March 26, 2025
tamil katturai APJ arul

சொன்னவர் வள்ளலார், அதுக்கு நாம் என்ன பண்ண முடியும் ?

சொன்னவர் வள்ளலார், அதுக்கு நாம் என்ன பண்ண முடியும் ?    — APJ அருள்

வள்ளலாரின் சத்திய வாக்கியத்தை அப்படியே தந்தாலும் கூட அவற்றை எதிர்ப்பவர்களை நம்மவர் என கருத வேண்டாம். அவர்களின் அறிவும் அனுபவமும் வள்ளலாரின் பேரறிவு, அனுபவம் ஆகாது.

வள்ளலார் ஆரம்ப காலங்களில், தான்பிறந்த குடும்பம் சார்ந்த சைவ சமயத்தை சார்ந்திருந்தார்கள். பல தலங்களுக்கு சென்று நூற்றுக்கணக்கான சமய ஸ்தோத்திரப் பாடல்களை பாடி மகிழ்கிறார்கள். கருணை, தயவு, அருள் மற்றும் தத்துவங்களின் செயல்பாடுகள் குறித்தும் நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடி தந்துள்ளார் வள்ளலார். சைவ சமயத்தில் இருந்த காலத்தில், அச்சமயத்தின் புனித அடையாளத்தை அதன் ஆகமவிதிப்படி திருநீறு அணிந்திருந்தார்கள். எல்லோருக்கும் வழங்கியும் வந்தார்கள். இதை யாரும் மறுக்கவில்லை.

ஆனால், அதன்பின்பு சைவம் உட்பட உலக சமய மத மார்க்கங்களையும் அதன் ஆசார சங்கற்ப விகற்பங்களையும் கைவிட்டுவிட்டு, ஆசாரமில்லாத கருணை ஒன்றையே சாதனமாக வைத்து, ஒரு புதிய வழியை காண்கிறார் வள்ளலார். இந்த வழியில் காணும் கடவுள், உலக சமய மத மார்க்கங்களில் வருகின்றன கடவுள் அல்ல என்கிறார் வள்ளலார். உண்மை கடவுளின் அருளால் சாகாவரம் பெற்று பேரின்ப வாழ்வை பெற்றுக்கொள்ளலாம். இதுவே வள்ளலாரின் முடிவான சுத்த சன்மார்க்கம்.

தான் கண்ட சுத்த சன்மார்க்கத்திற்கு எக்காலத்திற்கும் தடைகள் எவைஎவை என்றும், விட்டொழிக்க வேண்டியவை எவைஎவை என்றும், நம்மிடம் வருவித்துக்கொள்ள வேண்டியவை எவை எனவும், செய்ய வேண்டிய யோகா எது எனவும் மிகத்தெளிவாக தந்துள்ளார்கள். வள்ளலாருக்கு கிட்டிய பேரின்ப பெருவாழ்வு போல் நாமும் பெற்று வாழ வேண்டும் என எவர் விருப்பம் கொள்கிறார்களோ அவர்கள், வள்ளலார் வகுத்த விதிகள், கட்டளைகள் படி நடக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படையான ஒழுக்கம் ஆகும்.

சுத்த சன்மார்க்கத்தில் சைவ சமயத்தின் புனித அடையாளம் திருநீறு ஏன் கூடாது? என விளக்கம் நாம் பல முறை கொடுத்தாச்சு. மீண்டும் பார்க்க : YOUTUBE ல்   “apjarul” . தயவு செய்து அதை ஊன்றி கேட்க வேண்டுகிறோம்.

வள்ளலார் கைப்பட எழுதிய விண்ணப்ப ஆவணத்தில்; “எல்லாமுடைய அருட்பெருஞ்சோதி அற்புத கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம் ஆசிரமம் முதலிய உலக ஆசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்தில் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும் .” இன்னும் பல உபதேசங்கள் மற்றும் பல பாடல்கள் உள்ளன. (பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளது).

ஆனால் திரும்பவும் அவர்கள் கேட்கிறார்கள் ;

“வள்ளலார் திருநீறு ஆசாரம் வேண்டாம் என எங்கு பாடியுள்ளார்? காட்டுக” –  இது போன்ற புரிதல் இல்லாத அவர்களின் கேள்வியை பற்றி என்ன சொல்ல?

அவர்களின் ஒழுக்கத்திற்கு ஏற்ப கீழ்வருமாறுதான் கேட்க வேண்டும்.

“ திருவள்ளுவர் புலால் உண்ணாமை, கொல்லாமை என்று தானே சொல்லி உள்ளார். அவர் ஆட்டுக்கறி, கோழிக்கறி சாப்பிட வேண்டாம் என்று எங்கு  சொல்லியுள்ளார்?” என்று கேட்பது போல்.

நம்மவர்களே, கவலை கொள்ளற்க. இங்கு வள்ளலாரின் சத்திய வாக்கியத்தை தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

(இவர்களின்) கூச்சலும் குழப்பங்களும் பக்குவம் வருவிப்பதற்கே என்கிறார் வள்ளலார். மற்றொரு இடத்தில் வள்ளலார் தெளிவாகவே சொல்கிறார்கள்; “இங்கு மற்றவைகளை உன்னி அவலமடைந்து நில்லாமல், சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவர் உண்டு என்றும், அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, பூரண சித்தியைப் பெற வேண்டுவதே சன்மார்க்கக் கொள்கை.” என்கிறார் வள்ளலார்.

மேலும், வள்ளலார் “சிவம்”, “திருசிற்றம்பலம்”, “உ” என்கிறார். அதனால் அவர் சைவ சமயத்தை கைவிடவில்லை என்கிறார்கள். இதையெல்லாம்

மிகத்தெளிவாக விளக்கப்பட்டுதான் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம், சாதி சமயம் மதம் கடந்து விளங்கும் ஒரு மார்க்கம் என நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“சிவம்”, “திருசிற்றம்பலம்” “உ” இவைகளுக்கு தமிழ் மொழி கொடுக்கும் பொருளை கண்டால் இவைகள் “எல்லோருக்கும் பொதுவானது” ஆகும்.

சிவம் என்றால்; மேன்மை, செம்பொருள் ஆகும். “திருசிற்றம்பலம்” இதில்  அம்பலம் என்றால் வெளி, நம்முள் இருக்கும் சிறிய வெளி எனப்படும் அங்கு தான் எங்கும் நிறைந்துள்ள இறைவனின் உண்மையை அறிந்துகொள்ள முடியும். அதனால் இவ்விடம் மேன்மைக்குரியதாக உள்ளதால் திருசிற்றம்பலம் எனப்படும்.

அடுத்து, “உ” தமிழ் மொழி எழுத்துக்களில் சிறப்பு சொல். “உ” பற்றி பல மேன்மைகள் சொல்லப்பட்டுள்ளது. இந்த எழுத்து அகம், புறம் இரண்டையும் குறிப்பதால், அகத்திலும் புறத்திலும் உள்ள இறைவனை பற்றி எழுதும் போது “உ” வை குறிக்க எல்லோருக்கும் தமிழ் மொழி தரும் உரிமை ஆகும்.

சத்திய ஞான சபையில் மற்ற விளக்குகள் கூடாது என்பது வள்ளலார் வகுத்துள்ள சபை வழிப்பாட்டு விதிப்படிதான் என்பதை கவனத்தில் கொள்க. சத்திய ஞான சபை, கொடி, விசாரம், நன்முயற்சி, உண்மைகடவுளின் சொரூபம் காணுமிடம், அருள் பெறுமிடம் இவை அனைத்தும் அக அனுபவங்களே அன்றி புறத்தில் எதுவுமில்லை என்கிறார் வள்ளலார்.

அப்படியெனில்; சத்திய ஞான சபை என்பது, கொடி கம்பம் இவை என்ன என்றால், அதற்கு காரணம்; வள்ளலார் தனக்கு ஏற்பட்ட விருப்பம் போல்  அதாவது சாகாமலிருக்க விருப்பம் போல் எவரும் விரும்பாமல் இருக்கிறார்களே என்றும், அகத்தில் தான் கண்ட கடவுள்வடிவம் தனி வடிவம் அது அருள் ஒளி என்பதை புறத்தில் காட்டி வெளிப்படுத்தவும், இதற்காக தான் சத்திய ஞான சபையும், கொடியும் ஆகும். இவைகள் “உண்மை செய்விக்கின்ற இடம்“ என்கிறார் வள்ளலார். என் மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை என்கிறார் வள்ளலார்.

இந்த உண்மையை தெரிந்துக்கொள்ள ஊன்றிப்படிக்க வேண்டும்.

அடுத்து, வள்ளலார் வணங்க கூடியவரே என்கிறார்கள். இதை யார் மறுத்தார்கள். வணங்குவதற்கும் அவரை தெய்வமாகப் பார்ப்பதற்கும் வேறுபாடு உள்ளது அல்லவா. வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில்;

“ உண்மை ஆண்டவரிடத்தில் லட்சியம் தவிர வேறு எதிலும் லட்சியம் வைக்கக்கூடாது “ என்கிறது. மேலும் வள்ளலார் தெளிவாக சொல்கிறார்கள்;

“ தெய்வத்தை தெரிந்துக் கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமென சுற்றுகின்றார்கள்…. தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வராது. ஆதாலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லட்சியத்திலிருந்து கொண்டு விசாரம் செய்து கொண்டிருங்கள் “ என்கிறார் வள்ளலார்.

உண்மை குறித்து விசாரம் செய்ய ஒரு புதிய மற்றும் பொது வழியை நமக்கு தந்ததற்கு நன்றி சொல்லி வள்ளலாரை வணங்குவது நமது விருப்பமே. ஆனால், அவரை தெய்வமாக வைத்து பூசை செய்வதும், அபிசேகம் செய்வதும், அவதாரம் என்றும் சொல்வதும், அவரால் கைவிடப்பட்ட சமய கோவிலில் அவரை வைப்பது எந்த வகையில் நியாமாகும்? வள்ளலார் சொல்கிறார்கள், இப்படி செய்வதனால் உண்மை கடவுள் குறித்த விசாரம் தடைப்படும். இதை கருத்தில் கொள்ளாது செய்வது வள்ளலாரின் கட்டளையை மீறும் செயலே. அப்படித்தானே.

சரியான புரிதல் இல்லாமல் மற்றும் வள்ளலாரை மீண்டும் வேத சமயத்தில் கொண்டுவரும் தீய எண்ணத்தில் உள்ளவர்களின் கவனத்திற்கு நாம் இரண்டு விசயங்களை முன் வைப்பது நமது ஆன்ம நேயம் ஆகும்.

ஒன்று; திருவருட்பிரகாச வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் சாதி, சமய மதங்களை கடந்து விளங்கும் கொள்கையை உறுதி செய்து, சாதி சமய ஆசார வகைகளுக்கு இங்கு இடமில்லை என்பதை மேதகு உயர்நீதிமன்றம் வரை உறுதியாகிவிட்டது என்பதை கவனத்தில் கொள்வது வேண்டும்.

மற்றொன்று; வள்ளலார் தனது முடிபான நெறியான சுத்த சன்மார்க்கத்தை உறுதிபடுத்தும் பாடல்கள் சிலவற்றை இங்கு தரப்படுகிறது. ஊன்றி பார்க்க:

சாதி, வேத ஆகம, சமய மத மார்க்கங்களை சாடும் பாடல்கள்:

(ஆறாம்திருமுறை)

64

மான மேலிடச் சாதியே மதமே

வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன் …..

…. அப்ப னேஎனை ஆண்டுகொண் டருúள.

72

சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்

சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்.

185

கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்

கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே

நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்

நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ……

186

வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்

விளம்புநெறிஇதிகாசம் விதித்தநெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே

ஏதமற உணர்ந்தனன் வீண் போதுகழிப் பதற்கோர்

எள்ளளவும் எண்ணம்இலேன் என்னோடுநீ புணர்ந்தே

தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

187

கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்

கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே …..

202

சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்

புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்

பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்

உரியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்

220

மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி

மன்னிய வடிவளித் தறிஞர் …..

306

கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுகமற் றெல்லாம்

மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்

இருள்நெறி மாயை வினைகளளைல் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்

தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.

336

இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற் கரியபே ரின்பம்

தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம் தயாநிதி தனிப்பெருந் தந்தை

அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப்பொதுவில் ஐயர்தாம்வருகின்ற சமயம்

சமயம்இப் போதென்றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம்அறியும்.

353

இச்சாதி சமயவிகற் பங்கùளலாம் தவிர்ந்தே

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்…..

363

சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்

நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும்

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் ஜோதிஎன் றறிந்தேன்

ஓதிய அனைத்தும் நீஅறிந் ததுநான் உரைப்பதென் அடிக்கடி உனக்கே.

411

கருங்களிறு போல்மதத்தால் கண்செருக்கி வீணே

காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்

ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருúள வடிவாய்

உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்

பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்

பிறர்அறியா வகைபெரிதும் பெறுதும்என உள்úள

மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

415

அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா

தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில்

புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளளைக்கி அருளளைம்

பொருள்அளிக்கப் பெற்றனன்

 

417

அடிபிடித்துத் திரிகின்ற மறைகள் எலாம் காணா

அருள்வடிவைக் காட்டிநம்மை ஆண்டுகொண்ட கருணைக் ….

430

புல்லவா மனத்தேன் என்னினும் சமயம் புகுதவா பொய்ந்நெறி ஒழுக்கம்

சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர் செப்பனத் தாயினும் நினையேன்

கல்லவா மனத்தோர் உறவையுங் கருதேன் கனகமா மன்றிலே நடிக்கும்

நல்லவா எல்லாம் வல்லவா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

452

கொலைபல புரிந்தே புலைநுகர்ந் திருந்தேன் கோடுறு குரங்கினிற் குதித்தே

அலைதரு மனத்தேன் அறிவிலேன் எல்லாம் அறிந்தவன் போல்பிறர்க் குரைத்தேன்

மலைவுறு சமய வலைஅகப் பட்டே மயங்கிய மதியினேன் நல்லோர்

நலையல எனவே திரிந்தேனன் எனினும் நம்பினேன் கைவிடேல் எனையே.

474

தெருவிடத்தே விûளயாடித் திரிந்தஎனை வலிந்தே

சிவமாலை அணிந்தனை அச் சிறுவயதில் இந்த

உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள்

ஒடியதோ புதியஒரு உருவுவிழைந் ததுவோ

495

இருளளைன மலம்அறுத் திகபரங் கண்டே

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ

மருளளைன பற்பல மார்க்கங்கள் எல்லாம்

வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்

தெருளளைன சுத்தசன் மார்க்கம தொன்றே

சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்

அருளளைனவீதியில் ஆடச்செய் தீரே

அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

496

இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களளைச் சிரம

வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்

தெருட்சாறும் சுத்தசன் மார்க்கநன் னீதி

சிறந்து விளங்கஒர் சிற்சபை காட்டும்

அருட்ஜோதி வீதியில் ஆடச்செய் தீரே

அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே

514

பொதுநடஞ்செய் மலரடிஎன் தலைமேலே அமைத்தீர்

புத்தமுதம் அளித்தீர்என் புன்மைஎலாம் பொறுத்தீர்

சதுமறைஆ கமங்கள்எலாம் சாற்றரிய பெரிய

தனித்தலைமைத் தந்தையரே

518

என்னே செய்வேன் செய்வகை ஒன்றிங் கிதுஎன் றருள்வாய் இதுவே தருணம்

மன்னே அயனும் திருமா லவனும் மதித்தற் கரிய பெரிய பொருúள

544

மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே

மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே

துதிக்கும் அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே

சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருúள.

559

சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றி

தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருúள

ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்

ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியே

 

ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்

ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே

சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்

தூயநடத் தரசேஎன் சொல்லும் அணிந் தருúள.

579

…… பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப்

பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே

பெற்றியுளளைர் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில்

பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருúள.

585

வான்பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம்

வாழ்வெனக்கே ஆகியுற வரம்அளித்த பதியே

தேன்பரித்த மலர்மணமே திருப்பொதுவில் ஞானத்

திருநடஞ்செய் அரசேஎன் சிறுமொழி ஏற் றருúள.

588

மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய

முடியாத முடிவெல்லாம் முன்னியஒர் தினத்தே

 

ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்

அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே

601

மதம்என்றும் சமயம்என்றும் சாத்திரங்கள் என்றும்

மன்னுகின்ற தேவர்என்றும் மற்றவர்கள் வாழும்

பதம்என்றும் பதம்அடைந்த பத்தர்அனு பவிக்கப்

பட்டஅனு பவங்கள்என்றும் பற்பலவா விரிந்த

விதம்ஒன்றும் தெரியாதே மயங்கிய என் தனக்கே

வெட்டவெளி யாஅறிவித் திட்ட அருள் இறையே

சதம்ஒன்றும் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில்

தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும் அணிந் தருúள.

620

கொள்ûளவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்

கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்

கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்

காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்

பிள்ûளவிûள யாட்டெனநன் கறிவித்திங் கெனையே

பிள்ûளஎனக் கொண்டுபிள்ûளப் பெயரிட்ட பதியே

தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்

தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருúள.

621

நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ûளவிûள யாட்டே

மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ

விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே

கால்வருணங் கலையாதே வீணில் அலை யாதே

காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருúள

மால்வருணங் கடந்தவரை மேல்வருணத் தேற்ற

வயங்குநடந் தரசேஎன் மாலைஅணிந் தருúள.

623

இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்

இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்

மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்

மகனேநீ நூல் அனைத்தும் சாலம்என அறிக

செயல் அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே

 

திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே

அயல் அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற

ஆடுகின்ற அரசே என் அலங்கல் அளிந்திருúள.

624

தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்

சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்

ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்

உலகறிவே தாகமத்தைப் பொய்எனக் கண் டுணர்வாய்

ஆன்றதிரு அருட்செங்கோல் நினக்களித்தோம் நீயே

ஆள்கஅருள் ஒளியால்என் றளித்ததனிச் சிவமே

ஏன்றதிரு வழுதெனக்கும் ஈந்தபெரும் பொருúள

இலங்குநடத் தரசேஎன் இசையும் அணிந் தருúள.

625

நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்

நவில் அருகர் புத்தர் முதல் மதத்தலைவர் எல்லாம்

வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து

வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே

தேன்முகந்துண் டவர் எனவே விûளயாடா நின்ற

சிறுபிள்ûளக் கூடடம்என அருட்பெருஞ்ஜோ தியினால்

தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே

சபையில்நடத் தரசேஎன் சாற்றும் அணிந் தருúள.

633

எத்துணையும் சிறியேனை நான்முகன்மால் முதலோர்

ஏறரிதாம் பெருநிலைமேல் ஏற்றிஉடன் இருந்தே

மெய்த்துணையாம் திருவருட்பே ரமுதம்மிக அளித்து

வேண்டியவா றடிநாயேன் விûளயாடப் புரிந்து

சுத்தசிவ சன்மார்க்க நெறிஒன்றே எங்கும்

துலங்கு அருள் செய்தபெருஞ் சோதியனே பொதுவில்

சித்துருவாய் நடம்புரியும் உத்தமசற் குருவே

சிற்சபைஎன் அரசேஎன் சிறுமொழிஏற் றருúள.

638

மன்பதை வகுக்கும் பிரமர்நா ரணர்கள் மன்னுருத் திரர்கúள முதலா

ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங் குறுபெருந் தொழில்பல இயற்றி

இன்புறச் சிறிதே கடைக்கணித் தருளி இலங்கும்ஓர் இறைவன்இன் றடியேன்.

அன்பெனும் குடிசை நுழைந்தனன் அந்தோ அவன்தனை மறுப்பவர் யாரே.

639

தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித் தனித்தனி மறைகள் ஆ கமங்கள்

உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா ஒருதனிப் பெரும்பதி உவந்தே

புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள் பொறுத்தருட் பூரண வடிவாய்

என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ எந்தையைத் தடுப்பவர் யாரே.

 

657

குற்றமெலாம் குணமாக் கொள்ளும்

குணத்தானைச் சமயமதக் குழிநின் றென்னை

எடுத்தானை எல்லாஞ்செய் வல்ல சித்தே

ஈந்தானைக் கண்டுகளித் திருக்கின் றேனே.

689

மதத்திலே மயங்கா மதியிலே விûளந்த

மருந்தைமா மந்திரந் தன்னை

இதத்திலே என்னை இருத்திஆட் கொண்ட

இறைவனைக் கண்டுகொண் டேனே.

705

சமயமும் மதமும் கடந்ததோர் ஞான

சபைநடம் புரிகின்ற தனியைத் …………

717

உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள் உலப்பிலா அண்டத்தின் பகுதி

அலகுகாண் பரிய பெரியகூட் டத்த அவைஎலாம் புறத்திறைச் சார்பில்

விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற் றிருந்தென விருந்தன மிடைந்தே

இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத் தென்பர்வான் திருவடி நிலையே.

718

தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா யேச்சுரன் சதாசிவன் விந்து

நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி நவில்பர சிவம் எனும் இவர்கள்

இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும் இடதுகாற் கடைவிரல் நகத்தின்

கடையுறு துகள் என் றறிந்தனன் அதன்மேற் கண்டனன் திருவடி நிலையே.

719

அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால் அரன்மயேச் சுரன்சதா சிவன்வான் படர்தரு விந்து பிரணவப்பிரமம் பரைபரம் பரன்எனும்இவர்கள்

சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும் துணையடிப் பாதுகைப் புறத்தே

இடர்கெட வயங்கு துகள் என அறிந்தே ஏத்துவன் திருவடி நிலையே

720

இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால் பிரமன்ஈ சானனே முதலாம்

மகத்துழல் சமய வானவர் மன்றின் மலரடிப் பாதுகைப் புறத்தும்

புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்

செகத் தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில் தெரிந்தனன் திருவடிநிலையே.

736

சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்

விடுவித்தென் தன்னை ஞான

நீதியிலே சுத்தசிவ சன்மார்க்க

நிலைதனிலே நிறுத்தி னானைப்

பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்

பராபரனைப் பதிஅ னாதி

ஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்ஜோ

தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.

774

தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ

சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந் தனில்உறும் அனுபவம் என்கோ

796

அனந்தமறை ஆகமங்கள் அளப்பரிய சிவமே

அம்மேஎன் அபபாஎன் ஐயாஎன் அரசே

மனந்தருவா தனைதவிர்த்தோர்

927

மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு

வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்

கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே

கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்

பதம்பிடித் தவர் எல்லாம் அம்பலப் பாட்டே

பாடினார் ஆடினர் பரவிநிற் கின்றார்

இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ்ஜோதி

என்னைய னேபள்ளி யெழுந்தருள் வாயே.

945

நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் நெடுநாள் முயன்று வருந்திநின்று

வேண்ட அவைகட் கொருசிறிதும் விளங்கக் காட்டா தென்மொழியைப்

பூண்ட அடியை என்தலைமேல் பொருந்தப் பொருத்தி என்தன்னை

ஆண்ட கருணைப் பெருங்கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே.

961

தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்

சேர்கதி பலபல செப்புகின் றாரும்

பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்

பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்

மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்

மேல்விûள வறிகிலர் வீண்கழிக் கின்றார்

எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்

எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.

 

978

ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில் உற்றகள் பனைகளும் தவிர்ந்தேன்

பாடல்செய்மனத்தால் கலங்கினேன் எனினும் மன்றினை மறந்ததிங்குண்டோ.

995

மதத்திலே சமய வழக்கிலே மாயை மருட்டிலே இருட்டிலே மறவாக்

கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்

பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும் பரிந்தெனை அழிவிலா நல்ல

பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே.

996

குலத்திலே சமயக் குழியிலே நரகக் குழியிலே குமைந்துவீண் பொழுது

நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து நிற்கின்றார்

978

ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில் உற்றஎன் பனைகளும் தவிர்ந்தேன்

வாடல்செய்மனத்தால் கலங்கினேன் எனிலும் மன்றினை மறந்ததிங்குண்டோ.

1005

சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக

ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.

1006

துரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்

கரியபதம் எனக்களித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ.

1014

எக்கரையும் காணாதே இருட்கடலில் கிடந்தேனை எடுத்தாட் கொண்டு

அக்கரைசேர்த் தருùளனுமோர் சர்க்கரையும் எனக்களித்தான் அந்தோ அந்தோ

1112

மருளளைத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்

மருண்டனவே என்னடி என் மனவாக்கின் அளவோ….

1154

அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை

வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார்

விûளவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி

1161

மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர் அங் கவர்பால்

இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்

இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.

1272

குலத்தே சமயக் குழியிடத்தே விழுந்திவ் வுலகம் குமையாதே

நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டா நின்றேன் நாட்டகத்தே

 

1364

வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய

மாமதியின் அழுதநிறைவே

1387

பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்

பவநெறி இதுவரை பரவிய திதனால்

சென்னெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ

புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்

புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்

தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே

1395

சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.

1473

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழ கலவே

நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே ஞான

நிருத்தமிடும் தனித்தலைவர்ஒருத்தர் அவர் தாமே

வீதியிலே அருட்ஜோதி விûளயாடல் புரிய

மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே.

1477

எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்

எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று

கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்

கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்

ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்

அழியும்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்

உய்வகை என் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.

1501

ஆரணமும் ஆகமழும் ஆங்காங் குரைக்கின்ற

காரணமும் காரியமும் காட்டுவித்தான் – தாரணியில்

கண்டேன் களிக்கின்றேன் கங்குல்பகல் அற்றவிடத்

துண்டேன் அமுதம் உவந்து

1502

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவ

சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் – என்மார்க்கம்

நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்

மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.

1503

பன்மார்க்கம் எல்லாம் பசையற் றொழிந்தனவே

சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே – சொன்மார்க்கத்

தெல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்

கொல்லா நெறி அருûளக் கொண்டு.

1504

சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப

நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் ஓதுகின்ற

பேயாட்ட மெல்லாம் பிதிரிந்தொழிந்த வேபிறர்தம்

வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.

1511

சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி

நேத்திரங்கள் போல்காட்ட நேராவே – நேத்திரங்கள்

சிற்றம் பலவன் திருவருள்சீர் வண்ணமென்றே

உற்றிங் கறிந்தேன் உவந்து.

1512

வேதாக மங்கùளன்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின்விûளவறியீர் – சூதாகச்

சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை

என்ன பயனோ இவை.

1541

திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்

சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு

வருநெறியில் எனையாட்கொண்ட டருளமுதம் அளித்து

வல்லபசத் திகùளல்லாம் வழங்கியஓர் வள்ளல்

பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.

 

1544

சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்தம் எல்லாம்

தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்

நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்

நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை

அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்

ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்

சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்

சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.

1546

முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்

முடுகி அழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே

இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்

எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்

துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்

தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்

பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்

படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.

1549

குறித்துரைக்கின் றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும்மணக் குரங்காலே நாணுகின்ற உலகீர்

வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்

 

பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்

புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்

செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்

சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.

1571

முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன

மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது

பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின

என்னுளத் தருட்பெருஞ் ஜோதியார் எய்தவே.

1582

இயங்காளிபுலிகரடி எனப் பெயர்கேட் டுளம்நடுங்கி இருந்தேன் ஊரில்

சயங்காளிக் கோயிலைக்கண் டஞ்சிமனம் தழுதழுத்துத்தளர்ந்தேன் இந்தப்

பயங்காளிப் பயல்போலப் பயந்தவர்கள் எங்குளர்காண் பதியே என்னை

வயங்காளில் ஒருவன்என நினையேல்கைப்பிள்ûள என மதித்தி டாயே.

1591

கிழக்குவெளுத் ததுகருணை அருட்ஜோதி உதயம்

கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே

சழக்குவெளுத் ததுசாதி ஆச்சிரமா சாரம்

சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக

வழக்கு வெளுத் ததுபலவாம்பொய்ந்நூல்கற் றவர்தம்

மனம்வெளுத் ததுசிவமே பொருள் எனும் சன் மார்க்க

முழுநெறியில் பரநாத முரசு முழங் கியதே.

1626

சேய்போல் உலகத் துயிரைஎல் லாம்எண்ணிச் சேர்ந்துபெற்ற

தாய்போல் உரைப்பர்சன் மார்க்கசங் கத்தவர் சாற்றும்எட்டிக்

காய்போல் பிறர்தமைக் கண்டால் கசந்துள் கடுகடுத்தே

நாய்போல் குரைப்பர்துன் மார்க்கசங் கத்தவர் நானிலத்தே.

1705

கண்கொண்ட பூதலம் எல்லாம்சன் மார்க்கம் கலந்துகொண்டே

பண்கொண்ட பாடலில் பாடிப் படித்துப் பரவுகின்றார்

விண்கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்ற

தெண்கொண்ட மற்றை மதமார்க்கம் யாவும் இறந்தனவே.

1734

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது

தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்

என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்

 

எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்

புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே

புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்

தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே

தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே

1735

ஆதியும்நடுவும் அந்தமும் இல்லா

அருட்பெருஞ் ஜோதிஎன் உளத்தே

நீதியில் கலந்து நிறைந்தது நானும்

நித்தியன் ஆயினேன் உலகீர்

சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே

சத்தியச் சுத்தசன் மார்க்க

வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை

விளம்பினேன் வம்மினோ விரைந்தே.

1802

சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்ப தென்ன வே

சாற்றப் புகினும் சாலா அருளின் பெருமை உன்ன வே

அமையும் அண்டப் பகுதி பலவும் அணுவின் பொடியி லே

அனந்தத்தொன்றென் றுரைத்துஞ்சாலாநின்பொன் னடியிலே.

எனக்கும் உனக்கும்

1824

வேதா கமத்தின் அடியும் நடுவும் முடியு மற்று மே

வெட்ட வெளிய தாகி விளங்கக் கண்டேன் முற்று மே

நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்ட தே

நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்ட தே.

எனக்கும் உனக்கும்

1919

எச்சம யங்களும் பொய்ச்சம யமென்றீர்

இச்சம யம்இங்கு வாரீர்

மெய்ச்சம யந்தந்தீர் வாரீர்.

1984

சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்

சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ

விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா

வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்

பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்

பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்

அதுஇது என்னாமல் ஆடேடி பந்து

அருட்பெருஞ் ஜோதிகண் டாடேடி பந்து.

2076

தருநெறி எல்லாம்உள் வாங்கும் – சுத்த

சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்

திருநெறிக் கேசென்று பாரீர் – திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

2077

எம்பொருள் எம்பொருள் என்றே – சொல்லும்

எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே

செம்பொருள் என்பது பாரீர் – திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி.

 

2078

சைவ முதலாக நாட்டும் – பல

சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்

தெய்வம் இதுவந்து பாரீர் – திருச்

சிற்றம் பலத்தே திருநட ஜோதி

2113

மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது

வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது

கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது

கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது.

2114

குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று

குதித்த மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று

வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது

விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்ததுஇதுநல்ல

2141

எச்சம யத்தும் இலங்கிய பாதம்

எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்

அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்

ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம்.

2177

சாதி சமயச் சழக்கெலாம் அற்றது

சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது

2213

சாதி சமயச் சழங்கைவிட் டேன்அருட்

ஜோதியைக் கண்டேன டி – அக்கச்சி

ஜோதியைக் கண்டேனடி.

2294

சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம்

சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்

5-6

ஆகம முடிமேல் ஆரண முடிமேல்

ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி

21-22

ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை

யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி

29-30

சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்

அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

51-52

சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்

ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி

61-62

சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்

அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி

115-116

சாதியு மதமுஞ் சமயமுங் காணா

ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி

211-212

சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென

ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி

293-294

சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த

அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி

1317-1318

தாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா

வாழ்வெனக் களித்த வளரொளி மணியே

1327-1328

மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு

கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே

1543-1544

வேதமு மாகம விரிவும் பரம்பர

நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே

1553-1556

சமரச சத்தியச் சபையி னடம்புரி

சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே

சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே

அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி

1567-1568

சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்

சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்

 

சொன்னவர் வள்ளலார் அவர்கள், அதுக்கு நாம் என்ன பண்ண முடியும்? சார் இவர்களா பார்த்து திருத்திக்கொண்டாலன்றி திருத்த முடியாது. பிறவிகளும் அதற்கான அறிவு அளவும் இயற்கை. தேடுதலும் முயற்சியும் சுத்த சன்மார்க்கம் – எல்லோம் கடவுள் அம்சமே, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!  – APJ அருள் @ இளங்கோ

👇👇 மேலும் விபரங்களுக்கு 👇

https://youtube.com/@godandgraceorg?si=HmuUFxCGk7Dgr-MO

unmai

Channai,Tamilnadu,India