம் கலைந்து எழுந்து, கடவுளை வணங்கி, டிபனை வயிற்றில் நிரப்பி, சந்தோசமா டிவியில் சினிமா, சீரியல், நண்பர்களிடம் செல்லில் பேசி, இடையில் கொடுக்க ப்பட்ட நொறுக்கு தீனிகள், மீதி படம், சூப்பர் சாப்பாடு, ஒரு குட்டி தூக்கம், அதை கலைக்க டீ, வடை, மீண்டும் டிவி, செல், புத்தகம் படித்து, சுவையான இரவு டிபன், டிவி, உறக்கம் வந்ததால் உறங்கச் சென்று, இங்ஙனம், இங்ஙனம் மட்டுமே நாள்கள் கடந்து செல்கிறது.
நேற்று இரவு வசூலில் சாதனை படைத்த படத்தை மீண்டும் பார்த்து தூங்கச் சென்றேன்.
ஒரு குரல்…
” சும்மா தானே இருக்கிறாய்.
கொஞ்சம் சிந்தித்தால்தான் என்ன? ”
யாரு என்றேன்?….
” யாராய் இருந்தால் என்ன, பதில் சொல்லு…”
— என்றது குரல்.
சும்மா நான்.. இருக்கலியே…என்றேன்.
“அடச்.. சீ…
சிந்தித்தாயா… சிறிதாவது”
— என்றது குரல்.
குரலுக்குரியவரை பார்க்க திரும்பினேன்… கட்டிலிருந்து கீழே விழுந்ததில், தெரிந்துக் கொண்டேன் ” கனவு ” என்று.
ஆனால் அந்த வார்த்தைகள்.
தினம் நான் செய்த வேலைகள்..??
காலை எழுந்தேன். கடவுளை வணங்கினேன்.
— இதில் என்ன சிந்திக்க வேண்டும்?
அடுத்து,
சாப்பாடு, டிவி யில் செய்தி, படங்கள் சீரியல்கள்.
— இதில் என்ன சிந்திக்க வேண்டும்?
அன்றைய இரவு வந்தது…..
படம் பார்த்ததால், மனம் பாதித்து, தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு..,
அதிகாலையே எழுப்பப் பட்டேன்.
எழுந்து,
நான் தினம் வணங்கும் தெய்வப் படத்தை கண்டேன்.
உற்று நோக்கினேன். இந்த உலகில் எத்தனையோ சமயமதங்கள்,மார்க்கங்கள் உளது. அதில் பல்வேறு கடவுளர்…..
ஆம்,
தனிமையும், பொழுதும் என்னை உள்ளழுந்தி சிந்திக்க வைத்தது. என் அறிவை இன்று தான் உணர்ந்தேன். என்னுள் ஒரு விசாரம் தானாகத் தொடங்கியது.
……….
எனக்கு காட்டப்பட்ட கடவுளரிடத்தில் நம்பிக்கை கொண்டு தினம் வணங்கி வந்தேன்.
ஆனால்,
கடவுளை பற்றி நான் சிந்திக்கவே இல்லையே ?
உலகில் எண்ணிலடங்கா சமயமத மார்க்கங்கள். அவற்றில் பல கடவுளர்.
இந்த கடவுளர் மத்தியில்
உண்மை கடவுள் யார்? அக்கடவுளின் உண்மை என்ன?
சாதி சமயங்களில் நான் வைத்த பற்று, கொடுக்கும் காணிக்கை, பலி,
செய்யும் வழிபாடு, சடங்கு சம்பிரதாயம்,
இவை சரியா? நான் வணங்கிவரும் கடவுளின் உண்மை தன்மை என்ன?
இதற்கு ஏன் ஆசைப் படவில்லை இது நாள் வரை?
எது என்னை தடுத்தது?
அமைதியாக ஆழ்ந்தேன்.
………
“எனது அன்றாட நிகழ்வுகள்”
# டிவி #
(சில (டிவி-) நிகழ்ச்சிகளை தவிர)
திரையில் காட்டப்பட்டதில் அனைத்துமே காதல், ஆடல் பாடல், குரோதம், காமம், சாதி, சமயமதம், அதிகார வர்க்கம், அரசியல்,வறுமை, இவையில் ( காட்டப்பட்ட காட்சியால்) ஏக்கம், பக்தி,கோபம், வெறி, தவிப்பு, வருத்தம் இவையாவும் என்னுள் பதிந்து நினைவில் நீடிக்கிறது. திரைகாட்சி தானே இது.
ஆனால், கதாநாயகன் வந்து சரி செய்தது போக,
என்னுள் காமம்,பக்தி, சாதி சமயம், அரசியல் வெறி, குரோதம் இவை பதிந்து தங்கியது எப்படி?
……..
நான் தெய்வப் பற்று கொண்டிருந்தாலும்,
இன்று என்னுள்…,
உண்மை கடவுள்,
கடவுளின் உண்மை நிலை, என் நிலை,
என்னை சுற்றியிருக்கும் இயற்கையின் திறங்கள்,
– இவை குறித்து நான் தெரிந்து கொள்ள, காண இப்ப ஆசை வந்தது.
இது நாள் வரை “சும்மா” இருந்து விட்டேனே!
இப்ப என் நினைவுக்கு வருகிறது, வள்ளுவரின் குறள்:
” எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ”
அப்படியெனில்,
கண்ணால் கண்டது?
காதால் கேட்டது?
இதற்கு குறள் பதில்..?
” எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு ”
ஆமாம்..
எங்க தாத்தா எனக்கு சொன்ன பழமொழி ஞாபகம் இப்ப வருது…
“கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதுவும் பொய்; தீர விசாரிப்பதே மெய்”
வள்ளலாரும் இதை தான்
சுட்டி காட்டினாரா?
பாடல் நினைவுக்கு வருகிறது. அந்த பாடல்:
” கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.”
சரி…
சிந்திக்க யார் துணை நாட?
இன்று இந்த சிந்தனையை செய்தது நான் தானே!
பதில் கிடைத்ததும் என்னிடம் தானே!.
ஆம்,
” நோய்க்கும் மனித செயலே காரணம். அந்நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பவனும் மனிதனே.”
எல்லாம் என்னிடமே.
இது எல்லோரிடத்திலும். எல்லோரிடத்திலும் அகம் ஒரே மாதிரி.
அப்படி என்றால் கொடுத்தவர் ஒருவரே!
ஆனால்,
மனிதன் வெளிப்படுத்தும் தன்மையில் பல்வேறாக உள்ளதே?
அது அவரவர் பெற்ற அறிவு அடிப்படையில்! இது புறம்.
ஆனால், அகம் ஒன்றே..?
நாம் பெற்ற அறிவில் சிந்தித்து, விசாரம் செய்தால் அக அறிவு தோன்றும். ஆக, “அறிவை விருத்தி செய்தல், விருத்திக்கு விசாரம் செய்தல்”
இதுவே,
மனிதன் மட்டும் பெற்றிருக்கும் ஆறாம் அறிவு ஆகும்.
ஆகா, நான் சிந்திக்க ஆரம்பித்து விட்டேனே!
இதுவரை இந்த சிந்தனையை என்னிடம் தடுத்தது எது?
கற்பனை திரை காட்சிகள், காம, குரோதம், பொய்யான சாதி, கருணையின்மை, தீர்மானமாக கொண்ட கட்டுப்பாட்டு சமய ஆசாரம், இவையே.
“விட்டு விட்டேன்” அவற்றை இந்த நிமிடம் முதல்.
ஆகா..,
அருமை…அருமை..
மீண்டும் ஆழ்வோம் சிந்தனையில்….
உண்மை உணரும் வரை.
…….
அது.. என்ன சத்தம்….??
” ஏங்க.. உங்களத்தானே, என்ன செய்றீங்க…,
” சும்மா ” தானே இருந்தீங்க, பால் வாங்கி வைத்திருக்கலாமே..எதுவும் செய்ய மாட்டாராம்,
ஆனா..
உடனே காப்பி கேட்பீங்க, அப்பறம் டிவி, செல்லு, டிபன்,அப்பறம் தூக்கம்..
அடச்.. சீ.. ”
அதற்கு நான்:
” இல்லம்மா.. சிந்திஞ்சிட்டு இருந்தேன்….”
” என்னது?.. நான் தான் பார்த்தேனே..”சும்மா” இருந்துட்டு சிந்திஞ்சிட்டு இருந்தாராம் … சரி.. இன்னிக்கு நீங்க வேலையை பாருங்க.. நானும் உங்கள மாதிரி கொஞ்ச சிந்திக்கிறேன்…”
….!!! ???
நன்றி:
நா.இ., மதுரை.
ஆமாம் நாம் சிந்தித்ததை “சும்மா ” என்றாலே?
” சும்மா ” ன்னா என்ன? சாரி..சாரி.. “சும்மா”
முடிந்தது.
( ஆனால் விசாரம் தொடங்கியது) — N.E.
# கோரானா
பணியில் அயராது உழைத்து வரும் கருணையாளர்கள் அனைவருக்கும், எங்கள் அன்பரின் இக்கட்டுரையை சமர்ப்பித்து, நன்றியுடன் வணங்குகிறோம்.
? ஏபிஜெ அருள்,
கருணை சபை சாலை, மதுரை.

” புருவமத்தி என்பது எது?
எங்குள்ளது?
தெரிந்தவர்கள் பதிவு செய்யலாமே.
காரணம்,
” புருவமத்தி கண்ணே ” நம்முடைய கரணத்தை செலுத்த வேண்டும்.”
” … புருவமத்தியில் நிற்க செய்தல் ”
என வள்ளலாரின் உபதேசக்குறிப்பில் உள்ளது. (இரண்டரை அங்குல இடைவெளியில்)
கோசம், தொப்புள், மார்பு,கண்டம்,அண்ணாக்கு,
புருவமத்தி… எனச் சொல்லப்பட்டதில் புருவமத்தி தவிர மற்றவையின் இடம் சரியாக புரிந்துக் கொள்ள முடிகிறது.
ஆனால், உண்ணாக்கு மேல் இரண்டரை அங்குலத்தில் புருவமத்தி உள்ளதாக இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் ” புருவமத்தி” என்பது எதைக் குறிக்கிறது?
மற்றும்,
சுத்த சன்மார்க்க நெறியில்
புருவமத்தி பயிற்சி உண்டா?
இல்லை என்றால் வள்ளலார் செய்ய சொல்லும் நன்முயற்சி எது?
சான்றோர்கள் விளக்கம் அளித்து விசாரம் செய்யுமாறு பணிவுடன் அழைக்கிறேன்.
? நன்றி. ஏபிஜெ அருள்.
விசாரத்திற்கு உதவும் வகையில் தொடர்புடைய
” சுத்த சன்மார்க்கப்பாடல்கள் “ கீழே தரப்பட்டுள்ளது.

சித்திரை-1
” சுத்த சன்மார்க்க தினம் ”
“150 வருட” துவக்கம்.
— ஏபிஜெ அருள்.
12-04-1871 சித்திரை- 1 ல் ,
சுத்த சன்மார்க்கத்தில் வருகிற கடவுள் யார்? இனி பேதங்கள் போய் உண்மை வழி விளங்கும் என ஒரு திருமுகம் வாயிலாக உலகத்தார் அனைவருக்கும் அறிவித்தார் வள்ளலார்.
இனிய தமிழ் நாளில் உண்மை பொது நெறி வெளிப்பட்டு 14-04-2020 இன்று “150 வது” வருட துவக்கம். ஆனால் இதுவே நல்ல தருணம். சமய சாத்திர சாதி ஆசார பேதங்கள் போய் சுத்த சன்மார்க்க நெறி விளங்கும். இது உண்மை கடவுள் சம்மதம் என்கிறார் வள்ளலார்.
இனிய தமிழ் திரு நாள்
வாழ்க தமிழ் !
பரவட்டும் உண்மை பொது நெறி !
அன்புடன்,
?ஏபிஜெ அருள்

உண்மை உணர உற்ற தருணம் இதுவே. பொருளாதார கொள்கையை மற்றும் கடவுள் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இதுவே.
— ஏபிஜெ அருள்.
இன்று வந்து உள்ள சூழலுக்கு யார்,எது காரணம்?
வள்ளலாரின்
திருஅகவல்:
” எங்கெங் கிருந்துயிர் ஏதேது வேண்டினும்
அங்கங் கிருந்தருள் அருட்பெருஞ்ஜோதி”
— எங்கு எங்கு எல்லாம் உயிர்கள் உள்ளனவோ, அவ்வுயிர்கள் எல்லாம் எது தனக்கு வேண்டும் என்று எதை எதை எண்ணியதோ, அவை அனைத்தையும் அங்கு அங்கே கிடைக்குமாறு அருள் செய்து உள்ளது அருட்பெருஞ்ஜோதி.—
ஆம்,
உயிர் வாழ தேவையானதை அவ்உயிர்கள் வாழும் இடத்திலேயே இருக்கின்ற இயற்கை திறத்தை இன்று நாம் சத்தியமாக உணர்ந்தே ஆக வேண்டும். இந்த இயற்கை இயலை நம் குழந்தைகளுக்கு இன்றே தெரியப் படுத்த வேண்டும். இன்று இங்கு ஒன்று தயாரிக்கிறோம் என்றால் அதன் மூலப்பொருள் மற்ற நாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறோம். இதில் அம்மூலப்பொருள் இங்கும் இருக்கும். நாம் தெரிந்திருக்கவில்லை. தேடவில்லை. மற்ற இச்சையிலேயே இருக்கிறோம். மூலப்பொருள் இருந்தும் அந்த நாடு தயாரிக்க முன்வரவில்லை. இது போல எல்லாம் அறிக! நாம் உயிர் வாழ அதுவும் அன்பாக, ஆரோக்கியமாக, இனிமையாக, ஈனமின்றி உயிர் வாழ, நமக்கு தேவையான அனைத்தும் நம் பகுதியிலேயே கிடைக்கிறது என்ற உண்மையை தான்
இன்று ஏற்பட்டுள்ள சூழ்நிலை நமக்கு கற்று தந்துள்ளது. ஆனால் , ஆடம்பர வாழ்க்கை, புலன்களின் இச்சை, ஆணவ மேலாண்மை இவைக்கே நாடுகளிடையே வணிகம் மற்றும் போர். இயற்கை சார்ந்து வாழும் மனிதர்க்கு ( உ.ம். கிராமவாசிகள், ஏழைகள்) அறிவும் அருளும். ஆம், இவர்களுக்கு தேவையில்லை நாம் செய்யும் நாடுகளிடையே வாணிகமும், நடத்தும் போரும். அதிகாரவர்க்கம் பணக்காரர்களுக்குதான் இவை. ஆனால் மேற்படி வணிகம், போர் இவற்றால் ஏற்பட்ட பாதிப்பு எல்லோருக்குமே.
இது எப்படி நியாயமாகும்?
ஆம், நாட்டின்
பொருளாதார கொள்கையை மாற்றியே ஆக வேண்டும். தவறு செய்பவர்கள் திருத்திக் கொள்ளவேண்டும். முடியாது என்றால் பொருளாதார நிபுணர்கள் முன் வரவேண்டும் கிராமம், ஏழைகள் இவர்களுக்கான பொருளாதார கொள்கை திட்டத்திற்கு. புதிய பொருளாதார புரட்சிக்கு.
அடுத்து,
சமய,மத,இனப் போராட்டம், போர். மேற்படி போரால், சண்டையால் இவை விரும்பாதவர்கள், அன்பு உள்ளங்களையும் பாதிக்கிறதே, மரணமும் ஏற்படுகிறதே.போரும் கொலையும் சாதியும் கலையும் உள்ளது தானே நாம் இன்று பற்று வைத்திருக்கும் சமய மதங்கள்.
எவராலும் இதை மறுக்க முடியாது.
திரு அகவல்:
“எம்மதம் எம்இறை என்ப உயிர்திரள்
அம்மதம் என்றருள் அருட்பெருஞ்ஜோதி”.
” எங்களது மதம் எங்களது இறைவன் என்று அவர்கள் வேறு பிரித்துக் கூறி கொண்டிருப்பது அவர்களுக்குள் உள்ள அகங்காரம் ஒன்றாலேயே என்று தெரிவித்து அருளிய அருட்பெருஞ்ஜோதி.”
எனவே, நமக்கு ஏற்படும் அவத்தைகள் விலக, எந்த சாதி சமய மதப் பெயரால் கொலையும், போரும், நடைப்பெறுகிறதோ, மேலும், நமக்கு மயக்கமும் கட்டுப்பாடும் ஏற்படுத்தும் அந்த சாதி சமய மதத்தில் நாம் பற்று வைக்காமல் விட்டு விட வேண்டும். அவர்கள் கொலையும், போரும், சடங்குசம்பிரதாயங்களும், நமக்காகவே மக்களுக்காக செய்கிறோம் என்பது பொய்யாகிவிடும். சாதி சமயப்பற்றை விட்ட நாம் உண்மை சாருவோம். கொல்லா நெறி, கருணை கொள்கை, இயற்கையே இறைவன் எனும் போது, நாம் “நஷ்டம் அடையோம்” என்ற வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் தெரிந்து சாருவோம்.
ஆம்,
கிராமம், ஏழைகள் இவர்களுக்கான புதிய பொருளாதார கொள்கை தோன்றட்டும்.
பொதுநோக்கம் ஆன்ம நேயம் இயற்கை இறை கொள்கையாக கொண்ட வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் இனி விளங்கட்டும்.
#அன்புடன் ஏபிஜெ அருள். #
— Apjarul, Karunai sabai Salai.?
வள்ளலாரையும், அவர்தம் மார்க்கம் “சுத்த சன்மார்க்கம்” ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?
1)இம்மார்க்கம் புதியது.
2) தனி நெறி கொண்டது.
3) மற்ற சமயமத கடவுள் இல்லை. ஒருவராகிய தனி கடவுள்.
4) வள்ளலார் உண்மை கடவுள் அருளால் ” மரணத்தை ” தவிர்த்துவிட்டு ஒளி தேகம் பெற்றார்.
5) எல்லாருக்கான உண்மை பொது வழி. அன்பர்களே! இன்றைய சூழல்; இயற்கை சீற்றமோ, இயற்கையை நாம் புரியாததினாலோ, இயற்கை நமக்கு புரிய வைக்கிறதோ, தெரியவில்லை,
இந்த “கோரானா ” பரவி இன்று மனித இனத்தையே அழிக்க உள்ளதோ? என அஞ்சி உள்ளோம். மூடத்தை போதித்து வந்த சமயமத பிரச்சார போலிகளை, சாதி வெறிகளை இந்த கோரானா கைகட்டி வாய் பொத்தி நிற்க வைத்து விட்டது. இந்நிலையில் நம் குழப்பமான சூழ்நிலைக்கு பதில்? ….? நம் அறிவு ஒன்றே துணை. அதையும் தாண்டி உள்ள இயற்கை திறம் என்ன?, உண்மை கடவுள் யார்? என சிந்திக்க வைத்துள்ளது? ஆனால், எவர் ஒருவர் உண்மை (கடவுள்) நிலை அறிய, இயற்கை திறம் இவை, தன் அறிவு கொண்டு அறிய ஆசைப் படுபவர்களுக்கு மட்டுமே இந்த ” சுத்த சன்மார்க்கம் ” உள்ளது. வாருங்கள் (விருப்பம் உள்ளவர்கள் மட்டும்) நல்ல விசாரணையை வள்ளலார் வழியில் இன்றே செய்திடுவோம்.
நன்றி: ஏபிஜெ அருள்.
கொரானாவின் உண்மை # கடவுளின் உண்மை
https://youtu.be/PDbkCgBcVcE
உண்மை கடவுளை தேட வைத்த கோரானா. நம் சுயநலத்திற்காக அனைத்தையும் அழித்து வந்தோம். மலைகள்,கணிமம்,மணல்,தாதுப் பொருள், எரிபொருள் முதலிய பொருள்களை கொள்ளைக் கொண்டோம். மேலும், காடுகள் அழித்து கோடி உயிரினங்களை கொன்றோம். சாதி சமய மதப் பெயரால் போர்கள் தீவிரவாதம் மற்றும் பதவிக்கான கொலைகள் தொண்டுக்கு லஞ்சம் காமப்படங்களால் கற்பழிப்பு செய்கைகள், காலதாமத முடிவுகள், இவையான பொதுநோக்கமற்ற செயல் செய்தது நாமாகிய மனித இனமே. ஆனால், இன்று நம் நிலை? நாம் செய்த கொடுமையால் தப்பிக்க வழியில்லை. நடந்தது நடந்தவையாக போகட்டும். அறிவால் மீளுவோம். அன்பால் வெற்றி பெறுவோம். எல்லாம் வல்ல இயற்கையை வணங்குவோம்.
— கருணை சபை சாலையில் நல்ல விசாரணை 25-03-2020.
கடவுள் என் செய்யும்?
— ஏபிஜெ அருள்.
நாடுகளிடையே;
போர்கள் கூடாது.
செருக்கு கூடாது.
அதிகாரம் கூடாது.
மனிதர்களிடையே;
மயக்கம், சுயநலம், திகைப்பு கூடாது.
இவை செய்யும்
” தேவர்கள் அறிவு” நம்மிடையே ஒழிய வேண்டும்.
அடுத்து,
சிறை செல்லும் செய்கை கூடாது.
பயம் கூடாது.
திருட்டு,கொலை செய்யும் “நரகர் குணம்” நமக்கு கூடாது.
உயர்ந்த அறிவாகிய
“கருணை ” நம்மிடம் விருத்தியாக நன்முயற்சி செய்தல் வேண்டும்.
நாம் யார்? நமக்கு மேல் அனுஷ்டிக்கும் இயற்கையின் திறம் (உண்மை இறைவனின் நிலை) என்ன என நல்ல விசாரணை அறிவு வழியில் செய்யச் சொல்லும் “ஆறாவது அறிவை” பெருக்க வேண்டும்.
இந்த “ஆறாவது அறிவாகிய” உள்ளத் தெளிவு நம்மிடையே வராமல் தடுப்பவை, சாதி சமயமும் அதன் கட்டுப்பாட்டு ஆசாரங்கள் என்கிறார் வள்ளலார். பொது நோக்கம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை லட்சியமாக கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார். இந்த அறிவு மனித தேகம் உடையோர் பெறுகிறார்கள் என்கிறார்.
இதுவே அவர் கண்ட “சுத்த சன்மார்க்கம்”.
சமயம்,சாதி இவை தேவர் நரகர் குணம் குறித்தே உள்ளது.
சுயநலம், செருக்கு மயக்கம் இவையால் போர்கள், கொலைகள், இவை சரி என்றால் நம்மை கொல்லும் கொடிய நோய்கள், இயற்கை சீற்றங்கள் இருக்க தானே செய்யும்.
இங்கு
கடவுள் என் செய்யும்?
மனிதனாக இருப்போம்.
கருணை கொள்வோம். அன்பால் எல்லா உயிர்களிடமும் தயவும், அண்ட திறங்கள் (இறை உண்மை நிலை) காண ஆசைக் கொள்ளும் நன்முயற்சி கொள்வோம். உண்மை அறிவால் உண்மை அன்பால்
உண்மை கடவுளின் அருளால் பேரின்ப வாழ்வை நான் பெற்றேன். என்னைப் போல் நீங்கள் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை. இது சத்தியம் என்கிறார் வள்ளலார்.
வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் சாதி,கற்பனை, கலைகள்,ஆசாரம்,சாத்திரம்,போர், பலி, இவையில்லை. பொது நோக்கம், அறிவு, கருணை, இன்பம் இவையே உள்ளது.
19 ம் நூற்றாண்ட்டில், சமயப் பற்றை கைவிட்டு விட்டு, மிகப் பெரிய நன்முயற்சி செய்து, இரக்கத்தால் தவம் கொண்டு, உண்மை கடவுளை கண்டு, அருளால் கண்ட உண்மை பொது வழியே ” சுத்த சன்மார்க்கம்”. இம்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடையாக சமய,மத மார்க்கங்களை அறிவிக்கிறார்.
இம்மார்க்க வழியில் மட்டுமே “அவத்தைகளை” நீக்கிக் கொள்ள முடியும் மேலும் உண்மை கடவுளின் சொரூபம் கண்டு அருள் பெற முடியும் என்ற வள்ளலாரின் சத்திய வாக்கியத்தில் நம்பிக்கை கொண்டோர்
பார்க்க:

” கொரோனா”
நீ நல்லவரா? கெட்டவரா?
— apj arul
# உன் வரவால் மனித இனம் பிரிக்கும் சில சமயமத மூடப் போதனைகள் அடங்கிற்று.
# ஆனா, உன்னால் பாதித்தவர், நல்லவரை தொட்டாலும் அந்த நல்லவரையும் தாக்குகிறாய்.
# ஆறறிவு எங்கள் தேகம் பெற்றிருந்தாலும், கை சுத்தம் இட சுத்தம் எங்களுக்கு கற்றுக் கொடுத்தாய்.
# மருத்துவர் ஆலோசனை படி, தனிமைப்படுத்தி, பொறுத்துக் கொண்டால் நீ விலகிடும் குணம் படைத்தவன்
# ஆனா, பாதித்தவர்களில் 2% பேரை கொன்றாலும் நீ கொலைக்காரன் தானே?
# பணக்காரப் பொருளாதாரத்தை சீரழித்து விட்டாய். ஏழைகளின் அன்றாடப் பிழைப்பையும் சேர்த்து அல்லவா கெடுத்து வருகிறாய்.
# எந்த மருந்துக்கும் கட்டுப்டாத ஆணவக்காரானாய் உள்ளாய்.
# இயற்கையை பாதுகாக்காத உலக மனித இனத்திற்கு பாடம் புகட்டி “உண்மை அறிதல்” க்கு வித்திட்டாய்.
# பயம் எற்படுத்தி, சிக்கனம், சுகாதாரம், நல்ல உணவு, ஒற்றுமை எங்களுக்கு தெரிய வைத்தாய்.
# ஆனா, ஆதரவு அற்றவர்களையும் நீ பாரபட்சமின்றி தாக்குகிறாய்.
# எங்களிடம் உள்ள
சாதி வெறிப் பார்வை,
உன்னிடம் இல்லை.
ஏ கோரானாவே நீ நல்லவரா? கெட்டவனா?
குறள் வழியில்;
” குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”
ஆம்,
– எங்களை திருத்திக் கொள்ள போதியளவு அறிவு இயற்கை எல்லோருக்குமே கொடுத்துள்ளது.
– எங்களின் மூட நம்பிக்கை, சாதி மத வெறி, சுகாதார கேடு, இயற்கை சீரழித்தல் இவை எங்கள் ஞான அறிவால் புரிந்து இனி நல்ல வழியில் நடந்துக் கொள்ள முடியும்.
— இதை சாக்காக வைத்து உள்ளே நுழைந்தாய். இனி எங்களில் ஒருவரை கூட இழக்க விட மாட்டோம்.
– நீ உருவாக்கப் பட்டவனா? உருவானவனா? எப்படி இருந்தாலும் நீ கெட்டவன்.
நீ அடங்கு எனச் சொல்ல முடியாது.
எங்கள் இன மருத்துவர் அறிவால் விரைவில் நீ அடக்கப்படுபவாய்.
எங்கள் நன்முயற்சில் விரைவில் எங்கும் இல்லாமலே போவாய்.
உண்மைஅன்பு உண்மை அறிவு உண்மை இரக்கம் எங்களை இனி வழி நடத்தும். எல்லாம் வல்ல “இயற்கை திறம்” இனி துணைப் புரியும்.
நன்றி: ஏபிஜெ அருள்,
இது சத்தியம். இது சத்தியம்.